செவ்வாய், 30 டிசம்பர், 2014

Let all of us welcome 2015 with Good Thoughts

 Let all of us welcome 2015 with Good Thoughts
Let all the world become a Peaceful heaven
and the embodiment of love from 2015

Life is for living
Life is for love
Life is for learning
Life is for sharing
Life is not for lust
Life is not for Lies
Life is not for hatred
Life is not for entertainment only
Life is enlightenment

Life should not be wasted by finding faults in others
Remedy should be found wherever possible 
The real happiness lies in the happiness of the people around us 
and those coming in our life.

Jealousy is a deep sea full of poisons .
If we allow its water into our mind 
we will be drowned  and perish 
We must allow everybody 
around us to prosper
we must stop blaming others for our faults and 
also for the things that happen beyond our control 
Those who believe in GOD believe him 
and the non believers need  not
interfere in the affairs of believers and vise-varsa

All must develop the quality of tolerance 
as this world is full of bundle of intolerant people.

Neither Pope or Sant cannot do anything unless each individual decides
to fill their heart  with love for fellow beings 
We must develop contact with our inner soul through which alone
we can contact and enjoy the bliss of cosmic soul. 
Life is journey of experiences. We must enjoy it whatever 
may the outcome. 
Our journey from birth to death is preplanned by us and 
executed through GOD's messengers. 
Disasters can be prevented to a certain extent 
but we have no power to  stop them. 

We are for a short stay in this world to experience 

We cannot learn everything in one attempt 
We have to take millions of births 
to learn many things. 

At the same time we have to forget all the knowledge we obtained 
at the end of the journey of the soul
before merging with GOD 

Whatever we learn earn,possess have to be discarded here itself 
as we came to this world without anything except our past karma 

The fire of vairaagya is required 
to lift our individual soul of rocket to heavens. 

Mere talk and discussion on spiritual truths will never help 
Practice them with the guidance of a realized guru 
alone will bring success .


T.R.Pattabiraman

2015 ஆம் ஆண்டு தமிழனின் நிலைமாறுமா?

 2015 ஆம் ஆண்டு தமிழனின் நிலை மாறுமா?


தமிழன் ஒரு பயந்தான்கொள்ளி

ஆம் தமிழன் ஒரு பயந்தான்கொள்ளி
எப்படி?

அவன் வாய்ச் சொல்லில் வீரன் என்று
பல ஆண்டுகளுக்கு முன்பே மீசைக் கவிஞன்
பாரதி எழுதி வைத்தான். அது இன்றும் உண்மை என்று
நம் அரசியல் வாதிகள் நிருபித்து வருகிறார்கள்.

தமிழனுக்கு அவனே எதிரி. சுதந்திர போராட்ட வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை யும்,மற்றும்மருது சகோதரர்களையும் வெள்ளையர்களிடம் காட்டிகொடுத்தது முதல் தொடங்கி தன்  உறவுகளுக்கு அவன் இழைத்த துரோக  செயல்கள் கணக்கிலடங்கா.



தமிழன் இந்தியைக் கண்டு பயப்படுகிறான், வடமொழியைக்கண்டு பயப்படுகிறான்.

ஆனால் ஊழல் செய்வதற்கு, லஞ்சம் வாங்குவதற்கு, சட்ட  விதிகளை மீறுவதற்கு,பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கு, பொய் சொல்வதற்கு, பொது சொத்துக்களை அற்ப காரணங்களுக்காக அடித்து நொறுக்குவதற்கு ,எல்லா இடங்களிலும் அசுத்தம் செய்வதற்கு பயப்படுவதில்லை. அவமானப்படுவதில்லை.

தமிழன் எப்போதும் நடந்து போனவைகளைப் பற்றி பேசியே நிகழ் காலத்தை இழக்கும் மூடனாய் வாழ்நாள் முழுவதும் இருந்து வீணே இறந்து போகிறான்.



அரசியல்வாதிகள் எந்த பிரச்சினையையும்
தீர்த்து வைப்பது கிடையாது தீர்த்து வைத்ததும் கிடையாது

மாறாக எல்லா பிரசினைகளையும் சிக்கலாக்கி
அதற்கு தீர்வு காணாமல் நிரந்தரமாக நீடிக்க வைத்து
தங்கள் அனைத்து ஆற்றல்களையும் அதற்க்கு பயன்படுத்தி
மக்களை எப்போதும் குழப்பத்திலேயே வைத்திருப்பதிலேயே
குறியாய் இருகிறார்கள்

தமிழர்கள் உழைப்புக்கு மரியாதை அளிப்பதில்லை.
சாதிக்கும், மதத்திற்கும் மக்களின்  உணர்ச்சிகளை
தூண்டும் பொறுப்பற்றவர்கள் பேசும்
பொறுப்பற்ற உளறல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து
தங்களின் பொன்னான நேரத்தையும், உழைப்பையும் காசையும் வீணாக்குகிறார்கள்.

பெண்களை மதிப்பது கிடையாது அவர்களை ஊடகங்களிலும் இழிவுபடுத்துவதும், கொடுமைப்படுவதும், திரைப்படங்களின் அவர்களை போகபோருளாக பார்த்து ரசிப்பதும் அவர்களின் ரத்தத்தில் ஊறிப்போய்விட்ட உணர்வு.


அரசியல்வாதிகள் தினமும் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு ஓர் போராட்டம், கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் என மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு  இடையூறுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்துவதில் கலையாக கொண்டுள்ளனர்.

நடிப்பவன் கோடிகளை  அள்ளுகிறான். அவனுக்கு டூப் போடுபவன்
ஆபத்தில் சிக்கி மடிகிறான். நல்லவர்கள் போல் நடிக்கும் நடிப்புக்கு கொடுக்கும் மதிப்பை ஒருவர் தன் நிஜ வாழ்க்கையில் கடைபிடிப்பதுமில்லை
கடைபிடிப்பவர்களை மதிப்பதும் இல்லை.

நாட்டிற்காக உழைத்தவர்கள் நடு  ரோட்டில் நிற்கிறார்கள்.
அவர்களை மறப்பதும் அவர்களின் பெயரைசொல்லி அரசியல் செய்வதும்
இன்றைய அரசில்வாதிகளின் வாழ்க்கை முறை.

எங்கு சென்றாலும் பாமரனுக்கு நீதி கிடைப்பதில்லை அது நீதி மன்றமாகட்டும், மக்கள் மன்றமாகட்டும்.

வேலிகள்  பயிரை மேய்கின்றன .காலிகள் தங்கள் ஜோலிகளை
நிறைவேற்ற தடையேதும் இல்லை. போலிகள் எல்லா நிலையிலும்
மக்களின் அன்றாட வாழ்வில் தங்கள் நோக்கத்தை   யாராலும் தடுக்க இயலவில்லை.

எந்த அரசு வந்தாலும் மக்களின் மீது சுமத்தப்படுவது வரிசுமை  மட்டுமே.
அவர்களின் வாழ்வுக்கும், நலனுக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் கிடையாது இந்நாட்டிலே.

ஏழைக்கு ஒரு நீதி. பணக்காரனுக்கு ஒரு நீதி இந்நாட்டிலே. இதை
எதிர்த்து கேட்பவருக்கு கிடைப்பது அடியும் உதையும், அமர வாழ்வும்.


தனித்தனியாக பிரிந்து அரசியல் நடத்தும் தலைவர்களால் தமிழ் நாட்டிற்கும் என்றும் விடிவுகாலம் கிடையாது அவர்களின் பின்னே அணி வகுப்பவ்ர்களுக்கும் எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதை விடுத்துவிட்டு ஒருவர்மீது ஒருவர் வசை பாடிக்கொண்டிருந்தால் தமிழர்களின் எதிர்காலம் ஒரு கனவாகத்தான்
இருக்கும்.

2015 ஆம் ஆண்டு ஒரு நல்லதோர் தொடக்கமாக அமையவேண்டும்





  

வியாழன், 25 டிசம்பர், 2014

மதம் நுழையாத இடம் எது?

மதம் நுழையாத இடம் எது?

இந்த உலகில் பிறக்கும்
முன் மதம் இல்லை.

ஒரு உயிர் மண்ணில் விழுந்தவுடன் அதை
கையில் எடுப்பவனால் மத சாயம் , பூசப்படுகிறது.

அந்த உயிர் மீண்டும் மண்ணுக்குள் போகும்வரை
அந்த சாயம் போவதில்லை.

ஆனால் மதம் நுழையாத சில தருணங்களும்
இருக்கத்தான் செய்கின்றன.

ஒருவன் பல நாள் பட்டினி  கிடந்து
நினைவு தப்பும் வேளையில் ஒருவன்
அவன் உயிரைக் காக்க உணவு அளிக்கும்போது
மதத்தை பற்றி சிந்திபதில்லை.

ஒருவன் கொடிய நோயினால் துன்பப்படும்போது ஒரு
மருத்துவரிடம் செல்லும்போது அவர் எந்த மதம், எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை.

தன்  நோய் குணமானால் போதும் என்று மட்டுமே என்னும் அந்த நேரத்தில்
அவரை மருத்துவராகவே மட்டும் அந்த நேரத்தில் அனைவரும் பார்க்கின்றனர்.

அதுபோல் அந்த மருத்துவரும் வருபவரை 
ஒரு நோயாளியாக மட்டுமே பார்க்கின்றார்

உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை.

இறைவனும் அப்படித்தான் அனைத்து
உயிர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கும்முன்பே தாயின் மூலம் பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமன் அமிர்தமான பாலை தயாராக வைத்திருக்கிறான்

ஆனால் உணவை உண்டு உடலில் சக்தி வந்தபின் அவனிடம் கர்வமும், தலை தூக்கி விடுவதால், தான் என்ற ஆணவமும், சுயநலமும் மிகுந்து சக உயிர்களிடம் பேதம் கண்டு தீமைகளை செய்கின்றான்.

இறைவன் பல இயற்க்கை இடர்பாடுகள், நோய்கள், அழிவுகள், ஏமாற்றங்கள் இழப்புகள் என எச்சரிக்கைகளை அளித்தும் மனிதர்கள் மனம் திருந்துவதில்லை.

தில்லை நாதனை சிந்தை  செய்வதில்லை. திருவேங்கடனாதனை வணங்குவதில்லை திமிர் பிடித்து அழிகிறார்கள்.

மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.

அதை விடுத்து அதை பிறர் மீது திணித்தால்
அழிவைத்தான் சந்திக்க வேண்டி நேரிடும்.

அதைதான் இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது.




புதன், 24 டிசம்பர், 2014

அன்பு நெறி தழைத்தோங்கும் நாள் என்று வருமோ இவ்வுலகில்?

 அன்பு நெறி தழைத்தோங்கும் நாள் என்று வருமோ இவ்வுலகில்? 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றார் கணியன் பூங்குன்றனார்

அனால் அவர் வழி வந்த தமிழ் சமுதாயமோ
ஜாதியால் பிளவுபட்டு அப்பிளவில்
அரசியல் பேசும் அட்டைகள் பல்கிப் பெருகி
அருமைத் தமிழ்நாட்டை
அரித்து தின்னுக் கொண்டிருக்கின்றன

ஒரு புறம் ஜாதி வேண்டாம் என்கிறார்
மறுபுறமோ ஜாதிவாரி கணக்கெடுப்பு
எடுக்க வேண்டுமென்கிறார்
சாதிக்குசான்று வேண்டும் என்கிறார்,
அதற்க்கு இட ஒதுக்கீடு கேட்டு நாள்தோறும்
போராடுகின்றார்.

எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள்
என்று வாய் கிழிய மேடைதோறும் முழங்குகின்றார்
ஆனால் செய்வவதனைத்தும் ஜாதியின் அடிப்படையிலே
தீர்மானிக்கின்றார்.

சமதர்ம சமுதாயம் வேண்டுமென்றால்
அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி
வாய்ப்பு அளித்தல்தான்  முறையன்றோ !

இதில் மதம் என்றும், கீழ் சாதி என்றும், உயர் சாதி என்றும்
சிறுபான்மை என்று எதற்க்காக வகைப் படுத்து கின்றாரரோ
யாருமறியார்

எல்லோரும் சகோதரர்கள் என்று சொல்கிறது ஒரு மதம்
ஆனால் அவர் மதத்தை சேர்ந்தவர்களையே கொன்று
குவிக்கிறது தினம் ஒரு கூட்டம்

எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்கிறது ஒரு மதம் ஆனால் அவர்களுக்குள்ளே எண்ணற்ற பிரிவுகள்.

எல்லோரும் இறைவனின் அம்சங்கள் என்று கூப்பாடு
போடுகிறது ஒரு மதம் ஆனால் அம்மம்மா எத்தனை பிரிவினைகள்
அந்த மதத்தில்.

அஹிம்சையை போதிக்கும் மதமொன்று அதை சார்ந்த அனைவரும்
மனித உயிர்கள் உட்பட மற்ற உயிர்களை கொன்று குவிக்கின்றனர்
காலம் காலமாய்.

எல்லா உயிரும் இன்புற்று வாழுக கொல்லா விரதம் குவலயமெல்லாம்
ஓங்குக என்ற அன்பு நெறியைப் போதிக்கும் வள்ளலாரின் கூக்குரல்
காற்றில் கலந்து மக்களின் மனங்களில் புகுந்து இந்த உலகம் இன்புறும் அந்த நாள் வருவது எந்நாளோ?

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை காட்டும் ஒளிப் பாதை

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை காட்டும் ஒளிப் பாதை




இதயத்தில் அறியாமை என்னும்
இருள் சூழ்ந்துவிட்டால்
இறைவன் என்னும் விளக்கு
அணைந்துவிடும்

உதயத்தில் ஞாயிறு
உதித்தாலும் உறங்கித்தான்
கிடப்பர் சோம்பி திரியும்
வழியைத்தான் நாடும்
மனம் கொண்டோர்.

அரங்கனுடன் கலந்துவிட்ட
ஆண்டாள் நாச்சியார்
நம் அறியாமையைப் போக்கிடவே
பரிமுகனாம் ஹரி என்னும்
ஒளியை நாடும் வழிசொன்னாள்

உறக்கத்தை விட்டொழித்து
உவராழியிளிருந்து உலகிற்கு வந்து
உயரிய தர்மத்தை போதித்த
உடுப்பி கண்ணனை ,
உலகளந்த உததமனை
உள்ளத்தில் கள்ளம் தவிர்த்து
உள்ளம் என்னும் கோயிலில் அவனை
நிறுத்தும் முகமாக கோயிலில் சிலையாய்
நிற்கும் அவன் முன்பு சென்று அவன்
புகழ் பாட அழைக்கின்றாள்.தன் அந்தப்புரத்தை
விட்டு வெளியே  வருகிறாள் ஆண்டுதோறும்

ஹரி என்னும் தெய்வத்தை
அறிவதற்குத்தான் மனித உயிர்களுக்கு
அறிவைக் கொடுத்தது அந்த பரம்பொருள்.

ஆனால் பொருள் தேடுவதற்கும்
பிறர் அந்தரங்கம் அறிவதற்கும் மட்டுமே அறிவை அடைந்து
ஆயுள்  முழுவதும் அலைந்து ஓய்ந்து  வீணே மடிந்து
போகிறது மனிதர் கூட்டம்

தனக்குள்ளே குடி  கொண்ட தெய்வத்தை தேடாமல்
காட்டிலும் ,மேட்டிலும், காவி உடை உடுத்திய பல்
போலிகளிடம் சென்று தேடுகிறது காலமெல்லாம்.

உண்மைதான் தெய்வம் என்பதை அறிந்து
உண்மை பேசாமல் பொய்மையினால்
அவனை அடைந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு
போடுகிறது தற்புகழ்ச்சி பேசி தலைக்கனம் கொண்டு
தறுதலைகளைப் போல் தரணியில்
சுற்றித் திரியும் கூட்டம்.

அன்புதான் இறைவன் என்பதை உணராது
சுயநலத்தில் சிக்குண்டு பிறரின் நிலை கண்டு
ஏசித் திரிந்து ,சினந்து, துன்பம் இழைப்பதில்
இன்பம் கொண்டு இழிவான வாழ்க்கை
வாழுகிறார்  பெரும்பாலான மூடர்கள்.

சென்ற ஒவ்வொரு கணமும் எக்காலமும்
திரும்பி வரப்போவதில்லை.

இருக்கின்ற ஒவ்வொரு கணத்தையும்
தில்லை நாதனின் புகழ் பாடுவோம்.

திருவேங்கட நாதனின் திருவடிகளைப்
பற்றி சிந்திப்போம்.

உள்ளத்தில் குடி கொண்ட குகனின்
வடிவை நினைப்போம்.

நம்மையெல்லாம் படைத்தும் இயக்கும் அம்பிகையையும்,
நன்றாக வாழ்ந்து நல்லறம் செய்ய உதவும் அஷ்ட லக்ஷ்மீகளையும்
நாராயணனின் நாமம் நாவில் எப்போதும் நிலைத்திட
செய்யும் நாமகளையும். நாம் வாயார பாடுவோம்.

வேத வித்துக்களே ஓத இயலும் வேதத்தின் சாரத்தை
இனிமையான தமிழில் வடித்துத் தந்து நம்மையெல்லாம்
நாரணன் புகழ் பாடி நற்கதியை அடைய வழிகாட்டிய
ஆண்டாளின் திருப்பாவையை ஓதுவோம்.

ஓங்காரப் பொருளை உணர்ந்து நிலையான பதத்தை
பெற்று மகிழ்வோமாக

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

வியாழன், 11 டிசம்பர், 2014

பகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்?(1 )

பகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்?(1)

பகவத் கீதை இந்துக் கடவுளால் சொல்லப்பட்டதால் மற்ற மதத்தினர்கள் அதை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள்.

உண்மையில் மகாபாரதத்தில் வரும் அர்சுனன் கதாபாத்திரம் ஒரு சராசரி மனிதனின் குழப்பங்களைப் பற்றியது

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அதை அவர்கள் விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்த தவறும்போதோ அல்லது தயங்கும்போதோ பிரச்சினை ஏற்ப்படுகிறது.

அது வீட்டிற்குள் என்றால் அது அந்த குடும்பத்தை பாதிக்கிறது

அதுவே ஒரு நாட்டின் தலைவனாக இருந்தால் அது நாட்டை பாதிக்கிறது.

இந்த மாதிரி குழப்பமான சூழ்நிலைகளில் இருந்து
எப்படி மீண்டு வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்பதையே கீதையின் இரண்டாம்  அத்தியாயத்தில் பகவான் கண்ணன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

இதற்க்குபோய் மத சாயம் பூசுவது ,வள்ளுவரின் குறளான எப்பொருள் யார் யார் வாய்க்  கேட்பினும்    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கு முரணாகிறது. (இன்னும் வரும்)

புதன், 10 டிசம்பர், 2014

பாரதி கண்ட கனவு ?

பாரதி கண்ட கனவு ?




இன்று பாரதி பிறந்த தினம்

உலகம் கொண்டாடுகிறது
வழக்கம்போல் அவன் சிலைக்கு மாலை மரியாதை.

நாளை மற்றொருவரின் பிறந்த தினம்
அதே சடங்குகள் இதுதான் இன்றைய உலகம்.

அவன் பலவற்றை சொன்னான் சில நடந்தது
அவன் தமிழ் சமுதாயத்தில் வெளிச்சத்திற்கு
கொண்டு வந்த அவலங்கள்
அப்படியேதான் இருக்கின்றன.

பெண்ணடிமை கூடாதென்றான்.
வீட்டை விட்டு வெளியே வந்த பெண்களின்
நிலை என் வீட்டை விட்டு வெளியே வந்தோம் என்ற நிலைக்கு
இன்றைய நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு குழந்தையாய்  இருக்கும் போதும்
பாதுகாப்பில்லை. கல்வி சாலைக்கு சென்றாலும்
அங்கிருக்கும் ஆ(சிறியர்கள் )சிரியர்கள் சிலர்
செய்யும் கொடூரத்திற்கு எல்லையில்லை.

படித்து வேலைக்கு சென்றாலும் அங்கும் சரி
பணி முடிந்து இல்லம் திரும்பும்போதும் சரி
என்ன நேரும் என்று யாருக்கும் தெரியாது.

ஊடகங்களில்  எப்போதும் காம களியாட்டக் காட்சிகள்தான்.
அதை சிலர் தங்கள் நிஜ வாழ்வில் அரங்கேற்றும்போதுதான்
அது கண்டிக்கப்படும் காட்சியாக மாறிவிடுகிறது.

சமூகத்தில் ஒழுக்கம் போய்விட்டது.
ஒழுங்கும் போய்விட்டது.

தனி மனிதன் திருந்தவேண்டும்.
அப்போதுதான் இந்த சமூகமும்
திருந்தும்.

உள்ளத்தில் வக்கிரங்களை சுமந்து கொண்டு உதட்டிலே
பெண்களுக்கெதிரான  வன்முறைகளை பழிக்கும் மனிதர்கள்
அந்த செயலை செய்யும்.  ஒரு சிலரை விட மிகவும் ஆபத்தானவர்கள்.

அவர்களிடம் பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வள்ளுவன் சொன்னதுபோல் ஒரு பெண் தன்னை அவள்தான்  காத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவள் இந்த உலகையும்
காக்க முடியும். ஏனெனில் அவள்தான் தாயாகிறாள்.இந்த உலகத்திற்கும் அவள்தான் பராசக்தி என்னும் தாயாவாள்.




மத மாற்றத்தால் என்ன பயன்?

மத மாற்றத்தால் என்ன பயன்? 

உலகில் பல மதங்கள் உள்ளன.


தரணியில் தன்னைப் படைத்தவன்
ஒருவன் இருக்கின்றான் அவனை
உணர்ந்துகொண்டு உய்ய வேண்டும் என்பதற்காக
பல தீர்க்கதரிசிகளால் அந்தந்த  கால் நிலைக்கேற்ப
வடிவமைக்கப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டன.

மனிதர்கள் தனியாக வாழாமல் ஒரு கூட்டமாக
சேர்ந்து வந்தால் ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த நிலையில் மதம் அவர்களுக்கு இணைக்கும் பாலமாக அமைந்தது.

ஆனால்  அதுவே காலபோக்கில் ஒரு கூட்டம் மற்ற மதத்தை
பின்பற்றியவர்களை தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கும், எதிர்ப்பவர்களை அழித்து ஒழிக்கும் ஆதிக்க மனப்பான்மையை  வளர்த்து இன்று இந்த உலகம் மத வெறியர்களின் கையில் சிக்கிசின்னா பின்னமாகி  கொண்டிருக்கிறது.

அதனால் இன்று உலக அமைதி கேள்விக்குறியாகிவிட்டது.
பண்பும், அன்பும் ,மற்றவரோடுஇசைந்து  வாழும் இனிய குணமும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலிருந்தும்  எங்கோ போய்விட்டது.

மத மாற்றங்கள் எந்த பயனையும் விளைவிப்பதில்லை.
அது மனிதர்களை ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்  சிக்க வைத்து விடுகிறது

உடைகளை மாற்றிக்கொண்டாலும், புற சின்னங்களை மாற்றிக்கொள்வதாலும் பலன் ஏதும் விளையப்போவதில்லை.

எந்த மதத்தை சார்ந்தவர் எனினும் எல்லோருக்கும் ஒரே இறைவன் ஒன்றே என்ற சீரடி சாயி பாபாவின் கொள்கை ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்தால்தான் வேற்றுமை எண்ணங்கள் ஒழியும்.மற்ற மதத்தினரை வெறுப்புடன் பார்க்கும் எண்ணம் விலகும்.

அதிலிருந்து அவர்கள் வெளி வருவது மிகவும் கடினம்

நம்மைப் படைத்த இறைவன்தான் தீய எண்ணம் கொண்டவர்களின் இதயத்தில் அன்பை விதைக்க வேண்டும். இல்லாவிடில் மனித குலத்தின்
துன்பங்களுக்கு தீர்வு இல்லை.

சனி, 6 டிசம்பர், 2014

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.



மாலையில் இருள் சூழ்ந்தால்
காலையில் கதிரவன் உதயமாகின்றான்
அதை விரட்டிட அனுதினமும்

ஆனால் மனிதர்களின் மனதில்
இருள்  சூழ்ந்தால் அதை
விரட்டுபவர் யார்?

மனதில் சூழ்ந்துவிட்ட இருளை
விரட்ட மாகேசன் ஒருவனைத் தவிர
வேறு யாரால் இயலும்?

இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள்
காட்டிய வழி ஒளியாய்  விளங்கும்
இறைவனை தரிசித்து வழிபடுவதே

மதங்கள் பலவாயினும் மனிதர்கள்
அனைவருக்கும் ஒளி   ஒன்றே
இந்த உண்மையை  உணர்ந்தோர்
இன்பம் அடைவார்.

 மற்றோர் தானும் துன்பத்திற்கு  ஆளாகி
 இந்த உலகத்தின் அமைதியையும் குலைக்கின்றார்.

அனல் கொதிக்கும் மனமுடையோர் நெஞ்சில்
அன்பு புனல் பாயட்டும் இந்நாளில் அனைத்து
உலக மாந்தரும் அமைதி பெற.

கார்த்திகை தீப நன்னாளில் தீபம் ஏற்றி
வழிபாடு செய்து புறத்தே காணும் ஒளியை
நம் அகத்தே கண்டு ஆனந்தம் பெறுவோம்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

இசையும் நானும் (2)

இசையும் நானும் (2)



 


மவுதார்கனில் அடுத்த பாடல் ஒன்றை
பயிற்சி செய்தேன்.
அம்ருதானந்த மயி  பஜன்
அன்பென்னும் சொல்லுக்கு அம்மா  என்ற பாடல்.
 இணைப்பு கீழே

 https://www.youtube.com/watch?v=UTA774zob70



இசையும் நானும் (1)

இசையும் நானும் (1)

இசையும் நானும் (1)

இசை என்பதன்   பொருளே
எல்லா உயிர்களுடன்
இசைந்து இன்பமாக வாழ்வதுதான்.

அப்படி இசைந்து போகாதவர்கள்
அனைவரின் வசைக்கு
ஆளாவதைத் தவிர
வேறு வழியில்லை.

அதனால்தான் திருவள்ளுவரும்
ஈதல் இசைபட வாழ்தல் என்று
ஒரு குறளை இயற்றினாரோ
என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த உலகில் இசை பாடுபவர்களின்
கூட்டம் ஒரு பக்கம் பெருகினாலும்
வசை பாடுவவர்களின் கூட்டம்
பலமடங்கு பெருகிவிட்டதால்.
எல்லா ஊடகங்களிலும் அவர்களின்
குரலே ஓங்கி ஒலிக்கிறது.

இசையாக இறைவன் இருக்கின்றான்
அவன் மனதை இசையால் இளக
வைக்க முடியும் என்று அறிந்து கொண்ட
கணக்கற்ற மகான்கள். பாடல்களை
இயற்றி பாடி நமக்கு அளித்திருக்கிறார்கள்

நாமாக புதிதாக ஏதும் செய்யாவிட்டாலும்
அவற்றிக் கற்றும் பாடியும் ஆனந்தம்
அடையலாம் கேட்டு இன்புறலாம்.

பாடுவதைபோன்றே இசைக்கருவிகளும்
முக்கிய இடத்தை வகிக்கின்றன .கைதேர்ந்த
கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைக்கும்போது
நம் இதயத்தில் அந்த தெய்வீக இசை ஊடுருவி
நம்மை மெய் மறக்கச் செய்து இறைவனிடம்
ஒன்றச் செய்துவிடுகிறது என்பதை யாரும்
மறக்கமுடியாது.

ஆனால் எல்லோருக்கும் இசையைக் கற்கவும்
அதில் உச்ச நிலையை அடையவும் வாய்ப்பு
கிடைப்பதில்லை. இன்று லட்சக்கணக்கான
இசைக் கலைஞர்கள் இருந்தாலும்  இறைவனை
அடைய பயன்படுத்துபவர்கள் மிக சிலரே.

எனக்கும் இசை கற்க வேண்டும் என்ற ஆசை.
ஆனால் அதற்க்கு வாய்ப்பில்லை. அதனால்
இசையைக் கேட்க முயற்சி செய்தேன்.

கற்றிலனாயினும் கேட்க என்றார் திருவள்ளுவர்
நல்ல இசையை கேட்டதினால் அமைதியற்ற
என் மனம் சாந்தியடைந்தது ,மனதில் உள்ள சஞ்சலங்கள்
மறைந்துவிட்டன.

சரி ஏதாவது ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொண்டு
அதில் ஏதாவது ஒன்றிரண்டு பாடல்களை இசைத்து
தீரவேண்டும் என்ற வெறி என்னுள் 10வது வயதிலேயே
ஏற்பட்டது. நிற்பதற்கு  கூட நேரமில்லாமல் 60 ஆண்டுகள்
ஓடிவிட்டது. ஆனால். எண்ணங்கள் என்றும் சாவதில்லை.
அதற்க்கு அழிவில்லை.

நான் தேர்ந்தெடுத்த இசைக்கருவி மவுத்தார்கன்
சிறு வயதில் கோயில் திருவிழா சந்தையில் சாக்லேட்
நிறம் பூசப்பட்டு 10 பைசாவிற்கு விற்கப்படும் மவுதார்கன் தான்
என்னுடைய முதல் ஈர்ப்பு . எப்போது கடைக்கு போனாலும் அதைதான் என். கண்கள் காணும் அதை வாங்கக் கூட கையில் காசு கிடையாது.அப்போது.

அதுபோல்  கொட்டாங்கச்சி .வையலின்.அது வாங்கினாலும்
விற்பவன் கையில் இசைக்கும் அற்புதமாய்
என் கையில் வந்தவுடன் கற்றாழை நாரினால் செய்யப்பட்ட
வில் அறுந்துபோய் அபஸ்வரமாய் ஒலிக்கும்,அல்லது மண்ணினால்
செய்யபட்ட அந்த வயலின் உடைந்துபோகும் அல்லது அதன்மேல் ஒட்டப்பட்ட காகிதம் கிழிந்து என் உற்சாகத்தை குழி தோண்டி புதைத்து விடும்.

அவ்வப்போது என் வசதிக்கேற்ப குறைந்த விலையில் கிடைத்த  மவுத்தார்கன்களை வாங்கி பயிற்சி செய்து வந்தேன்.
திரும்ப திரும்ப மூன்று திரைப்பட பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.
எவ்வளவோ பாடல்களைக் கேட்டும் மற்ற எதுவும் நினைவுக்கு வராது.
இசைக்கவும் முடியாது.

கர்னாடக இசையில் யாரும் அவ்வளவாக மவுத்தார்கனை இசைப்பது கிடையாது.ஏதோ சில திரைப்படங்களின் பத்தோடு பதினொன்றாக அது
பயன்படுத்தப்படும்.

நான் முயற்சி செய்து ஒரு பாடலை பயிற்சி செய்துள்ளேன்.
குறைகள் இருக்கும் .விரைவில் குறைகள் இல்லாமல்
நன்றாக இசைக்க முடியும் என்ற  நம்பிக்கை இருக்கிறது,
இவன் முயற்சிக்கு உங்கள் ஊக்கம் தேவை.
அந்த பாடல். (கண்ணே என் கண்மணியே கண்ணனே  கண் வளராய்.
http://youtu.be/Iqf9V9muMaY

சனி, 22 நவம்பர், 2014

மதங்கள் தோன்றியதின் நோக்கம்?

