புதன், 26 ஜூன், 2013

வள்ளலார் கொள்கைகள் படும் பாடு.

வள்ளலார் கொள்கைகள்
படும் பாடு. 





எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 
கொல்லா விரதம் குவலயத்தில் ஓங்குக


ஆனால் அவர் கொள்கைகள் மண்ணில்
புதைக்கப்பட்டுவிட்டன
அவரும் காணாமல் போய்விட்டார்.
கொல்லா விரதத்தை
கைகொள்ள சொன்னார்
வள்ளலார்

இன்றோ காணும்
திசையெல்லாம் புலால் நாற்றம் .

இரவு பகல் என்னாது அப்பாவி உயிர்களை
கொன்று வேகவைத்து,சுட்டு தின்று வயிற்றை சுடுகாடாக்கிகொண்டிருக்கிறது.
ஒரு நாள் சுடுகாட்டில் வேகப்போகும்
இந்த இரக்கமற்ற மிருக குணம்
கொண்ட மானிடர் கூட்டம்.

உள்நாட்டில் இருக்கும்
கசாப்பு கடைகள் போதாது என்று
பன்னாட்டு பன்னாடை நிறுவனகள்
இன்று பதப்படுத்தப்பட்ட
மாமிசங்களை விற்று கொழுக்கின்றன.
அதற்க்கு கோடிக்கணக்கான ரூபாய்
செலவில் விளம்பரங்கள் வேறு.

தொலைகாட்சிகளிலும் சரி,
திரைப்படங்களிலும்  சரி,திரைப்பட  பாடல்களிலும் ,
வசனங்களிலும் கூட அசைவ நாற்றம்தான் வீசுகிறது
ஊடகங்களிலும் சரி எங்கும்
பிண வாடைதான்.வீசுகிறது

இந்த கூட்டத்தில் தை பூசம்
அன்று வடலூருக்கு சென்று வள்ளலாருக்கு
ஆண்டுதோறும் அவர் கொள்கைகளுக்கு
திதி  கொடுத்து வருபவர்கள் பெரும்பாலானோர்.

வள்ளலாரை போற்றுபவர் சிலரோ
வெள்ளை நிற உடை தரித்து
விளக்கு  பூஜை செய்து தங்கள் கடமையை
முடித்துக் கொள்கின்றனர்.
சிலர் வலையில் தங்கள் கொள்கைகளை
பரப்பிவிட்டு ஆறுதலடைகின்றனர்.

கண்மூடி பழக்கம் 
மண் மூடிப் போக என்றார் வள்ளலார்.

இன்று ஒவ்வொரு ஜாதியினரும், பிரிவினரும்,
மதத்தினரும் அவர்கள் குல வழக்கம் என்று
வழிபாடுகளில் கடைபிடிக்கும் ,
அநாகரீகமான, மூடத்தனமான ,
இரக்கமற்ற,காலத்திற்கு
ஒவ்வாத செயல்களைக் கண்டு
 இரக்கமுள்ளோர்  மனம் பதைபதைக்கிறது.

அதை செய்திகளாகவும்,
 பிரத்தியேக காட்சிகளாகவும்
ஒளிபரப்பி வேறு காட்டுகின்றன
தொலைகாட்சி நிறுவனங்கள்.
இந்த செயல்களை
வேறு நியாயப்படுத்துகின்றன

மற்ற உயிர்கள் இருக்கட்டும்.
இன்று மனித உயிர்களுக்கே  மதிப்பில்லை .
விபத்துகளால் மாய்கிறது பல ஆயிரம் பேர்
போர், கலவரம், தீவிரவாதிகளின்
அடாத செயல்களினால் லட்சக்கணக்கில்
காரணமின்றி கொல்லப்படும்
செயல்கள் அதிகரித்துவிட்டன.

போதாக் குறைக்கு இயற்கை சீற்றங்களான
எரிமலை சீற்றம், ஆழிபேரலை  பூகம்பம்,
வெள்ளம்,  நில சரிவு, சுனாமி, தீ, புயல், சூறாவளி
 என ஏராளமானவை லட்சக்கணக்கில்
உயிர்களை கூண்டோடு அழிக்கின்றன.


அன்பில்லாதவர்கள் என்பு தோல்
போர்த்திய மனிதர்கள் என்றார் வள்ளுவர்.

இன்று உலகில் மொத்த மக்கள் தொகையில்
90 விழுக்காடுகள் அவர்கள்தான் இருக்கிறார்கள் போலும்.


ஜாதிகள் சண்டைகள் ஒழியவேண்டும் என்று
கூறிய வள்ளலாரின் கொள்கைகளை செயல்படுத்த
சில அரசுகள் சட்டம் இயற்றினால்
அதற்க்கு ஜாதி மற்றும் மத சாயம்
பூசப்படும். சட்டத்திற்கு சட்டம் மாட்டப்பட்டு
கிடப்பில் போடப்பட்டுவிடும்.

அரசு இதில் கைவைத்தால் கையை
சுட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
அதனால் கலவரம் மூண்டு பல்லாயிரம்
 உயிர்கள் மாயும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

காணாமல் போன வள்ளலார்
காணாமல் போனவராகவே இருக்கட்டும்.
அவர் வானுலகில் நிம்மதியாக
இந்த மண்ணுலக காட்சிஎல்லாம் காணாமல்.

செவ்வாய், 25 ஜூன், 2013

இறைவன் இருக்கின்றானா?

