வியாழன், 27 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches
திருவாரூரில் அருள் பாலிக்கும் 
ஸ்ரீ கமலாம்பிகையை வரைந்தேன், 
அந்த படம் இதோ 


செவ்வாய், 25 டிசம்பர், 2012

இந்த உடல் எதற்கு?


இந்த உடல் எதற்கு? 

பரோபகாரம் இதம் சரீரம்
என்று வடமொழியில் ஒரு வாக்கியம் உண்டு.

பிறருக்கு உதவி செய்வதற்காகவே இந்த சரீரம்
படைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

பொதுவாக அனைவரும் உதவி செய்வது என்றால் வீட்டிற்கு வெளியே பிறருக்கு உதவி செய்வதுதான் உதவி என்று நினைக்கிறார்கள்.

அதற்காக தொண்டு நிறுவனங்களிடமோ அல்லது தொண்டு செய்யும் பிறருடனோ இணைந்து தொண்டு செய்ய எத்தனிக்கிறார்கள்.

உதவிகள் செய்வதில் பல வகைகள் உண்டு

சிலர் யார் உதவிகள் கேட்டாலும்
அதை ஆராயாது உதவி செய்பவர்கள் சிலர்.

சிலர் உதவி கேட்பவர்களுக்கு உண்மையாக உதவி தேவைப்படுகிறதா என்பதை தீர விசாரித்து அதன் பிறகே உதவி செய்பவர்களும் உண்டு.

சிலர் பிறர் அவர்களை உதவி கேட்காமல் இருக்கும்போதே வலிய  சென்று உதவுவதும் உண்டு

பலர் உதவி செய்யபோய் உபத்திரவத்தில் மாட்டிகொண்டு தீர்க்க முடியாத பிரச்சினையில் சிக்கிக்கொண்டு அல்லல் படுவதும் உண்டு.

இது பிரச்சினைகளெல்லாம் நமக்கு வேண்டாம் என்று உதவி செய்யாமல் ஒதுங்கி விடுவதும் உண்டு.

சிலர் தமக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் தன்னிடமுள்ள அனைத்தையும் பிறருக்கு வழங்கி விடுவதும் உண்டு.

தொண்டு செய்வதாக கூறிக்கொண்டு சிலர் பணம் பறிக்க வேண்டுமென்று கவர்ச்சிகரமாக விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தினருக்கு தாரளமாக தொகை வழங்கும் கூட்டமும் உண்டு.

அவர்கள் அந்த தொகை முறையாக உதவி தேவைப்படும் மக்களுக்கு போய் சேருகிறதா அல்லது அதை நிர்வகிக்கும் தலைவரால் சுரண்டப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ஏதோ தொகையை தர்மத்திற்கு கொடுத்துவிட்டு புண்ணியம் தேடிவிட்டதாக மனதில் நினைத்துக்கொள்ளுவார்கள்.

சிலர் நேரே அந்த நிறுவனத்திற்கு சென்று நேரில் பார்த்து நிலைமையை அறிந்தபின் உதவிகள் செய்வார்கள்.
அங்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்சிகளிலும் கலந்துகொள்வார்கள்.

சிலர் வெளி உலகத்தில் தர்மவான்கள் போல் நடித்துக்கொண்டு,வீட்டில் அதற்க்கு எதிர்மாறாக நடந்துகொள்வார்கள்.

வீட்டில் வயதான தாய் தந்தையர்களை புறக்கணித்து விட்டு அவர்களை கொடுமைப்படுத்துவதுடன் அவர்களை கடும் சொற்களால் மனதை காயபடுத்துபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

சிலர் வீட்டில் ஒருவரே எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த விதத்திலும் அவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்.

இப்படிதான் பலர் இந்த உலகில் இருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் பிறருக்கு உதவுவது 
என்ற பண்பு சிறு வயதிலிருந்தே, வீட்டில்தான் தொடங்க வேண்டும்.
வீட்டில் ஒருவொருக்கொருவர் அகந்தை பார்க்காமல் உதவும் பழக்கம் வரவேண்டும். 

சொல்லித்தான், அல்லது கேட்டுதான் உதவுவது என்ற மனோபாவம் நீங்கவேண்டும்.

அப்படி எல்லோரும் நடந்து கொண்டால் வீட்டில் அன்பு கோலோச்சும். 
வெறுப்பும் வேதனைகளும் தலை காட்டாது.