 மதங்கள்  தோன்றியதின் நோக்கம்? 





 காடுகளில் விலங்குகளோடு
விலங்குகளாக
சுற்றித் திரிந்து கொண்டு வாழ்க்கை
நடத்தி வந்தான் மனிதன்  பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்.

பலவிதமான அனுபவங்களை தொடர்ச்சியாகப் பெற்றபின்
விலங்குகளின் வாழ்க்கை  வேறு மனிதப் பிறவி எடுத்த
வாழ்க்கையின்  குறிக்கோள் வேறு என்பதை புரிந்துகொண்டான்.

மனிதனின் வாழ்க்கையை மேலும் செம்மைப்படுத்த
மதங்கள் தோன்றின.

மதக் கோட்பாடுகளை அனுசரித்து உயர்ந்த நிலையை
அடைந்தவர்கள் கோடானுகோடி.

ஆனால் சமீப காலமாக மனிதனை உயர்ந்த நிலைக்கு
கொண்டு சென்ற மதக் கோட்பாடுகளை சரியாக
புரிந்துகொள்ளாமல்தன்  மனம் போன போக்கில்
நடந்துகொண்டு சக உயிர்களை துன்புறுத்தியும், கொன்றும்
இந்த உலகத்தையும் உலக மக்களையும்   மீள முடியா
வேதனைகளுக்கு ஆளாக்கி வருகின்றான்.

இறைவனும், இறை தூதர்களும் பாடுபட்டு உருவாக்கிய
அன்பு மதம் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டது.

ஒவ்வொருவரும் அவரவர் மதம்தான் உயர்ந்தது என்று
தவறாக நம்பிக்கொண்டு மற்ற மதங்களை அனுசரிப்பவர்களை
எதிரிகளாகப் பார்த்து அழித்து வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் இந்த உலகமும் அதில் வசிக்கும்
மனிதர்களும் இந்த உலகம் அழியும் முன்பே அழிந்து போவதை
யாராலும் தடுக்க இயலாது.

இறைவன் படைத்த இந்த உலகில் அனைத்தும் அனைவரும்
சொந்தம் என்பதை மறந்து ஒவ்வொரு மனிதனின் மனதிலும்
சுயநலம், பொறாமை ,அகந்தை  ,விருப்பு வெறுப்பு ஆகிய தீய குணங்கள்
கொழுந்து விட்டு எரிவதை நிறுத்தாவிடில் அனைவரும் அழிந்து போவதை நம்மைப் படைத்த இறைவனே வந்தாலும். தடுக்க முடியாது.

மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்து, தெய்வ நிலையை அடைவதற்கே தோன்றின மதங்கள்.

யானைபோல் மதம் பிடித்து அலைந்து தன்.  தலைமேல் தானே மண்ணை
அள்ளிப் போட்டுக்கொண்டால் அதனால்  இழப்பு யானைக்கு மட்டுமே என்பதை மத வெறி பிடித்தவர்கள் உணவேண்டும்.






ஒரு வலுவான  யானை எப்படி ஒரு பாகனுக்கு அடங்கி அமைதியாய் அது தன் பணிகளை ஆற்றுகிறதோ  அதுபோல் மனிதர்களும் தன்னைப் படைத்து காக்கும் இறைவனுக்குஅடங்கி நடந்தால். நடந்தால் நன்மை விளையும்.







இல்லையேல் அழிவுதான் .என்பதை உணரவேண்டும்.

படங்கள்-கூகிள்  நன்றி.

சனி, 15 நவம்பர், 2014

உள்ளம் வெளுக்க வேண்டுமென்றால்?

 உள்ளம் வெளுக்க வேண்டுமென்றால்?

 

இந்த உலகத்தில் குப்பைகள்
இல்லா  இடமில்லை

மண்ணில் எந்த குப்பையைப்
போட்டாலும் புவிஅன்னை
அதை உரமாக மாற்றி உயிர்களும்
தாவரங்களும் உயிர் வாழ வகை செய்திடுவாள்

ஆனால் நம் மனம் என்னும் குப்பைத் தொட்டியில் 
குவிந்துள்ள குப்பைகளை
நாம் அறிவதில்லை ,அறிய முடிவதும் இல்லை
அவற்றை அகற்றும் வழியும் தெரியவில்லை


உண்மையை சொல்லவேண்டுமெனில் அதை
அகற்றும் எண்ணமே பலருக்கும் இல்லை.

மாறாக பல ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்து வைக்கப்பட்ட
குப்பைகள் அப்படியேநம்மோடு  தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன

போதாக்குறைக்கு நம் ஐந்து புலன்கள்  மூலம் ஒவ்வொரு கணமும்
கணக்கின்றி குப்பைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன

எல்லாம் பொய்கள். அவைகள் நம் மனம் என்னும் பொய்கையில்
தங்கி ஊறி அழுகி  நாற்றமெடுத்துக்கொண்டிருக்கின்றன

அதன் வெளிப்பாடுகள்தான் ஆசைகள், கோபம், பயம், விருப்பு வெறுப்பு
வஞ்சகம், சூது, பொறாமை போன்ற செயல்கள்.

நம் உடல் சுத்தத்திற்கு  நாம் செலவு செய்யும் நேரமும் காசும் பல
நூறைத் தாண்டுகிறது தினமும்.

ஆனால் மனதில் குவித்துள்ள
குப்பையை அகற்ற சில நொடிகளைக் கூட நாம் ஒதுக்குவதில்லை.

நாம் பிறரின் வாழ்க்கையையே தான் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்  மனதில் இருக்கும், வந்து போகும் எண்ணங்களை
கண்காணிப்பதில்லை .அதனால்தான் நமுடைய ஆன்மீக வாழ்வில்
எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து பிறவிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்க்கு முற்றுபுள்ளி இந்த பிறவியிலாவது வைக்கவேண்டும் என்ற
ஒரு எண்ணம் மனதில் விதைக்கப்பட்டால்தான் அது முளைத்து வளரும்.

பகவான் ரமணர் உபதேசித்து நம்மிடையே வாழ்ந்து காட்டினார்.


இக்கணத்திலிருந்தே   நம் மனதில் தோன்றும் எண்ணங்களை
கண்காணிக்க  தொடங்குவோம்.அப்போதுதான் நம் மனதிற்கு
புரியத் தொடங்கும் நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான், அவன் நம்மை கண்காணிக்க தொடங்கிவிட்டான் என்ற எண்ணம் ஏற்படும்.

நாம் ரமணரைப்  போல்   ஆக முடியாது என்ற எண்ணத்தை தூக்கி  எறியுங்கள்.
நாமும் அந்த அற்புத நிலையை அடையவேண்டும் என்று தினமும் எண்ணுங்கள். கண்டிப்பாக நடக்கும் .அதில் எந்தவிதமான ஐய்யமும்
தேவையில்லை 


வள்ளுவர் கூறியுள்ளதுபோல் உள்ளம் வெளுக்க வேண்டுமென்றால்
உண்மை பேசினால்தான் முடியும் வேறு மாற்று வழி இல்லை
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு உண்மையாவது பேசவேண்டும், உண்மையாக நடக்கவேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்துக்கொண்டே செயல்பட்டால்
அது சாத்தியப்படும்

செவ்வாய், 11 நவம்பர், 2014

எண்ணங்களுக்கு என்றும் அழிவில்லை ;அதனால் நன்மை தரும் எண்ணங்களையே எப்போதும் எண்ணுக

எண்ணங்களுக்கு 
என்றும் அழிவில்லை ;அதனால் 
நன்மை தரும் எண்ணங்களையே எப்போதும் எண்ணுக 

நம் மனதில் எண்ணங்கள்
இடைவிடாமல்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன

அதை நிறுத்துவது மிக கடினம்
ஆனால் அதை ஒருவன் செய்துவிட்டால்
அவன் யோகி ஆகிவிடுகிறான்.

எண்ணங்கள் இருக்கும்வரை மனம்
இறைவனை உணரமுடியாது.

