திங்கள், 29 ஜூன், 2015

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றுமில்லை 
மறைமூர்த்தி கண்ணா 


மனமிருந்தால் மார்க்கமுண்டு 

உலகில் குறை இல்லாதவர்கள் எவருமில்லை 

ஆனால் குறைகளை பொருட்படுத்தாது 
தீவிர முயற்சியாலும் ஆர்வத்தாலும் உழைப்பாலும். 
இந்த  உலகில் மாற்று திறனாளிகள்   பலர்  சாதனைகளை படைத்து சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை 



கண்ணிருந்தும் குருடராய் 
முயற்சியின்றி எல்லாவற்றிற்கும் 
பிறரைக் குறை கூறி சோம்பி திரியும் 
மனிதர்களே இந்த கானோளியைக்  
கண்ட பிறகாவது உங்கள் எண்ணத்தை 
மாற்றிக்  கொண்டு இறைவன் அளித்த 
பிறவியை செம்மையாகப் பயன்படுத்தி 
வாழ்வில் வெற்றியைக் காணுங்கள். 

இணைப்பில் கண்டுள்ள கானோளியைக் கண்டு இன்புறுங்கள்.

இந்த நாட்டிய நிகழ்ச்சியை வழங்குபவர்கள் அனைவரும் 
கண் பார்வையற்றவர்கள். அவர்கள் அழகாக ஆடும் இந்த நாட்டியத்தை கண்டு இன்புற இயலாதவர்கள். 

கண் படைத்த நாம் கண்டுஇன்புற அவர்கள் நமக்கு அளிக்கும்  பரிசு. 

https://www.facebook.com/DrFabioAugusto/videos/vb.260897517292495/773778789337696/?type=2&theater

சனி, 27 ஜூன், 2015

இசையும் நானும் (20)

இசையும் நானும் (20)

இசையும் நானும் (20)

என்னுடைய இசைப் பயணத்தில் 
நானே இயற்றி பாடிய தமிழ் பாடல் ;

இதோ அந்த பாடல்.

அனைத்தையும்  அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு . (அ )

ஒன்றை ஆக்குவதும்  அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று ஆராய்வது வீண் வேலை. (அ )

பசித்தோர்க்கு  உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
பரிவோடு அருகில் வந்து உன்னைக் காப்பான் (அ )

உழைக்காமல் உண்பது மடமையடா
பிறர் உழைப்பை சுரண்டி வாழ்பவன் மிருகமடா

கடமையை தவறாமல் செய்வது தருமமடா
அதை செய்யாமல் விடுவது கருமமடா  (அ )

கடமையைக் காலத்தில் செய்தால் பலனுண்டு
அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு

இதை நீ  என்றும் நினைவில் கொண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு  (அ)


பாடலின் இணைப்பு கீழே;
https://youtu.be/bmVemsz64sg

வியாழன், 25 ஜூன், 2015

இசையும் நானும்(19)

இசையும் நானும்(19)

இசையும் நானும்(19)

என்னுடைய மவுதார்கன் இசை பயணத்தில்

அடுத்த  வீடியோ ஒரு தெலுங்கு  கீர்த்தனை


"பாவயாமி  கோபால பாலம்" 






இயற்றியவர்; திருவேங்கட கவி அன்னமாச்சார்யா.




மவுத்தார்கன் இசையில் உங்களுக்காக. 

இணைப்பு. கீழே.

https://youtu.be/0R2JIBg-fOg

ஞாயிறு, 21 ஜூன், 2015

இசையும் நானும்(18)

இசையும் நானும்(18)

இசையும் நானும்(18)

என்னுடைய இசைப்பயணத்தில் அடுத்ததாக
மவுத்தார்கன் இசையில் ஒரு ஆங்கில பாடல்.















உலக அமைதிக்காக . என்னால் இயற்றி
பாடப்பட்டது.

விரும்புவோர் கேட்டு மகிழ .

இணைப்பு கீழே

https://youtu.be/-be3j6DvX1M

வெள்ளி, 19 ஜூன், 2015

இசையும் நானும் (17)

இசையும் நானும் (17)

இசையும் நானும் (17)

என்னுடைய மவுத்தார்கனின் இசைப் பயணத்தில் 
17 வது பாடல். 

