திங்கள், 29 அக்டோபர், 2012

நான் பதிவரானது எப்படி(பகுதி-2)


நான் பதிவரானது எப்படி(பகுதி-2)

2008 ஆம் ஆண்டு மூன்று பதிவுகளை தொடங்கி
இடுகைகளை இட்டுக்கொண்டிருந்தேன்.

என் புத்திக்கு எட்டிய வரையில்
ஆன்மீக கருத்துக்களை
வெளியிடும் வகையில் மேலும்
இரண்டு வலைபதிவுகளை
2009  ஆம் ஆண்டு தொடங்கினேன்

7th DECEMBER 2009 ல் DIVINE BLISS என்றும்
11 th DECEMBER 2009 ல் OM SAAYEE OM என்றும் இரண்டு
வலைபதிவுகளை தொடங்கினேன் .
DIVINE BLISS- இதுவரை இட்ட இடுகைகள் -40-
பார்வையாளர்கள் -746
OM SAAYE OM-இடுகைகள் -5 பார்வையாளர்கள் -13 

ஆனால் பல விஷயங்களில்
என் கருத்தை பதிய 2010
ஆம் ஆண்டு ENNAPPARAVAIGAL என்ற
வலைப்பதிவை தொடங்கி அதில்
என் கருத்துக்களை வெளியிட்டேன்

அதில் 41 இடுகைகளை இட்டேன்
பார்வையாளர்கள் -282 மட்டுமே

அப்படியும் என் மனம்
திருப்தியடையவில்லை .

ஆன்மிகம் மற்றும் நாட்டு நடப்புகள் மீது
என்னுடைய கருத்தை பதிவு செய்ய
 2011 ஆம் ஆண்டு இரண்டு
 புதிய பதிவுகளை தொடங்கினேன்

அக்டோபர் 2011 ல் RAMARASAM என்ற பதிவையும்
டிசம்பர் 2011 ல் NAADUMNADAPPUM என்ற
பதிவையும் தொடங்கி அதில்
என்னுடைய கருத்துக்களை பதிவு செய்தேன் .

RAMARASAM-இதுவரை இட்ட இடுகைகள் -192-
பார்வையாளர்கள் -6284

NAADUM NADAPPUM-இடுகைகள் -49-
பார்வையாளர்கள் -3759 

ஏப்ரல் 2012 ல் . CHINTHANAI SITHARALGAL
என்ற வலைபதிவு தொடங்கி
இதுவரை 165 இடுகைகள் இட்டுள்ளேன்

பார்வையாளர்கள் 2740 

வலைப் பதிவை தொடங்கி என் மனதில் உள்ள
விஷயங்களை பலரும் அறிய வெளியிட்டதில்
எனக்கு ஒரு ஆத்ம திருப்தி உள்ளது .
2008 தொடங்கிய என் பயணத்தில் இதுவரை 668 இடுகைகள்
இட்டிருப்பது எனக்கே வியப்பாக உள்ளது.

இன்னும் என்னிடம் இந்த உலகோடு பகிர்ந்து கொள்ள ஏராளமான  கருத்துக்கள் உள்ளன .அவைகளை இனி வருங்காலத்தில் வெளிப்படுத்த  இந்த ஊடகம் வழி வகுத்துள்ளது . என்றால் அது மிகையாகாது .
  

4 கருத்துகள்:

  1. விரிவான விளக்கங்கள் ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. 688 பதிவுகள் என்பது ஒரு அசுரச் சாதனையே
    முன்னூரை நெருங்குவதற்குளேயே
    எனக்கு மூச்சு முட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. என்னுடைய மனதில்
      அடுத்தது என்ன ?
      அதாவது 'next what'
      என்ற சிந்தனையைத்தான்
      தாரக மந்திரமாக
      வைத்திருக்கிறேன்

      அதுதான் என்னை இத்தனை
      பதிவுகளை போட வைத்திருக்கிறது.

      இதுநாள்வரை போட்ட பதிவுகளின்
      எண்ணிக்கையை எண்ணி
      பார்த்ததில்லை

      சிலர் நான் எனக்கு இது 100 வது
      பதிவு என்று எழுதியதை பார்த்தபின்தான்
      நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்று திரும்பி பார்த்தேன் அதனால் தான் இந்த பதிவு பிறந்தது

      வருகைக்கும்
      தங்களின் பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு