வியாழன், 27 ஜூலை, 2017

இசையும் நானும் (206) திரைப்படம் -(பொன்னித் திருநாள் – (1960 ) பாடல்:ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து ?

இசையும் நானும் (206) திரைப்படம் -(பொன்னித்  திருநாள்  – (1960 ) 

பாடல்:ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து  ? 



MOUTHORGAN



en sirithai ennai parthu માટે છબી પરિણામ


Movie Name : பொன்னித்  திருநாள்  – 1960
Song Name : ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து 
Music : கே.வி .மஹாதேவன் 
Singers : பி.பி.ஸ்ரீனிவாஸ் 
Lyricist : பி.கே.முத்துசாமி 

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து  ? 
உன் எழில்தனை பாடவா  தமிழை சேர்த்து (ஏன்)


விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே 
விளையாடும் வெண்மதி நீதானா விந்தைகள் 

எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம் 
பயின்றதெல்லாம் உன்னிடம் தானா?(எந்தை)(ஏன்)

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா?(சோலை)

கானில்  வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரிமான் என்பதும் உன் இனம்தானா?(ஏன்)




திங்கள், 24 ஜூலை, 2017

பேராசை என்னும் புதைகுழி

பேராசை  என்னும் புதைகுழி 

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன 
அருமையான கதை.


ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு,
பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு 
டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். 

வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 
100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. 
அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். 
(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட 
அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் 
விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. 

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த 
வழியில் ஒருவன் வருகிறான். 
இந்த நோட்டைக் கண்டு, 
,இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து,  
மிகவும் சந்தோஷமடைகிறான். 

அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.
இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், 
அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த 
ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். 
சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு 
அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. 
அந்த வழியாக ஒருவன் வந்தான். 
இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான். 

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள். 
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 
99 நோட்டுகள்தான். 

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் 
எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்............... 

அந்த ஒற்றை பத்துரூபாயைத் 
தேடினான்....  தேடினான்....  தேடினான்....  
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------

--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்

நன்றி-தகவல்-KN Ramesh 

சனி, 22 ஜூலை, 2017

இசையும் நானும் (205) திரைப்படம் -(கலங்கரை விளக்கம் ) பாடல்:காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்



இசையும் நானும் (205) திரைப்படம் -(கலங்கரை விளக்கம் ) 

பாடல்:காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்


Movie Name:

கலங்கரை விளக்கம்

Song Name:

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்

Singers:T.M.Soundhar rajan
Music Director:M.S.Viswanathan

MOUTHORGAN
kaatru vaanga ponen tamil lyrics માટે છબી પરિણામ
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக்கேட்டு வாங்கி போனாள் அந்தக்கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கி போனாள்  அந்தக்கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக்கன்னி என்ன ஆனாள் 
(நான் காற்று )


வெள்ளி, 21 ஜூலை, 2017

இசையும் நானும் (204) திரைப்படம் -(ஆலயமணி(1962) ) பாடல்:பொன்னை விரும்பும் பூமியிலே

இசையும் நானும் (204) திரைப்படம் -(ஆலயமணி(1962) ) 

பாடல்:பொன்னை விரும்பும் பூமியிலே



Movie Name:Aalayamani
Song Name:Ponnai virumbum
Singers:T.M.Soundhar rajan
Music Director:M.S.Viswanathan

MOUTHORGAN


ponnai virumbum bhoomiyile song માટે છબી પરિણામ



பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே (2)

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் ....

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் ....

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் ....


திங்கள், 17 ஜூலை, 2017

இசையும் நானும் (203) திரைப்படம் -(கற்பகம் ) பாடல்:பக்கத்து வீட்டு பருவ மச்சான்..


இசையும் நானும் (203) திரைப்படம் -(கற்பகம்  ) 

பாடல்:பக்கத்து வீட்டு பருவ மச்சான்.. 