நம்முடைய முழு சக்தியும் மனம் மூலம்தான்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன

அதை தடுத்து நிறுத்தும் வல்லமை
நமக்கு இருந்தும் நாம் அதை
செயல்படுத்த சக்தியில்லாமல்
செயலற்றுக் கிடக்கின்றோம்.

மனதில் ஒரு எண்ணம் தோன்றிவிட்டால்
அது அதை செயல் படுத்தும்வரை அது
அழியாது .

அதனால்தான் நாம் இந்த உலகில் பிறவி
எடுத்ததிலிருந்து சில குறிப்பிட்ட செயல்களை
தினமும் செய்துகொண்டிருக்கின்றோம். அதை நம்மால்
அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது

எதைப் பற்றி நாம் அதிகமாக சிந்திக்கிறோமோ
அவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியும்.
அல்லது நிறைவேறும்.

நல்ல எண்ணங்கள் நமக்கு நன்மையை செய்யும்
இந்த உலகிற்கும் நன்மையை செய்யும்.

தீய எண்ணங்கள் இரு பக்கம் தீட்டப்பட்ட கத்தி
போன்றது அது நமக்கும் தீங்கு செய்யும்
பிறருக்கும் தீங்கு செய்யும்.

ஒரு நல்ல எண்ணத்தை   நாம் தீவிரமாக
சிந்தித்து அதை நம் மனதில் காட்சிபடுத்தி
விட்டோமானால் அது நிறைவேறிவிடும்
அதுபோன்ற ஒத்த சிந்தனை உடையவர்கள்
நம்முடன் இணைந்துகொண்டு
அதை வெற்றி பெற செய்வார்கள்.
அதனால் உலகம் நன்மை பெறும்

தீய  எண்ணங்களும் ஒரு தனி மனிதனின்
உள்ளத்தில்தான் தோன்றுகிறது. அவனைப்போல்
தீய எண்ணம்  கொண்டவர்கள் அவனுடன் இணையும்போது
இந்த உலகம் அழிவை சந்திக்கிறது.

எனவே நன்மை பயக்கும் நல்ல எண்ணங்களை
எப்போதும் எண்ணுவோம்.அனைவரும்
 இந்த உலகில் இன்பமாக வாழ்வோம்.

தீய எண்ணம் எண்ணுபவர்களை விட நல்ல எண்ணம் என்னும்
மனிதர்கள் பெருகினால் தீமை இந்த உலகை விட்டு ஓடிவிடும்.

அதனால்தான் இந்து மதம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழுக எல்லா உயிர்களும் அமைதியாக வாழுக என்ற பிரார்த்தனை இந்த
உலக மக்களும் வழங்கியுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும்.



சனி, 8 நவம்பர், 2014

எதிர்கால கோட்டை கட்டி...

எதிர்கால கோட்டை கட்டி...

கணத்திற்கு கணம் மாறும்
குணம் கொண்ட மனம் 

எதிலும்  நிலைக்காது
எங்கோ அலையும்  மனம்

சிலையிலும் நிற்கவில்லை
சிந்தனையிலும் நிலைக்கவில்லை

உலையில் போட்ட  அரிசி போல்
கொதிக்கிறது உள்ளம்

நாள்தோறும்  மன  நிம்மதியை
சிதைக்கவே எப்போதும்
காத்திருக்கும் சுற்றங்கள்

புதை குழியில் எப்போதும்
தள்ளி வேடிக்கை பார்க்கும் புலன்கள்

என்ன முயற்சி செய்தாலும்
உள்ளத்தை விட்டு அகல மறுக்கும்
கடந்த கால கசடுகள்

எதிர்கால கோட்டை கட்டி
அதில் கடந்த கால குப்பைகளை
குடி வைத்து நிகழ் கால
வாழ்க்கை இழக்கும் நிலையை
மாற்றிடுவாய் .

புதிது புதிதாக புத்தகங்களை
படித்து அதில் உன்னை தேடினேன்
புரட்டர்களின் உதவியை நாடினேன்

அந்தோ! இறைவா நீ என்னுள்  இருப்பதை அறியாமல்.
இவ்வளவு காலம்

இனியாவது இருக்கும் ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்து உண்மையாய்
வாழ்ந்து உயர்நிலை எய்திட அருள் புரிவாய்

புதன், 5 நவம்பர், 2014

உண்மையை தெரிந்துகொண்டால் ?

உண்மையை தெரிந்துகொண்டால் ?

நுகர்வோரே விழித்திரு !
உங்களுக்கு தெரியுமா??
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
______________________________
NESTLE கம்பெனி எருதிலிருந்து
தயாரிக்கும்
ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல்
சேர்ப்பதாக
ஒத்து கொண்டுள்ளார்கள்.


_______Image result for kitkat chocolate______________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
FAIR & LOVELY
கம்பெனி அது தயாரிக்கும் கிரீம்
இல், பன்றி கொழுப்பிலுள்ள
ஆயில் ஐ
கலப்பதாக, சென்னை உயர்
நீதிமன்றத்தில்
ஒரு வழக்கில்
ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
VICKS பல ஐரோப்பிய நாடுகளில்,
அது விஷம்
என்று தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால்,
நமது நாட்டில், அது நாள்
முழுவதும்
தொலைக்காட்சியில்
விளம்பரபடுத்தபட
்டு வருகிறது.
_____________________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
LIFE BOUY குளிக்கும்
சோப்பு அல்ல, மேலும்,
கழிவறை சோப்பும் அல்ல. ஆனால்,
அது ஒரு cabolic சோப்பு,
மிருகங்களை குளிப்பாட்ட
பயன்படுவது.
ஐரோப்பாவில்,
அது நாய்களை குளிப்பாட்ட
பயன்படுகிறது, ஆனால், நம்
நாட்டில் ? மாப்ளே,
நீ எந்த சோப்பு போட்ற?
_______________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
COKE மற்றும் PEPSI ஆகியவை,
உண்மையில்,
கழிவறையை சுத்தம் செய்பவை.
அதில் 21
மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்,
அதன்
விற்பனை, இந்திய
பாராளுமன்றத்தில்
தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ,
இந்தியாகாரன் எல்லாம்
இளிச்சவாயனா?
இனிமே டிவி ல, coke குடிங்க,
பெப்சி குடிங்கன்னு எவனாச்சும்
வரட்டும்,
மவனே, நாஸ்தி தான்.
____________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
வெளிநாட்டு கம்பனிகள்
ஊட்டச்சத்து மிக்க
பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான்,
HORLICKS,
மல்டோவா, PROTINEX
ஆகியவற்றை விற்கின்றன.
ஆனால், அதை,
இந்தியாவில் டெல்லியில் ALL
INDIA INSTITUTE
(இந்தியாவில் உள்ள மிக பெரிய
பரிசோதனை சாலை) இல்,
பரிசோதித்தபோது,
நிலகடலையிளிருந்
து எண்ணையை பிரித்தெடுத்த
பிறகு வரும்
கழிவிலிருந்து
தயாரிக்கபடுகிறது. அது,
விலங்குகள் உணவாகும். இந்த
கழிவிலிருந்தே,
ஆரோக்கிய பானங்கள்
தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்
பச்சனுக்கு பத்து மணி நேர
தொடர்ச்சியான
அறுவை சிகிச்சை நடந்தது.
அவரது, பெரிய
கணையத்தை மருத்துவர்கள்
அறுத்து,
அகற்றி விட்டார்கள். அதன் பிறகு,
மருத்துவர்கள், அது கெட்டு போக
காரணம்,
coke மற்றும்
பெப்சி குடித்ததே என்று.
அதிலிருந்து, அவர் பெப்சி, coke
ஆகிய
விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
______________________________
____
உங்கள்
மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி,
E-631 என்ற
flavor Enhancer சேர்க்கபடுகிறது.
இது, பன்றி,
கோழி இறைச்சியில்
இருந்து தயாரிக்கபடுகிறத
ு.
● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள்
உணவு பாக்கெட்களில் கானபட்டால்,
அதில்
என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும்
கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும்
இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்த
ு தயாரிக்கப்படும் எண்ணெய்
கழிவு.
● Note – இந்த code களை,
பெரும்பாலான
வெளிநாட்டு கம்பனிகள்
தயாரிப்பில் காணலாம்.
அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள்
கம், டாபிஸ்,
குர்குரே மற்றும் மாகி (ஆமா,
ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே,
அதேதான்)
● நுகர்வோரே,
விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற
code
இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code
களையும்
தேடி பாருங்கள்,
இவை அனைத்துமே,
ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153,
E210,
E213, E214, E216, E234, E252, E270,
E280,
E325, E326, E327, E334, E335, E336,
E337,
E422, E430, E431, E432, E433, E434,
E435,
E436, E440, E470, E471, E472, E473,
E474,
E475, E476, E477, E478, E481, E482,
E483,
E491, E492, E493, E494, E495, E542,
E570,
E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள்,
உறவினர்களுக்கு பகிருங்கள். !!!
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு
மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம்
பகிர்வோம்..!

