வெள்ளி, 20 செப்டம்பர், 2013

தஞ்சையின் கைவண்ணம்

தஞ்சையின் கைவண்ணம் 

தஞ்சை என்றவுடன் மக்களின்
பசிப் பிணி  போக்கும்
நஞ்சை வயல்கள்
நினைவுக்கு வரும்.




ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
காலத்தால் அழியாது தமிழனின்
கலைகளை பறை சாற்றும்
கோயில்களும் கலைகளும்
கண்முன் வரும்

தேனாய் காதில் ஒலிக்கும்
இசையும், பண்பட்ட பரத நாட்டியமும்
தஞ்சாவூர் தட்டும். விண்ணை முட்டும்
கோபுரங்களும் காவிரித்தாயின்
கருணையால் போர்த்தப்பட்ட்ட
பசுமை விரிப்புகளும்
மனதில் உலா  வரும்.

தமிழுக்கு அணி சேர்த்த எண்ணற்ற
புலவர்களின் படைப்புகளும்
தெய்வங்கள் மீது பாடபெற்ற
பாடல்களும் உள்ளத்தை
பண்படுத்தும்.

மனைவியின் சொல்லுக்கும்,
தலையாட்டும் கணவன்போல்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
என்ற பழமொழிக்கேற்ப சாய்ந்தாலும் மீண்டும்
நேராக நிற்கும் தஞ்சாவூர் தலையாட்டு பொம்மைகள்
இருந்த நாடு அந்நாளில்




காலம் மாறிவிட்டது .
இன்றோ அது புது அவதாரம் எடுத்துவிட்டது.

ஆம் அதுதான் தலையாட்டும் மின் விளக்கு.
இருளை போக்கும் இன்பம் தரும் இனிய படைப்பு.



இந்த விளக்கை நமக்கு அளித்தவர்.துளசி கோபால். அவர் வலைத்தளம் கீழே. பயணக்கட்டுரைகளை,பளபளக்கும் படங்களுடன் சுவையாகத் தந்து அனைவரையும்  பரவசத்தில் ஆழ்த்தும் பண்பாளர். )

http://thulasidhalam.blogspot.in/2013/03/blog-post_

உங்களை நீங்கள்தான் காப்பாற்றி கொள்ளவேண்டும்.


உங்களை நீங்கள்தான்
காப்பாற்றி கொள்ளவேண்டும்.

படமும் கருத்தும் கீழே .கார்த்திகேயன் வெங்கட்ராமன்
https://plus.google.com/116959865103404902181/posts


வியாழன், 19 செப்டம்பர், 2013

வினோபா அடிகள்(பகுதி -2)

வினோபா அடிகள்(பகுதி -2)

வினோபா அடிகள்(பகுதி-2)





தந்தை என்றால்
இப்படி அல்லவோ இருக்கவேண்டும்!

ஒரு நாள் வினோபா வழக்கம்போல்
ஊர் சுற்றிவிட்டு வீடுதிரும்பினார்

அவர் தந்தை அவரை 
கண்டிக்கவில்லை. 
அடிக்கவில்லை 

விநோபாவிர்க்கும் அவருடைய
அன்னைக்கும் ஒரே வியப்பு.
அதற்க்கு பிறகும் அவர் தந்தை
அவரை அடித்தது இல்லை





வியப்பு தாங்காமல்
இந்த மாற்றத்திற்கான காரணத்தை 
தந்தையைக்   கேட்டார் தாய் 

அதற்க்கு தந்தை
பதில் சொன்னார்

வினோபாவிற்கு பதினாறு வயது ஆகிவிட்டது 
மகனுக்குப் பதினாறு வயதாகிவிட்டால் 
அவனை நண்பனைப் போல் நடத்த வேண்டும் 
என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது .
இனிமேல் வினோபா என்னுடைய
 நண்பன் என்றார் தந்தை 

ஆனால் இன்று பதினாறு வயதிலிருந்தே
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடுகிறார்கள்.
அவர்களை சிந்திக்க விடுவதில்லை.
அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை.
அவர்களோடோ மனம் விட்டு பேசுவதில்லை..

