வியாழன், 31 மே, 2018

நான் யார்?

நான் யார்?

நான் யார்?

ரமண  பகவானே
உன் உள்ளே இருக்கும்
பொருளை நீ உணர்ந்தபடி
உலகுக்கு அறிவித்ததை.
இன்னும் உணர்ந்துகொள்ளாமல்
இவ்வுலகில் இன்னல் பட்டுக் கொண்டு
காலத்தை கழிக்கின்றோம்.

உள்ளிருந்து வெளியே  வந்துவிட்டோம்.
தவறு தவறு.

உறக்கத்திலும், மயக்கத்திலும்
உள்ளே தினமும் தன்னை அறியாமல்
பல நேரம் சென்று வந்து கொண்டுதான் இருக்கிறோம்.

உள்ளே செல்லும் போது
அதை கவனிக்க எத்தனை  முறை
முயற்சித்தாலும் தோல்விதான் .

அதேபோல் உள்ளிருந்து வெளியே வருவதும்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகிறது.

உள்ளே இருக்கும்போது ஒன்றும் தெரிவதில்லை
உடல் பற்றிய சிந்தனை இல்லை.
மனம் இல்லை.
காணும் இந்த உலகம் இல்லை.
நம்மை ஆட்டிப் படைக்கும் மனம் இல்லை.
ஆஹா. என்ன அமைதி. !

ஆனால் அந்த அமைதியை அனுபவிக்கும்போது
அதை உணர முடியவில்லை.

அந்த நிலையை விட்டு வெளியில்
வந்தவுடன்தான் அதன் மகிமை
தெரிகிறது.

அதை விழிப்பு நிலையிலும் உணர
தலைப்பட்டால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.

ஆனால் அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பது எது?

அதுதான் "நான்" என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும்
அகந்தை கொண்ட மனம்.

ஆனால் அது மட்டும் தனக்கு வேண்டியபோது அந்த
சுகத்தை அனுபவிக்கிறது.

நாம் அதை அனுபவிக்க நினைத்தாலே போதும்
அது நம்மை ஏமாற்றி .அந்த எண்ணத்தையே நீர்க்க செய்து விடுகிறது.

பகவான் நம் உள்ளே தேட வேண்டிய பொருளை வெளியில் தேடுவது
எப்படி சரியாகும் என்று கேட்கிறார்.

ஆனால் நம் மனமோ நம்மை புறத்தே எங்கெங்கெங்கெல்லாமோ
அந்த பொருள் இருப்பதாக நம்மை நம்ப வைத்து அலைய வைத்துக்கொண்டிருக்கிறது.

எவ்வளவு காலம்தான் இப்படி போராடுவது?
அதனுடன் போராடி வெற்றி பெற என்றும் இயலாது.

ஒரே வழி. அதன் செயல்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதுதான்.
விரைவில் பலனைத் தரும்.

ஞாயிறு, 27 மே, 2018

இசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு – 1981 பாடல்:: அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா

இசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு  – 1981

பாடல்:: அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா 


MOUTHORGAN VEDIO-302

Movie Name:Nandu
Song Name:Alli thantha bhoomi
Singer:Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Year of release:1981

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும்நாள்  பாடும்நாள்  தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி ....

சேவை செய்த காற்றே பேசாயோ ?
ஷேமங்கள் லாபங்கள் யாதோ  ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள் 
கனித்த காலம் வளர்த்த  இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் 

அள்ளித் தந்த பூமி ....

காவல் செய்த  கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே 
காரணம் மாதெனும்  தேனோ ?
விரியும் பூக்கள் வானங்கள் 
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே 
பழைய சோகம் இனியும் இல்லை 

அள்ளித் தந்த பூமி ....

இசையும் நானும் (301)-திரைப்படம்-சபாஷ் மீனா – 1958 பாடல்:: காணா இன்பம் கனிந்ததேனோ



இசையும் நானும் (301)-திரைப்படம்-சபாஷ் மீனா – 1958

பாடல்:: காணா  இன்பம் கனிந்ததேனோ 


MOUTHORGAN VEDIO-301


Movie Name : 

சபாஷ் மீனா – 1958

Song Name :

காணா  இன்பம் கனிந்ததேனோ 

Music : டி .ஜி .லிங்கப்பா 
Singer :பி .சுசீலா-டி .ஏ .மோட்டி 
Lyricist : கு.மா.பாலசுப்ரமணியம் 
  •  


காணா இன்பம் கனிந்ததேனோ 
காதல் திருமண ஊர்வலந்தானோ 

வானம் சிந்தும் மாமழையெல்லாம் 
வானம் தூவும் தேன் மலரோ 
மேகம் யாவும் பேரொலியோடு 
மேளம் போலே முழங்குவதாலே (காணா )

கன்னல் மொழியே மின்னல் எல்லாம் 
விண்ணில் வாண  வேடிக்கையோ 
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே 
மனதில் பொங்கும் பிரேமையினாலே (காணா )



வியாழன், 24 மே, 2018

இசையும் நானும் (300)-திரைப்படம்-நான்கு கில்லாடிகள் – 1969 பாடல்:: நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

இசையும் நானும் (300)-திரைப்படம்-நான்கு கில்லாடிகள்   – 1969

பாடல்:: நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 


MOUTHORGAN VEDIO-300
எனக்குள்ளே ஊறிக்கிடக்கும் இசை தாகத்தை 
தணிக்கும் வடிகாலாக  
10.11.2014 லில் இசையும்  நானும் பகுதியை 
தொடங்கினேன். இன்று 300 ஆவது பதிவாக 
நான்கு கில்லாடிகள் படத்தில் வரும் "நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி"என்ற இனிமையான பாடலை மவுத்தார்கன் இசையில் வெளியிட்டுள்ளேன். 
என்னுடைய முயற்சிக்கு தவறாமல் கருத்துக்களை தெரிவித்துவரும் 
ஸ்ரீராம் அவர்களுக்கும் என்னுடைய யு டியூப் சானலை SUBSCRIBE செய்துள்ள அன்பர்களுக்கும்   என் மனமார்ந்த நன்றிகள் 