இறைவன் 

இருக்கின்றானா?


இறைவன் இருக்கிறான் என்று நம்பும் 
மனிதர்கள்தான் இந்த உலகில் அதிகம் 

அதே நேரத்தில் வீண் பெருமைக்காக 
இறைவன் இல்லை என்று பிதற்றிக்கொண்டு
திரிபவர்களும் இந்த உலகில் எங்கும் உண்டு. 

தன்  அகங்காரம் ஒழிந்து,
தன் முயற்சிகள் அனைத்தும் 
பயனற்றுபோய்,செயலற்ற நிலையில்தான் 
பலர் இறைவனை நாடுகிறார்கள். 

இறைவன் இருக்கின்றானா ?

மனிதன் கேட்கிறான் ?

மனிதன்தான் கேட்பான்.
அவனுக்கு எப்போதும் சந்தேஹம்தான்

மிருகங்கள் கேட்காது. 
அவைகள் தன்இயல்புக்குரிய
கடமைகளை மட்டும் செய்கின்றன

மனிதன் மட்டும் தன் கடமைகளை 
சரிவர செய்வது கிடையாது.

தன இயலாமைக்கும் 
பிறர் மீதே குற்றம் கண்டு வாழ்நாளை
வீணாக்கி அழிந்துபோகும் இனம்

கடவுள் இருக்கிறானா 
என்று உடலில் உயிர் உள்ளவன் தான் 
கேட்கமுடியும்

பிணம் அந்த கேள்வியை 
கேட்கமுடியாது.

கடவுள் இருக்கிறான் என்பதற்கு
இதுவொன்றே போதும்.

தன் உடம்பிற்குள் என்ன இருக்கிறது,
என்ன நடக்கிறது என்பதை
அறிய அவன் பல கருவிகளை 
நாட வேண்டியிருக்கிறது. 
அது தரும் தகவல்களும் உண்மை
என்று கொள்ளமுடியாது.

தன முகத்தை பார்ப்பதற்கே 
அவன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை 
நாட வேண்டியிருக்கிறது.

உலகம் முழுமைக்கும் ஒரே சூரியன் 
அதை அவன் வெறும் கண்ணால் பார்க்க 
அவனுக்கு சக்தி கிடையாது.

அவன் உலகத்தோடு தொடர்பு கொள்ள 
அவன் புலன்கள் உதவி செய்கின்றன.
அவைகள் செயலிழந்துவிட்டால் 
அவன் உயிர் இருந்தும் பிணத்திற்கு சமமானவன். 

இப்படி இருந்தாலும் அவன் 
அகந்தை கொண்டு கடவுள் இல்லை 
என்று புலம்பி திரிகிறான்.

முதலில் கண்ட பாடலில் 
அந்த கவிஞன் எழுதினான்

நான் ஆத்திகனானேன் 
அவன் அகப்படவில்லை

நாத்திகனானேன் 
அவன் பயப்படவில்லை என்று.

எல்லோரும் வடிவங்களே கடவுள் 
என்று நினைத்துகொண்டு ஒருவருக்கொருவர் 
அடித்துக்கொண்டு மடிகிறார்கள்.

பலர் கடவுள் என்றால் என்ன என்று 
புரியாமலே வாழ்நாள் முழுவதும் 
வெளியே தேடிக்கொண்டு காலத்தை கழிக்கின்றார்கள். 

சிலர் கடவுளை காணாமலே கண்டதாக 
பல பேரை ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் அகந்தையை விட்டு
 சுயநலம் நீக்கி ,எந்தவொரு எதிர்பார்ப்பின்றி 
எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்தி 
அனைவரையும் கடவுளின் வடிவங்களாக 
கருதி சேவை செய்து கடவுளை கண்டவர்களும் 
இவ்வுலகத்தில் எப்போதும் உண்டு. 

அவரவர் மனபக்குவத்திர்க்கேர்ப்ப முயற்சி செய்து
 கடவுளை காண,உணர முயற்சி செய்தால்
 வெற்றி கிடைக்கும்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

தமிழில் நகைச்சுவை வேண்டுமா ?

தமிழில் நகைச்சுவை வேண்டுமா ?

விரும்புபவர்கள் கவனத்திற்கு 
தலைவரோட நாட்டுப்பற்று

"எங்க தலைவரோட நாட்டுப்பற்று வேற யாருக்குமே இருக்காதுங்க!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"தீபாவளிக்குக்கூட தெருவுல 'நாட்டு வெடிகுண்டு'தான் வெடிப்பாரு!"

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி




தமிழில் நகைச்சுவையை விரும்புபவர்கள் 
கீழ்கண்ட வலைக்கு சென்று படித்து இன்புறலாம். 

நானும் ஒரு ஓவியன் தான் (wash drawing-color)

நானும் ஒரு ஓவியன் தான் (wash drawing-color)


பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 
மாத்ருவாணி இதழின் முகப்பில்
மாதாவின் படம் இருப்பதை பார்த்தேன். 

நாம் ஏன் வரைய முயற்சி செய்யக்கூடாது
என்று நினைத்தேன். வரைந்துவிட்டேன். 
அந்த படம் இதோ.  




சனி, 15 ஜூன், 2013

To think or not to think

To think or not to think 




If you close your outer eye 
inner eye opens 

if you close your inner eye 
the real inside will open.

one must have an eye 
on the inner I

If that I opens
all the differences will vanish 
like mist before sun 

Everlasting Bliss will greet  you