வெள்ளி, 6 ஜூலை, 2012

என்று தணியும் இந்த இலவச மோகம்

இலவசம்

இன்றைய உலக மக்கள் இலவசமாக
எது கிடைத்தாலும் ஓடிபோய்
வாங்க தயங்குவது கிடையாது
வீட்டில் அந்த பொருள் இருந்தாலும்
இன்னொன்றை வாங்கி வீட்டில் வைத்து
குப்பை சேர்த்து கொள்வதில்  அவர்களுக்கு அவர்களே நிகர்

வீட்டில் தாத்தா காலத்து பித்தளை காபி பில்ட்டர் இருக்கும்
எவர்சில்வ்ரில் ஒரு காபி பில்ட்டர் இருக்கும்
காசு கொடுத்து வாங்கிய காபி மேக்கர்இருக்கும்
இருந்தாலும் வேறு ஏதாவது பொருள் வாங்கும்போது
ஓசியில் ஒரு கிடைத்த காபி மேகரும்  இருக்கும்

இவ்வளவு இருந்தாலும் ஒருநாளாவாது
அந்த பில்டேர்களை யாரும்
பயன்படுத்தி இருக்கமாட்டார்கள்
எப்போதும் இன்ஸ்டன்ட் காபிதான்

வீட்டில் ஒன்றுக்கு நான்கு அயர்ன் பாக்ஸ் இருக்கும்
ஒருவரும் துணிகளை இஸ்திரி பண்ணுவது கிடையாது
துணிகளை இஸ்திரி போடுபவனிடம்  கொடுத்துவிட்டு
அவன் காலடியில் விழுந்து கிடக்கும் மனிதர்களே அதிகம்.

இப்படிதான் செருப்புகள்,, காலணிகள்,, துணிமணிகள் ,பாத்திரங்கள்,, மின்சாதன பொருட்கள்,, புத்தகங்கள் ,நாளிதழ்கள் பழைய ரேடியோஸ்,,
கம்ப்யூட்டர் ச்பீகேர்ஸ் ,ஆடியோ சிஸ்டம்ஸ்,, சிடி,, விசிடி,டிஸ்க் ,ப்லாயர்ஸ்  
பொம்மைகள்,, விளையாட்டு சாமான்கள் என ஏராளமான பொருட்கள் வீட்டில் .பயன்படுத்தாமல் ஒவ்வொரு வீட்டிலும்,
குவிந்து கிடக்கும் இப்போது செல் போன்கள் வேறு

என்று தணியும் இந்த இலவச மோகம் ?


தற்கொலை

290000

இது என்ன ?

இது வேறொன்றுமில்லை 
செல்வம் கொழிக்கும் மராட்டிய மாநிலத்தில் 
வாழ வழியில்லாமல் 1995 முதல் தற்கொலை செய்து கொண்ட வேளாண்குடி பெருமக்கள்தான்
இந்தியா விவசாய நாடு என்று மார் தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளின்
தலைமையில் நடைபெறும் ஆட்சிகளின் மாட்சிதான் இந்த எண்ணிக்கை
இது இன்னும் கூடத்தான் இருக்கும்

ஏன் இந்த நிலை ?

எல்லோரையும்போலதான் விவசாயியும் உழைக்கிறான் 
அவன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னை சுற்றியுள்ள இந்த உலக மக்களுக்காகவும் உழைக்கிறான் 
இருந்தும் அவனை சுற்றியுள்ள இந்த நன்றி கெட்ட  உலகம் அவன் படும் துன்பங்களை என் கண்டும் காணாமல் விட்டு விடுகிறது என்றுதான் புரியவில்லை?

அவன் வட்டிகடைக்காரர்களை மட்டி போல் நம்புவதுதான் இதற்க்கு காரணம்

அவன் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கொள்ளை லாபம் அடிக்கும் இடை தரகர்கள் ஒரு காரணம்

உணவு பொருட்களை கொண்டு செல்ல பாதை வசதிகள் இல்லாமை ஒரு காரணம்

பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க வசதிகள் இல்லாமை ஒரு காரணம்..

அவர்களிடையே ஒற்றுமை  இல்லாமை ஒரு காரணம்

இப்படி அடுக்கிகொண்டே போடலாம்

இனி மேலாவது அரசியல்வாதிகள் எனும் மண் குதிரைகளை மட்டும் நம்பாமல் அவர்களுக்கு என கிராமம்தோறும் அமைப்பபுகள்
அமைத்து உருப்படும் வழியை பார்த்தல் நல்லது..