வெள்ளி, 30 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


பல ஆண்டுகளுக்கு முன்பே வண்ண ஓவியங்களை
வரைய முயற்சி செய்தேன்

Year 1972


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ




வியாழன், 29 நவம்பர், 2012

விலங்குகளும் மனிதர்களும்(பகுதி-2)


விலங்குகளும் மனிதர்களும்


விலங்குகளும் மனிதர்களும்(பகுதி-2)



















விலங்குகள் தினமும்
உறங்குகின்றன

விலங்குகள் உறக்கம் வரும்போது உறங்கிவிடுகின்றன. 
எதை பற்றியும் அவைகளுக்கு கவலையில்லை. 
தூங்கும் பொது அது கொல்லப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அதற்கில்லை.
சேர்த்து வைத்த சொத்துக்களை யாராவது 
கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவார்களோ 
என்ற பயம் அதற்கில்லை. 
ஏனென்றால் அவைகள் சொத்து சேர்ப்பது கிடையாது 

அதனால் அவைகளை பாதுகாக்க 
வேண்டிய தேவையும் இல்லை. 
அதை இழந்து விடுவோம் என்ற பயமும் இல்லை. 

ஆனால் மனிதர்கள் நிலை என்ன?

படுத்தால் அவனால் உறங்க முடிகிறதா? 
ஏதோ சில புண்ணியவான்களுக்கு
 மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. 

பலர் தூங்குவதற்கு பல தூக்க 
மாத்திரைகளை விழுங்கவேண்டியுள்ளது.
தூங்குவதற்கு பல ஆயிரம் செலவு செய்து 
குளிர் சாதந வசதி செய்து தாளிடப்பட்ட 
அறைக்குள் தூங்கினால்தான் தூக்கம் வருகிறது.

அந்த தூக்கத்தை கெடுக்க ஏராளமான சக்திகள் அவனுக்கு எதிராக வேலை செய்து அவன் தூக்கத்தை கெடுக்கின்றன

தீய வழியில் சொத்து சேர்த்தல் 
,பிறருக்கு கொடுமைகள் இழைத்ததினால் 
உண்டாக்கிகொண்ட எதிரிகள், சேர்த்த சொத்துக்கு வருமான வரி கட்டாமல் இருத்தல்,
அளவுக்கதிகமாக தங்க நகைகள் வீட்டில் வைத்திருத்தல்,
கணக்கில் வாராத கோடிக்கணக்கான
பணத்தை வீட்டில் மறைத்து வைத்தல், 
வீட்டின் உள்ளே எதிரிகள், வெளியே எதிரிகள்,
கொசுமற்றும் விஷப் பூச்சிகள் கிருமிகள்,
கொள்ளையர்கள்,  பலவிதமான மன குழப்பங்கள்என 
அவன் படும் துன்பங்கள் கணக்கிலடங்கா 

இந்நிலையில் அவன் எவ்வாறு உறங்குவது ?

ஒவ்வொரு கணமும் பயந்து நடுங்கி சேர்த்த சொத்துக்களை பாதுகாப்பதில் மனதை செலுத்தி, 
உறக்கத்தை இழந்து மன நோயாளிகளாகி 
வாழும் மனிதர்களை என்னவென்று சொல்வது?

அப்படி உறங்கினாலும் கனவு 
தொல்லைகள் வேறு. .

இதை தவிர விபத்துக்கள்,நோய்கள், 
துக்கம், துயரம் இழப்புகள் என எண்ணிலடங்கா துன்பங்கள்

இவை எல்லாம் அதுவாகவே வந்ததில்லை 
எல்லாம். அவனாகவே தேடிக்கொண்டதுதான் 

இப்படி இறைவன் கொடுத்த பகுத்தறிவை கொண்டு மகிழ்ச்சியாக வாழ தெரியாமல் பிறப்பு முதல் இறப்பு வரை துன்பத்தில் வாழும் மனிதர்கள் எப்படி பகுத்தறிவுடையவர்கலாக இருக்க முடியும்?

எந்த மனிதனையாவது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று கேட்டால் அவன் பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி இல்லை என்றுதான் பதில் வரும்?