Song : Pakkathu Veetu Paruva Machaan
Movie : Karpagam (1963)
Singers : P. Susheela
Music : MSV, TKR

பாடல் வரிகள் 
பக்கத்து  வீட்டு பருவ மச்சான் 
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு 
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான் (பக்கத்து)

மனதுக்குள்ளே தேரோட்ட 
மை விழியில் அடம் பிடிச்சான் 
மரிக்கொழுந்து வாசத்திலே 
மாந்தோப்பில் வழி மறித்தான் 
மாந்தோப்பில் வழி மறித்து 
மயக்கத்தையே வரவழைத்தான் (பக்கத்து)

தை  மாசம் தாலி கட்ட மார்கழியில் கை  பிடிச்சான்
யமுனையில் வெள்ளமில்லை 
விடியும் வரை கதை படிச்சான் 
விடியும்  வரை கதை படிச்சு 
முடியாமல் முடிச்சு வச்சான்  (பக்கத்து)

ஊரெல்லாம் உறங்கிவிடும் 
உள்ளம் மட்டும் உறங்காது 
ஓசையெல்லாம் அடங்கிவிடும் 
ஆசை  மட்டும் அடங்காது 
ஆசை மட்டும் அடங்காமல் 
அவனை மட்டும் , நினைத்திருப்பேன் (பக்கத்து)



https://youtu.be/NE1ehyNGiUs

புதன், 12 ஜூலை, 2017

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் (பகுதி-3)

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் (பகுதி-3)

மனதை அடக்கவும் வேண்டாம்
அதன் செயல்பாடுகளில்
தலையிடவும் வேண்டாம்

அது இறைவனிடமிருந்து வெளிப்பட்டுள்ளது
வெளிப்பட்ட பிறகு அவனை நோக்கியே
ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்க்கு ஓய்வும்  இல்லை.
ஓய்ச்சலும் இல்லை.

அதுபோலத்தான் ஒவ்வொரு ஜீவனும்

இறைவனிடமிருந்து புறப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்
ஓர் உயிரிலிருந்து  தொடங்கி நாம் சாதாரணமாக
அறிந்த ஆறறிவு படைத்த மனிதன்(?) வரை
பல்வேறு உடல்களில் புகுந்து அதில் பல அனுபவங்களை அடைந்து
அதன் பதிவுகளை எல்லாம் மனதில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது.

நாம் மனிதனாக பிறவி எடுத்ததும் நம் கண் முன்னே
அவைகள் இடைவிடாமல் வந்து போய்க்  கொண்டிருக்கின்றன.

எப்படி என்றால் நாம் வீடு மாடியில் உட்கார்ந்துகொண்டு சாலையில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளையும், மனிதர்களையும், பிராணிகளையும் இன்னும்  எத்தனையோ  சமாச்சாரங்களையும் வெறுமனே
பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை போல

வெறுமனே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நமக்கு எந்த
பாதிப்பும் ஏற்படுவதில்லை.

அவைகள் நம் மனதில் சலனத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நம்மை அவைகள் பாதிக்கும்.


நாம் நம்மை போக்குவரத்து போலீஸ்காரனாக நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினால்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.

மனமும் அதுபோலத்தான். அதன் செயல்பாடுகளை எல்லாவற்றையும் மூடிக்கொண்டு வேடிக்கை பாருங்கள்.

அப்போது அது நம்மை ஒன்றும் செய்யாது. அது பாட்டிற்கு அது அதன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். நாம் அதை அடக்க வேண்டி எந்த முயற்சியும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. (தொடரும்)


அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்(பகுதி -2)

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்(பகுதி -2)

மனம் என்பது என்றும் வற்றாத ஜீவ நதி.

அது எங்கோ புறப்படுகிறது

புறப்பட்ட இடத்திலிருந்து கடலை நோக்கி ஓயாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.

அது யாருக்காகவும் தன் போக்கை
மாற்றிக்கொள்வதில்லை.

அது சில நேரம் இந்த மூட மனிதர்கள் அதற்க்கு
செய்யும் துரோகத்தை பொறுமையுடன்
கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால்  எல்லாவற்றையும் சேர்த்து வட்டியும் முதலுமாக
அவனுக்கு பாடம் கற்பிக்கிறது. 

இருந்தாலும் அவன் திருந்துவது கிடையாது

ஒரு ஜீவ  நதி பல கோடிக்கணக்கான உயிர்களுக்கும் அதன் கரையில்
வாழும் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தொடர்ந்து
நன்மைகளை செய்து அனைவரின்  வாழ்வில் நன்மை சேர்க்கிறது.

ஒரு நதியில் அதை சுத்தப் படுத்தும் மீன்களும்  இருக்கும். அதை தின்று வாழும் திமிங்கிலங்களும்   சுறாக்களும், பாம்புகளும் இருக்கும்.

அது நன்மை செய்வதையே குறிக்கோளாக கொண்டு காலம்காலமாக
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதை யாரும்கட்டுப்படுத்த இயலாது.அதை படைத்த இறைவன் ஒருவனால்தான் முடியும். அவனும் அதன் ஓட்டத்தை என்றும் தடை செய்வது கிடையாது.

