செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (6)

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (6)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (6)

புதிய வரவு -துளசி 






மாலவனின் மனம் கவர்ந்த துளசி
மண்டியிட்டு வணங்குபவர்களின்
வாழ்வில் மங்களம் தரும் துளசி.
மாடி முற்றத்திலே வந்து
அமர்ந்து விட்டாள் .

வந்தவுடன் சுற்றுமுற்றும்
ஒரு நோட்டம்  விட்டாள்
யார் யார் இருக்கிறார்கள் என்று

அவன் கண்ணில் முதலில்
பட்டென்று பட்டது பட்டு ரோஜா செடி.





















உடனே அவளைப் பார்த்து
மலர்ந்து சிரித்தது பட்டு ரோஜா  செடி.

வருக  வருக  துளசி அன்னையே
உங்கள் வரவு நல்வரவாகுக

தன்னை அர்ப்பணிக்க அது
நினைத்தாலும் அது தன்னை
அடக்கிகொண்டது.

இதைக் கண்டு கொண்ட துளசி
என்ன தயக்கம். ?
நான் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன்  என்றது.

பட்டு ரோஜாவோ " அன்னையே"
நான் பார்ப்பதற்கு அழகாக இருந்து
என்ன பயன். ? என்னிடம் மணமில்லை
அதனால் யாரும் என்னை சூடிக்கொள்ள
மனமும் இல்லை  என்று கண்ணீர் வடித்தது.

யார் என்ன வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்ளட்டும்

இறைவன் படைப்பில்
எல்லாம் ஒன்றுதான்.

இந்த அகந்தை  பிடித்த மனிதர்கள் இப்படிதான்
எல்லாவற்றிற்கும் பேதம் பார்ப்பார்கள்.

எனக்கு எல்லாம் ஒன்றுதான்.
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்
என்றதும் பட்டு ரோஜா மகிழ்ச்சியோடு
துளசியில்  மடியில் போய் அமர்ந்துவிட்டது



அடுத்து அங்கிருந்த செம்பருத்தியும்
தன் வணக்கங்களை
செலுத்திவிட்டு. துளசியுடன்
தன்னை இணைத்துக்கொண்டது. 

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

மாடியிலே தோட்டம் போட்டேன் (5)

மாடியிலே தோட்டம் போட்டேன் (5)

புதிய வரவு -பட்டு ரோஜா 



மாடியிலே இருக்கும் முற்றத்திலே
தாவரங்களின் சுற்றம் பெருகி கொண்டே
போகிறது.

தரையிலே ஈரம்
அதனால் துவங்கிவிட்டது
எறும்புகளின் சஞ்சாரம்

அதை பிடித்து தின்ன
தத்தி தத்தி வந்துவிட்டது
தவளைக் கூட்டம்.

புதிய வரவு -பட்டு ரோஜா செடி. 
காலையிலே கடைக்கு போய்விட்டு
வந்தேன்.

வீட்டை ஒட்டி நறுமணம் வீசும்
கழிவு நீர் ஓடையின் ஓரத்திலே
ஓராயிரம் செடிகள்

எதுவும் நான் நட்டு பராமரிக்கவில்லை
அதுவாகவே முளைத்து தழைத்து
ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருந்தன.

அப்போது ஒரு மெல்லிய குரல் என்
காதில் கேட்டது. அண்ணா கொஞ்சம்
கீழே உன் பார்வையை திருப்பு .


















திரும்பியதிசையில் பட்டு ரோஜா செடி
ஒன்று இரண்டு பூக்களுடன் என்னைப்
பார்த்து சிரித்தது . ஐயோ ! அப்படி அழகு

ஆஹா நம்முடைய மாடி முற்றத்தில்
எடுத்து சென்று வளர்க்கலாமே என்று
தோன்றியது .

குனிந்தேன்,,செடியை கையில் எடுத்தேன்.
வீட்டில் ஒரு உடைந்த மக் இருந்தது

அதை "மக்கு "என்று நாம் சிலரை ஒதுக்கி
வைப்பதைப் போல் அதை தூக்கிப் போடாமல்
வைத்திருந்தேன்.