ஏனென்றால் இவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி
என்பது என்ன என்று தெரியாது

மகிழ்ச்சி என்று எதையோ நினைத்துக்கொண்டு இகழ்ச்சியான செயல்களை செய்து கொண்டு. துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.  


சீன மண்ணில் தமிழ் (Part-3)


சீன மண்ணில் தமிழ் (Part-3)

ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
சீனாவில் தமிழ் பரவிஇருந்தது 
இந்த செய்தி ஒரு கல்வெட்டு 
மூலம் தெரிய வருகிறது 



              
மங்கோலிய அரசர்கள் ஆண்ட காலத்தில் 
தமிழ் கலாசாரம் சீனாவில் 
இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

குப்லாய் கான் சீனத்தை 1260 ஆம் ஆண்டு 
முதல் 1294 ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்துள்ளான். 

அவனை பற்றியும் மங்கோலியர்களை பற்றியும் 
சில சுவையான தகவல்கள் .

பழங்குடிகளான மங்கோலிய இனத்தவர்கள் 
சிறு சிறு கூட்டமாக மத்திய ஆசிய புல்வெளிகளில் குதிரைகள் மேலேறிக்கொண்டு மாடுகளையும் குதிரைகளையும் மேய்த்துக்கொண்டுசுற்றி திரிபவர்கள் .
அவர்கள் மூர்க்க குணமுடையவர்கள் மட்டுமல்லாது 
எப்போதும் போரிட்டுக்கொண்டே இருக்கும் 
குணமுடையவர்களாய் திகழ்ந்தனர் 

ஒரு கால கட்டத்தில் அவர்களிடையே 
ஒரு தலைவன் தோன்றினான்
அவன் அனைத்து மங்கோலிய இனத்தவரையும் 
ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க சமூகமாக்கினான் .
அவன் திட்டமிடுவதில் சமர்த்தன். 
அவன் பெர்சியா,மத்திய ஆசியா, ரஷ்யா
ஆயிரோப்பாவின் சில பகுதிகள் 
மத்திய தரை கடல் நாடுகளில் சில பகுதிகள், 
மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது போரிட்டு 
அந்நாடுகளை கைப்பற்றினான்.

மிக குறுகிய காலத்தில் தன்னுடைய 
படையை கொண்டு இத்தனை நாடுகளை 
கைப்பற்றியவன் இதுவரை உலகில் யாரும் இல்லை.
 .
அவனை தங்களின் உயரிய தலைவனாக 
தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்டனர் மங்கோலியர்கள். . 

அவன் மறைவிற்கு பிறகு 
வாரிசு பிரச்சினைகள் உருவாகியது 
செங்கிஸ்கானின் மறைவிற்கு 
பிறகு மங்கோலிய சாம்ராஜ்யம்
 நான்காக பிளவு பட்டது 

அதில் சீனாவும் ஒன்று 
மற்றவைகள்,பெர்சியா,ருசியா ,அயிரோப்பா 
மற்றும் மங்கோலியர்கள் வசிக்கும் நாடு.
இந்த நாடுகளில் உள்ள ஒருவரை
தங்களின் தலைவனாக தேர்ந்தெடுத்தனர்.  

குப்ளாய்கான் சென்கிஸ் கானுடைய பேரன் 
அவனுடைய நான்காவது மகனான 
செங்கிஸ்கானின் மூன்றாவது மகன் 

குப்ளாய்கான் மங்கோலியர்களின் 
ஏகோபித்த தலைவனாய் ஏற்றுக்கொள்ளப்பட்டான்

அவன் சைனாவில் இருந்துகொண்டு 
தன் ஆட்சியை நடத்தினான்
பெய்ஜிங் நகரை நிர்மாணித்து அதை 
தன் தலைநகராக கொண்டான். 
அவன் நாடு பெரியதாகவும்,வளமுள்ளதாகவும்,
செல்வமுள்ளதாகவும் செழித்து விளங்கியது 

அவன் வலிமைமிக்கவ்னாகவும்,
பலமுள்ளவனாகவும் விளங்கினான் 
அவனிடம் யாராலேயும் எதிர்க்க முடியாத 
வலிமை வாய்ந்த படையும் ,படைக்கலங்களும் இருந்தது .



இரண்டு தடவைதான் அவன் படைகள் 

தோல்வியை சந்திக்க நேர்ந்தது
.....

