திங்கள், 27 ஜனவரி, 2014

2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் தொடர்பாகரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கை.

2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் தொடர்பாகரிசர்வ்  வங்கியின் 

புதிய அறிக்கை.

அவைகள் தொடர்ந்து செல்லுபடியாகும். எனினும் 

அப்படிப்பட்ட நோட்டுக்களை அவரவர் கணக்கு வைத்துள்ள 
வங்கிகளில் ஜூலை ஒன்றாம் தேதி முதலே  கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் 

.கணக்கு இல்லாதவர்கள் மற்ற வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ள வேண்டும். 

அதற்கான காலக்கெடு   .எதுவும் தற்போது நிர்ணயிக்கப்படவில்லை. 

இது குறித்து திரு தீபக் வாசுதேவன்  அவர்களிடமிருந்து வரப்பெற்ற 
மின் அஞ்சல் மய்ற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை பார்வைக்காக 

Deepak Vasudevan
10:21 PM (2 hours ago)
to vsrangacharmeorfshelpdeskalpanakillawalahelpprdamrithavarshin.amrithavahini
Dear Sir,

There is a small correction. RBI has advised to have the denominations to be recalled. However as of now invalidating these currencies is not in the plan. The rupee bills will continue to be in legal tender.

Check out the press release here (http://www.rbi.org.in/scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=30477) which can also be found enclosed along with this note.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

தமிழனே ! தமிழனாக பிறந்தும் தமிழ் மொழியைபேச மறுக்கிறாய் தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள்

தமிழனே !
தமிழனாக பிறந்தும் 
தமிழ் மொழியைபேச மறுக்கிறாய்  
தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள் 

என்றும் நிலைத்து வாழும்
தமிழ் மொழியின் சிறப்பை 
அறிந்துகொள்ளுவோம் 


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம் ! (பாரதி )

காற்றுக்கு பெயர்!!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! 
இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள் 
புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை ! 

நன்றி :பஞ்சநாதன் கைலாசம் pnathan123@gmail.com

சனி, 25 ஜனவரி, 2014

தெரிந்துகொள்ளுங்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுக்களையும்  பரிசோதனை செய்தால் பின் பக்கத்தில் கீழே சிறிய எழுத்தில் ஆண்டு அச்சடிக்கப் பட்டிருக்கும். அது இல்லை என்றால் அந்த நோட்டுக்கள் இவ்வாண்டு மார்ச்  30 ஆம் தேதிக்குப் பின் செல்லாது. அப்படிப்பட்ட நோட்டுக்களை இரண்டு மாதங்களுக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும். 

அப்போது அல்லல்படுவதை விட இப்பொழுதே அவ்வித நோட்டுக்களைக் கண்டறிந்து 30.4.2014க்குள்  வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

அறியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள். 

2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் செல்லாது! : ரிசர்வ் வங்கி

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பணம் அதாவது நோட்டுக்கள் எதுவும் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் வருகிற மார்ச் மாதம் முடிய மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றும், அதற்கு மேல் 3 மாத கால அவகாசத்தில் பொது மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதிக பட்சம் பணம் பரிமாற்றம் செய்யும் போது, புகைப்படத்துடன் கூடிய முகவரி அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மக்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சியாகவும், கள்ள நோட்டுக்களை இனி சந்தையில் புழங்க விடாமல் தடுக்கவும் இந்த முயற்சி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இனி புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்களை எளிதாக கண்டுபிடிக்கும் படியான தரத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

அமைதி எங்கே இருக்கிறது?

அமைதி எங்கே இருக்கிறது?

இன்று நாகரீகம்
எவ்வளவோ முன்னேறிவிட்டது

படித்தவர்களை விட பாமரன்
நிறைய தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறான்.
பாமரன் கடுமையாக் உழைக்கிறான்.குறைவாக சம்பாதிக்கிறான் மனம் நிறைவாக இருக்கிறான்.  அயர்ந்து உறங்குகிறான்.

படித்தவன் இரவில் வீட்டிற்குள் புகுந்துகொண்டு
தொலை காட்சி  அல்லது கணினிக்குள் மூழ்கிவிடுகிறான்.

அது காட்டும் கற்பனை
உலகத்தில் சஞ்சரிக்கின்றான்.கை நிறைய சம்பாதித்தும் மனம் நிறைவதில்லை.

பொழுது விடிந்ததும் அலுவலகத்திற்குள்
போய் அடங்கி விடுகிறான்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது,
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட
அறிந்துகொள்ள அவன் ஆர்வம் காட்டுவதில்லை.

அதனால் பல
சிக்கல்களுக்கு ஆளாகிறான்.

குழந்தைகளை
பெற்றுக்கொள்வதோடு சரி
அவர்களை அன்பு பாராட்டி வளர்ப்பதில்லை
அவர்களோடு பேசுவதில்லை.
அவர்களோடு நேரம் செலவிடுவதில்லை.

எப்போதும் காசு காசு
அதே சிந்தனைதான்

இல்லாவிடில் மற்றவர்களோடு கைபேசியில்   பேசு
இதுதான்   இன்றைய மேல்தட்டு மக்களின் தாரக மந்திரம்.