அதில் கொஞ்சம் மண்ணை நிரப்பி அந்த செடியை
நட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு உள்ளே சென்று திரும்பி வருவதற்குள்
இரண்டு மொட்டுக்கள் மலர்ந்து என்னை பார்த்து புன்முறுவல் பூத்தன



கையால் பறிக்கப் போனேன் . என்ன மென்மை !
பறிக்க மனமில்லை .அப்படியே விடவும் மனமில்லை.
சிறிது  நேரத்தில் வாடி வதங்கி உதிர்ந்துவிடும்.

பட்டு ரோஜாவே !பட்டு ரோஜாவே
என் உள்ளத்தை தொட்ட ரோஜாவே 
மென்மையாய் இருக்கின்றாய் 
ஆனால் பார்த்தவுடன் அனைவரையும் 
வசீகரிக்கும் மேன்மை குணமும் 
கொண்டவளாய் திகழ்கின்றாய். 

இவ்வுலகில் வாழும் காலம் மிகவும் 
குறைவாக இருந்திடினும் அதை 
குறை என்றென்று எண்ணாது 
காண்போருக்கும் இன்பத்தை தந்து 
துன்பத்தை மறக்க செய்கின்றாய்.

இவ்வுலகில் மனிதர்களாகிய நாங்கள் 
நீண்ட காலம் வாழ்ந்து என்ன பயன்?

அனைவருக்கும் துன்பம் தருகின்றோம் 
அகந்தை கொண்டு பிறர் மீது ஆதிக்கம் 
செலுத்தி அல்லல்படுகின்றோம். 

இறைவன் எங்களுக்கு அளித்த வரங்களை 
நினைந்து இன்பம் அடையாது என்றென்றும் 
கவலைக் கடலில் மூழ்கி துன்பப்படுகின்றோம்.

இனி உன்னைக் கண்டேன் 
உன் உயர்வான குணத்தைக் கண்டேன்.
உன்னைப் போல்  நானும் பிறர் முகத்தில் 
மலர்ச்சி ஏற்படும் வகையில் வாழ முயலுவேன். 

கீதையில் கண்ணன் தனக்கு 'ஒரே ஒரு மலரை 
சமர்ப்பணம் செய்தாலே போதும் நான் மகிழ்வேன் 
என்றது நினைவிற்கு வந்தது.



அதற்கு தகுதியானவள் நீதான் .
எனவே உன்னை அவன் 
பாதங்களில் சமப்பிக்கின்றேன். 








சனி, 22 ஆகஸ்ட், 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (4)

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (4)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (4)

மிளகாய் புகட்டிய பாடம் 

ஆம்.பூக்கள் மட்டும்தான்  மனிதர்களுக்கு
வாழ்வின் சில உண்மைகளை
உணர்த்தவில்லை.

நம்மை சுற்றியுள்ள அனைத்து  உயிர்களுமே
சில உண்மைகளை உணர்த்தத்தான்
செய்கின்றன

நாம்தான் எதையும் கவனிப்பதில்லை
அவைகள் பேசும் மொழியையும்
காது  கொடுத்து கேட்பதில்லை

வீணாக காசு கொடுத்து கை பேசியை
சார்ஜ் செய்து டிஸ் சார்ஜ் ஆகியதும்
ரி சார்ஜ் செய்து நம்முடைய சக்தி
முழுவதையும்
வீணடித்துக்(நடித்து) கொண்டிருக்கிறோம்

சரி விஷயத்திற்கு வருவோம் 

ஒரு தொட்டியில் சில மிளகாய் வெள்ளை
நிறத்தில் உள்ள விதைகளைத்  தூவினேன்.



சில நாட்களில் விதைகள் முளைத்தன
அவைகள் பச்சை நிறமாய் இருந்தது.

காரமாய் இருந்தால் என்ன அதில்
சாரம் அல்லவோ உள்ளது

அது சம்சாரத்தில் இல்லாவிடில்
வாழ்க்கை ருசிக்குமோ?

சில வாரங்களில் வெள்ளை   நிற பூக்கள்
பூத்தது. .பச்சை நிற இலைகளின் இடையே
வெள்ளை நிற பூக்கள்.

பல உதிர்ந்து போயின. சில பிஞ்சாகி
சில நாட்களில் பச்சை நிறத்தில்
பச்சை மிளகாய் மாறி கண்ணுக்கு
அழகாய் காட்சி அளித்தது .
