அவர்களின் நிறைவேறாத விருப்பங்களையும்
ஆசைகளையும் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சுயமாக
சிந்திக்கும் திறனை இழந்து போகிறார்கள்

அவர்கள் மனம் அவர்கள் மீது யார்
பாசம் காட்டுகிறார்களோ
அவர்கள் பக்கம் சாய்ந்துவிடுகிறது

அந்த நேரத்தில் அது உண்மையா
அல்லது போலியா அல்லாது நாம்
அவர்களின் சுயநலத்திற்கு பலியாடுகளாக
ஆகிறோமோ  என்று அவர்களால்
 உணர முடிவதில்லை.

அதனால்தான் இன்று சமுதாயத்தில்
இளைஞர்கள் சமூகத்தில் எண்ணற்ற கோளாறுகள்.
 மனதில் அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்கள்
அவர்களை தவறானபதையில் செலுத்தி
வன்முறையிலும்,
 பல சமயங்களில் ஈடுபட வைக்கின்றன.

இந்த உலகத்திற்கு வரும்
ஒவ்வொரு ஜீவனும் சென்ற பிறவியில்
 நிறைவேறாமல் நின்றுவிட்ட தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதர்க்காகதான்  பிறக்கின்றன.

அவைகளை இளம் வயதிலேயே கண்டறிந்து
அதற்க்கான  வாய்ப்புகளை ஏற்படுத்திக்.
கொடுப்பதுதான் பெற்றோர்கள் மற்றும்
ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.

ஆனால் அதற்க்கு எதிர்மாறாக தான்
ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர்.

தன்னுடைய மகன் ஒரு மருத்துவராக  வேண்டும்
என்று ஒரு செல்வந்தன் நினைக்கிறான்.
அவன் மகனுக்கோ அந்த துறையில் விருப்பம் இல்லை.
 தந்தைக்காக மருத்துவம் படித்துவிட்டு
கலைத்துறையில் பணியாற்ற சென்றவர்கள்
இந்த உலகில் அநேகம் உண்டு.

இதைபோல்தான் பலரும் வற்புறுத்தலுக்காக
ஒரு துறையை தேர்ந்தெடுத்து
பிறகு அதை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு
தங்களுக்கு பிடித்த துறை
தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகின்றனர்.

தொடக்க நிலையிலே அவர்கள்
அந்த துறை தேந்தெடுக்க அனுமதிக்கப் பட்டிருந்தால்
அரசுக்கும், பெற்றோருக்கும் அவர்களும்
கால விரயம், பண விரயம்,
மன உளைச்சல்கள் இல்லாது
போயிருக்குமல்லவா?

(இன்னும் வரும்) 

புதன், 18 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி சிந்தனைகள்

விநாயகர் சதுர்த்தி சிந்தனைகள் 



விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை
கோலாகலமாக அலங்கரித்து
விமரிசையாக பூஜிப்பதும்
பிறகு அந்த வடிவத்தை ஊர்வலமாக எடுத்து சென்று
அந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மதவாதிகள், தீவிரவாதிகள் ஆதாயம் பார்ப்பதும் எந்த  அசம்பாவிதமான சம்பவங்கள், மோதல்கள், வன்முறைகள் ஏற்ப்படாமல் தடுக்க ஆளும் அரசுகள், காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் பிரம்ம பிரயத்தனங்கள் செய்வதும் அதன் பின் கொடூரமான முறையில் கண்ட இடங்களில் பூஜிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை வீசுவதும்
வாடிக்கையாகி விட்டது .

பல ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சிலைகளை எதற்கு அழிக்கவேண்டும் ?

களிமண்ணால் செய்யப்பட சிலைகளை மட்டும்
நீர் நிலைகளில் விடலாம்.