அதுபோல்தான் நம்முடைய மனமும்.

அது  நிற்காமல்   ஓடிக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வற்றாத மாபெரும் சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்வதில்தான்.நம்
வாழ்க்கையின் குறிக்கோளும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.(தொடரும்) .  

செவ்வாய், 11 ஜூலை, 2017

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் -திருமூலர்

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் -திருமூலர் 

இன்று யாரை பார்த்தாலும்
மனதை அடக்க வேண்டும்.
மனதை அடக்க வேண்டும் என்று
ஓலமிடுகிறார்கள்.

மனது என்றால் . என்னவென்று
புரிந்துகொள்ளாமல் பலர் பலவிதமாக
அவர்கள் மனதிற்கு தோன்றியவைகளை
வாந்தியெடுத்து வெளியிட்ட புத்தகங்களை
படித்துவிட்டு அவர்கள் புத்தகங்களை வெளியிட்டு
காசு பார்க்கின்றனர்.

சிலர் யோகா கலை  மூலம் மனதை
அடக்கலாம் என்றும் மக்களை ஏமாற்றி உலகம்
முழுவதும் மக்களை ஏமாற்றி பிழைப்பு
நடத்துகின்றனர்.

அப்பாவிகள் அவர்களை நம்பி மோசம் போய்
இருக்கின்ற மன  அமைதியையும் இழந்து தவிக்கின்றனர்,

அதனால்தான் திருமூலரும் மனதை அடக்கு அடக்கு என்பார்
அறிவில்லாதவர்கள் என்று உறுதியாக  சொல்லுகிறார்.

அப்படியானால். மனம் என்றால் என்ன?
அதை என் அடக்க வேண்டும்?
எதற்க்காக அடக்க வேண்டும் ?
ஒரு அலசல். (தொடரும்) 

காலணிக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து?


காலணிக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து?

காலணியை காலில் அணியும் போது
அதன் உள்ளே ஏதாவது விஷ பூச்சியோ அல்லது
வேறு ஏதாவது ஆபத்தான ஜந்துக்களோ
இருக்கிறதா என்பதை சோதித்து அணிவதே
நல்லது

அஜாக்கிரதையினால் சில ஆண்டுகளுக்கு
முன் ஒரு பள்ளி செல்லும் குழந்தை காலில்
மாட்டப்பட்ட  காலனியில் ஒரு தேள் இருந்துள்ளது
அந்த குழந்தை எவ்வளவோ கதறியும் அனைவரும்
அலட்சியமாக இருந்தமையால் அந்த குழந்தை துடி
துடித்து இறந்துவிட்டதை. ஊடகங்கள் வெளியிட்டுள்ளது

தற்போது அதே போன்று ஒரு சம்பவம். அது குறித்த காணொளியை காணவும். கண்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் வேண்டி பதிவு செய்கிறேன்.

https://www.facebook.com/yntamil/videos/1862836573967314/

திங்கள், 10 ஜூலை, 2017

புலால் உண்பவருக்கும் உண்ணாதவர்க்கும் என்ன வேறுபாடு?

புலால் உண்பவருக்கும் உண்ணாதவர்க்கும் என்ன  வேறுபாடு?

புலால் உண்பவர் தான் உண்ணும் உயிர்களை 
தன் உணவாக கருதுகிறார். 

உண்ணாதவர் அவைகளை உயிர்களாக பார்க்கிறார். 

எல்லாம் எண்ணம்தான் காரணம். வயிறு என்னும் இயந்திரம் 
எதை போட்டாலும் பக்குவமாக இருந்தால் கூழாக்கிவிடும். இல்லையேல் வெளியே   தள்ளிவிடும். அதற்கு  ஒன்றும் தெரியாது. 

திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை காண்போம்:

திருக்குறளையும் மதிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் தங்களை தமிழர் என்று பெருமை பேச வேண்டாம்
Inline image 1
மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும் திருவள்ளுவர் சொல்வதை கேளுங்கள்.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். 251

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

அருளல்ல(து) யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்ல(து) அவ்வூன் தினல். 254

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யா(து) அளறு. 255

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

தினற்பொருட்டால் கொல்லா(து) உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 256

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். 257

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 259

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். 260

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

நன்றி : அனந்த சேகர்.

