திங்கள், 31 மார்ச், 2014

நீங்கள் வாழும் உலகம் எது..?

நீங்கள் வாழும் உலகம் எது..?
நான் வாழ்வது கனவுலகமா அல்லது நிஜவுலகமா???

இதைக்கேட்டுப்பாருங்கள் பின்னர் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.


கீழ்கண்டுள்ள காணோளியைக் காணுங்கள் 

https://www.facebook.com/photo.php?v=666312143428227&set=vb.363469940379117&type=2&theater

வியாழன், 27 மார்ச், 2014

மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....

மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....
இந்திய வீர தம்பதிகளின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசம்.....
இவர்கள்..என்னமோ..கூலா தான் செய்கிறார்கள்..பார்க்கும் நமக்கு தான் பக் பக்...என்கிறது...


பெண்களை பேதைகள் என்றும், பேதலிக்கும் புத்தி உடையவர்கள் என்றும், பெண்கள் பலகீனமானவர்கள் என்றும். சில மூடர்கள் கதை கட்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இந்த காணொளியைக்  கண்ட பிறகு பெண்களைப் பற்றிய அபிபிராயத்தை ஆண்கள் கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். 

https://www.facebook.com/photo.php?v=664106813648760&set=vb.363469940379117&type=2&theater

புதன், 26 மார்ச், 2014

எழுமுனை பரிமாண அதிசயம்.


எழுமுனை பரிமாண அதிசயம். 

எல்லோரும் முப்பரிமான படத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
தற்ப்போது முப்பரிமான படங்களைக் காட்டும் தொலைக்காட்சி திரையும், திரைபடங்களும் வந்துவிட்டன.



ஆனால்   அவற்றையெல்லாம் தாண்டி எழுமுனைப்  பரிமாண
காட்சிகளைக் கொண்ட தொழில் நுட்பம் வந்துவிட்டது.



அதை நேரில் கண்டால்தான் அதன் அதிசயம் புரியும்.

இணைப்பு கீழே.


https://www.facebook.com/photo.php?v=663544380371670&set=vb.363469940379117&type=2&theater

செவ்வாய், 25 மார்ச், 2014

எனக்கு நேரமில்லை?

எனக்கு நேரமில்லை?





இப்போது யாரைப் பார்த்தாலும்
எதற்கெடுத்தாலும் எனக்கு நேரமில்லை
என்று அங்கலாயிக்கிறார்கள்

அனால் சிலர் எனக்கு நேரமே
போதவில்லை என்கிறார்கள்.

ஒரு சிலரோ எனக்கு நேரமே
போகவில்லை போரடிக்கிறது என்கிறார்கள்.
இவர்களின் கூட்டம்தான்  இந்த உலகில்
அதிகம் .

இவர்போன்றவர்கள் இந்த உலகின்
சுமைகள்.

இறைவன் அனைவருக்கும் சமமாக
24 மணி நேரம் அளிக்கின்றான்.

உறங்கும் நேரம் தவிர்த்து விழித்திருக்கும் நேரத்தை
சரியாக ,பயனுள்ள வகையில்
பயன் படுத்துபவர்கள் மிக சிலரே.

அப்படிபட்டவர்கள் தான் வாழ்க்கையில்
உயர்ந்த நிலையை எட்டுகிறார்கள்.

வாழ்க்கையில் குறிக்கோளே இல்லாதவர்கள் 
இந்த உலகில் பலர் உள்ளனர். 

குறிக்கோள் உள்ளவன் அதை அடைய
கடுமையாக உழைக்கின்றான். பல நேரங்களில்
உறக்கத்தையும் விடுகின்றான்.

பல விருப்பங்களை தியாகம் செய்கின்றான்.
அவனுக்கு இன்னும் நேரம் கிடைத்தால்
நன்றாக இருக்குமே என்று நினைக்கிறான்.

ஆனால் சோம்பேறிகளுக்கோ
எவ்வளவு நேரம் கொடுத்தாலும்
ஒன்று தூங்கி  தொலைப்பார்கள்.