               

(இன்னும் வரும்)
நன்றி: VIDYALANKARA 
DR.S.JAYABARATHI

JayBeeமூல பதிவு.

புதன், 28 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)


நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)



விலங்குகளும் மனிதர்களும்


விலங்குகளும் மனிதர்களும்



















விலங்குகள் தினமும்
உறங்குகின்றன
விழிக்கின்றன,விழித்தவுடன்
இரை தேடுகின்றன

உடலில் சக்தி அதிகமானால் ஒன்றுக்கொன்று
 விளையாடுகின்றன அல்லது சண்டையிடுகின்றன
பிறகு உறங்குகின்றன

பருவமடைந்ததும் இன பெருக்கம் செய்கின்றன
விதி முடிந்ததும் மடிகின்றன.
உயிரைப் பற்றியோ அல்லது
அதன் இயக்கம் பற்றியோ அல்லது
உயிருக்குயிரான இறைவன் பற்றியோ
எந்த சிந்தனைகளும் இருப்பதாக
வெளியே காட்டிகொள்வதில்லை

அவைகளுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை
மட்டும் காலம் காலமாக ஆற்றி கொண்டு
வந்து கொண்டிருக்கின்றன

அவைகளுக்கு கடந்த காலத்தை பற்றியோ
எதிர் காலத்தை பற்றியோ
எந்த சிந்தனைகளும் கிடையாது

கல்வி கற்கவோ, சொத்து சேர்க்கவோ
அல்லது புகழ்,பணம்,
இவற்றை தேடி அலைவதில்லை.

மரணத்தை கண்டு பயம் கொள்வதில்லை.
மரணம் வந்தால் மெளனமாக ஏற்றுகொள்கின்றன
அல்லது போராடி அடங்குகின்றன.

அவைகளுக்கு பகுத்தறிவு இல்லை
என்று மனிதர்கள் சொல்லுகிறார்கள்
தங்களுக்கு பகுத்தறிவு
இருப்பதாக பீற்றிகொள்ளும் மனிதர்கள்.

பகுத்தறிவு உள்ளதாக வார்த்தைக்கு
வார்த்தை பீற்றிகொள்ளும் மனிதன்
நடந்து கொள்ளும் விதம் பகுத்தறிவே
இல்லாத விலங்குகளை விட கேவலமாக .உள்ளது.

உற்று நோக்கின் அவன் விலங்குகள்
செய்யும் செயல்களைத்தான்
அவனும் தினமும் செய்து கொண்டிருக்கிறான்

தான் பகுத்தறிவு பெற்றவன் என்பதை
வெளிப்படுத்தும் வகையில்
எதுவும் செய்வதாக தெரியவில்லை

எப்படி என்று அவரவர்க்கே விளங்கும்

(இன்னும் வரும்)  

செவ்வாய், 27 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ



நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


பல ஆண்டுகளுக்கு முன்பே வண்ண ஓவியங்களை
வரைய முயற்சி செய்தேன்

1976 ஆம் ஆண்டு 
அப்படி வரைந்த படம் ஒன்று. 

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ




நானும் ஒரு ஓவியன்தான் (Blue BP sketches)



நானும் ஒரு ஓவியன்தான்(BP sketches)


அரி துயில் கொண்ட அரங்கன் 


சனி, 24 நவம்பர், 2012

கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம்



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


இன்று வரைந்த ஓவியம்



கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் 
தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம் 

இந்த படம் எதை குறிக்கிறது

1.ஆடுமாடுகள் போல் முண்டியடித்துக்கொண்டு 
பேருந்தில் ஏறும் இந்த குழந்தைகள் .
ஒரு சிறுமி ஏறமுடியாமல் தரையில் நிற்கிறாள்
ஒரு சிறுவன் முன் பக்கம் சென்றால் இடம் கிடைக்குமா 
என்று ஓடுகிறான்
இந்த நிலைமை என்று மாறும்?