ஆண்டுதோறும் ஒரு மதத்தினர் காட்டும் பக்தி வெள்ளம்
வேறு ஒரு மத பிரிவினருக்கு பதட்டத்தை விளைவிப்பதாலும், அரசுக்கு தேவையற்ற பாதுகாப்பு காரணங்களுக்காக வீண் செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் கீழ்கண்ட முறையை பரிசீலித்தால் அனைவர்க்கும் நல்லது. நாட்டிலும் மோதல்கள் இருக்காது,. அமைதியும் நிலவும்.

1. அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை ஒரு பொது  இடம் ஒதுக்கி(அருங்காட்சியகம்) அங்கு காட்சி பொருளாக வைத்து வழிபடலாம்.

அதை பராமரிக்கும் பொறுப்பை அந்த பிள்ளையாரை  பூஜை செய்த மக்களுக்கே விட்டு விடலாம். 

இதனால் மக்களுக்கு விதவிதமான பிள்ளையார் சிலைகளை ஒருங்கே காணும் வாய்ப்பு கிடைக்கும். 

சுற்று சூழலுக்கு பாதிப்பும் ஏற்படாது. 

1. பச்சை களிமண்ணால் செய்த சிலைகளை மண்பாண்டம்/மண் பொம்மை செய்வோர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதிலிருந்து நவராத்திரிக்கு,பொம்மைகளும். கார்த்திகை தீபத்திற்கு அகல்விளக்குகளும்  செய்து பயனடைவார்கள். 

இதனால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.
பிள்ளையார் சிலைகள் படும் பாடும் தவிர்க்கப்படும்.


செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உண்மையைப் பேச முடியுமா?

உண்மையைப் பேச முடியுமா?





உண்மையைப் பேசமுடியுமா?
அதுவும் இந்த கலி காலத்தில்.

உண்மையைப் பேசினால்
நெஞ்சில் மஞ்ச சோறு
இருக்குமா? (ரவுடிகள் மொழியில்)
அதாவது உடலில் உயிர் இருக்குமா?
என்பது கேள்வி.

உண்மை பேசுபவன் முட்டாள்கள்,
 பிழைக்கத் தெரியாதவர்..
இது படித்த அறிவாளிகள்
அறிவார்ந்த சிந்தனை.

இந்த உலகத்தை உண்மை என்றசத்தியம்தான் தாங்குகிறது
என்பதை அனைவரும் வசதியாகவாழ்வதற்காக
வசதியாக மறந்து சதிகாரர்களோடு
கூட்டு சேர்ந்து கொள்கின்றனர்.

உண்மைக்காக பாடுபடுபவன்.
துன்பங்களையும் அவமானங்களையும்தான்
பரிசாக பெறுகிறான்.

அவன் உண்மைக்காக பாடுபடுவது
தரிசாய் போய்  கிடக்கும் இந்த அடித்தள
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்பது
வெள்ளிடை உண்மை.

ஆனால் அவனால் வெளிச்சதிற்கு வந்த மக்கள்
அவன் வாழ்நாளிலே அவனை புறக்கணித்து
அயோக்கியர்களுடன் சேர்ந்துகொண்டு அவனை
மறந்துபோவதும் இந்த உலகில் வாடிக்கையான
செயல்களில் ஒன்றாகும்.

இருந்தும் அதிக வலிமை வாய்ந்த
பொய்ம்மையை எதிர்த்து உண்மை சக்திகள்
குரல்வளையை  நெரித்தாலும்.   குரல் கொடுத்துக்கொண்டுதான்இருக்கின்றன.

சென்ற நூற்றாண்டில் மகாத்மா காந்தி
உண்மைக்காக போராடினார்

அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து
 நம் நாட்டு மக்களை விடுவிக்கப்போராடினார்.