அல்லது வெட்டி பேச்சில் காலம் கழித்து பிறரின் நேரத்தையும்  வீணடிப்பார்கள். அல்லது

இறுதி நேரம் வரை தொலைகாட்சியில்
நம்முடைய நேரத்தை வீணடிக்கும் கயவர்களின்
பேச்சுக்களை /படங்களை பார்த்துக்கொண்டு
நேரத்தை வீணடிப்பார்கள்.

பிறகு குய்யோ முறையோ என்று அலறிக்கொண்டு  ஓடுவார்கள்.
வீட்டில் உள்ளவர்களையும் குறை சொல்லிவிட்டு ,

முடிந்தால் தன்னுடைய சோம்பேறித்தனத்தை மறைக்க
ஒரு சண்டையை கிளப்பிவிட்டுப் போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்த ஒருவர்
ஒவ்வொரு வீட்டிலும் உண்டு.
அதுபோல நாட்டிலும்
லட்சக்கணக்கான மக்கள் உண்டு.

இவர்களால்தான் வீடும் நாடும்
அமைதியின்றி இருக்கிறது.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி  கெடுத்தவர்கள்
வீட்டையும்  கெடுக்கிறார்கள்.நாட்டையும் கெடுக்கிறார்கள்.
அவர்களையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் வாழ்வில் சந்திப்பது  தோல்விகளையும்
தொந்தரவுகளையும்.தான்


திங்கள், 24 மார்ச், 2014

காவியம் கைவிரலின் நிழல்களில் !

காவியம் கைவிரலின் நிழல்களில் !



அந்த காலத்தில் விளக்கின் ஒளியில் 
கைவிரல்களின் நிழலைக்கொண்டு 
நாய்,முயல், கருடன்,குதிரை ,மான் 
போன்ற உருவங்களை சுவற்றில்
காட்டி மகிழ்ந்ததுண்டு.

ஒன்று அந்தக் கலை 
உச்சிக்கு சென்றுவிட்டது.

விரல்களின் நிழல்கள் மூலமே 
காவியங்களை படைக்கத்  தொடங்கி விட்டனர். 
கைதேர்ந்த கலைஞர்கள். 

அமிர்தசரஸ் பொற்கோயில் தோற்றம் ,
அதைக் கட்டிய குருவின் வாழ்க்கை வரலாறு 
-அற்புதம் கண்டு மகிழுங்கள்/
இணைப்பு கீழே .

http://www.youtube.com/watch?v=Y4FMOpRSvHo

வெள்ளி, 21 மார்ச், 2014

தந்தையின் அன்பை உணராத சிறுவன்

தந்தையின் அன்பை உணராத சிறுவன் 

ஒரு சிறுவன் அவன் மீது அன்பு காட்டிய
தந்தையை அவர்  இவ்வுலகில்
உள்ளவரை வெறுத்து ஒதுக்கினான்

காரணம் அவர் அவனுக்கு கைசெலவிற்கு
 பணம் கொடுப்பதுபோல் கொடுத்து உடனே வாங்கி
அங்கு வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிடுவார்.

அதே சமயம் அவரும் அதே தொகையை
தன் பங்காக உண்டியலில் போட்டுவிடுவார்.

அவர் அடிக்கடி தன் மகனிடம் சொல்வது
நாம் பிறருக்கு கொடுக்கத்தான் வேண்டுமே ,
பிறருக்கு உதவத்தான் வேண்டுமே தவிர
நமக்கே அனைத்தையும் செலவு
செய்துகொள்ளக் கூடாது என்பார்.

இதை புரிந்துகொள்ளாத அந்த மகன்
அவர் இறந்தபின் ஒரு அநாதை விடுதியிலிருந்து
அவர் தந்தையைப் பாராட்டி வரப்பெற்ற நன்றி கடிதங்களைப் பற்றி அறிந்துகொண்டு தான் தந்தையை தவறாக புரிந்துகொண்டுவிட்டதாக வருந்துகிறான்.

தந்தையைப் போல் அவனும் பிறருக்கு
உதவும் பணியில் ஈடுபடத் தொடங்குகிறான.

அவசியம் அனைவரும்
காணவேண்டிய காணொளி இது.

