ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

நீயெல்லாம் ஒரு ...........?

நீயெல்லாம் ஒரு ...........?


காலை 8 மணி

வீதியில் ஒரு வயதான் மூதாட்டி தலையில் கீரை கட்டுகள் நிறைந்த
கூடையைக்  சுமந்து கொண்டு "கீறே  கீரே " என்று உரக்க கத்திக்கொண்டு
செல்கிறாள்.

ஏனென்றால் இரைச்சல் போட்டுக்கொண்டிருக்கும், டெய்ப்  ரெகார்டர், தொல்லை காட்சி பெட்டி ஆகிய இரண்டும் போடும் கூச்சல்களைத் தாண்டி வீட்டிற்க்குள்ளிருப்பவர்களுக்கு  அவள் குரல் போய்ச்  சேர வேண்டும்.

அப்போதுதான் யாராவது வந்து கீரையை வாங்குவார்கள்.

Average weight of a bunch is about 150g, Weight may slightly vary from ...

மனைவி அடுக்களையில் இருப்பதால் தன்  மணாளனை கீரை வாங்க அனுப்புவாள். அவள் கேட்பார் கீரை கத்தை என்ன விலை ? என்று

அவள் கேட்டவுடன் கத்தை கத்தையாய் நோட்டை எடுத்துக் கொடுப்பவர் போல

ஒரு கத்தை 15 ருபாய் என்றவுடன் "என்ன அநியாயம் ஒரு கத்தை 15 ரூபாயா என்று துள்ளி குதிப்பார். 10 ரூபாய்க்கு கொடு என்பார். முடிவில் 15  ருபாய் கொடுத்துவிட்டு ஒரே ஒரு கத்தை வாங்கி செல்வார்.

உள்ளே அவருக்கு பூஜை காத்துக்கொண்டு இருக்கும்  என வாடல் கீரையை வாங்கியிருக்கிறீர்கள்?
பாத்து வாங்கக்கூடாதா ? இதற்க்குபோய் 15 ரூபாய்  வேறு.அதனால்தான் நான் உங்களை அனுப்புவது கிடையாது. ஏதோ  வேலையாய்  இருந்ததினால் உங்களை அனுப்பினேன் என்று  சலித்துக் கொள்வாள்  அவள்.

ஆனால் இந்த புண்ணியவான்கள் இரண்டும் பழக்கடைக்கு சென்றால் 4 ஆப்பிளை 180 ரூபாய்க்கு வாயை மூடிக்கொண்டு வாங்கி வரும். அந்த ஆப்பிளின்  பொவுஷு  அதை அரிந்து  பார்த்தால்தான் தெரியும் பாதி அழுகலாக இருக்கும், தோல். நடுபகுதி என பாதிக்கு மேல் வீணாகி போய்  விடும்.



ஒரு விவசாயி கீரை விதையை விதைத்து அதை பாதுகாத்து வளர்த்து வளர்ந்தவுடன் ஒவ்வொரு கீரையாக  பிடுங்கி அதை சுத்தம் செய்து கட்டு கட்டாக கட்டி பேருந்து வரும் சாலைக்கு நடந்து வந்து, பேருந்தில் ஏறி அதை நகரத்தில் தெரு தெருவாக  கால் கடுக்க நடந்து விற்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பவேண்டும். அவர் படும் கஷ்டங்களை சிறிதும் உணராமல் இந்த மனிதர்கள் இரக்கமின்றி நடந்து கொள்கிறார்கள்.

தயவுசெய்து இவர்களிடம் பேரம் பேசாதீர்கள்

அப்படி பேசினால் அவர்களெல்லாம்
......அவர்களை என்னவென்று சொல்வது ?

புதன், 13 ஆகஸ்ட், 2014

கண்ணா இளநீர் குடிக்க ஆசையா?


கண்ணா இளநீர் குடிக்க ஆசையா?


Image result for tender coconut


நம் நாட்டில் இளநீர் குடிக்க தேங்காயை கூரான கத்தியால் 10 வெட்டுகளாவது வெட்ட வேண்டும்.
அப்புறம் குடிக்க ஒரு ஸ்ட்ரா தேடவேண்டும்.
வெளிநாட்டில் எவ்வளவு சுலபாக  வெட்டி இளநீர் எடுக்கிறார்கள்

இந்த முறை நம் நாட்டிற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

கீழ்கண்ட காணொளியை  காணுங்கள்.


https://www.facebook.com/photo.php?v=10152372655484398&set=vb.661484397&type=2&theater