ஆனால் உள் நாட்டில் உள்ள ஆதிக்க சக்திகளை
எதிர்த்து போராட நினைத்தும் அவரால்
அதை தொடர முடியாதபடி
அவர் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

 (இன்னும் வரும்)

குடிமகன்களே உங்களுக்காக!

குடிமகன்களே உங்களுக்காக!






அது  ஒரு மதுபான விடுதி
அங்கு ஒரு குடிமகன்
தன் நண்பர்களோடு
உட்கார்ந்துகொண்டு
மகிழ்ச்சியாக
குடித்துக்கொண்டிருந்தான்

அவனுக்கு திருமணமாகி மனைவியும்
குழந்தைகளும்  இருப்பது அவனுக்கு
மறந்துவிட்டது.

உழைத்து கிடைப்பதை. குடித்து
ஒழிப்பதே வாழ்வின் தன்
முதற் கடமையாகக்
கொண்டிருந்த உத்தம பிறவிகளில்
அவனும் ஒருவன்.

இதைப் பொறுக்கமுடியாமல்
ஒருநாள் அவள் மனைவி மதுபான
விடுதியின் உள்ளே சென்று
அவன் அருகில் சென்று நின்றாள்

உடனே அவன் வா,வா,
நீயும் ஒரு மொந்தை போடு. என்றான்.

உடனே அவள், சாப்பிடக் கூட
வீட்டுக்கு வரமுடியாமல் நீங்கள்
இங்கே மிகவும் வேலையாய்  இருப்பீர்கள்
என்று நினைத்தேன் என்றாள்

அதனால்தான் உங்கள்
 பகல் உணவை இங்கேயே கொண்டு
வந்து விட்டேன்.சாப்பிட்டுவிட்டு
சந்தோஷமாக இருங்கள் என்று,
தான் கொண்டுவந்த
டிபன் பாக்சை மேஜை மீது
வைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டாள் .

அவள் கூறியதைப் பார்த்து
அவன் அசிங்கமாய் சிரித்தான்.
அவளை ஏளனமாய்ப் பார்த்தான்.

உடனே தன்  நண்பர்களை
தன்னுடன் உணவு உண்ணுமாறு
சந்தோஷமாக அழைத்தான்.

சரி நாமும் வீட்டிற்கு போகவேண்டியதில்லை.
 மதிய உணவை இங்கேயே முடித்துவிட்டு
மீண்டும் குடிக்கலாம் என்று அவர்களும்
அவனருகே வந்து அமர்ந்தனர்.

அவன் டிபன் பாக்ஸ் மூடியை
ஆவலுடன் திறந்தான்.

அதன் உள்ளே அவன் எதிர்பார்த்த உணவுகள்
ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு தாளில்
ஒரு" சிறு குறிப்பு "மட்டுமே இருந்தது.

"உங்களுக்கு பிடித்த உணவை உண்டு
 மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

 உங்கள் மனைவியும் குழந்தைகளும்
வீட்டிலே சாப்பிடும் அதே உணவுதான் 
உங்களுக்கும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
 நன்றாக உண்டு பசியாறுங்கள். 

குடிமகன்களே குடிப்பதற்கு
முன் இந்த செய்தியை கொஞ்சம்
கண் திறந்து படியுங்கள் ஏனென்றால்.
குடித்த பின் அதை செய்ய முடியாது.

(1995 ஆம் ஆண்டு சக்தி தீபாவளிமலரில் வெளிவந்த ஒரு  கட்டுரையைதழுவி எழுதப்பட்டது. )

வினோபா அடிகள்(1)

வினோபா அடிகள்(1)




அந்த கால மக்களுக்கு
கேள்விப்பட பெயர்போல் இருக்கும்

பூதான  இயக்கத்தின் தந்தை அவர்

இந்த கால மக்களுக்கு
அவரை தெரிய நியாயமில்லை.

ஏனென்றால் அவர்கள்
வளர்ப்பு அப்படி.