இன்று பலர் letterpads,receipt books,மற்றும் சில பிரபலங்களின் படங்களையும் வைத்துக்கொண்டு சிறு குழுக்களாக சென்று வீடு வீடாக சென்று பணம் பறிக்கும் கும்பல்கள் இன்று பெருகிவிட்டன.

மக்களின் மனதில் உள்ள இரக்க உணர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு இந்த கூட்டம் பணத்தை வசூலித்து தங்கள் வயிற்றை நிரப்பிகொண்டிருக்கின்றன என்பது வேதைனையான விஷயம் 

பொதுமக்கள் இதுபோன்று கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஏனென்றால் இவர்களுக்கு அளிக்கபடும் உதவிகளால் எந்த புண்ணியமும் இல்லை.

மக்கள் தங்களால் நேரிடையாகவே பிறருக்கு உதவி புரிய ஏராளமான வாய்ப்புக்கள் அவர்கள் அருகிலேயே இருப்பதால் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் புண்ணியமும் மன திருப்தியும் கிடைக்கும்.


திங்கள், 24 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches


சனி, 22 டிசம்பர், 2012

நானும் ஓவியன் தான் (SketchPen)


நானும் ஓவியன் தான் (SketchPen)







கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்னும் இடத்தில் விஜயநகர சாம்ராஜ்ய பேரழிவுகளில் இருந்து தப்பி இன்னும் முடமாக நின்று கொண்டிருக்கும் நரசிங்க சுவாமியின் சிலையை கண்ணுற்றபோது நெஞ்சில் 
சோகம் கப்பியது. அதை சரி செய்து மீண்டும் நரசிங்கனின் பக்தர்களுக்காக sketchpen னாவால் வரைந்து சமர்ப்பிக்கின்றேன்.


வெள்ளி, 21 டிசம்பர், 2012

இன்று உலகத்தில் காணப்படும் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் ஒன்றுதான்


இன்று உலகத்தில் காணப்படும்
அனைத்து துன்பங்களுக்கும் 
மூல காரணம் ஒன்றுதான்

அதுதான் நான் என்னும் அகந்தை.

அது மனிதனிடம் இருக்கும் வரை
அவனால் நிம்மதியாக இருக்க முடியாது.

அவனால் அவனை சுற்றியுள்ளவர்களும்
நிம்மதியாக இருக்க முடியாது

ஏனென்றால் அகந்தை என்றாலே
மற்றவர்கள் நம் சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டும்,
அடி பணியவேண்டும் எதிர்த்து பேசக்கூடாது
என்ற அடிப்படை மனோபாவம் நிச்சயம் இருக்கும்

அப்படி இருக்கும்போது அவனால்
மற்றவர்களுடனும் எந்தவிஷயத்திலும்
ஒத்து போக முடியாது

அவனை சுற்றியுள்ளவர்களுக்கும்
அகந்தை என்னும் பேய் பிடித்திருப்பதால்
 அவர்களாலும் அவனுடன் ஒத்து போக முடியாது.

பிறகு என்ன உரசல்கள்தான்.

உரசல்கள்தான் வெறுப்பை வளர்க்கின்றன.

வெறுப்புதான் கோபமாக மாறுகிறது.
 கோபம் சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறது.
 மனதில் தெளிவு இல்லாமல் செய்து விடுகிறது.
அப்புறம் என்ன ?

கோபப்படுபவன் வலிமை உடையவனாக இருந்தால்
மற்றவர்களை அடித்து நொறுக்குகிறான்,
அல்லது உடலளவிலோ அல்லது
மனதளவிலோ காயப்படுத்துகிறான்.

வலிமை இல்லாவதவானாக் இருந்தால்
அதை அவன் செயலில் வெளிப்படுத்துகிறான்.
எந்த விஷயத்திலும் ஒத்துழைக்க மறுக்கிறான்,
பொறுப்பின்றி செயல்படுகிறான்.

அகந்தை இருப்பதால் அனைவருக்கும்
வாழ்க்கையே எல்லாம் இருந்தும் நரகமாகி விடுகிறது.

இவ்வளவு நடந்தும் மனிதர்கள்
அகந்தையை விடுவதில்லை

அதை விடாபிடியாக பிடித்துகொண்டிருக்கிறார்கள்.
செத்த பாம்பை பயத்தினால்
பிடித்துகொண்டிருக்கும் குரங்கு போல.