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெட்டியாய் பொழுது போக்க நேரம் உண்டு .ஆனால் ?

வெட்டியாய் பொழுது போக்கநேரம் உண்டு .ஆனால் ?



கானகத்தில் வழி தவறி வந்தவரை
வழிப்பறி செய்து அவர்கள் வாழ்வை
அழித்து வாழ்ந்துவந்த கொள்ளையனை
ஏற்றுக்கொண்டாய் .

கலியுகத்தில் எப்போதும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கும் என்
போன்றவர்களை மட்டும்  ஏற்றுக்கொள்ள
உனக்கு இன்னும் மனம் வரவில்லை

கண் முன்னே எப்போதும் இருக்கின்றாய்
ஆனால் கண்ணுக்கு புலப்படாமல்
அங்கும் இங்கும் திரிகின்றாய்

புலால் உண்ணும் கண்ணப்பனுக்கு
காட்சி தந்தாய் புலன்களின் பின்னால்
சென்றுகொண்டிருக்கும் இவனுக்கு
காட்சி தரும் நாள் எப்போது ?

உலக மாயையில் சிக்கிகொண்ட
இவனுக்கு உன் மாயாஜாலங்கள்
எவ்வாறு புரியும்?

மரிக்கவே படைக்கப்பட்ட அழியும் உடலைப்
பராமரிக்கவே வீணாகிறது உழைப்பும்
செல்வமும்

பொய்யான உறவுகளுக்காகவே
ஏங்கி வாடி வதங்கி அல்லல்பட்டு
அலைபாய்கிறது பந்தப்பட்ட மனம்

ஓசைப்படாமல் தன்  பக்கம் இழுத்து
என்னை அடிமைப்படுத்தி தன் வசம்
வைத்திருக்கிறது ஆசைகள் என்னும் பேய்கள்

அவம் பேச பொழுது இருக்கிறது ஆனால்தவம் செய்ய நேரமில்லை.

வெட்டியாய் பொழுது போக்க
நேரம் உண்டு .ஆனால் வெட்ட வெளியாய்
எங்கும் பரந்து  கிடக்கும் உன்னை அறிய
நேரம் இல்லை


என்னுள்ளே இருக்கின்றாய்.எந்நேரமும்
என்னருகில். ஆனால் உன்னை எங்கெங்கோ
எதிலெதிலோ தேடுகிறேன் ஆயுள் முழுதும்.


மதம் சார்ந்து தேடினாலும் நீ கிடைப்பதில்லை
மதம் பிடித்து யானையைப்போல்
அலைவதைத் தவிர


உன்னை இல்லை என்றாலும் உனக்கு
ஒன்றும் ஆவதில்லை நீ இருக்கிறாய் என்றாலும்
எனக்கும் ஒன்றும் கிடைப்பதில்லை

நான் பட்ட துன்பங்கள் போதும் என்று
நீதான் இவன்மீது இரக்கம் கொள்ளவேண்டும்
எல்லா இடர்களினின்றும் விடுபட வேண்டி

இல்லையேல் காலன் என்னை கொன்றுவிடுவான்
மீண்டும் பிறவி பெற எவ்வளவு காலம்
காத்திருக்கவேண்டும் என்பதை யாரறிவார் ?


சனி, 25 அக்டோபர், 2014

நன்றி கெட்ட மானிடனே !

நன்றி கெட்ட  மானிடனே !

மானிடனே நன்றி மறந்து வாழ்வதுதான் உன்
பிறவிக் குணமோ?


ஒரு நாய்க்கு இருக்கும் நன்றி கூட உனக்கு
அணுவளவும் கிடையாது என்பதை
அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.
உன் அன்றாட செயல்கள் மூலம்.



உன் சுயனலதிர்க்காக நீ எதை வேண்டுமானாலும்
செய்வாய் என்பது அனைவருக்கும் தெரியும்.

என் பல உயிர்களையே ஈவிரக்கமின்றி கொல்வாய்
கொன்றதை தின்னவும் செய்வாய்.

நீ என் காலில் இட்ட கழிவு நீரை சுவையான
சுத்தமான, சுகாதாரமான தாகம் தீர்க்கும்
இளநீராக மாற்றிக் கொடுத்தேன் அதை
குடித்தும், காய்களை  விற்றுக் காசாக்கியும்
பல ஆண்டுகள் நான் வழங்கிய சுகங்களை
அனுபவித்தாய்.





ஆனால் இன்று அடுக்கு மாடி கட்டவேண்டும் அதற்கு நான்
இடையூறாய் இருக்கிறேன் என்று என் தலையை
மொட்டை அடித்தாய். அடுத்த நாளே என் கதையையே
முடித்து விட்டாய்.

உன் தலையை மொட்டை அடித்தால், மீண்டும் முடி வளரும்
ஆனால் என் தலையை மொட்டை அடித்தால். என்ன ஆகும்
என்று உனக்கு தெரியும்.

மாறும் மனம் கொண்ட  குணம் கொண்ட உனக்கு நன்றி மறத்தல்
இயல்பாக இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் வேறொரு
இடத்தில் முளைப்பேன்  தழைப்பேன். என்னிடம் உள்ள
அனைத்தையும் அனைவருக்கும் வழங்குவேன்.




அதுதான் எனக்கு இறைவன் இட்ட   கட்டளை.

வியாழன், 16 அக்டோபர், 2014

படைத்தவனை சரணடைவோம்

படைத்தவனை சரணடைவோம்  


வானில் உயரே
பறக்க வழியிருந்தும் நல்ல உணவை
உண்ணாது பூமியில்




அழுகிய பிணத்தை தேடி வயிறு
வளர்க்கும் கழுகு ,பருந்து  போன்ற பறவைகள்


அதுபோல் இவ்வுலகில் மனிதர்கள் பலர்
வாழ்வில் நல்ல உயர்ந்த
நிலையை அடைந்த பின்னும்
அழியும் அற்ப பொருட்களையே நாடி தேடி ஓடி
அழிந்து போகின்றனர்

பூலோகனாதனை நினைந்து ,பணிந்து
உய்யும் வழியை நாடாது



தீயில் உருகி
காணாமல் போகும் உலோகங்களை
உடலில் அணிந்து உலா வருகின்றனர்.



நம் கண் முன்னே தோன்றி நாம் போடும்
உணவை உண்டு கொழுத்து நோயுற்று
நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
உடலை நம்பி மோசம் போகின்றனர்



நம்மைப் படைத்தது மட்டுமல்லாமல்
நம் உடலுக்குள்ளே கோயில் கொண்டு
நம்மை இயக்கும்  உத்தமனை அறிய
முயலாது ஏதேதோ பிதற்றி திரிகின்றனர்
இவ்வுலக மாந்தர்.