சனி, 8 ஜூலை, 2017

இசையும் நானும் (202) HINDI Film -Gumrah -- song-Chalo ek baar fir se





இசையும் நானும் (202) HINDI Film -Gumrah -- song-Chalo ek baar fir se 

 

MY MOUTHORGAN VEDIO (202)


Voice:Mahendra Kapoor,

Movie: Gumrah

Lyrics: Sahir Ludhiyanvi,

Music Director:Ravi Shankar Sharma,


On Chalo Ek Baar Phir Se, the protagonist comes across his ex-lover with her husband and sings about forgetting their past relationship. He suggests that they should become strangers once again to overcome the awkwardness of their meeting and to put their emotional separation behind 





Chalo ek baar fir se 
ajanabi ban jaaean ham donon (Chalo)

Na main tumse koi ummeed rakhoon dilnavaazi ki
Na tum meri taraf dekho galat andaaz nazaron se
Na mere dil ki dhadkan ladkhadaaye meri baaton mein
Na zaahir ho tumhaari kashm-kash ka raaz nazaron se(Chalo)


Tumhen bhi koi uljhan rokti hai peshkadmi se
Mujhe bhi log kehte hain, ki yeh jalve paraaye hain
Mere hamraah bhi rusvaaiyaan hain mere maajhi ki -2
Tumhaare saath bhi guzri hui raaton ke saaye hain
Chalo ek baar phir se..

Taarruf rog ho jaaye to usko bhoolnaa behtar
Taalluk bojh ban jaaye to usko todnaa achchha
Voh afsaana jise anjaam tak laana na ho mumkin -2
Use ek khoobsoorat mod dekar chhodna achchha
Chalo ek baar phir se..










வெள்ளி, 7 ஜூலை, 2017

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ?

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ?


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ?

இறைவன் கண்ணன் வாயிலே
புல்லாங்குழலை வைத்து ஊதினால்
இந்த சராசரம் முழுவதும்
அவன் இசைக்கு அடிமையாகி விட்டது
அன்று முதல் இன்று வரை.

மூங்கில்கள் புல்லாங்குழல்கள்
மட்டுமா கொடுத்தது.?

இல்லை அதன் உபயோகங்கள்
எண்ணில் அடங்காது.

moongil oonjal price માટે છબી પરિણામ


Images courtesy-Google images 

அதை பிறகு பார்ப்போம்.

இப்போது சொல்ல வந்தது மூங்கில்களால்
உருவாக்கப்பட்ட பியானோ இசைக் கருவி.

ஆம்  கீழே கண்டுள்ள காணொளியில் கண்டு
கேட்டு மகிழுங்கள்.

https://www.facebook.com/567233723664787/videos/581500455571447/

வியாழன், 6 ஜூலை, 2017

இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் ) பாடல்:குங்கும பொட்டின் மங்கலம்



இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் ) 

பாடல்:குங்கும பொட்டின் மங்கலம் 







பாடல் வரிகள் :  ரோஷனாரா  பேகம்

Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male : 
குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 

Female : குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 
Male : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம் 
உந்தன் கண்ணில் ஏன் இந்த அச்சம் 
Male : தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான் தளிர் தேகம்  (2)
தேகம் (3)
Female : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம் 
தினம் சந்திக்க சந்திக்க இன்பம் 
Female : பெண்ணான பின்பு என்னை தேடி 
கொண்டதே எண்ணங்கள் கோடி (2) கோடி(3)

Male : குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் 
Male & Female : நெஞ்சம் இரண்டில் சங்கமம் 
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 
Male : தங்கம் மங்கும் நிறமான மங்கை 
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை 
Male : ஜில் எனும் குளிர் காற்று  வீசும் 
மௌனமேதான் அங்கு பேசும் (2) பேசும்(3)

Female : மண்ணில் சொர்கம் கண்டிந்த  உள்ளம் 
விண்ணில் சுற்றும் மீன் என்று துள்ளும் 

Female : கற்பனை கடல் ஆன போது 
சென்றதே பூந்தென்றல் தூது (2)தூது(3)
Male & Female : 
குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 





புதன், 5 ஜூலை, 2017

பாலைவனத்தில் பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?

பாலைவனத்தில் பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?


கடல் நீர் நடுவே பயணம் 
போனால் குடிநீர் தருபவர் யாரோ ?

கவிஞர் வாலியின் பாடல் "படகோட்டி" 
திரைப்படத்தில் ஒலிக்கும். 

ஆனால் பாலைவனத்தில் 
பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?