இணைப்பு. கீழே. 
http://vitaminl.tv/video/3149?ref=fbsm

புதன், 19 மார்ச், 2014

வண்ணக் கிளி




வண்ணக் கிளி 

வண்ணக் கிளி அழகோ அழகு

ஆனால் கிளி சொல்லும் கதையோ வேறு
அது என்னவாக இருக்கும்?
நீங்களே சொல்லுங்கள்.





https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/660298000696308/?type=1&theater

செவ்வாய், 11 மார்ச், 2014

ஆர்வம் இருந்தால் போதுமே!

ஆர்வம் இருந்தால் போதுமே!

Acoustic Drum Sets
ஆர்வம் இருந்தால் போதுமே
அகிலத்தையும் கட்டி ஆளலாம்

மகாபாரதத்தில் ஏகலைவன்
துரோணரை மானசீக குருவாகக் கொண்டான்
அவர் சீடன் அர்ஜுனனையும் மிஞ்சி நின்றான்.

இந்தஇணைப்பில் உள்ள
காணொளியைக்  காணுங்கள்.

ஆர்வமும் முயற்சியும் இருந்தால்போதும்
நினைத்ததை சாதிக்க முடியும்
என்பதை நீங்களே உணருவீர்கள்.

இந்த சிறுவனின் அபாரத் திறமையை
கண்டு மகிழுங்கள்.


https://www.facebook.com/photo.php?v=654261971299911&set=vb.363469940379117&type=2&theater

புதன், 5 மார்ச், 2014

இந்த படத்தில் உள்ளது என்ன?


இந்த படத்தில் உள்ளது என்ன?

தெரிந்தால் சொல்லவும்.




பதில் நாளை -நாளை எதற்கு இப்போதே



செவ்வாய், 4 மார்ச், 2014

இது படைப்பாளிகளின் உலகம் (3)

இது படைப்பாளிகளின் உலகம் (3)

இது படைப்பாளிகளின் உலகம் (3)


கரையும் சோப்பில்  கலை வண்ணம்.

உடல்  முதல் குடல் வரை
தலை முதல் பாதம் வரை
ஆடை முதல் ஹாஸ்பிடல் வரை
எல்லாவற்றையும் சுத்தம்  செய்ய
சோப்பை பயன்படுத்துகிறோம்.
அது நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது.

அதற்காக பல ஆயிரங்களை
ஆண்டுதோறும் செலவிடுகிறோம்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோப்பின்
விலை வெறும் 25 காசுகள். இன்றோ
சில நாள் மட்டுமே பயன்படும் ஒரு சோப்பின் விலை
25 ரூபாய்க்குமேல்.



சோப்பை கரைத்து  கரைத்து நம் கைக் காசுகரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்க அதில் கண்கவர் வடிவங்களையும்
கலை படைப்புகளையும் உருவாக்கியுள்ளனர் கலைஞர்கள்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
கண்டு ரசித்து மகிழுங்கள்.































நன்றி -படங்கள்-கூகிள் 

திங்கள், 3 மார்ச், 2014

நாளை நமதே என்பது சரியா?

நாளை நமதே  என்பது சரியா? 

நாளை நமதே என்கிறார்கள்.

அப்படி சொல்வது
எந்தவிதத்தில் சரி என்று
புரியவில்லை

அடுத்த கணம் என்ன நடக்கும்
யார் உயிருடன் இருப்பார்கள்
என்பதை அறிய இயலாத
இந்த மனிதர்கள்  நாளை நமதே
என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கிரார்கள் .

நமது என்று எதைச் சொல்லவேண்டும்
என்றால் இந்த கணம்தான் நம் கையில்
உள்ளது ,

அடுத்த கணம் ஏதாவது ஒரு பூதகணமாகதான்
போக நேரிடும்.

அதனால்தான் எதை செய்ய
வேண்டுமென்றாலும்
ஒன்றே செய், நன்றே செய்
அதை இன்றே செய், இப்போதே செய்,
இந்தக் கணமே செய் என்பார்கள் அறிவுடையோர்

நல்ல  செயல்களை நாளை நாளை
என்று தள்ளிப் போடுவதால்
அந்த வேலை என்றும்
நிகழப்போவதில்லை.