பறிக்க மனம் வரவில்லை. இருந்தாலும்
சிலவற்றை விட்டுவிட்டு
சமையலில் அறிந்து போட்டேன்.
அருமையான சுவை.

ஏனென்றால் என் ஆன்மாவல்லவோ அதனுள்
கலந்துள்ளது. சில மாதங்களாக என்னுடன்
பழகிகொண்டிருக்கும் உயிரல்லவோ அது.

வெளியே பச்சை நிறமாய் இருந்தாலும்
உள்ளே வெள்ளை/மஞ்சள்  நிற விதைகள் அதன்
உள்ளம் வெள்ளை போலும்

சிறிது நாள் கழித்து அதே
பச்சை மிளகாய் சிவப்பு நிறமாய் மாறியது.

Red Chilli 100 Seeds S-v 14


கண்ணை கவரும் நிறம்.
அதன் உள்ளே இருக்கும் விதை அதே
வெண்மை நிறம்.

Image result for chilli seeds

நிறங்கள் மாறலாம், வடிவங்கள் மாறலாம்
அனால் உள்ளே இருக்கும் விதைகள் என்றும்
வெண்மை /மஞ்சள் நிறம்.
Chilli Seeds 75 Seeds
அதுபோலதான் மனிதர்களும். அவர்களில்
பல நிறங்கள் உண்டு, நெட்டையாகவும் இருக்கலாம் குட்டையாகவும் இருக்கலாம். அழகாகவும் இருக்கலாம். அழகற்றவர்களாகவும்  பார்ப்பவர்கள் கண்களுக்கு தோற்றமளிக்கலாம். . ஆனால் அனைவருக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றே. என்ற உண்மையை அது எனக்கு உணர்த்தியது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன்.(3

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன்.(3)

செம்பருத்தியை அடுத்து
ரோஜா செடி வைத்தேன்.

ஆனால் செம்பருத்திபோல்
வேகமான வளர்ச்சி இல்லை

இருந்தாலும் நான்
தளர்ச்சி அடையவில்லை.

தினமும் அதை கண்காணித்து
அதை முன்னேற்ற
முயற்சி எடுத்தேன்.

முயற்சி வீணாகவில்லை
சில வாரங்கள் கழித்து
இலைகள் துளி விட்டன






















அதோடு கூடவே
மொட்டுக்களும்
வெளிர் பச்சை
நிறத்தில் தலை தூக்கின

அழகோ அழகு.
பார்க்க பார்க்க பரவசம்.





















சில நாட்கள் கழித்து மொட்டு மலர்ந்தது.
அழகிய சிவந்த உதடுகள் போல
ரோஜா  மலர் என்னைப் பார்த்து
புன்னகைத்தது.






















அருகே சென்றேன். ரோஜா மலரே
ராஜகுமாரி ,என் ஆசைக் கிளியே
அருகில் வரலாமா என்றேன்.

















என் அன்பே
அவசரம் கூடாது
என் பாதுகாவலர்களான
முட்கள் உன்னை தாக்கிவிடுவார்கள்.

நான் உனக்கு சொல்லும்போது
பறித்து அம்பிகைக்கு சூடிவிடு
என்றாள் அவள்

சரி உன் விருப்பப்படியே
என்றேன். நான். (தொடரும்) 

இசையும் நானும் (43)

இசையும் நானும் (43)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 
43 வது காணொளி. 

மவுதார்கன் இசையில். 

Image result for gulebakavalitamil film

படம்: குலேபகாவலி -
பாடலை இயற்றியவர் தஞ்சை ராமையாதாஸ் 
இசையமைப்பாளர்-விஸ்வநாதன் ராமமூர்த்தி. 



மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா


பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலெ

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி என்னாளும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

காணொளி இணைப்பு:

https://youtu.be/FFHBhJ7FWgE

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (2)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (2)

மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன்.
செம்பருத்தி மலர் செடியை
வாங்கி வைத்தேன்.



அவள் மலர்ந்து மணம்
வீசத் தொடங்கி விட்டாள்
என் மனதையும் கவர்ந்து
விட்டாள் .