மக்களோடு,
உறவுகளோடு பழகுவதே கிடையாது

கடன் வாங்கியாவது ஏதாவது வனாந்திரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கி அதில் மனைவி மற்றும் இருவரும் சேர்ந்து போட்ட குட்டியுடன் அடைக்கலம் ஆகிவிட வேண்டும். பிறகு வாழ்நாள் முழுவது கடனை கட்ட வேண்டும்.

எதெல்லாம் கடனில் கிடைக்கிறதோ
அது தேவைப்படுவதோ இல்லையோ
வாங்கி வீட்டில் நிறைக்க வேண்டும்.

பணத்தை சேமிக்காமல்
வாரி வாரி இறைக்க வேண்டும்.

இறைக்க இறைக்க மூச்சு வாங்கி தொலை தூரத்தில் கட்டப்பட்ட வீட்டிலிருந்து அலுவலகம் ஓடவேண்டும்.திரும்ப வெகு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டும் .உழைத்த களைப்போடு ஊர் சுற்றிய களைப்பும் சேர்ந்து கொள்கிறது

 40 வயதிற்குள் தலை நரைத்து மீசை நரைத்து,
 நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மன சோர்வு, உடல் சோர்வு
என சம்பாதித்த காசை மருத்துவர்களுக்கும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருந்து கடைகளுக்கும் இருவருமாக
சேர்ந்து அழவேண்டும்.

கடன் அதிகமாகிவிட்டால்
எல்லாவற்றையும் போட்டது போட்டபடி
விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு  காசு சம்பாரிக்க
சென்று விட வேண்டும்.

என்ன வாழ்க்கை ?
இவர்கள் வாழுவது.
சிக்கனம் கிடையாது.
ஆனால் கருமித்தனமும் ஊதாரித்தனமும் உண்டு.

எவ்வளவுசம்பாதித்தாலும்  திருப்தி கிடையாது.
மனதில் மகிழ்ச்சி கிடையாது. எப்போதும் சிக்கல்தான்.

 சிக்கலை போக்கிக்கொள்ளும் வழியறியாமல்
 மாத்திரைகளை விழுங்குவது, குடிப்பது.
கேளிக்கைகளில் ஈடுபடுவது

எல்லோரும் இந்த உலகில் வசிக்க
(Piece of Land ) ஒரு நிலம் வாங்க
பெரும் முயற்சி எடுக்கிறார்கள்

ஆனால்  அதில்  ஒரு  சிறிது  கூட
மனதில் அமைதியுடன் மகிழ்ச்சியாக (Peace of mind)
வாழும்வழியைத்  தேட முயற்சி
செய்வது கிடையாது என்பதே உண்மை  .


அதை வெளியே தேட முயற்சிக்கிறார்கள்.
ஆனால் அது அவர்கள் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை யாரும் உணர  வில்லை

நஞ்சை தன்னகத்தே கொண்ட நச்சுப்பாம்பு



நஞ்சை தன்னகத்தே 
கொண்ட நச்சுப்பாம்பு 



நஞ்சை தன்னகத்தே
கொண்ட நச்சுப்பாம்பு
கைபேசிகளும் அலைபேசிகளும்
மின் சாதன கழிவுகளும்

இந்த உலகம் அதன் தோற்றத்திலும்
கவர்ச்சியிலும் மயங்கி கிறங்கிப் போய்
அதன் காலடியில் கிடக்கிறது

அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை
அனாயாசமாக தூக்கி வீசுகிறது

பாமரன் முதல் படித்தவன் வரை ,
எல்லாவற்றையும் துறந்தவன் போல்
வேஷம் போடும் சாமியார்களும் அதற்க்கு அடிமை.

ஒருவனை அலாரம் அடித்து
எழுப்புவதும் அதுதான்

அவனை/அவளை
வாழ வைப்பதும் அதுதான்

அவர்களுக்கு சாவுமணி அடித்து
அவர்களை அழிப்பதும் அதுதான்

உறக்கத்திலும், மயக்கத்திலும் அவர்கள்
இருக்கும் நேரம் தவிர மனிதர்கள் கையில் இருந்துகொண்டு
அவர்களின் அமைதியை  கெடுத்துக்  கொண்டிருக்கிரது
இந்த சிறிய   அளவிலான   பிசாசு



பிறந்த குழந்தை முதல் பல்லிலில்லாக் கிழவன் வரை
எல்லோரும் கையில் அலைபேசியை
வைத்துக்கொண்டு அதில்தான்
பெரும்பாலான நேரத்தை வீணடிக்கிறார்கள்




சிலர் கைபேசியை
காதில் வைத்துக்கொண்டே
தங்கள் ஆயுளை அல்பாயுசில்
முடித்துக் கொள்ளுகிறார்கள்

தீவிரவாதிகள் அதை ஒரு கொலைக்கருவியாக
 தங்களுக்கு  சாதகமாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

கைபேசி மூலம் காசை இழக்கிறார்கள்
சிலர்   காசு பறிக்கிறார்கள்
பலர் காசு பார்க்கிறார்கள்
சிலர் கற்பை இழக்கிறார்கள்.