பாம்பை பிடித்த குரங்கு பாம்பு இறந்து உலர்ந்து
,காய்ந்து போன பிறகும் அந்த பாம்பு
தன்னை கடித்து கொன்றுவிடுமோ என்று
பயந்து முடிவில் அது அன்ன ஆகாரமில்லாமல்
பட்டினி கிடந்தது மாண்டு போகும்.
அதைபோல்தான் மனிதர்களும்

அகந்தையை விட்டுவிட்டால்
நம்மை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்
என்ற தவறான எண்ணத்தை மனதில் கொண்டு
அகந்தையை விடாமல். இவ்வுலகை விட்டு
போகும் வரை தானும் துன்பப்பட்டு
தன்னை சுற்றியுள்ளோரையும்
துன்பத்தில் ஆழ்த்திவிட்டுகொண்டு மடிகிறார்கள்.

அகந்தையை விட்டுவிட்டால் கள்ளம்
கபடமற்ற குழந்தைபோல் ஆனந்தமாக இருக்கலாம்,
பிறருக்கும் ஆனந்தம் தரலாம் என்பதை
மனிதர்கள் உணரும் காலம் எப்போது?

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)


நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)


நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)




வியாழன், 13 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

Drawn 41 years ago 

புதன், 12 டிசம்பர், 2012

Material to Spiritual


Material to Spiritual 





















From my little experience in my life 
I can say that both material and spiritual 
world are one and they coexist supporting one another 

People in the beginning are  materialistic
after certain time they find that mate(rial) 
is not real and then turns towards spiritual 

At the first instance they go for (spiri) rituals .

In one stage they are fed up with it and 
start seaching of the truth in this world in temples, saints etc etc

Final stage only they find that the search should 
not be done outside and it should be directed inwards. 

Out of crores of seekers and after countless births 
a few like,Ramana, seshadri swamigal etc 
attain that stage. and they starts guiding the seekers .

We must approach them after shedding our ego 
and with a empty  mind to get their blessings. 
by the grace of GOD 

If you more attached to materials 
you will loose your mental balance and peace of mind 

If you are more attached to spiritual world 
you cannot survive in this material world

you can acquire materials in a short span of life
whereas the spiritual wealth cannot  be 
acquired so easily .for which you have to 
undergo lot of hardships, losses, humiliation 
and so on for several births.
 
we should try to balance in 
between to enjoy both without attachment .

பரலோகத்திற்கு வழி வகுக்கும் படிக்கட்டு பயணம்


பரலோகத்திற்கு வழி வகுக்கும் 
படிக்கட்டு பயணம் 


யாராவது செத்தால்தான் 
அரசு எந்த பிரச்சினையையும் 
கண்டு கொள்கிறது

அல்லது நீதிமன்றங்களே பிரச்சினையை 
கையில் எடுத்தால்தான் அரசும்,ஊடகங்களும் 
அதை கவனிக்கின்றன

ஆனால் தீர்வு என்பது அறிவிப்புகளோடு 
நின்று விடுவதுதான் இன்றைய யதார்த்த நிலை. 

பொதுவாக மக்களோ,பள்ளி செல்லும் குழந்தைகளோ 
பேருந்துகளிலோ,ரயில் வண்டிகளிலோ 
ஏன் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு 
பயணம் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

பெருகி வரும் மக்கள் கூட்டம். 
இன்று எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே 
கணினி மூலமும், வலைத்தளங்கள் மூலமும் 
அனைத்தையும் கற்கலாம் 
ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை.

எதற்கெடுத்தாலும் மக்கள் வீட்டை விட்டு 
வெளியில் சென்றுதான் ஆகவேண்டிய நிலைக்கு 
தள்ளப்பட்ட மக்கள் கூட்டம் 
பயணம் மேற்க்கொள்ளப் பட வேண்டிய 
கட்டாயத்திற்கு ஆளாக்கபட்டுவிட்டனர். 

ஆனால் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப
 வாகன வசதிகளோ, போக்குவரத்து
 வசதிகளோ இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. 

எங்கு சென்றாலும்,எந்த நேரத்தில் சென்றாலும் 
கூட்ட நெரிசல் .
அவரவர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியில்
அல்லது பணியிலோ இருக்கவேண்டிய நிர்பந்தம் 

அதனால்தான் மக்கள் வருகின்ற வண்டிகளில்
 எப்படியாவது தங்களை அடைத்துக்கொண்டு 
எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டு 
வேறு வழியில்லாமல் பயணம் 
மேற்கொள்ள வேண்டிய 
 நிலை ஏற்பட்டுவிட்டது.