காலையில் எனைக் காண
மொட்டாக குவிந்து நிற்பாள்
ஆதவன் வந்ததும் மலரும்
தாமரை போல.

சில நாள் கழித்து உன்னிடம்
ஒரு கோரிக்கை என்றாள்.

தயக்கம் எதற்கு ?
சொல் என்றேன்.

எனக்கொரு தங்கை
வேண்டும்என்றாள்
அவ்வப்போது
உரையாடி மகிழ

அதற்கென்ன ஒருத்தியை
அழைத்து வருகிறேன்
உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி
என்றேன் நெகிழ்ச்சியாக

இந்த வயதான காலத்தில் யார்
என்னோடு பேசுகிறார்கள். ஏதோ
உன் போன்ற அன்பும் பாசமும்
கொண்டவர்களைத் தவிர
என்றேன் அவளிடம்

தெருவில் அடுத்த நாள்
பூ செடிகள் வாங்கலையோ
என்ற குரல் தேனாய்
காதில் பாய்ந்தது.




வாங்கி வைத்தேன் ஒரு ரோஜா
செடியை பூத்திருக்கும் ஒரு மலருடன்.
தன் ஆசை நிறைவேறிய செம்பருத்தி
மகிழ்ந்தாள்.

ஆனால் என்னவோ ரோஜா செடி
தன் பிறந்த வீட்டு நினைவாகவே
இருந்தது போலும் சரியான
வளர்ச்சியில்லை.என்னதான்
நான் நன்றாக கவனித்துக்
கொண்டபோதும் 

ஏனம்மா என் வீட்டில் ஏதாவது
குறையோ என்று கேட்டேன்.
நான் உன்னை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லையோ
என்றேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை.
என்குடும்பத்தை விட்டு பிரிந்து
வந்தது என்னமோ போல்
இருக்குது. என்றாள்.  அவள்.

கவலைப்படாதே. ரோஜாவே
உன்னை நான் என் கண் போல்
பார்த்துக்கொள்வேன்.

நாம் எல்லோரும் இவ்வுலகில் 
வாழும் உயிர்கள்தானே 

நான் மனித
உடலில் குடிகொண்டிருக்கிறேன் 
நீ தாவர செடியில் குடியிருக்கிறாய் 
அவ்வளவுதானே 

நம் வடிவங்கள்தானே 
வேறு வேறு .

நாம் எல்லோரும் இந்த
பூமித்தாயின் குழந்தைகள்தானே 


இந்த உண்மையை 
புரிந்துகொண்டால் 
போதும் நீ எங்கிருந்தாலும் 
மகிழ்ச்சியாக 
இருக்கலாம் என்றேன்.  

உன் விளக்கம் மிக மிக அருமை 
இதுவரை யாரும் பொறுமையாக 
என்னிடம் பேசியதும் கிடையாது 

என் உணர்வுகளையும் 
புரிந்து கொண்டது கிடையாது 
என்றது ரோஜா  செடி 

இப்பொழுதுதான் என் 
மனம் அமைதி அடைந்துவிட்டது.
என்று புன்னகை பூத்தது ரோஜா செடி.  
 (தொடரும்)


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மாடியிலே தோட்டம் போட்டேன்

மாடியிலே தோட்டம் போட்டேன் 


மாடியிலே தோட்டம் போட்டேன்
செம்பருத்தி மலர் செடிகள் வாங்கி வந்து
தொட்டிகளில் நட்டு வைச்சேன்

காலையிலும் மாலையும்
அன்போடு நீர் வார்த்தேன்

நன்றாக வளர்ந்தது மலர்  செடிகள்
என்னோடு மவுன மொழியில்
பேசி எனக்கு இன்பம் தந்தன
துளிர் இலைகளினால்.

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்தன அச்செடிகள்.




நன்றாய் வளர்ந்த செடிதன்னில்
நயவஞ்சகமாய் புகுந்தன  வெள்ளை
நிற பூச்சிகள். வெள்ளை நிறம் கொண்டதே தவிர
உள்ளம் முழுவதும் கள்ளம் நிறைந்தது  போலும்


தோன்றிய மொட்டுக்கள் அனைத்தும் மலராமலே
கருக தொடங்கின. என் மனமும் கூட

பிறகுதான் கண்டு கொண்டேன் காரணத்தை
கொள்ளை அடிக்கும் வெள்ளை பூச்சிகளை
ஒழித்து கட்டினேன்.