நாளை நாளை என்று கடமைகளை
தட்டிக் கழிப்பவனின் வாழ்க்கை
தோல்வியைத்தான் தழுவும்

மனதில் தெளிவில்லாதவன்தான்
எல்லாவற்றையும் தள்ளிப் போடுவான்

எனவே எந்த செயலை செய்யவேண்டுமென்றாலும்
அதைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொண்டு
கால தாமதமில்லாமல் செய்பவனே
வாழ்வில் வெற்றி பெறுவான்.

காலம் ஓடிக்கொண்டே இருக்கும்.
அது யாருக்காககவும்  காத்து கிடக்காது

எதற்கெடுத்தாலும் இப்போது நேரம் இல்லை
என்று சோம்பி திரிபவன் வாழ்வில்
 முன்னேற்றம் அடையமுடியாது

அறிவுள்ளவன் கிடைக்கின்ற
வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவான்.

எனவே நாளை நமதே என்று
இன்று சோம்பிக் கிடந்தால்
நாளை நம்முடையதாக  நிச்சயம் இருக்காது.
அது மற்றவ்ர்களுடையதாக்வே தான் இருக்கும்.

சனி, 1 மார்ச், 2014

இது படைப்பாளிகளின் உலகம் (2)

இது படைப்பாளிகளின் உலகம் (2)

இது படைப்பாளிகளின் உலகம் (2)


காகிதத்தில் கலை வண்ணம்.

காகிதம் எதற்கு பயன்படும்?
கடிதம் எழுத,
படம் வரைய என
எத்தனையோ பயன்பாடுகள்.


நாம் காகிதத்தை பயன்படுத்துவதை விட
அதில் கிறுக்கி கிறுக்கி ,சுருட்டி, கசக்கி
குப்பையில் வீசுபவர்கள்தான் அதிகம் .

இன்னும் சிலர் தங்கள் கோபத்தை காட்ட
 காகிதத்தை  சுக்கு நூறாக்கி
கிழித்து போடுவதில்
அதிக ஆவம் காட்டுவார்கள்

இன்னும் சிலர் அதைதீக்கு
இரையாக்குவார்கள்

சிலர் அதை கரையானுக்கு
உணவாகப்  போடுவார்கள்.

ஆனால் எதைக் கண்டாலும் அதை
கலைக் கண்ணோடு பார்ப்பவர்கள் வெகு சிலரே.

அப்படி  எதையுமே வித்தியாசமாக சிந்திபவர்கள்தான்
உலகின் கவனத்தை  கவர்கின்றார்கள்

காகிதத்தில் கண் கவர் படைப்புகளை
செய்யும் கலைஞர்கள் உலகெங்கும் உள்ளனர்.

அவர்களின் சில படைப்புகள்
உங்கள் பார்வைக்கு.

கண்டு மகிழுங்கள். இனிமேல் காகிதத்தை
மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்.
புதிது புதிதாய் படைப்புகள் தோன்றும்.





















படங்கள்-நன்றி-கூகிள் 

இது படைப்பாளிகளின் உலகம் (1)

இது படைப்பாளிகளின் உலகம் (1)

ஆம் இது படைப்பாளிகளின் உலகம்

கம்பியில் கைவண்ணம் 

படைப்புக்களை அழிப்பதற்கென்றே
ஒரு கூட்டம் இந்த உலகில்
அங்குமிங்கும் அலைந்து
திரிந்து கொண்டிருந்தாலும்
அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்
தங்கள் படைப்புக்களை விட்டு
சென்றுகொண்டே
இருக்கிறது ஒரு கூட்டம்.

படைப்பாளிகளுக்கு கையில் எது கிடைத்தாலும்
அதில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுவான்போலும்.

அப்படிப்பட்ட சில அசாதாரணமான சில படைப்புகளை நாம் கண்டு மகிழ்வோம்.

ஆம் கம்பிகளிலிருந்து படைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன
















மேலே கண்டதைப்போல் ஏராளம்

ஆர்வம் இருப்போர் வீணாகும் கம்பிகளைக்  கொண்டு
பல புதிய படைப்புகளைப் படைக்கலாம்

இன்னும் வரும்.

நன்றி கூகிள் -படங்கள்.