2 பேருந்து வந்து நின்றதும் வரிசையாக நின்று
ஒவ்வொருவராக பேருந்தில் ஏற வேண்டும் 
என்ற ஒழுக்க நெறியை கடைபிடிக்க கற்று தராத 
ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது

3 பள்ளி செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர தக்க நடவடிக்கை எடுக்காத,கையாலாகாத போக்குவரத்து நிறுவனங்களும், பொறுப்பற்ற ஊழல் அரசுகளின் நிலையையும் குறிக்கிறது

4 பல ஆயிரம் கோடி ரூபாய்களை கல்விக்காக செலவழிக்கும் அரசுகள் குழந்தைகள் சௌகரியமாக பள்ளிக்கு சென்று வர தகுந்த பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யாதது எதிர்கால சந்ததிகளின் மேல் அரசும்.  மக்களும் காட்டும் அலட்சியத்தை காட்டுகிறது

5.சிறுவயதிலேயே ஒழுங்கை கடைபிடிக்காத இந்த இளைய சமூகம் எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக விளங்கும் என்று எப்படி நம்ப முடியும். 

6 அதனால்தான் நம் நாடு இன்று இத்தனை அலங்கோலங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது . 

.

வெள்ளி, 23 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ


தமிழும் தமிழ்புலவர்களும்


தமிழும் தமிழ்புலவர்களும் 

சுந்தர கவிராயர்

மரமது மரத்திலேறி.....



                இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டில் காணப்படுவது.
                இதை இயற்றியவர் சுந்தர கவிராயர் என்பவர். 
  இந்தப் பாடலில் பதினோரு இடங்களில்'மரம்' என்னும் சொல் வரும்.

 ஒவ்வொரு ;மரம்' என்னும் சொல்லும் ஒவ்வொரு வகையான மரத்தைக்   குறிக்கும். அரசமரம், மாமரம், வேலமரம், வேங்கை மரம் என்றவாறு குறிக்கும்.  அழகிய பாடல். 
                இதை அந்தக் காலங்களில் விடுகவியாகச் சொல்வது வழக்கம்.

                  மரமது மரத்தி லேறி மரமதைத் தோளில் வைத்து
                  மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
                  மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
                  மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெ டுத்தார் 


     
                  இதன் பொருள்:

                  மரமது - அரசமரம் -அரசன்
                  மரத்திலேறி - மாமரம் - மா -குதிரையையும் குறிக்கும்-குதிரையிலேறி
                  மரமதைத்தோளில்வைத்து - வேலமரம்-வேல்;வேலைத் தோளில் தாங்கி
                  மரமது -அரசன்
                  மரத்தைக் கண்டு - வேங்கைமரம் - வேங்கை=புலி; புலியைக் கண்டு
                  மரத்தினால் மரத்தைக்குத்தி - வேலினால் வேங்கையைக்குத்தி
                  மரமது வழியே சென்று -அரசன் வந்த வழியே திரும்பிச சென்று
                  வளமனைக்கு ஏகும்போது - அரண்மனைக்குச்செல்லும்போது
                  மரமது கண்ட மாதர் - அரசனைக் கண்ட மாதர்
                  மரமுடன் - ஆலமரம் - ஆல்
                  மரம் - அத்தி
                  மரமுடன் மரம்=ஆல்+அத்தி=ஆலத்தி
                  எடுத்தார்.

                  இப்போது பொருளைச் சேர்த்துப் படித்துக்கொள்ளுங்கள்.
                அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான்.  அங்கு அவன் ஒரு வேங்கைப்புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்தவழியே திரும்பி தனது அரண்மனைக்குச்சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் மன்னனைக் கண்ட மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி )எடுத்து வரவேற்றனர்

நன்றி-மூல பதிவு. 
கடாரத் தமிழ்ப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketch-colored by computer)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketch-colored by computer)


பென்சிலால் வரையப்பட
நடராஜர் கணினியின்
உதவியால் ஒளிர்கிறார்



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

ஏற்கெனவே நடராஜ பெருமானை
பல ஆண்டுகளுக்கு முன் வரைந்தேன்.
அந்த படத்தை என் முந்தைய பதிவில் வெளியிட்டுள்ளேன்.
தற்போது பென்சில் ஓவியமாக மீண்டும் வரைந்தேன்
அந்த படம் இதோ