நம் நாட்டில் பசுவின்  மூத்திரத்தை பயன்படுத்துபவர்களை 
கேலியும் கிண்டலும் செய்யும் 
பகுத்தறிவுவாதிகள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? 

கீழே காணும் காணொளி விடை தரும். 




செவ்வாய், 4 ஜூலை, 2017

எலிகளை போற்றும் ஆலயம்


எலிகளை போற்றும் ஆலயம் 

பிள்ளையாரின் வாகனம்
எலி குடும்பத்தை சேர்ந்த மூஞ்சுறு

ஆனால் எலிகளை போற்றி
மகிழும் ஆலயம் ராஜஸ்தானில் உள்ளது.

அந்த கோயிலில் குடி  கொண்ட "கரணி  மா  தேவியை "
நம்பிக்கையோடு அந்த மாநிலமக்கள் வழிபடுகிறார்கள்.

நாம் அந்த சிறிய பிராணிகளை வதைத்து கொல்கின்றோம்
வயல்களில் மற்றும் கிடங்குகளில் அது பெரும் நாசத்தை விளைவிக்கிறது.

ஒரு தகவல் சொல்கிறது. எலிகளின் தொகையை கட்டுப்படுத்த நாய்களும், பாம்புகளும், ஆந்தைகளும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கும்போது நாம் அவற்றை ஏன் கொல்ல வேண்டும் என்று.

நாம் நம் வீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால் நமக்கு அவற்றால் தொல்லை கிடையாது.


இந்த தகவல் தொடர்பான  காணொளியை
கண்டு மகிழுங்கள்.




https://www.facebook.com/CharanGadhviDeviPutra/videos/1652089151476615/

இந்த உலகில் யாருக்கும் எதற்கும் பாதுகாப்பு இல்லை

இந்த உலகில் யாருக்கும்  எதற்கும் பாதுகாப்பு இல்லை 

இந்த உலகில் யாருக்கும்
 எதற்கும் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் கிடையாது.

இந்த உலகில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட
எந்த உயிரோ அல்லது பொருட்களோ ஒரு நாள்
அழிவை சந்தித்தே தீர வேண்டும்

இந்த உண்மை புரியாமல் தனி மனிதர்களும் நாடுகளும் பாதுகாப்பு என்ற போர்வையில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வீணடித்துக்கொண்டு இந்த உலகத்தை பிணக்காடாக மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இந்த மூடர்களை யாராலும் எக்காலத்திலும் திருத்தமுடியாது. 

ஒரு உயிர்  அது தங்கியுள்ள உடலிலிருந்து
அதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை தங்கும்
அதை எந்த கொம்பனாலும் அந்த உயிரை கொல்ல  முடியாது.

உதாரணத்திற்கு கோமா நிலையில் சென்றுவிட்ட உயிர் பல ஆண்டுகளாக அசைவற்று கிடக்கிறது. எந்த மருத்துவ கொம்பனாலும் அதை செயல் பட வைக்க முடியவில்லை.

ஆனால் மருத்துவர்களால் நன்றாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட உயிர்
சட்டென்றுபிரிந்துவிடுகிறது  . அதற்க்கு மருத்துவர்களால் காரணம் கூற இயலாது.

சகலவிதமான முன்னெச்சரிக்கையுடனும் 5 அடுக்கு அல்லது 6 அடுக்கு பாதுகாப்புடன் வளைய வரும் ஒரு அதிகாரம் படைத்த தலைவன் அவன் கூடவே இருக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலாளியால் கொல்லப்படுகிறான்.

ரோஜா மலருக்கு அதன் காம்பில் உள்ள
 முள்  பாதுகாப்பு அளிக்க முடியவில்லை

ஒரு ஆடு முள்ளை மட்டும்  விட்டு விட்டு லாவகமாக மலர் இலை  எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விடுகிறது.

பாலைவனத்தில் சப்பாத்தி கள்ளி முழுவதும் கூரான முட்கள் உள்ளன. ஆனால் ஒட்டகத்திடம் அவை ஒன்று செய்ய இயலாது. ஒட்டகம் முட்களோடு  சேர்த்து அவைகளை தின்றுவிடும்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் மற்றொரு உயிருக்கு உணவாக இருக்குமாறு இறைவனால் திட்டமிடப்பட்டுள்ளது அதை யாரும் மாற்றமுடியாது.

முடிவில் எல்லாவற்றையும் மண் கபளீகரம் செய்து மீண்டும் புதிய உடல்களை உற்பத்தி செய்ய தயாராகிவிடும்.