எனக்கு திரு உன்னிகிருஷ்ணனின் 
இனிமையான குரல் மிகவும் பிடிக்கும். 




அப்படி அவர் பாடிய பாடல்களில் ஒன்று 
பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய 
உன்னை துதிக்க அருள்தா என்ற பாடலை 
மிக அருமையாக உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார்.

அதை கேட்ட பின் ஏன் 
இந்த பாடலை மவுத்தார்கனில் இசைக்கலாமே என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. 3 மாதங்கள் பயிற்சி செய்தேன். நன்றாக வந்துள்ளது. 

உங்களுக்கும் பிடிக்கும். 

I dedicate this song to Melody King.Unnikrishnan. Sir. 

பாடலின் வீடியோ இணைப்பு கீழே.

https://www.youtube.com/watch?v=Pc02_VoQJEA&feature=em-upload_owner

செவ்வாய், 16 ஜூன், 2015

இசையும் நானும்(15)

இசையும் நானும்(15)

என்னுடைய  இசை பயணத்தில்
அடுத்த பாடல்  பலே பாண்டியா
படத்தில் வரும் "வாழ நினைத்தால் வாழலாம்-வழியா இல்லை பூமியில்
என்ற எனக்கு மிகவும் பிடித்த பாடலை
மவுத்தார்கனில் இசைத்துள்ளேன்.

அதன் இணைப்பு கீழே:

https://youtu.be/VpJbw-VLMJo

திங்கள், 15 ஜூன், 2015

A SONG FOR WORLD PEACE


A SONG FOR WORLD PEACE


 A SONG  FOR WORLD PEACE 

Image result for globe
Chant the 
divine name 'Hey Ram"

Save the
humanity from harm                      (chant)

Love and affection remained
only in words 

Lies and lust are ruling
the world                                       (chant)

Hatred and hipocracy have become 
the religion of the masses 

People are fighting 
for silly  causes

Killing each other 
has become their  fashion                 (chant)

The world must live in peace
war and poverty must cease 

Likes and dislikes 
are your inner enemies 

lust and anger creats your
outer enemies 

The heart is the abode of Divine 
Be  tuned with music of boundless  love


Enjoy this worldly life full of harmony 
with eternal joy of divine company       (chant)


ஞாயிறு, 14 ஜூன், 2015

உள்ளும் புறமும் அவனை காணலாம்

உள்ளும் புறமும் 
அவனை காணலாம் 



உள்ளும் புறமும்
அவனை காணலாம்
நீ உலகில் உண்மையாய்
நடந்துகொண்டால்

அல்லும் பகலும் ஓய்வின்றி
பேயாய் உழலும் மனமே

நீ ஆசைகள் விரிக்கும் வலையில்
வீழ்ந்து புலன் வழி சென்றால்
அனுதினம் அடைவது ஏமாற்றமே

உள்ளத்தில் உறையும்
உண்மைப் பொருளாம்
இறைவனை என்றும்
உணர இயலாது
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினால்

தத்துவங்கள் பல பேசினாலும்
தவறை மறைக்க
தானங்கள் பல செய்தாலும்
உண்மை நெறி வழி நில்லாதார்
உலகில் என்றும் பொல்லாதவரே


இசையும் நானும் (14)

இசையும் நானும் (14)

ஹிந்தி திரைப்பட பாடல்கள்
சிறு வயது முதலே எனக்கு பிடிக்கும்
பாடல் வரிகளின் பொருள் தெரியாவிட்டாலும்
பல பாடல்களில் சில வரிகள் மனப்பாடம்.

அதுவும் தற்காலத்தில் வரும் அபத்தமான
தமிழ் திரைப்பாடல்களின் வரிகளை ஜீரணம்
செய்யமுடியவில்லை. அந்த வகையில் இந்தி
பாடல்கள் பொருள் புரியாவிட்டாலும் இசையை
ஆனந்தமாக ரசித்து முணுமுணுக்கலாம்.