பண்பு கொலை வானொலிகளும் ஊடகங்களும்
மக்களை உசுப்பேற்றி அற்ப பரிசுகளை அறிவித்து
கைபேசி நிறுவனங்களும் கைகோர்த்துக்கொண்டு
பல  கோடிகளை சுலபமாக அள்ளுகின்றன

கைபேசியில் வரும் ஒரு குறுஞ் செய்தியை நம்பி
சில மெத்த படித்த முண்டங்கள் பல லட்சங்களை
அனுதினமும் இழக்கின்றன

முகத்தை மறைத்துக்கொண்டு
பெண்களை ஏமாற்றும் காமப் பொறுக்கிகளுக்கு அலைபேசி
புகலிடமாகப் போய்விட்டது.

வெட்டியாக பேசும் வார்த்தைகளை உண்மை
என நம்பி விட்டில் பூச்சிகள் விழுந்து சாகின்றன

சாலை  ஓரங்களில் குவியும்
இந்த மின் சாதனக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை சுற்றுப்புற சூழலையும்  நிலத்தடி நீரையும் நஞ்சாக்குபவை



ஏற்கெனவே பிளாஸ்டிக் குப்பைகள்,
வானொலி பெட்டிகள்,கிராமபோனே
,வி,சி டி, வி, சி, பி, தட்டச்சு இயந்திரங்கள், கணினிகள்,




 சி.டி. பழுதடைந்த கைபேசிகள்



,பாதரச பல்புகள், குண்டு பல்புகள்,


அழிக்க முடியாத தண்ணீர் பாட்டில்களால்
இந்த உலகம் நிரம்பிக் கிடக்கிறது. அவைகளுடன்




இந்த கைபேசிகளும், அலைபேசிகளும்,


 ஐ பாடுகளும், எல்.சி. டி. டி விகளும்



 டிவி மானிடர்களும் தெருவில் வந்து விழும்.
அவைகளை எரித்தாலும்



ஆபத்து. புதைத்தாலும் ஆபத்து.

அதன் கூட அணுக் கழிவுகள்.
நம் கண்ணுக்கு தெரியாது எங்கெல்லாம்



மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது
என்று யாருக்கும் தெரியாது

வல்லரசுகள் அணுக கழிவுகளை பாலைவனத்திலும்,
ஆளில்லா தீவுகளிலும் கடலின்
ஆழத்திலும் புதைத்து வைக்கின்றன

நம் நாட்டில் மின் சாதனக் கழிவுகளை
முறையாக் அழிப்பது கிடையாது.

அந்த தொழில் நுட்பம் இங்கு கிடையாது

,










இந்த ஆபத்தான .வேலையில்  சிறுவர்கள்  ..எந்தவிதமான பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப் படுகின்றனர். மற்றவர்களும் அதே போல்தான் இந்த துறையில் உள்ளனர்.



மக்களிடம் எந்த விழிப்புணர்வும் கிடையாது
அவர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுயநல
அரசியல்வாதிகளுக்கு அதைப் பற்றி அக்கறையில்லை.

இவைகளையெல்லாம் எதிர்த்து போராடுபவன் தேசத்ரோகி.மக்களுக்கு எதிரானவன். என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறான்
அசிங்கப்படுத்தப்படுகிரான்.


வெளிநாட்டில் இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முறையான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி.கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
என்னெனில் கணினி உபகரணங்களில் தங்கம் அதிக அளவில் பயன்படுத்த்ப்படுகிறது. அதை பிரித்தெடுத்து நல்ல லாபம் பார்க்கிறார்கள்.


. .

குழந்தைகளே நோயில் உருவாகி அதனுடனே பிறந்து வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு இவனின் அனுதாபங்கள்.

இவனால் தற்போது இதுதான் செய்யமுடியும்.

படங்கள்-நன்றி-கூகிள்

வியாழன், 23 ஜனவரி, 2014

எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?

எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?

கவர்ச்சிக்கு அடிமையாகி நடிகர்கள்,
நடிகைகளையே அல்லும் பகலும் கண்டு
அவர்களின்  நினைவிலேயே மூழ்கி
கிடப்பவர்களுக்கு ஏது விழிப்புணர்வு?




உண்மையை புரிந்து
கொள்ள முயற்சி செய்யாது



தூண்டி விடுபவர்களின் நோக்கத்தை அறியாது
 உணர்சிகளுக்கு அடிமையாகி அவர்களின் பின்னே செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி வரும் விழிப்புணர்வு?




குடி, போதையில் ஆழ்ந்து எப்போதும்
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் குடி மன்னர்களுக்கு
எப்படி வரும் விழிப்புணர்வு?

விளம்பரப் பொய்களில் மனதை பறிகொடுத்து
எல்லாவற்றையுமிழந்துகொண்டிருக்கும்
மக்களுக்கு எப்படி வரும்விழிப்புணர்வு?