பேருந்தில் இடமில்லாத நிலையில் பலர்
படிக்கட்டில் தொற்றிக்கொண்டு செல்வது 
தவிர்க்கமுடியாததாகிவிட்டது. .

வண்டியின் உள்ளே இடம் இருந்தும் 
படிக்கட்டில் பயணம் செய்யும் 
சில ஜன்மங்கள் இருக்கத்தான் செய்யும். 
அவர்களை விட்டுவிடுவோம் 
அவர்களை லாரியில் அல்லது ரயில் கம்பங்களில்
அடிபட்டு சாவதை யாரும் தடுக்க முடியாது

இந்த நிலை தடுக்க சில கருத்துக்களை 
முன் வைக்கிறேன்.

1அனைத்து வண்டிகளுக்கும் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்படவேண்டும்.கதவு அடைக்கப்பட்ட
பின் தான் ஓட்டுனர்களும் 
நடத்துனர்களும் வண்டியை எடுக்கவேண்டும்

2.எங்கெல்லாம் கூட்ட நெரிசல்கள் இருக்கிறதோ 
அங்கு உடனே மினி பேருந்துகளை இயக்க 
போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். 

3.அதை விடுத்தது மாணவர்களை
 பள்ளியிலிருந்து நீக்குதல் சரியான 
அணுகுமுறை ஆகாது. 
அவ்வாறு நீக்கினால் ஏற்கெனவே 
ஒழுங்கீனமானவனாக 
இருக்கும் அவன்பொறுக்கியாகவோ 
குற்றவாளியாகவோ ஆகி சமூகத்திற்கு 
துன்பம்தான் தருவான்.

ஏற்கெனவே இளம் குற்றவாளிகள் 
ஏராளமாக பெருகிவிட்ட நிலையில் மேலும் 
அவர்களின் ஜனத்தொகை கூட அனுமதிக்க கூடாது.

4.பெற்றோர்களிடமோஅல்லது 
பள்ளி முதல்வர்களிடமோ புகார்செய்வதால் 
எந்த பயனும் இல்லை
ஏனென்றால் அவர்களால் 
எதுவும் செய்ய முடியாது. 

5.கூடுதலாக போக்குவரத்து வசதிகளை 
ஏற்படுத்துவதும், கூடுதலாக பேருந்துகளை விட்டு 
கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதும்தான் 
பிரச்சினையை தீர்க்க உதவும். 

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ



செவ்வாய், 11 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

Drawn 41 years ago 





கல்லூரிக்கு செல்ல இருந்தவர்கள் கல்லறைக்கு சென்றார்கள் யார் காரணம்?


சனி, 24 நவம்பர், 2012

கல்லூரிக்கு செல்ல இருந்தவர்கள் கல்லறைக்கு சென்றார்கள்

யார் காரணம்?


இந்த பதிவை போட்டு 

ஒரு மாதம் கூட ஆகவில்லை

அதற்குள் இந்த கோர சம்பவம் நடந்துவிட்டது. 


கல்லூரிக்கு செல்ல இருந்தவர்கள் 

கல்லறைக்கு சென்றார்கள்


இதற்க்கு பொறுப்பற்ற மாணவர்களும்

பேருந்து நிர்வாகமும்,மக்கள் நலனில் அக்கறையில்லா அரசுகளும்தான் காரணம்?


இரு தினங்களுக்கு முன்பு பேருந்தின்

 படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் 

செய்த நான்கு மாணவர்கள் பக்கத்தில்

உரசிக்கொண்டு சென்ற லாரியில் சிக்கி மரணம்


இளங்கன்று பயமறியாது என்பார்கள்.

கல்லூரி செல்லும் பிள்ளைகள் 

என்னதான் அறிவுறுத்தினாலும் 

ஏற்றுக்கொள்ளபோவதில்லை


அரசாவது இனி எதிர்காலத்தில் 

இது போன்ற சாவுகளை தடுக்க எண்ணம் 

கொள்ள நினைத்தால் இனிமேல் 

அனைத்துபேருந்துகளுக்கும் 

கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட்டு 

இயக்கப்படவேண்டும். 


கூட்டத்தை பொருத்து கூடுதல் பேருந்துகளை

இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் 


இல்லையேல் இதுபோன்ற மரணங்கள் தினசரி வாடிக்கையாகிவிடும். 


இந்த எச்சரிக்கை ரயில் வண்டிகளிலும் கண்டிப்பாக அமல்படுத்தப்படவேண்டும். 