அப்புறம் என்ன ?
அழகாய் தோன்றியது
ஆனந்த பூந்தோப்பு






மலர்ந்து சிரித்தது
அழகிய மலர்கள்




என்னை பார்த்து




மகிழ்வோடு ரசித்தேன் .மகேசனுக்கு
சூடி மகிழ்ந்தேன் ..





தியானம் என்றால் என்ன ?




தியானம் என்றால் என்ன ? 

அதற்கு என் இவ்வளவு முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது?

அது அஷ்டாங்க யோகத்தில்
எட்டாவது படி என்று சொல்லுகிறார்களே?

அந்த நிலையை அவ்வளவு எளிதாக
முடியாது என்று சொல்லுகிறார்களே
அது ஏன் ?

ஏழு நிலைகளை முறையாக  கடைப்பிடித்து
பிறகுதான் அந்த முறையை பயிற்சி
செய்ய  வேண்டும் என்கிறார்களே அது ஏன் ?

உலகில் பல தியான முறைகள் இருக்கின்றன
என்றும் அதை பயிற்சி தர பல ஆயிரம் போலிகள்
புற்றீசல் போல் கிளம்பி உலகெங்கும்
மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில்  காசு
பார்க்கின்றார்களே அது ஏன்?

தியானம் செய்வதால் தான் இறைவனை
காணமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

முறையான தியானம் செய்தால்
நமக்கு சக்தி கிடைக்கும்  என்றும்
இல்லாவிடில் தூக்கம் மற்றும்  சோர்வுதான்
கிடைக்கும் என்கிறார்களே அது உண்மையா?

எதற்காக தியானம் செய்ய வேண்டும்
வெறுமனே கும்பிடு போட்டுவிட்டு
துதி செய்துவிட்டு போனால் போதாதா ?

தியானம், பூஜை எதுவும் செய்ய வேண்டாம்
பஜனை பண்ணிக்கொண்டே போனால் போதும் பரமன்
அகப்பட்டுவிடுவான் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்களே
அது உண்மையா?

நல்லவனாக ,பொய் சொல்லாமல் ஏமாற்றாமல்
இருந்து வந்தால் போதும் கடவுள் என்று ஒன்று
தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறதே அது சரியா?

ஒவ்வொரு துன்பத்திற்கும்
ஒவ்வொரு வேண்டுதலுக்கும்
வெவ்வேறு  கோயில்களுக்கு
சென்று பரிகாரம்.  செய்யத்தான் வேண்டுமா?

கடமையை செய்து வந்தால் போதும்
கடவுள் நம் வீட்டு வாசலில் நிற்பான்
என்கிறார்கள் அது உண்மையா?

உண்மையில் கடவுளுக்கும்
நமக்கும் என்ன தொடர்பு ?

நாம் சொல்பவைகளை எல்லாம்
அவர் கேட்கும் ஒரு மனிதரா?

ஏன் இத்தனை தெய்வங்கள்?

பிறக்கும் முன்னே எங்கிருந்தோம்,
என்னவாயிருந்தோம்,இறந்த பின் என்ன ஆவோம்,
எங்கே செல்கிறோம்  அந்த விவரம்
நமக்கு ஏன் நினைவிருப்பதில்லை?

இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் ஆன்மீக பாதையில்
செல்பவர்களுக்கு எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒவ்வொருவரும் அவரவர் மனதிற்கு விளங்கிய
பொருளை மற்றவர்களுக்கு விளக்கி கொண்டுதான்
இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் எந்த விளக்கத்திலும் விளக்கம் பெறாமல்
ஒவ்வொரு கடையாக ஏறி  ஏறி இறங்கிகொண்டிருக்கிறார்கள்
விடை தெரியாமல்.

எல்லாவற்றையும் கூட்டி கழித்துபார்த்தால் 
சரியான விடை வரும் 
என்று ஒரு பழமொழி ஒன்று உண்டு. 

கூட்டி கழித்து பாருங்களேன்.
விடை கிடைக்கிறதா என்று?

நானும் எனக்கு கிடைத்த சில பதில்களை.
உங்கள் முன் வைக்கிறேன்.

