ஞாயிறு, 31 ஜூலை, 2016

இசையும் நானும் (123)

இசையும் நானும் (123)


இசையும் நானும் (123)

இசையும் நானும் (123)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  123வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 


Image result for vaadikkai maranthathum yeno


திரைப்படம்- கல்யாண பரிசு 

பாடல்-வாடிக்கை  மறந்ததும் ஏனோ 

வெள்ளி, 29 ஜூலை, 2016

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம் 



                                     ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சத்குரு நாதன் திருப்பாதம்தன்னை
எப்போதும் தன் சிந்தையில்
நினைந்திருப்போருக்கு
வாழ்வில் சங்கடம் வருமோ அய்யா

சாத்திரங்கள் பல கற்றாலும்
தோத்திரங்கள் பல செய்தாலும்
ஆத்திரம் கொண்டோருக்கு
வாழ்வில் என்றும் அமைதி உண்டோ

கண்ணுக்கும் புலனுக்கும் புலப்படா
இறை சக்தி நம் முன் வெளிப்படுவது
சத்கு ருவின் திருவடிவமே என்பதை
உணர்ந்துகொண்டு அவன் பாதம்
சரணடைந்தவருக்கு துன்பம்ஏது !
துயரேது !

தத்துவம் தெரிந்தும் இறைவனின்
மகத்துவம் புரிந்தும் இன்னல்கள் வரும்போது
அலைபாயும்  மனதுடன் இங்குமங்கும்  ஓடி திரிந்து
பிதற்றி திரிவார் இவ்வுலகில் பலர்.

வினைதான் விதியாய் உருவெடுத்து நம்
வாழ்வில் விளையாடுகிறது என்றும் அதை
அமைதியாய் அனுபவித்து தீர்த்து
அந்த ஈசன் நினைவாகவே இருப்பர்
உண்மை அறிந்தவர்.

சஞ்சலமில்லா மனம் இல்லை
சங்கடமில்லா வாழ்வில்லை
பிணியில்லாத உடல் இல்லை
அவன் அருளின்றி இவ்வுலகம் இல்லை

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்
பற்றிடுவோம்.
மாயையை அகற்றும்
சத்குருநாதன் அமுத மொழி செவி மடுப்போம்
இன்னல் நீங்கி இன்ப வாழ்வு பெற

வியாழன், 28 ஜூலை, 2016

சின்ன கண்ணன் அழைக்கிறேன் வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன் வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன்  வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன்  வாருங்கள் !

உங்கள் சிதறுண்ட இதயத்தை என்னிடம் தாருங்கள் 

உங்களை சீலமுடன் வாழ வைக்கிறேன் என்று 

உறுதி கூறுகிறேன் .



                                                          ஓவியம் -தி.ரா. பட்டாபிராமன் (1971)

புதன், 27 ஜூலை, 2016

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை


ஆடி கிருத்திகை 




முருகா என்ற நாமம் தன்னை
முக்காலமும் ஓதி வந்தால்
எக்காலமும் இவ்வுலகில்
தப்பாமல் தகைமையுடன்
இன்பமாக வாழலாம்

அறவழியில் பொருளீட்டி
அற வழி சார்ந்த வாழ்வில் நின்று
அரோகரா அரோகரா என்று
அவன் பெயர் கூறுவோர்க்கு
அடைய இயலாப் பேறு என்று
ஏதும்  இல்லை என்பதை
உணர்ந்திடுவீர்.

அன்போடு அவன் நாமம்
அனுதினமும் ஓதிவந்தால்
அல்லல் தரும் அகந்தைதனை
அறவே அழித்திடுவான்



செந்தூர் கடற்கரையில் குடி கொண்ட முருகன்
துன்பக்  கடலில் வாடும் பக்தர்தனை
கரையேற செய்து வாழ்வில் இன்பம் சேர்ப்பான்


குன்று  தோறாடும் குமரனவன்
குன்றுபோல் குவிந்து நிற்கும்
நம் பொல்லாத வினைகள் தன்னை
பொசுக்கி அழித்திடுவான்

நல்லதோர் இந்நாளில் மாலவனின்  மருகன் தன்னை
உளமார உருகி வேண்டி உன்னதமான வாழ்வு பெற்று
உலகினில் வாழ்ந்திடுவோம்.