செய்வார்களா?என்பது கேள்விக்குறியே!



கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம்



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


இன்று வரைந்த ஓவியம்



கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் 
தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம் 

இந்த படம் எதை குறிக்கிறது

1.ஆடுமாடுகள் போல் முண்டியடித்துக்கொண்டு 
பேருந்தில் ஏறும் இந்த குழந்தைகள் .
ஒரு சிறுமி ஏறமுடியாமல் தரையில் நிற்கிறாள்
ஒரு சிறுவன் முன் பக்கம் சென்றால் இடம் கிடைக்குமா 
என்று ஓடுகிறான்
இந்த நிலைமை என்று மாறும்?

2 பேருந்து வந்து நின்றதும் வரிசையாக நின்று
ஒவ்வொருவராக பேருந்தில் ஏற வேண்டும் 
என்ற ஒழுக்க நெறியை கடைபிடிக்க கற்று தராத 
ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது

3 பள்ளி செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர தக்க நடவடிக்கை எடுக்காத,கையாலாகாத போக்குவரத்து நிறுவனங்களும், பொறுப்பற்ற ஊழல் அரசுகளின் நிலையையும் குறிக்கிறது

4 பல ஆயிரம் கோடி ரூபாய்களை கல்விக்காக செலவழிக்கும் அரசுகள் குழந்தைகள் சௌகரியமாக பள்ளிக்கு சென்று வர தகுந்த பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யாதது எதிர்கால சந்ததிகளின் மேல் அரசும்.  மக்களும் காட்டும் அலட்சியத்தை காட்டுகிறது

5.சிறுவயதிலேயே ஒழுங்கை கடைபிடிக்காத இந்த இளைய சமூகம் எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக விளங்கும் என்று எப்படி நம்ப முடியும். 

6 அதனால்தான் நம் நாடு இன்று இத்தனை அலங்கோலங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது . 

.

இன்று மகாகவி பாரதிக்கு வயது 130





இன்று மகாகவி பாரதிக்கு வயது 130

அன்று பாரதி உழைத்து
தமிழுக்கு பெருமை சேர்த்தான்

இன்றோ தமிழை வைத்து
பிழைக்கும் கூட்டம் பெருகிவிட்டது.

பாரதியின் செந்தமிழ் தேனாக இனித்தது
இன்றோ தமிழை தமில் என்றும்
வாழைபழத்தை வாலை பலம் என்றும்
வெட்கமில்லாமல் தமிழை கொலை செய்கின்றனர்.
புலவர் பட்டம் பெற்றவர்களே

எங்கெங்கும் காணினும் சக்தியடா என்றான் பாரதி
இன்றோ எங்கெங்கும் காணினும் குப்பையடா
என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது தமிழகம்

நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறனின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதி
பாடியது பலித்துவிட்டது

நம் நாடு இந்த வாய்ப்பந்தல்
போடுபவர்களிடம் சிக்கி தவிக்கிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை
கொளுத்துவோம் என்றான் பாரதி.
இன்றோ மாமியார்கள் மருமகளையே
கொளுத்துகிறார்கள் வர தட்சிணை
கொண்டு வரவில்லை என்று.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் கற்பு
என்றான் பாரதி
ஆனால் இன்று நடப்பது காதலித்து
கைவிடப்பட்ட பெண்கள்
கற்பிழந்த பெண் பெற்ற சிசுவை
குப்பை தொட்டியில் வீசி எறிகின்றாள்
 சமூகத்திற்கு பயந்து

தனி மனிதனுக்கு உணவில்லை
என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான்  அவன் அன்று தான்
வறுமையில் வாடிய போதும்

இன்றோ ஆயிரக்கணக்கில் பட்டினி கிடக்கின்றார்
ஒரு வேளை கஞ்சிக்கும் வழியின்றி
உணவு கிடங்குகளில் உணவு பொருட்கள்
மக்கி போக விட்டுவிட்டு.


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா
என்றான் அவன் துன்ப கடலில் மூழ்கியபோதும்.

ஆனால் இன்றோ அற்ப காரணங்களுக்காக 
நெஞ்சில் உரமின்றி காரணமின்றி
உயிரை மாய்த்து கொள்ளும்
கூட்டம்  பெருகிவிட்டது


இவையெல்லாம் என்று நீங்கும்?




.

திங்கள், 10 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ



நானும் ஒரு ஓவியன்தான் (Blue BP sketches)


நானும் ஒரு ஓவியன்தான் (Blue BP sketches)







வெள்ளி, 7 டிசம்பர், 2012

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)


நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)


நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)


This white metal was colored by computer.