நாவின்   சுவைக்கு  அடிமையாகி
உயிரையே இழக்கும் மீனைப் போல    




 பேராசைக்காரர்களின்  மாய்மால பேச்சை நம்பி
இருப்பதையெல்லாம் இழக்கும் மூட
ஜனங்களுக்கு எப்படி வரும் விழிப்புணர்வு?

எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி
குழியில் விழும் மனிதர்களுக்கு
எப்படி வரும் விழிப்புணர்வு?

உண்மையாக வாழ்வில் உயர வழி
காட்டுபவர்களின் அறிவுரையை நம்பாது



போலிகளின் பின்னால்  சென்று
அழிந்து போகும் அறிவற்றவர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?

தன்னைக் காப்பற்றுபவனுக்கும்



தன்னைக் கொன்று தின்னும் கசப்பு கடைக்காரனுக்கும்

வேறுபாடு அறியாது மாண்டு போகும்
ஆட்டு மந்தைகள் போன்ற மக்களுக்கு
எப்படி வரும்விழிப்புணர்வு?

இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்தி
வாழ்வதை  ஒதுக்கித் தள்ளிவிட்டு
வெறும் மூட நம்பிக்கையையே ஆதாரமாக கொண்டு
ஒவ்வொரு கணமும்  அல்லல்படும்
மூடர்களுக்கு எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் என்ற சிவ வாக்கியரின்
போதனையின் உட்பொருளை
உள்ளபடி உணராமல்



உலகெங்கும் சென்று எல்லாவற்றிலும்
கடவுளை தேடும் மூடர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?

சாத்திரங்களின் உட்பொருளை உணர்ந்து
அதில் காட்டியுள்ள வழிமுறைகளைப்
பின்பற்றாமல் கிளிப்பிள்ளைகள் போல்



தினம் தினம் அனுதினமும் ஓதி
ஒரே இடத்தில செக்கு மாடுகள் போல்
உழன்று  கொண்டிருப்பவர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?

வராது வராது

படங்கள்-நன்றி-கூகிள்

எத்தனை காலம்தாம்தான் ஏமாறுவார்கள் நம் நாட்டு மக்கள்?

எத்தனை காலம்தாம்தான்
ஏமாறுவார்கள் நம் நாட்டு மக்கள்?


மின்பற்றாக் குறையும் நாமும் 

நான் ஒரு பாமரன்

இருந்தாலும் என்னுடைய கருத்தையும் கேளுங்கள்

1.இன்று மிக குறைந்த மின்சக்தியில் இயங்கும் கருவிகள் வந்துவிட்டன
220 வோல்டில் இயங்கும் டேபிள் மின்விசிறிகள் 12 வோல்டில் இயங்குகின்றன .குறைந்த மின் ஓட்டத்தில் led விளக்குகள் வந்துவிட்டன

அவைகளை அதிக அளவில் பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைக்கலாம்

ஆனால் இன்னும் நாம் 220 volt இணைப்பையே நம் நாடெங்கும் பயன்படுத்திக்கொண்டு மின்சக்தியை வீணடிக்கின்றோம் 

(அரசியல்வாதிகள் அவர்கள் கூட்டங்களுக்கு மின் சக்தி திருடுவது, மற்றும் இந்நாட்டு மன்னர்கள் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது, மின் சக்தி அனுப்புவதில் ஏராளமான் இழப்பு, பழுதடைந்த மின் தொகுப்புகள், மின் மாற்றிகள், காற்றாலை மின்சாரம் ஏராளமாக கிடைத்தும் அதை பல காரணங்களுக்காக பயன்படுத்தாமல் வீணடிப்பது ,போன்ற கையாலாகாதனங்கள் இருக்கும் வரை  நம் நாட்டில் எந்த திட்டமும் உருப்படாது) 

கொள்ளைக்கார மட்டைபந்து விளையாட்டுகளுக்கு இரவில் வெளிச்சம் போட வீணடிக்கும் மின்சக்தி எத்தனையோ கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கலாம் 

2.தற்போது 3 volt மின்சக்தியைக்கொண்டு ஒரு circuit மூலம்  அதை பலமடங்கு அதிகரித்து இயங்கும் உபகரணங்கள் உபயோகத்தில் வந்துவிட்டன(காஸ் lighter,muskito bat  and so many).அப்படி உண்டாக்கபடும் மின்சாரத்தை தேக்கி பயன்படுத்த மின்கலங்கள் உள்ளதா என்று தெரியவில்லை. 

இந்த மாறுதல்களை செய்தாலே நமக்கு உபரி மின்சாரம்கிடைக்கும். 

ஆனால் கையாலாகாத, தொழில் நுட்ப அறிவு இல்லாத ,மாற்றத்தை கொண்டு வர விருப்பமற்ற,நிர்வாகம், கண்டு பிடிப்பாளர்களை 
ஊக்குவிக்காமல் நசுக்கும் அரசு இயந்திரங்கள் போன்றவை பெருந்தடைக்கற்களாக உள்ளது 
அகற்றப்படவேண்டும். 