வியாழன், 22 நவம்பர், 2012

கார்த்திகை தீப பெருவிழா



கார்த்திகை தீப பெருவிழா 



















உள்ளத்தில் ஒளி உண்டாயின் 
வாக்கில் ஒளி உண்டாகும் என்றான் பாரதி 

அடி முடி காண இயலா எம்பிரான் 
அண்ணாமலையில் ஜோதி சுடராய் நின்றான்

அதை குறிக்கும் வகையில் 
கார்த்திகை தீப பெருவிழா நடக்கிறது

ஊனினை உருக்கி 
உள்ளொளி பெருக்கினால்
நம் உள்ளத்தில் ஒளி வடிவாய் 
அவனை காணலாம்

ஊனினால் ஆகிய நம் உடலை 
உருக்க கிரிவலம்
உள்ளத்தை உருக்க 
அவன் திருவடிகளில் பக்தி

பக்தி என்றால் வழிபாடு அல்ல 
அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செய்வதுதான்
ஏனென்றால் அன்பே சிவம் 
அன்பும் அவனும் வேறு வேறல்ல என்றார் திருமூலர்.

அன்பாய் பழகி, அன்பாய் பேசி 
அன்பு வடிவான ஜோதி பெரும் சுடரை 
அறிந்து அதில் கலப்போமாக 

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ





புதன், 21 நவம்பர், 2012

ஒரு கழுதை/ /ஒரு முதியவன்/ஒரு சிறுவன்.





ஒரு கழுதை/
/ஒரு முதியவன்/ஒரு சிறுவன்.

ஒரு ஊரில் ஒரு முதியவன் இருந்தான் 
அவனிடம் ஒரு கழுதை இருந்தது
அவனிடம் அவன் பேரன் ஒரு சிறுவன் இருந்தான்

சரி அவர்களுக்கு என்ன ஆயிற்று?
அதற்குள் பயப்படவேண்டாம்
ஒன்றும் ஆகவில்லை. 

அவர்களின் வயிற்ருக்கே சோறு பத்தவில்லை.
நாட்டில் வறுமை. இந்த அழகில் இந்த அழகான 
கழுதையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சரி அதை சந்தைக்கு சென்று ஒரு விலைக்கு 
தள்ளி விட்டு  அதில் வந்த காசை கொண்டு 
வயிற்றை கழுவலாம் என்று முடிவு செய்தார்கள். 

கழுதையை இடுப்பில் வைத்துக்கொண்டா செல்லமுடியும் ?

இரண்டு பேரும் கழுதையை ஓட்டிக்கொண்டு 
சந்தைக்கு நடந்து சென்றனர்

வழியில் சில பொறுக்கிகள் ஒரு குட்டி சுவற்றின் மீது
 உட்கார்ந்துகொண்டு அந்த பையனை பார்த்து 
ஏண்டா முட்டாள் வயதான பெரியவரை நடத்தி கூட்டி கொண்டு செல்கிறாயே,அவரை கழுதை மேல் உட்கார வைத்து கொண்டு  செல்லக்கூடாதா? என்று அவனை உசுப்பினார்கள்.

உடனே அவன் கிழவனை கழுதை மேல் 
உட்காரவைத்து கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்

அடுத்த ஊரில் அதே போல் சில பொறுக்கிகள் 
ஒரு மரத்தடியில் இவர்கள் செல்வதை பார்த்து அவர்களை அழைத்தனர்.
அழைத்தது மட்டுமல்லாமல் கிழவனிடம், ஏய் கிழவா, சிறிய பையன் நடக்கு முடியாமல் நடந்து வருகிறான் ,அவனை நடக்க விட்டு விட்டு நீ வயதில் பெரியவன் ,நீ கழுதை மேல் பவனி வருகிராயோ ? என்று மிரட்டினர்.

உடனே கிழவன் தான் கழுதையிலிருந்து இறங்கி கொண்டு பேரனை கழுதைமேல் உட்கார வைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.

அடுத்த ஊர் வந்தது. அங்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருந்த 
சில 'இது எப்படி இருக்கு பார்ட்டிகள்'  கழுதை பொதி சுமப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டது. அதில் பையனை மட்டும் உட்கார வைத்துகொண்டு நீ ஏன் நடந்து வருகிறாய்? நீயும் அதன் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு சவாரி செய்ய வேண்டியதுதானே என்று தூபம் போட்டனர். 