Movie Name : 

நான்கு கில்லாடிகள்   – 1969

Song Name :

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 

 

Music : வேதா 
Singer : பி .சுசீலா 
Lyricist:கண்ணதாசன்/ஆ.எல்.நாராயணன்


நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே 
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் 
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே 
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே 

பழக்கம் என்பது பழகுவது -அது 
விலக்கும்போது  விலகுவது 

பாசம் நேசம் காதல்தானே 
வாழ்வதற்க்கென்றே வளருவது 

நிழல் தொடருவது 
மதி மயங்குவது 
வழி நேற்றும் இன்றும் மாறுவது (நெஞ்சுக்கு)

பாதையில்  எத்தனை காலடிகள் -இந்த 
பயணத்தில் எத்தனையோ வழிகள் 

காதலில் ஓர் வழி 
கவலையில் ஓர்  வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள் 

ஒன்றை தேர்ந்து எடு 
அதை சேர்ந்து விடு
ஒன்றை தேர்ந்து எடு 
அதை சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை வாழ்ந்து விடு (நெஞ்சுக்கு)










சனி, 19 மே, 2018

இசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல

இசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம்  – 1967

பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல 


MOUTHORGAN VEDIO-299


Movie Name : 

பேசும் தெய்வம்  – 1967

Song Name :

நான் எழுதுவது கடிதம் அல்ல 

Music : கே .வி.மஹாதேவன்  
Singer : டி .எம் .சவுந்தர்ராஜன் 
Lyricist : Vaali


நான் எழுதுவது கடிதமல்ல -உள்ளம் 
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல -எண்ணம் 
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள (நான்)

நிலவுக்கு வான் எழுதும் கடிதம் 
நீருக்கு மீன் எழுதும் கடிதம் 
மலருக்கு தேன்  எழுதும் கடிதம் 
மங்கைக்கு நான் எழுதும் கடிதம் 

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல -உள்ளம் 
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும்  அல்ல -எண்ணம் 
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள (நான்)

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் 
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம் 
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம் 
உன் மனமோ நான்  துயிலும் மஞ்சம் (நான்)

செவ்வாய், 15 மே, 2018

இசையும் நானும் (298)-திரைப்படம்-தேன் சிந்துதே வானம் – 1975 பாடல்:: உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் ...

இசையும் நானும் (298)-திரைப்படம்-தேன்  சிந்துதே வானம் – 1975

பாடல்:: உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் ...


MOUTHORGAN VEDIO-298

Movie Name : தேன்  சிந்துதே வானம் – 1975 
Song Name : உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் 
Music : வி.குமார் 
Singer : KJ Yesudas 
Lyricist : Vaali
Male :
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 
எந்தன் உயிர் காதலியே 
இன்னிசை தேவதையே (எந்தன்)

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 
எந்தன் உயிர் காதலியே 
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம் 
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம் ( வஞ்சி)

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள்  உருவாக காண்போம் (பூபாளம்)
குழலோசை குயிலோசையென்று 
மொழி பேசுஅழகே நீ இன்று 

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 
எந்தன் உயிர் காதலியே 
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால் 
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்  
Aaaaaaa ….aaaa … aaa …. aaa … aaa
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால் 
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்  
கார்கால குளிரும் மார்கழி பனியும்
கண்ணே உன் கை  சேர தணியும்   (கார்கால )
இரவென்ன பகலென்ன தழுவு 
இதழோரம் புது ராகம் எழுது 

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 
எந்தன் உயிர் காதலியே 
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால்  நெருங்குகிறேன் 


திங்கள், 14 மே, 2018

இசையும் நானும் (297)-திரைப்படம்-அலிபாபாவும் 40 திருடர்களும்(1956) பாடல்:: மாசிலா உண்மை காதலே...

இசையும் நானும் (297)-திரைப்படம்-அலிபாபாவும் 40 திருடர்களும்(1956)

பாடல்::  மாசிலா உண்மை காதலே...

Movie

அலிபாபாவும் 40 திருடர்களும்(1956)

Music
Susarla Dakshinamurthy
Year1956Lyricsமருதகாசி 
SingersA. M. RajahBhanumathi Ramakrishna
MOUTHORGAN VEDIO-297

62 ஆண்டுகள் ஆனாலும் நினைவைவிட்டு நீங்காத இனிமையான பாடல். 




M - மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே (மாசிலா..) F- பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா (பேசும்..) M - கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே M - நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே F - நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (M -நெஞ்சிலே ) (F - நிலைக்குமா) F - பேசும் வார்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே M - கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே M - உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே F - இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே (M - உனது) (F - இனிய) M/F - அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் (M/F - அன்பினாலே) M/F - மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே…. மாறுமோ………….



ஞாயிறு, 13 மே, 2018

இசையும் நானும் (296)-திரைப்படம்-பாபு (1971) பாடல்:: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...

இசையும் நானும் (296)-திரைப்படம்-பாபு  (1971)

பாடல்:: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...


MOUTHORGAN VEDIO-296

இதோ எந்தன் தெய்வம்

MovieBabuMusicM. S. Viswanathan
Year1971Lyricsவாலி 
Singersடி எம் சவுந்தர்ராஜன் 


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தனிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலேகடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
ஆ... ஆ... ஆ... ஆ... ஓ... ஓ... ஓ... ஓ...