அமெரிக்காவில் ஏராளமாக ஆராய்ச்சி செய்து மாற்று வகையில் மின்சக்தியை உண்டாகும் வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளார்கள். அவைகளையெல்லாம் அவர்கள். ரகசியமாக வைத்துள்ளார்கள்.

அவர்கள் கேடிகள்.

 ஒரு சமயம் குண்டு பல்பினால் தான்  உலகம் சூடாகிவிட்டது அதனால் அதை ஒழிக்கவேண்டுமென்பார்கள்.ஏனென்றால் அதை தயாரிக்கும் நிறுவனங்களை அவர்கள் மூடி விட்டார்கள். 

அவர்கள் ஒவ்வொரு நாட்டின் மீதும் பல ஆண்டுகளாக போட்டு மக்களை சாகடிக்கப் போட்ட பல கோடி டன் குண்டுகளிலிருந்து வெளிப்பட்ட வெப்பமும் நச்சு வாயுக்களும் உலகை சூடேற்ற  வில்லை   சுற்று சூழலை பாழாக்கவில்லை நஞ்சாக்க வில்லை ?அதற்க்கு பதில் கிடைக்காது 

அப்பாவி குண்டு பல்புகல்தான் உலகை சூடாகிவிட்டதாம்

என்ன பேத்தல் ?

பாதரசம் பயன்படுத்தகூடாது  என்று பிரசாரம்.
அது ஆளைக் கொன்றுவிடும். புற்றுநோய் வந்துவிடும் என்று அவர்கள் டிஜிட்டல் தெர்மாமீடெரை விற்பதற்க்காக இந்தியாவில் உள்ள தெர்மாமீட்டர் தயாரிக்கும் கம்பனியை மூட திட்டம்.

மறுபுறம். CFT கையடக்கமான பாதரச விளக்குகளை தயாரித்து  அதிக விலை வைத்து நம் தலையில் கட்டுவதற்கு பழியை குண்டு பல்புகள் தலை மீது போடுகிறார்கள்..

 அந்த பல்புகள் உடைந்தால் அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு மிக ஆபத்தானது. அதை அவர்கள் விளம்பரப் படுத்து வதேயில்லை 

பொதுநலனில் சிறிதும் அக்கறையில்லாத நம்முடைய அரசுகளும் நிர்வாகங்களும் கொடிய  ஆபத்தை உண்டாகும் பழுதாகி எரியாமல் போன   பல்புகளை பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்க யாரிடமும் திட்டம் இல்லை  இல்லை 

இப்போது led பல்புகளை வாங்குமாறு வலியுறுத்துகிறார்கள் அதன் விலையோ 30 குண்டு பல்புகளுக்கு மேல் இருக்கிறது. 

நம் நாட்டு மக்கள் எல்லாவற்றிற்கும்  ஆட்டு  மந்தைகள் போல்  ஆமாம் சாமிகள் போடுவதால் தொடர்ந்து தலையை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

போதாகுறைக்கு ஆம் ஆத்மி கட்சி வேறு. 
 வழிநடத்த சரியான ஆளில்லா கட்சி. 

இருக்கும் அதிகாரத்தை வைத்து என்ன நன்மைகள் மக்களுக்கு செய்யலாம் என்பதை ஆராயாது. கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டுக்கொண்டிருக்கும் கட்சி. 

நம் நாட்டு மக்கள் தொலைகாட்சிகளில்  விளம்பரப்படுத்தும், தரமற்ற,தேவையற்ற, கவைக்குதவாத, பொருட்களை பொய்களையும் புளுகுகளையும் கூறி நம்  மூளையை மழுங்கடித்து நம்முடைய நேரத்தையும் பணத்தையும் கொள்ளை அடிக்கின்றன. 

நம் நாட்டில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண
ஏராளமானவர்கள் தயாராக இருக்கிறார்கள்
 அவர்களை யாரும். ஊக்கப்படுத்துவதில்லை.
அவர்களை வாழவும் விடுவதில்லை.

 அவர்களை தலை தூக்க விடாமல் செய்ய கணக்கற்ற சட்டங்கள், விதிகள், அனுமதிகள், உரிமங்கள், வரிகள், என உருப்படாத கருப்பு சட்டங்கள்.

கழிவறையில் கழுவ உதவும் அமிலத்திலிருந்து சமையல் எண்ணெய் வரை ,   அனைத்திலும் பன்னாட்டு பன்னாடைகளின் ஆதிக்கம்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல். எதிலும் கமிஷன், சுரண்டல்.

என்ன செய்ய?

ஒரே தலை சுற்றுகிறது. யார்தான் இவைகளை சரி செய்ய போகிறார்களோ? இல்லை அப்படியே என்றும் அடிமைகளாகத் சிந்திக்கும் திறனின்றி  இந்திய மக்கள் சாகத்தான் வேண்டுமோ?  

வியாழன், 16 ஜனவரி, 2014

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள் 

நாம் சமையலுக்கு பெட்ரோலியம்
எரிவாயுவை  பயன்படுத்துகிறோம்.
அது ஸ்டீல் சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு வருகிறது.