ஏற்கெனவே சில ஆண்டுகளாக என்னுடைய 
பதிவுகளில் பலவற்றை அனைவரும் புரிந்து 
கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளேன். 
படித்தவர்கள்.  புரிந்து கொண்டிருப்பார்கள். படிக்காதவர்கள்.........


இதயத்தில் இறைவனை நிறுத்தி விடு

இதயத்தில் இறைவனை நிறுத்தி விடு

இதயத்தில் 
இறைவனை நிறுத்தி விடு 






                                                        ஓவியம். தி.ரா..பட்டாபிராமன் 



இதயத்தில்
இறைவனை நிறுத்தி விடு

உன்னை வாட்டி வதைக்கும்
கவலைகளுக்கும் அச்சங்களுக்கும்
உடனே விடை கொடு

உன்னை மீளா துன்பத்தில் தள்ளுவது
எது என்று தெரிந்து கொள்ளடா

அவைகள்தான் நம்மை என்றும்
நரகத்தில் தள்ளும்  விருப்பு வெறுப்பு
என்னும் எண்ணங்களடா

அவைகளை நாம்  விட்டுவிட்டால்
என்றும் நம்  வாழ்வில்  வசந்தமடா

உள்ளத்தில்
அன்பை நிறைத்துக்கொண்டு

அண்டி வந்தோர்
அனைவருக்கும் உதவிக்கொண்டு

இருப்பதனைத்தையும்
அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு
வாழ்பவர் உலகில் தெய்வமடா


காற்றிருக்கும் வரை
கடலில் அலை இருக்கும்
நம் உடலில் மூச்சு காற்று
வந்து போகும் வரை வாழ்வில்
இன்ப துன்பமிருக்கும்

எது வந்த போதும் எல்லாம்
அவன் செயல் என்றுணர்ந்தவர்
உள்ளத்தில் அமைதி இருக்கும்

புறத்தே ஒளி
தருபவன் ஆதவனடா




நம் உள்ளத்தே உறைந்து
ஒளி தருபவன் மாதவனடா


உலகில் வாழ்வாங்கு
வாழ வழி காட்டியவன்
யாதவன்  கண்ணனடா


இந்த உண்மையை
உணர்ந்தவன்தான்
இறைவனின்
உண்மையானதொண்டனடா

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (42)

இசையும் நானும் (42)

இசையும் நானும் என்னும் தொடரில்

69 வது சுதந்திர தின சிறப்பு  மவுதார்கன் இசை.

42 வது காணொளி 

நாடு சுதந்திரம் அடைவதை முன்பே கண்டு
தன் பாடலில் உரைத்த மகா கவி பாரதியின் பாடல்.



"ஆடுவோமே பள்ளு  பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே- இதை
தரணிக்கெல்லா மெடுத்து ஓதுவோமே  (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் -வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடு)

நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் -இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் -இந்த
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் -
பரிபூரணனுக்கே அடிமைசெய்து வாழ்வோம் (ஆடு)

காணொளி இணைப்பு
https://youtu.be/UqZffX505jg

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

(சு)(தந்திர ) தினம் 15.8.2015

(சு)(தந்திர ) தினம் 

15.8.2015 

வந்தே மாதரம்
வாழ்க சுதந்திரம்



வந்தே மாதரம் என்போம்
வாய் கிழிய கூச்சல் போடுவோம்

பல்லாயிரம் உயிர்களை பலி
கொடுத்து அன்னியரிடமிருந்து
பெற்ற விடுதலை நாளில்.

நம்மை காக்கும் பூமி தாயை
போற்றி துதிப்போம் ஆனால்
மணலையும் தாதுக்களையும்
வெட்டி காசு பார்ப்போம்

நமக்கு நீர் தந்து, உயிர் வாழ
பயிர்களுக்கு உரம் தரும்
நதிகளை நச்சுக்   கழிவுகளைக்
நாசமாக்குவோம்.

ஊழலுக்கு துணை நின்றுகொண்டு
ஊழல் ஊழல் என்று கோஷம் போடுவோம்
மற்றவர்களிடையே  நல்லவர் போல்
வேஷம் போடுவோம்.