இசையும் நானும் (122)


இசையும் நானும் (122)

இசையும் நானும் (122)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  122வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -மலையாளம் 

Image result for chandra kalabam-lyrics



மருத்துவ காரணங்களினால் தடைபட்டு  மூன்று மாத இடைவெளிக்குப் பின் என் இசைப் பயணம் தொடங்குகிறது.

இம்முறை மலையாளம் திரைப்பட பாடல் -மிகவும் பிரபலமான பாடல். 
முயற்சி செய்துள்ளேன். 

chandra kalabham chaartthi urangum theeram

chandra kalabham chaartthi urangum theeram

indradhanussin thooval kozhiyum theeram

ee manohara theeratthu tharumo

iniyoru janmam koodi,

enikk iniyoru janmam koodi


ee varnna surabhiyaam bhoomiyil allaathe

kaamuka hrdayangal undoo

sandhyakal undo chandrikayundo

gandharvva geetham undo

vasundhare vasundhare

kothi theerum vare ivide premicch

maricchavar undo



ee nithya harithayaam bhoomiyil allaathe

maanasa sarassukal undo

swapnangal unto pushpangal undo

swargga maraalangal undo

vasundhare vasundhare

mathiyaakum vare ivite jeevicch

maricchavar undo



ஞாயிறு, 24 ஜூலை, 2016

முருகா என்றதும் உருகாதா மனம்

முருகா என்றதும் உருகாதா மனம்

முருகா என்றதும் உருகாதா மனம் 


ஓவியம்-தி.ரா. பட்டாபிராமன் 

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

குறை கேளாயோ
குறை தீராயோ
மாமகள் வள்ளியின் மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

மறையே  புகழும் மாலவன் மருகா
மாயை அகல ஒரு வழிதான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

ஜன்ம பாப வினை தீரவே பாரினில்
சிவ பாதாம்புஜம் உன்னை தேடி நின்றோம்
குணசீலா ஏ சிவபாலா
சர்வமும் நீயே சிவசக்தி பாலா

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா  மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா

தி  எம்  சவுந்தர்ராஜனின் குரலில் ஒலித்த இந்த பாடலை
இவன் மவுத்தார்கனின் இசையில் கேட்டு மகிழுங்கள்.

www.youtube.com/watch?v=D-FlnxzDwCQ

சனி, 23 ஜூலை, 2016

என்ன தவம் செய்தனை ?

Saturday, July 23, 2016

என்ன தவம் செய்தனை ?

என்ன தவம் செய்தனை ?

என்ன தவம் செய்தனை ,யசோதா !

எங்கும் நிறை பர ப்ரம்மம் உன்னை

"அம்மா" என்றழைக்க

என்ன தவம் செய்தேன் நான்

அந்த காட்சியை ஓவியமாக தீட்ட ?




ஓவியம். தி. ரா. பட்டாபிராமன் 

நானும் ஒரு ஓவியன்தான்

நானும் ஒரு ஓவியன்தான்

நானும் ஒரு ஓவியன்தான் 

அகந்தையின் உருவம்
அரக்கனின் வடிவம்

நம்பிக்கையின் உருவம்
பக்தனின் வடிவம்.

தானே அனைத்தும் என்றான்  தந்தை
அவன் உள்ளம் முழுவதும் அகந்தை

அந்தஇறைவன்  தான் அனைத்தும் என்றான்
அவன் பெற்ற மகன்

என்னே விந்தை. !