அந்த ஸ்டீல் சிலிண்டர்களு க்கும் பயன்படுத்தப்படும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சமீபத்தில்தான் தெரிய வந்தது

அந்த கால கட்டத்தை தாண்டி அதை பயன்படுத்தப்படுவது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த விவரம் ஒவ்வொரு சிலிண்டரின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை அனைவரும் தெரிந்துகொண்டு காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்தவேண்டாம் என்று தோன்றுகிறது (இந்த தகவல் உண்மையா என்பதை விவரம்  அறிந்தவர்கள் தெரிவித்தால் நலம்) 

வெள்ளி, 10 ஜனவரி, 2014

சித்திரமும் கைபழக்கம் என்பார்கள்

சித்திரமும் 
கைபழக்கம்  என்பார்கள்

சித்திரமும்
கைபழக்கம்  என்பார்கள்

ஆனால் கைகளே இல்லாத இந்த மனிதருக்கு
வாய்தான் பழக்கமாய் இருக்க முடியும் .



வாயில் ப்ருஷை பிடித்து
ஓவியம் வரைவதைப் பார்த்து ரசியுங்கள்.

இரண்டு கைகளை இறைவன் நன்றாக அளித்திருந்தும்
அதை பயன்படுத்தி உழைக்காது பிச்சை எடுக்கும் சோம்பேறிகளும்,
திருட்டு தொழில் செய்து வயிற்றைக் கழுவும்  ஈனப்பிறவிகளும் ,
கைகளைக் கொண்டு லஞ்சம் வாங்கி
சொத்து சேர்க்கும் ஜன்மங்களும் திருந்தட்டும்

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை
என்பதை செய்கையில் காட்டும்
இந்த மனிதரைப் பாராட்டுவோம்.


https://www.facebook.com/photo.php?fbid=622217187827487&set=a.453214531394421.93932.453205841395290&type=1

வியாழன், 9 ஜனவரி, 2014

யார் இந்த பெண் தெய்வம்?


யார் இந்த பெண் தெய்வம்? 


யார் இந்த பெண் தெய்வம்?
இருமுடி கட்ட தயாராகுங்கள்

விரதம் இருந்து வரங்களைப் பெற தயாராகுங்கள்
பாத யாத்திரை செய்ய தயாராகுங்கள்.

விரைவில் போற்றி மாலை
துதிகள் வெளியிடப்படும்.

கசங்கிய காகிதகசங்கிய காகிதம் ம்


கசங்கிய காகிதம் 





கசக்கப்பட்டால்  தூர
குப்பையில் விசிறி எறியப்படும் காகிதம்

ஆனால் முயற்சிசெய்தால்
கலை படைப்புகளை உருவாக்கலாம்.
சில உதாரணங்கள்.



அழகிய வேலைப்பாடு


பூட்டு சாவி வைக்கும் கூடை 



பேப்பர் கப் 

ஆனால் விஞ்ஞானத்தின் துணை
என்ன வேண்டுமானாலும் நிகழ்த்திக் கட்டலாம்
என்பதை விளக்கும் காணொளி

கண்டு மகிழுங்கள்.




https://www.facebook.com/photo.php?v=627807657278676

புதன், 8 ஜனவரி, 2014

புகை பிடிக்கும் இந்திய பெண்கள்


புகை பிடிக்கும் இந்திய பெண்கள் 


நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

உலக அளவில் இந்திய பெண்கள்தான்
அதிக அளவில்புகை  பிடிக்கிறார்கள் என்று
இன்று செய்தி வெளியாகி உள்ளது.

அரசு புகை பிடித்தால் புற்று நோய் வரும்
என்று விளம்பரம் செய்கிறது.

மார்பக புற்று நோயாலும், கர்ப்ப பை புற்று நோயாலும்
இன்று லட்சக்கணக்கான பெண்கள்
உயிரோடு மரணத்தின் கொடுமையை அனுபவிப்பதைக்
கண்டும் இவர் போன்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தற்கொலைக்கு சமானமானது அன்றி வேறு என்ன ?

ஆனால் நாகரீகம் என்ற பெயரில்
அனைத்தையும் காற்றில் பறக்க விட்ட
 நம் நாட்டு பெண்கள் தற்போது புகையையும்
பறக்க விடத் தொடங்கி விட்டார்கள்

அவர்கள் புகை பிடித்து நாசமாகப்
போகட்டும் அவர்களை
யாரும் திருத்த முடியாது.

அவர்கள் நம் நாட்டின்
எதிர்கால சந்ததிகளை உருவாக்கும்
முக்கிய பொறுப்பை இறைவன்
அவர்களுக்கு தந்திருக்கிறான்.

 அவர்கள் வயிற்றில் வளரும் பிஞ்சுகள் பிறக்கும்போதே மனதில் புகை பிடிக்கும் கொடிய பழக்கம் பதிவாக பதிய வழி வகுக்கவும் உடலிலும் நிகோடின் என்னும் நஞ்சு கலந்து அவர்களுக்கு உருவாகும் குழந்தைகள் பிறக்கும்போதே பலவிதமான உடற்குறைபாடுகளுடனும், மூளை செயல்பாட்டு குறைபாடுகளுடன் பிறக்கும் என்று அறிந்தும் தவறு செய்யும் இவர்களை யார் திருத்த்வது?