 

 உழைத்து பிழைப்பவர்  வாழ்வை
சுரண்டி கொழுப்போம் .கொழுப்பைக்
கரைக்க கோடிக்கணக்கில் காசைக்
கரைப்போம்.

நெஞ்சிலே எப்போதும் வஞ்சம்
எதற்கெடுத்தாலும்  லஞ்சம்



முகத்திலே எப்போதும் புன்னகை
அகத்திலே எப்போதும்பொறாமை
சுயநலம்  என்னும் நச்சு புகை.

அதனால்  அண்டை வீட்டாருடன்
உலகில் எப்போதும் பகை

உள்ளொன்று  வைத்து புறமொன்று
பேசுவது மற்றும் நடிப்பது
நம் அனைவருக்கும் கை வந்த கலை.

உழைப்பவன் வாழ்வில் உயர்வில்லை
அவர்களை ஏமாற்றி திரிபவன்
அடிக்கிறான் கொள்ளை.

ஏழை ஏழையாகவே நடுத்
தெருவில்  எதற்கும் வழியின்றி.
கிடக்கிறான் வாழ்கிறான்

மாண்டு போகிறான்.

பணக்காரனோ சேர்த்த காசை
என்ன செய்வதறியாது பொய் கணக்கை
காட்டி அரசை ஏமாற்றி திரியறான்.

கோடிக் கணக்கில்  பாதுகாப்பு செலவு
இருப்பினும் எவன் வேண்டுமானாலும்
எங்கு வேண்டுமானாலும் நம் நாட்டிற்குள்
நுழையறான் சகட்டுமேனிக்கு
நம்ம மக்களை கொன்று குவிக்கிறான்.
எதற்கு என்று யாருக்கும் தெரியாது
அதற்கு இங்கே சில துரோகிகள் உடந்தை

நாட்டு நலனில் அக்கறையில்லாத
அரசியல் கட்சிகள். சொந்த வீட்டு
நலனில் மட்டுமே நாட்டம்
கொண்ட அரசியல் தலைவர்கள்.
சிந்திக்க திறனை இழந்துவிட்ட
பொது மக்கள்.

என்னடா சுதந்திரம் ?
எதற்கடா  சுதந்திரம்?
யாருக்கு சுதந்திரம்?

ஒன்றுமே புரியவில்லை.

pic-courtesy-google images




"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது

"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது


செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய்கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
ஓரணாம்மா"
"
ஓரணாவா....அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"
இல்லம்மா வராதும்மா".
அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"
மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்
"
முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான் தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"
என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க
"
இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"
சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும்,சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....என்று கேட்க
அதற்கு அந்த தாய்,
"
வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று கூறினாள்


என் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல்.  

கை நிறையக் காசிருந்தும்

கை நிறையக் காசிருந்தும்


கண்முன்னே
காண்பது கடவுளடா

நம் முன்னே
உலவிடும் உயிர்களடா

ஊரிலே ஒரு சில பேர் சேர்ந்து
கல்லாலே கோயில் கட்டுறான்
கட்டி வைத்த  கோயிலினுள்
ஒரு கல்லை வைத்து கடவுளாய்
வணங்குறான்.

உடல் என்னும் கோயிலிலே
உறைகின்ற கடவுளை உணர்த்தத்தான்
உலகத்தில் கோயிலை கட்டியது
அந்தக்காலம்.

ஆனால் இன்றோ மனம் கல்லாய்ப் போன
மனிதர்கள் தங்கள் கல்லாப் பெட்டி நிறைக்கக் கோரி
ஆண்டவனிடம் வேண்டுதல்களை வைக்கும்
இடமாய்ப் போனது இந்தக் காலம்

தன்னைச்  சுற்றி துன்புருவோருக்கு
ஆறுதலைத் தர மனமில்லாமல்
ஆலயத்தில் ஆறுமுக சாமியிடம்
ஆறுதலை  தேடி அலையுது ஒரு கூட்டம்.