அப்படி எனக்கு பிடித்த ஒரு பாடல் ஆனந்த் 
என்ற இந்தி திரைப்படத்தில் வரும்"கஹி தூர் 
ஜப் தின் தல் ஜாயே " 
அதை மவுதார்கனில்  இசைத்து பார்த்தேன்
மிகவும் பிடித்துவிட்டது. உங்களுக்கும் பிடிக்கும்;

பாடலின் வீடியோ இணைப்பு கீழே.


https://www.youtube.com/watch?v=r_peVglTC2s&feature=youtu.be

வெள்ளி, 5 ஜூன், 2015

இன்பம் எங்கே இருக்கிறது ?

இன்பம் எங்கே இருக்கிறது ?

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பம் எங்கே இருக்கிறது ?

ஒவ்வொருவரும்  அவரவர் அனுபவங்களுக்கு
ஏற்ப இன்பம் எதில் உள்ளது என்பதை கூறுவார்கள்.

ஒருவருக்கு இன்பமாக இருப்பது
மற்றவர்க்கு துன்பமாக தெரியும்.

ஒரு கால கட்டத்தில் அதே மனிதருக்கு
இன்பத்தை தரும் ஒரு பொருளோ
அல்லது அனுபவமோ ஏற்கெனவே
அனுபவித்த இன்பத்தை
தரும் என்று கூற இயலாது

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பம் துன்பத்தின் பின்னால் 
ஒளிந்துகொண்டிருக்கிறது. 

வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி
வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
ஆற்றினிலே நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்
தண்ணீர் போல

எனவே அது நிலையில்லாது என்கிறார்கள்
ஞானிகள்.

நாம் ஆற்றில் நீரை ஓட விடாமல் அங்கங்கே பள்ளங்கள் தோண்டி
தேக்கி  ஆற்று நீரை கடலில் கலக்காமல் தடுத்துவிடுகிறோம்.

தேங்கிய நீரில் புழுக்களும் பூச்சிகளும்
பெருகி நாற்றமடிக்கின்றன. நம் மனமும் அப்படியே!

எந்த அனுபவம் ஏற்ப்பட்டாலும் அதிலேயே நம்மை
மூழ்கடித்துக் கொள்ளாமல் அதை விட்டு அடுத்த
அனுபவத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

இன்பத்தை வேண்டி பெறுவதுபோல்
அனைத்து  மனிதர்களும் துன்பத்தையும்
இன்பமாக அனுபவிக்கிறார்கள் என்பதை
நாம் அனுதினம் நம் வாழ்வில் பார்க்கின்றோம்.

பத்து  மாதம் தன் வயிற்றில் சுமந்த தன் குழந்தையை
கண்டு கொஞ்சி  மகிழ பிரசவ வலியைசகித்துக்கொள் கிறாள்.

வாழ்வில் முன்னேற நினைப்பவர்கள் அனைவரும்
பலவிதமான, இழப்புகளையும், அசௌகர்யங்களையும்
அவமானங்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர்.

துன்பப்படாமல் இன்பம் இல்லை.
இன்பம் வேண்டுமென்றால் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிறு தீக் காயத்தை தாங்க முடியாத மனிதர்கள்
பக்தியின் காரணமாக தீ மூட்டி தணலின் மேல்
நடக்கின்றனர்.

இன்பமும் துன்பமும் எல்லாம் மனதில்தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மனதில் உள்ள உருப்பெருக்கியை
ஒவ்வொரு செயலுக்கும் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்.

இன்பமும் துன்பமும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல்
வாழ்வில் வெற்றி நடை போடலாம். 

செவ்வாய், 2 ஜூன், 2015

இசையும் நானும் (11)

இசையும் நானும் (11)

இசையும் நானும் (11)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 

எனக்கு மிகவும் பிடித்த பாடல் 

எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடிக்கும் 

இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில் 
உருவாகி அனைவரின் உள்ளத்தை தொட்ட பாடல் 





மூன்றாம் பிறை திரைப்படத்தில் வரும் "கண்ணே கலைமானே"
என்ற பாடல் தான் 

6 மாதங்கள் பயிற்சி செய்து ஓரளவிற்கு  மவுத்தார்கனில் 
இசைத்திருக்கிறேன். 

பாடலின் வீடியோ இணைப்பு இதோ 



http://www.youtube.com/attribution_link?a=b-9dSRS1cHY&u=/watch%3Fv%3DYVbMzaz9YKM%26feature%3Dem-upload_owner