ஓராயிரம் நாமங்கள் கொண்ட   அவன்தான்
இறைவன் என்று  உண்மையை
அவனை உணர்ந்தோர் உரக்கக் கூறிடினும்
தான் வணங்கும் வடிவமே உண்மையான
தெய்வம் என்று  உரிமை கொண்டாடி
உலகத்தில் குழப்பம் விளைவிக்கிறது
உண்மையை உணராக் கூட்டம்


படித்தவருக்கும் பாமரனுக்கும்
பரமனை அடையும் வழி ஒன்றே



அவன் பாதங்களைச் சரணடைந்து
அவன் நாமம் சொல்லி அனைத்து
உயிர்களுடன் அன்போடு இணைந்து
வாழ்வதே அவனை அடையும்
எளிதான  வழி என்பதை அவனைக்
கண்டவர்கள் காட்டிய வழி.

படங்கள்-நன்றி-கூகுள்

புதன், 1 அக்டோபர், 2014

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

எனக்கும் இன்று பிறந்த நாள் (2.10.2014)


ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 


இவர்தான் லால் பகதூர் சாஸ்திரி 

உருவத்தால் சிறியவர்
உழைப்பால்  உயர்ந்தவர்
ஊர் சொத்துக்கு ஆசைப்படாதவர் 

உயர்ந்த பதவிகள் பல வகித்தும் 
ஊழல் செய்ய தெரியாதவர் 

பாகிஸ்தான் படையெடுப்பின்போது
நம் நாட்டின் வீரர்களையும் 
மக்களையும் தட்டிஎழுப்பி 
நாட்டை காத்தவர் 

ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 



சமாதானத்தின் தூதுவராய்
தாஷ்கண்ட் சென்றவரை 
இறைவனின் தூதர்கள் 
தங்கள் நாட்டிற்கு அழைத்து 
சென்று விட்டனர் 

சுயனலமற்றவர்
என்றும் மற்றவர்
நலம் விரும்பியவர் 

லால் பகதூர் சாஸ்த்ரியின் 
வாழ்க்கை மிகவும் துன்பமயமானது
அவரின் அப்பழுக்கற்ற நேர்மையும்,
எளிமையும்,தியாகமும் 
இக்கால மக்களுக்கு போய் சேரவில்லை.
என்ன செய்வது ?

இங்கு இருப்பவர்களுக்கு 
உள் நாட்டில் இருக்கும் 
வைரங்களின் மதிப்பு தெரிவதில்லை 


கூழாங் கற்களை வைரம் என்று நம்பி 
தலைமேல் வைத்துகொண்டு 
கொண்டாடி திண்டாடுகிறார்கள்  

வாழ்க என்றும் உன் புகழ் 
நாட்டிற்காக நீ  செய்த தியாகங்கள் 
வீண் போய்விட்டது. லஞ்சமும் 
பஞ்சமும் வஞ்சமும் நிறைந்துவிட்ட இந்த 
நாட்டை யார் காப்பாற்றுவார்கள்?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும் 

கால வெள்ளத்தில் காணாமல் போனவர்களை கண் முன் கொண்டு நிறுத்தியவர்.

கால வெள்ளத்தில் காணாமல் போனவர்களை 
கண் முன் கொண்டு நிறுத்தியவர்.

இன்று அக்டோபர் முதல் நாள்

நானும்தான் பிறந்தேன் எதற்காக ?
எனக்கே தெரியவில்லை

ஆனால் நடிப்பிற்கே இலக்கணம்
வகுத்தவன் ,தலைக்கனம் இல்லாதவன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
பிறந்த நாள் குறித்து ஒரு பதிவையும் காணோம்



போடாத வேடமில்லை
போற்றாத நாடில்லை
மொழி தெரியாதவனும் போற்றினான்
அவர் நடிப்பை.

காலத்தால் மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி
கப்பலோட்டிய தமிழன் .வ.உ சிதம்பரத்தை கண்முன்
கொண்டு நிறுத்தி நம் கண்களிலிருந்து அருவிபோல்
நீரை கொட்டச் செய்தவன்

கொள்ளையர்களான வெள்ளையர்களை  வெளியேற்ற
தூக்கில் தொங்கிய வீர பாண்டிய கட்டபொம்மனை
மறந்துபோன இந்த தலைமுறைக்கு உயிரோடு
நம் கண் முன்  கொண்டு வந்தவன்

இன்னும் எத்தனையோ பாத்திரங்கள்
அவரால் உயிர் பெற்று திரையில் நடமாடின

வாழ்க  அவர் புகழ்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா 
அல்லது மக்களுக்கா?

ஆனால் உண்மையில் நடப்பதென்ன ?

இலவசங்களைக் கொடுத்துதான் 
ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற 
நிலை உருவாகிவிட்டது 

இது சரியா? இது முறையா? 

கட்சிகள் ஏராளம். பலர் 
 கையில் காசில்லாமல் 
தலைவர்கள் ஆகிறார்கள். 
பதவிக்கு வந்தபின் 
பொது சொத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். 

அரசின் பணத்தை இலவசங்கள் என்ற பெயரில் 
வாரி  இறைத்துவிட்டு அவர்கள்தாங்கள் நன்மை செய்ததுபோல்   விளம்பரம் தேடிக்கொள்ளுகிறார்கள். 

மக்களின்உணர்ச்சிகளை   தூண்டிவிட்டு 
தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போல் மக்களை  பலியிடுகிறார்கள். 

அவர்களின் வாழ்வாதாரத்தை, வேலை வாய்ப்பை, அவர்களின், அறிவை, சுகாதாரத்தை முன்னேற்ற என்ற உருப்படியான 
நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. 

கட்சி தலைவர்களுக்காக கண்மூடித்தனமாக 
தொண்டர்கள் தேவையின்றி மோதிக்கொள்கிறார்கள். 

உண்மையாக வரி செலுத்துபவர்களின் பணம் 
அவர்களுக்காக செலவிடப்படுவதில்லை.

தரமான சாலைகள் இல்லை, தடையில்லா மின்சாரம் இல்லை., 
லஞ்ச லாவண்யமற்ற ,துரித கதியில் செயப்படும் நிர்வாகம் இல்லை. 

எங்கு பார்த்தாலும், ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, சாலை மறியல், கடை அடைப்பு , பொது மக்கள் மீதும், பொது சொத்துக்கள் மீது வன்முறை .பொதுக்கூட்டங்கள் இதுதான் இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு. 
 .
அரசு ஏழைகளுக்காகசெலவிடப்படும்  தொகை அவர்களைப் போய் சேருவதே கிடையாது. செல்லும் வழியில் உள்ள சுரண்டல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு வருகிறது. 

இயற்கை வளங்கள் தனி நபர்களால் அரசு ஆதரவோடு 
கொள்ளை அடிக்கப்படுகின்றன 

தவறுகளை தட்டி கேட்பவர்கள் செல்லாக் காசாக்கப்படுகின்றனர்
இல்லை அழிக்கப்படுகின்றனர் . 

நீதி துறை நீதி வழங்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், மேல் முறையீடுகளால் தீர்ப்புகள் பயனின்றிப் போகின்றன. 

அரசின் சலுகைகளை அனுபவிக்கும் அடிமட்டத்தில் உள்ள சில பிரிவினர்கள்,குடிக்கு அடிமையாகி தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றனர். 

வீட்டிலும் சரி, கல்விக்கூடங்களிலும், பொது வாழ்க்கையிலும் ஒழுக்கம் இல்லை. அதனால் சமூகம் சீர்கெட்டு விட்டது. 

ஊடகங்கள் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து 
குழப்புகின்றன. 

எதற்கெடுத்தாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பதிலுமே 
அரசியல் கட்சிகளும் அதன் தொண்டர்களும் குறியாக உள்ளனர். 

பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகின்றனர். ஏழை ஏழையாகவே இருக்கிறான், கோழையாகவே இருக்கிறான். 

வேலை தேடுபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. உழைப்பவனுக்கு உரிய கூலி கிடைக்கவில்லை. இவைகளை அரசு கண்டு கொள்வது கிடையாது 

உழைக்கின்ற கூட்டம்உழைத்துக் கொண்டிருக்கிறது. ஏமாற்றி பிழைக்கிற கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது 

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம்
நம் நாட்டை விட்டு விரட்டப்படவேண்டும்.