ஒரு கூட்டில் உள்ள பறவை தான் வசிக்கும் கூடு பயனற்றதாகிவிட்டால் அங்கிருந்து பறந்து சென்று வேறு மர  பொந்தையோ அல்லது ஒரு கூட்டையோ உருவாக்கி கொள்ளுகிறதோ அது  போல்தான் மனித உயிரோ அல்லது மற்ற உயிர்களோ.செய்துகொள்ளும்.

மரணம் என்பது வாழ்வில் தினமும் உறக்கம் என்ற போர்வையில் வந்து போகும் ஒரு சப்பை  மாட்டேர் .

அதற்காக அழுது புலம்புவதும் அதற்காக கூட்டம் நடத்தி விளம்பரப்படுத்துவதும், லட்சக்கணக்கில் செலவு செய்து எழவு விழா எடுப்பதும் கேலிக்குரிய செயல்.

உறங்கும்போது நம்மை யார் பாதுகாக்கிறார்கள்?

அவர்தான் நாம்  விழித்திருக்கும்போதும் நம்மை பாதுகாக்கிறார் என்பதை புரிந்துகொண்டு  அந்த சக்திக்கு தலை வணங்க வேண்டும் 

காலம் என்ற   பாம்பு ஒரு தவளையை சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்டிருப்பதை அறியாமல் அந்த தவளை அதை அறியாமல் தன் எதிரே உள்ள பூச்சியை பிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

அதுபோல்தான் நம்முடைய வாழ்க்கையும். நாம் பிறந்த கணத்திலிருந்து நம் முடிவை நோக்கி  பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பயணத்தை சக   பயணிகளுடன் இன்பமாக பயணம் செய்யலாமே?

ஆனால் அவ்வாறு நடக்க நாமும் விடுவதில்லை.மற்றவர்களும் விடுவதில்லை.

பொறாமை, சுயநலம், கருமித்தனம்,வெறுப்புஅவநம்பிக்கை ,போன்ற அயோக்கியர்களை மட்டுமே நம்பி அவர்களை நம்மோடு பயணம் செய்ய அனுமதித்து நாமும் நிம்மதியை இழந்து மற்றும் மற்றவர்களின் நிம்மதியையும் கெடுத்து நம் வாழும் காலத்தை நாசமாக்கி கொள்ளுகிறோம்.

இந்த உண்மையை புரிந்துகொண்டவனுக்கு மரண  பயம் இல்லை. 
வாழ்வில் கசப்பும் இல்லை. இவ்வுலக வாழ்வு இனிக்கும் 

நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?


நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?

நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?

சீனாவில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்
நவீன முறையை காணுங்கள்.

நம் நாட்டில் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டுமென்றால். எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று அந்த இறைவனுக்கே தெரியாது.

அது தொடங்கிய நிலையிலிருந்து, அரசியல்  , வழக்குகள்,ஆட்சி  மாற்றம், லஞ்சம் ,ஊழல் புகார்.இன்னும் எத்தனையோ தடைகளை கடக்கவேண்டும்.

எத்தனையோ மேம்பாலங்கள் திட்ட வடிவிலேயே நிற்கின்றன.
சில தொடங்கப்பட்டு குட்டி சுவராய் நிற்கின்றன.

நம் நாடு எத்தனை நூற்றாண்டானாலும் முன்னேறாது.


https://www.facebook.com/PeoplesDaily/videos/1234965873221894/

சனி, 1 ஜூலை, 2017

இசையும் நானும் (200) திரைப்படம் -(மின்னலே ) பாடல்:வசீகரா என் நெஞ்சினிக்க



இசையும் நானும் (200) திரைப்படம் -(மின்னலே ) 

பாடல்:வசீகரா என் நெஞ்சினிக்க


பாடல் வரிகள் :  தாமரை 

இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 


இசையின் நானும் என்னும் தொடரில் என்னுடைய 200 வது  வெளியீடு.
என்னை தொடர்ந்து ஊக்குவித்த இசை அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

MY MOUTHORGAN VEDIO 



FILM : MINNALE
MUSIC : HARRIS JEYARAJ
SINGER : BOMBAY JEYASHREE
LYRICS : THAMARAI

minnale માટે છબી પરિણામ


வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா  முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்(
வசீகரா)

 
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
(வசீகரா)


தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்

தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை

நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் 

அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவெளியில் 

கடிகார நேரம் கிடையாதே