கடவுள்தான் இவர்களுக்கு
நல்ல  புத்தி அளிக்க வேண்டும்.

படம்-தகவல் -ஒன் இந்தியா-செய்தி வலைத்தளம். 

திங்கள், 6 ஜனவரி, 2014

அபர காரியங்கள்

அபர  காரியங்கள் 



கருமாந்திரம் என்ற
சொல் அமங்கலமா?

சமீபத்தில் ஒரு
வலைப்பதிவு பார்த்தேன்

அதன்தலைப்பு காசு கொடுத்து
கருமாந்திரங்களை தரும்
இணையதளம் அல்ல என்றும்
இலவசமாக பல்சுவை
தகவல்களை தந்து உங்கள் இதயங்களை
கொள்ளைடிக்கும் இணையதளம்
என்று தலைப்பை இடப்பட்டிருக்கிறது.

அந்த தலைப்பே கருமாந்திரம் என்ற சொல்
ஒரு இழிவான பொருளை தரும் சொல்
என்பது போலவும் அந்த துறையில்
ஈடுபட்டுள்ள ஒரு இனத்தவரின் மீது
காழ்ப்புணர்ச்சியை காட்டும் முகமாகத்தான்
அமைக்கப்பட்டிருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே

ஆனால் உண்மையில்
இந்த கருமாந்திர தொழிலில்
பல்லாயிரக்கணக்கான்
மனிதர்களும்
வெவ்வேறு பிரிவு மதம்
இனத்தை சேர்ந்தவர்கள்
ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட
சமுதாயம் செய்யும் செயலை
மட்டும் பிரித்து அவர்கள்தான்
அனைத்திற்கும் காரணம் என்று
என்றோஎழுதப்பட்டு
தற்போது நடைமுறையில்
இல்லாத விஷயங்களோடு
ஒப்பிட்டு நோக்கி
ஆனந்தப்படுவது
ஒரு சிலரின் சுதந்திரம்

அதில் யாரும்
தலையிடவேண்டாம்.
அவர்கள் அப்படியே
இருக்கட்டும்
.
இப்போது இந்த கட்டுரை
இந்த கருமாந்திரத்தை பற்றி
ஆராய்வதுதான் நோக்கம்.

நாம் வாழும் இந்த
பூமி கரும பூமி.

இந்த உலகில் பிறந்த
எந்த உயிரும் சும்மா
இருக்க முடியாது.

 பிறந்ததிலிருந்து
இறக்கும் வரை ஏதாவது
ஒரு கர்மாவை அதாவது
செயலை செய்து கொண்டுதான்
இருக்கவேண்டும். .

எந்த செயலை செய்யவேண்டும்
என்றாலும் அதற்க்கு
மனம் திறனுடையதாக
இருக்கவேண்டும். அதை
திறனுடையதாக செய்வதற்கு
உதவுபவைகள்தான்
இந்த மந்திரம் என்பது.

பொதுவாக இறப்பு
தொடர்பான கர்மங்களை.
கர்மாந்திரம் என்று அழைக்கிறோம்.
அதை அமங்கலமாகவும்
அதை செய்பவர்களை
 மட்டமாகவும் நினைக்கிறது
இந்த நன்றி கெட்ட உலகம்.

துன்பத்திலும், துக்கத்திலும்
துயரத்திலும் வீழ்ந்து என்ன
செய்வதென்றறியாது குழப்பத்தில்
ஆழ்ந்துபோயிருக்கும் மக்களை மீட்டு
அவர்களின் துன்பசுமையை
படிப்படியாக குறைத்து
அவர்களை மீண்டும்
வாழ்க்கை பயணத்தை
தொடர உதவும் இந்த
துறையில் இருப்பவர்களை
மனம் திறந்து பாராட்டவேண்டும்.
ஆனால் மாறாக அவர்களை
பழித்துரைக்கின்றனர்.

எந்த துறையிலும்
அயோக்கியர்கள் உண்டு.

அதேபோல்தான்
இந்த துறையிலும்.
கிடைத்தவரை சுருட்டுவது.

புதுப்படம் வரும்போது கருப்புசந்தையில்
பலமடங்கு காசு கொடுக்க தயங்குவதில்லை.
எவ்வளவு விலை விற்றாலும்
குடிப்பதற்கு காசு செலவு செய்ய
தயங்குவதில்லை இந்த மனிதர்கள்.
இதுபோல் ஏராளம்.

இன்று இன்று மன நல மருத்துவர்கள்
மருத்துவ மனைகள்
நகை மோசடிகள்
பன்னாட்டு வியாபாரிகள்
,மதவாதிகள், மந்திரவாதிகள்,
போலிசாமியார்கள், நிதி,நிலமோசடி,
கள்ளகடத்தல், போதை கும்பல்கள்
காம வியாபாரிகள், தொலைகாட்சிகள்
அரசியல்வாதிகள்
பலவிதமான கொள்ளையர்கள்
கேடிகள் இவர்களை விடவா
இந்த துறையில் இருப்பவர்கள்
மக்களை ஏமாற்றிவிட
போகிறார்கள்?