கொல்லவும்  துணிந்தான்
மகனை பெற்ற  தந்தை

மகனோ மாலவனை
மனதில் துதித்தான்

மதிகேடனை மர தூணில் இருந்து
வெளிப்பட்டு மாளச்  செய்தான்

அந்த மன்னவனின்  ஓவியத்தை
இவன் வரைந்தான் அனைவருக்காகவும்.



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

ஞாயிறு, 17 ஜூலை, 2016

சத்சங்கமும் ஜீவன் முக்தியும்

சத்சங்கமும் ஜீவன் முக்தியும்

சத்சங்கமும் ஜீவன் முக்தியும் 





சத்சங்கத்தில் ஒரு ஜீவன்
தன்னை இணைத்துக்கொண்டால்
அது முக்தியை அடைவது திண்ணம்
என்கிறார் ஆதி சங்கரர். என்பதை
அனைவரும் அறிவர்.

ஸத்  என்றால் உண்மை
உண்மைதான் இறைவன்
பொய்  என்பதுதான் மாயை
அறியாமை எனப்படுகிறது

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் என்ற
வாக்கியத்தை அனைவரும்
கேட்டிருக்கிறோம்

அந்த உண்மைப் பொருள் நமக்குள்ளே இருக்கிறது
அதை நமக்குள்ளே சென்றுதான் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்  என்று பகவான் ரமணர் கூறுகிறார்.

ஆனால் அதை நாம் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அதே சமயம்  உள்ளே இருக்கின்ற அந்த உண்மைப் பொருள் நம் முன்னே வெட்ட வெளியாகவும் நம் முன் பரந்து  கிடக்கின்றது
என்னே விசித்திரம் . அதுதான் உண்மை.

ஆனால் ஒவ்வொருவரும் உலகியல்
நோக்கில் ஒவ்வொருவிதமாக
பொருள் கொண்டு உண்மையை
அறியாமல் அலைகின்றோம்

அந்த உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள்
மிகவும் அரிதே . அவர்களை நாம்தான் தேடி
பிடித்து நம் அறியாமையை போக்கிக் கொள்ள  வேண்டும்

அதற்கு வாய்ப்பில்லை எனில் அப்படிப்பட்ட மஹான்களின்
உபதேசங்களையும் ,வாழ்க்கை சரிதங்களையும் திரும்ப திரும்ப படித்து
பிறர் சொல்ல கேட்டு நம் மனதை அவர்கள்பால்  செலுத்த முயற்சி செய்ய வேண்டும்

அவ்வாறு முயற்சி செய்தால் மஹான்களின் ஆசிகள்
நம்மை தேடி வரும் அல்லது நம்மை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

வியாழன், 14 ஜூலை, 2016

நானும் ஒரு ஓவியன்தான்

நானும்  ஒரு ஓவியன்தான் 

நான் படங்கள் வரைவதை நிறுத்தி
 2 ஆண்டுகள் கழிந்துவிட்டது 


மவுத்தார்கள் இசையில் நாட்டம் சென்று விட்டதால்

ஓவியம் வரைவதற்கு நேரமும் இல்லை நாட்டமும் இல்லை.


121 பாடல்களை யூ  டியூபில்  போட்டாகிவிட்டது.


மேலும் மருத்துவ காரணங்களினால் மவுத்தார்கனை 4 மாதங்களாக

தொட முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் தடை நீடிக்கும்

என்றும் தெரியவில்லை

 2500 ரூபாய்க்கு ஒரு புதிய மவுத்தார்கன்  வாங்கிய பின்  இறைவன் இந்த தண்டனையை  அளித்துவிட்டான் .பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி இனி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அதன் விளைவு இன்றய படைப்பு.

பால் பாய்ண்ட் பேனா ஓவியம்.

தலைப்பு( நானே கொடுத்துக்கொண்டது)

"அழகான மனைவி -அன்பான கணவன் -அணைத்தாலே  பேரின்பமே"