உடனே இருவரும் கழுதைமேல் ஏறி
 உட்கார்ந்துகொண்டு சந்தை நடக்கும் ஊரை நெருங்கினர்.

ஏற்கெனவே கழுதைக்கு பயங்கர பசி .
நடந்து வேறு சோர்ந்து போயிருந்தது கிழவனும் 
அதன் மீது உட்கார்ந்த உடன் சிறிது தூரம் சென்றதும் 
மயங்கி விழுந்தது. விழுந்த அதன் உடலை
 மண்மாதா பெற்றுக்கொண்டாள் .
அதன் உயிரை அதை படைத்தவன்
 பெற்றுக்கொண்டான். 

இருவருக்கும் ஆதாரமாக விளங்கிய 
அந்த கழுதை உயிரை மாய்த்து கொண்டதால் 
அவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் நின்றனர்.

அப்போதும் ஒரு சோம்பேறி கூட்டம் 
அவர்களின் கதையை கேட்டுக்கொண்டு
அனுதாபம் தெரிவித்துவிட்டு அகன்றுவிட்டனர் 
இரங்கல் கூட்டம் நடத்தி விளம்பரம் தேடிவிட்டு 
அடுத்த கூட்டத்திற்கு இரங்கல் வாழ்த்து பாட சென்றுவிடும்
 தற்கால அரசியல் வியாதிகளைப்போல் .

இந்த கதையை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். 
அப்போது இந்த கதையில் உள்ள முக்கியமான ஒரு பொருள் பொதிந்த,வாழ்க்கைக்கு தேவையான கருத்து ஒன்று 
இதில் பொதிந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளும் வயதில்லை 

என் வாழ்க்கையில் வாலிப பருவத்தை அடைந்து 
இந்த உலகை நான் பல பிரச்சினைகளை 
எதிர் கொள்ள ஆரம்பித்த பின் ஒரு நாள் 
இந்த கதை என் நினைவுக்கு வந்தது.

நம்மில் அனைவரும் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் 
நாம் பிறரின் ஆலோசனைகளையே எதிர்பார்த்துக்கொண்டு,
கடவுள் நமக்கு கொடுக்கப்பட்ட அறிவை பயன்படுத்துவதே கிடையாது. இதனால் நாம் பலவிதமான அவமானங்களுக்கும் 
இழப்புகளுக்கும் ஆளாகிய பின்பும் நாம் பாடம் கற்றுக்கொள்வதில்லை..நம்முடைய இந்த கையாலாகாத்தனத்தை, அறிவீனத்தை, முட்டாள்தனத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும்
கூட்டம் நம்மை சுற்றி வலை விரித்து காத்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் விரிக்கும்வலையில் நாம் சுலபமாக விழுந்து 
நம்மை நாம் அழித்து கொள்கிறோம் அல்லது 
அவர்களின் ஆயுள் கைதிகளாக வலம் வருகின்றோம்
 இது தேவையா?

நாம் வழியில் வருவோர் போவோரின் 
ஆலோசனைகளை கேட்டுக்கொண்டு 
அதை ஆராயாமல் அதை செயல்படுத்திக்கொண்டே 
போனோமானால் இப்படித்தான் எல்லாவற்றையும்
இழந்து நடுத்தெருவில் நிற்கவேண்டியிருக்கும் 
என்பதை உணர்ந்தேன். 

அன்றிலிருந்து யார் எதை சொன்னாலும்
எனக்கு எது சரியென்று படுகிறதோ
அதைதான் எத்தனை தடங்கல்கள் வந்தாலும்
 உறுதியாக மேற்க்கொள்ளுவது என்றுமுடிவெடுத்தேன்

வாழ்க்கையின் எண்ணற்ற சோதனைகளை கடந்தேன்
வேதனைகளை தாங்கிக்கொண்டு உறுதியாக நிற்கிறேன் என்பது கலப்படமற்ற உண்மை.  

நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


பல ஆண்டுகளுக்கு முன்பே வண்ண ஓவியங்களை
வரைய முயற்சி செய்தேன்

1976 ஆம் ஆண்டு 
அப்படி வரைந்த படம் ஒன்று.