சிந்திக்கவேண்டும்.
எதிர்ப்பில்லை என்று தொடர்ந்து
ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது.
 இன்றுமட்டுமல்ல
அது உலகம் தோன்றிய நாள்
முதலிருந்து உண்டு.

ஒரு மனிதன் மற்றொருவனை
இழிவுபடுத்துவது அகந்தையின்பால்
பட்டதே  ஒழியே மற்ற
எந்த காரணத்தையும் சார்ந்தது
அல்லஎன்பதே உண்மை.

கல்வி மனிதனின் வாழ்வின்
தரத்தை மேம்படுத்தலாமே அன்றி
நல்ல பண்புகளே அவன் வாழ்வை உயர்த்தும்.

இன்றைய கல்வி காசைச் செலவழித்து காசை 
சேர்க்க வழி காட்டும் கல்வி.

அதில் பணத்திற்கும் பதவிக்கும்தான் இடம் உண்டு.
பண்புக்கோ அன்புக்கோ அதில் இடம் கிடையாது. 

இன்று எந்த துறையை எடுத்தாலும்  அதில் ஆதிக்கமும், 
கிடைத்தவரை பிறரை ஏமாற்றியோ சூழ்நிலையை பயன்படுத்தியோ 
சுருட்டும் மனப்போக்குதான் நிலவுகிறது. இந்த துறையிலும் அதுபோன்ற நிலை உள்ளது .



இந்த துறையை மட்டும் தனிமைப்படுத்தி குறை கூறாமல் இதிலுள்ள குறைபாடுகளை அனைவரும் சேர்ந்து ஒழுங்குபடுத்தினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதற்க்கு பொதுநல சங்கங்கள் கூடி பேசி ஒரு நல்ல முடிவைக் காணுதல் அவசியம். 






மேல்நாட்டு மோகம் ஒழியட்டும்.

மேல்நாட்டு மோகம் ஒழியட்டும். 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்ட 
மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்பட்டு 
நாம் நாட்டில் விற்கப்படும் 
ஆப்பில் பழங்களை உண்ணாதீர். 

அவைகளில் சத்தும் இல்லை 
சாரும் இல்லை 

நம் நாட்டு மக்கள் தேவையில்லாமல் 
அதிக விலை கொடுத்து அதை வாங்கி 
தன் உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

நம் நாட்டில் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ற 
அந்தந்த பகுதிகளில் ஏராளமான் வகையான சுவையான  கனிகள் விளைகின்றன. 
அவைகள் விலை மலிவானவை. சத்து மிக்கவை. 
அவைகளை அந்தாத கால கட்டங்களில் உண்ணுங்கள்.
 நம்முடைய உடல் நலம்நன்றாக இருக்கும். 

நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் 
மருத்துவரை தொலைவில் வைக்கலாம் 
என்பது ஒரு பொய்ப் பிரசாரம்

இன்று ஆப்பிள் கிலோ 160 ரூபாய்க்கு 

குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிளில் 
அதன் தோல் மற்றும் நடுப்பகுதி 
என 250 கிராமுக்கு மேல் வீணாகி விடும்

மக்களுக்கு கிடைக்கும் ஆப்பிள்கள் அனைத்தும் 

குறைந்தது மரத்திலிருந்து பறிக்கப்பட்டு குறைந்தது 
30 நாட்கள் கழித்துதான் கிடைக்கிறது. 
அதில் வெறும் மாவு சத்துதான் இருக்கிறது.

அதுவும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆப்பிள்களில் 

மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்படுகிறது.
அது பறித்து எத்தனை மாதங்கள் ஆகியதோ அந்த 
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 ஒன்றும் அறியாத மக்கள் 
அதை அப்படியே உண்கின்றனர். 



நம் நாட்டில் கிடைக்கும், நெல்லிக்காய், 
கொய்யா, சப்போட்டா, ஆரஞ்ச் பலவிதமான 




வாழைப்பழங்கள்,




 மாங்கனிகள், பலாப்பழம் சீதாப்பழம், 
வெள்ளரிபழம், கிருநிபழம், பப்பாளி பழம், எளிமிச்சை, 
சாத்துக்குடி, என ஏராளமான பல வகையான பழங்கள், 
சத்து மிகுந்தவை, மலிவானவை. 
அவைகளை சாப்பிட்டு 
ஆரோக்கியமாக  வாழுங்கள். 

வெளிநாட்டில் ஆப்பிள்களை கொதிக்கும் மெழுகில் இட்டு 
மெழுகு பூசும் காநோளியைக் காணுங்கள். 
அதைக் கண்ட பிறகாவது மனம் திருந்துங்கள். 

https://www.facebook.com/photo.php?v=578186105592548

திருந்தினால் நம் நம் நாட்டிற்கும் உங்களுக்கும் நல்லது.