விலங்குகளும் மனிதர்களும்(பகுதி -3)

விலங்குகளும் மனிதர்களும்(பகுதி -3)




















விலங்குகள் தினமும்
உறங்குகின்றன
விழிக்கின்றன,விழித்தவுடன்
இரை தேடுகின்றன



விலங்குகள் உறங்கி விழிக்கின்றன .
இரை தேடுகின்றன. 
.இறைவன் ஒவ்வொரு விலங்கிற்கும் என 
தகுந்த உணவை பிரித்து இந்த உலகை படைத்துள்ளான். 
அவைகளை அவைகளுக்குரிய உணவை 
மட்டும் தேவைக்கு ஏற்ப மட்டும் 
அவைகள் தேடி கொள்கின்றன. 

சில பிற உயிர்களை கொன்று தின்கின்றன. 
மற்ற உயிர்களுக்கு அவைகள் 
எந்த துன்பமும் விளைவிப்பதில்லை.
மற்றவர்களின் வாழ்வில் தலையிடுவதில்லை. 
மற்றவர்களுக்கு எந்தவிதமான துன்பமும் தருவதில்லை.
தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட உணவைத்தவிர 
மற்றவர்களின் உணவை பறித்து தின்பதில்லை. 
குரங்கு,புலிகள் போன்ற.  சில குறிப்பிட்ட விலங்குகளை தவிர. 

ஆனால் மனிதன் உறக்கத்தில் இருக்கும்போதுதான் மற்றவர்களுக்கும்,விலங்குகளுக்கும் நல்லவன். 

அவன் உறக்கத்திலிருந்து. விழித்தவுடன் 
என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. 

அவனுக்கு தேவை சில கவலங்களே உணவு. 
ஆனால் அவன் உண்பதோ பல பேரை
 பட்டினி போட்டுவிட்டு
 அவன் ஒருவனே உண்டு தீர்க்கிறான். 

மேலும் தனக்கு தேவை போக மற்ற உயிர்களுக்கு 
உணவை அளிக்காமல் விருந்து, கேளிக்கைகள் 
என உணவை வீணாக்குகிறான். 

தேவைக்குமேல் உணவுபொருட்களை வாங்கி 
பதுக்கி பல ஆயிரம் உயிர்களை பட்டினி போடுகிறான். 

அது போதாதென்று அவன் மற்ற 
உயிர்களுக்கு அவன் செய்யும் கேடுகள் எண்ணிலடங்கா.

உணவுக்குதான் உயிர்களை கொல்லும்  விலங்குகளை விட 
கேடு கேட்டது இந்த மனித இனம். 
தன்னுடைய சக உயிர்களை காரணமின்றியும்,மதம்
இனம்,ஜாதி,நிறம்,என்னும் பல காரணங்களை காட்டி
சகட்டு மேனிக்கு கொன்று இன்புறும் 
அரக்க குணம் படைத்த மனிதர்களால் 
இந்த உலகம் நிறைந்துள்ளது 

தினமும் அப்பாவி மனிதர்கள், பெண்கள், 
குழந்தைகள் என பல ஆயிரம் பேர் அநியாயமாக 
இவர்கள் கையில் சிக்கி மடிந்து கொண்டிருக்கின்றனர்.

இதைதவிர சொல்லாலும், பார்வையாலும்,
 நடத்தையாலும் அவன் தன சக உயிர்களுக்கு 
விளைவிக்கும் தீங்குகளும், கொடுமைகளும் ஏட்டிலடங்காது  

மேலும் அப்பாவி விலங்குகளையும் 
தரை,வான்,கடல் உயிர்களையும் வேட்டையாடி 
கொன்று தின்பதுடன் அந்த இனங்கள் 
அழியும் வரை ஓய்வது கிடையாது. 

மேலும் விலங்குகள் வாழும் காடுகளையும் 
வாழ்விடங்களையும்  இந்த மனிதர்கள் 
ஆக்கிரமித்து கொண்டதுமட்டுமல்லாமல் 
எஞ்சி இருக்கும் அவைகளை ஒழிக்க 
தினம் தினம் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் 

இவர்களா பகுத்தறிவு பெற்ற இனம்?

விலங்குகளை வீட கீழான இனம் என்று 
சொல்வதில் எந்த தவறும் கிடையாது. 

என்றுதான் இந்த இனம் திருந்தப்போகிறதோ?.