கை நிறையக் காசிருந்தும்
கஷ்டப்படுவோருக்கு
உதவ மனமில்லாமல்
கால் தூசுக் கூட பெறாத
குப்பைகளை வாங்கி
குவிக்குது ஒரு  கூட்டம்

அன்பே சிவமாய்
அகத்துள்ள அமர்ந்திருக்க
அதை உணர்ந்து
ஆனந்தம் அடையாது
அகம்பாவம் பிடித்து
அனைத்தையும்
தனதாக்கிக்கொள்ள
துடிக்குது ஒரு கூட்டம்

இறைவனிடம்
கொள்ளும்  அன்புதான்
இன்பம்தரும்  மற்றெல்லாம்
துன்பத்தினைத்தான்
பரிசாய் தந்திடும் என்பதை
உணர்ந்தவரே அறிவுடையோர்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

பக்திக்கு கட்டுப்படும் பரமனே

பக்திக்கு கட்டுப்படும் பரமனே


பக்திக்கு கட்டுப்படும் பரமனே 

பக்திக்கு
கட்டுப்படும் பரமனே

பாற்கடலில்
பள்ளி கொண்ட அரங்கனே




தஞ்சம் என்று
வந்தவரைத்  தவறாது
காக்கும் தயாளனே



அண்டத்தில்
அகண்ட ஜோதியானாய்

பிண்டத்தின் உள்ளேயும்
உறையும் ஆன்ம ஒளியானாய்

கண்டத்திலே நஞ்சை நிறுத்தி
நீல கண்டனானாய் (பக்திக்கு)



கல்லுக்குள்
இருக்கும் தேரைக்கும்,

கருப்பையில்
மிதக்கும் கருவிற்கும்
கண்ணுக்கு புலப்படாத
உயிர்களுக்கும்

உணவு தந்து காக்கும்
தாயானாய்   (பக்திக்கு)

எங்கும்
நிறைந்த பரப்ரம்மமே
அனைத்திலும் ஊடுருவி
நிற்கும் ஆன்ம ஸ்வரூபமே



ஓங்கி உலகளந்த பெருமாளே
என் உள்ளத்திலும் ஒடுங்கி
நிற்கும் உத்தமனே (பக்திக்கு)

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மணியோசை காதில் கேட்டேன்

மணியோசை காதில் கேட்டேன்

மணியோசை 
காதில் கேட்டேன்

மணியோசை
காதில் கேட்டேன்

மனம் மகிழும்
மாலை வேளை

உலகத்தை
காக்கின்ற இறைவன்
உறையும்
இடம்தான் கோயில்




ஒளி வீசும்
தீப சுடரின் முன்னே
மணம்  வீசும் மலர்கள் சூடி
காட்சி தரும் வடிவம்
மனதினில் பதித்துக்கொண்டேன்


மன அமைதியை தந்து
மகிழ்விக்கும் இறைவன் மொழிதான்
ஓங்காரமாய் ஒலிக்கும் நாதம்


அவன் சந்நிதியில் வந்து நின்றேன்
அவன் அடியார்களுடன் கூடி நின்று
உளமுருக அவன் நாமம்  பாடி தொழுதேன்
அனைவரும்  நலமாக வாழ வேண்டி




உலகனைத்தும் வாழ தவம்
செய்து வாழ்ந்த தவ முனிவர்கள்
பாதம் பணிவோம். அவம் பேசாது
அன்போடு சிவ  வாழ்வு வாழ்வோம். 

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (39)

இசையும் நானும் (39)

இசையும் நானும் (39)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய

39 வது காணொளி.

தி எம் சவுந்தரராஜன் அவர்களே இசையமைத்து பாடி 
பிரபலமான முருகன் பாடல். 

மவுதார்கனில் இசைத்துள்ளேன் 





 ஓவியம்-தி. ரா. பட்டாபிராமன். 

"முருகா என்றதும் உருகாதா மனம் 
மோகன குஞ்சரி மணவாளா 

உருகாதா மனம் உருகாதா முருகா

குறை கேளாயோ குறை தீராயோ
மாமகள் வள்ளியின் மணவாளா (உருகாதா)

மறையே புகழும் மாதவன் மருகா (உருகாதா)
மாயை நீங்க வழிதான் புகல்வாய்

அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் (உருகாதா)

ஜென்ம பாவ வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவ சீலா  ஹே  சிவா பாலா
சர்வமும் நீயே ஜெய சக்தி வேலா. (உருகாதா)

காணொளி இணைப்பு.
https://youtu.be/D-FlnxzDwCQ