எதை செய்தாலும் ஒன்றை எதிர்பார்த்து
கணக்கு போட்டு வாழும் வாழ்க்கைதான்
அவர்களுக்கு கருவறையிலிருந்து
கல்லறை வரை கற்ப்பிக்கப்படும்
வேத வாக்கியம்.

பிறரை வஞ்சித்து அவர் பொருளை எடுப்பதும்,
இலவசமாகடாஸ்மாக்குடன் எது கிடைத்தாலும்
அதை வாங்கி வீட்டில் அடைப்பதும்
அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை.

ஆன்மிகம் என்று
எதை எதையோ நம்புவதும்
அதைக் கூறி வயிறு வளர்க்கும் புரட்டர்கள்
 பின் போவதும்தான் பரவலாக
இன்று மக்கள் வாழும் வாழ்க்கை.

அப்படிப்பட்டவர்களுக்கு வினோபா அடிகளின்
வாழ்க்கையை பற்றி சிந்திக்க கூட
நேரமிருக்காது என்பதில் ஐயமில்லை.

இருந்தாலும் நம் மனதில் உள்ள
கோடிக்கணக்கான அழிக்கமுடியாது
தங்கிவிட்டஎண்ணங்களில்
நம்மை அழித்துக் கொண்டிருக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளிடையே
இது போன்ற மகான்களின் சிந்தனைகளும்
போட்டு வைப்பது நன்மை பயக்கும்.

வினோபா அடிகள் இந்த மண்ணில்
பிறந்து 118 ஆண்டுகள் ஓடிவிட்டது..
ஆம் அவர் 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி
அன்றைய பரோடா சமஸ்தானத்தில்  பிறந்தார்.

வினோபாவின் தந்தை நூல் தொழில்
நுட்பத்தில் வல்லவர்.
தாயார் தெய்வ பக்தி மிக்கவர்

தந்தை மிகவும் கண்டிப்பானவர் .
பின்னாளில் நம் நாட்டின் சுதந்திரத்திற்க்காக
 போராடப் போகும் வினோபா அடிகள்
சிறுவனாக இருந்தபோதே சுதந்திரமாக
ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர் .
தந்தைக்கு இது பிடிக்காது.
வினோபாவை அடிப்பார்.
வினோபா பொறுத்துக்கொள்வார்..
 தந்தையின் கோபத்தைப்
பொருட்படுத்தமாட்டார்.

அப்போதுதான் ஒரு நாள்
அந்த சம்பவம் நடந்தது.

அது என்ன?
(இன்னும் வரும்) 

வியாழன், 12 செப்டம்பர், 2013

மழை வருது மழை வருது குடை கொண்டு வா!

மழை வருது மழை வருது 
குடை கொண்டு வா!





ஏரியின் நடுவிலே வீட்டை
கட்டினோம் அன்று
நீரின் நடுவிலே
தத்தளிக்கிறோம் இன்று

காணுமிடமெல்லாம் தண்ணீர் மயம்
குடிப்பதற்கு ஒரு சொட்டு கூட
பயன்படாது போனதென்ன
எங்கும் சாக்கடைமயம்



கழிவு நீரும் குப்பைகளும்
கலந்து  நாறுது
எந்நேரமும் கொசுக்களின்
ரீங்காரம் காதில் கேட்குது

இலவசமாக ஊசி போடும் கொசுக்கள்
நம் உறக்கத்தை குலைக்கும் அசுர ஜீவன்கள்

ஊசி மூலம் டெங்கு,மலேரியா
யானைக்கால் நோய்களை நமக்களித்து
களிக்கும்  கொசுக்கள்

நம்மை நோயாளிகளாக்கினம்மை
சுற்றி சுற்றி வந்து  பாடி மகிழும்
கொசுக்கள் கூட்டம்.

சாவதற்கு அஞ்சுவதில்லை .
சந்தோஷமாக பாடி
திரிந்து நம்மை கொடுமைப்படுவதில்
அதற்க்கு ஈடு இணை இல்லை.

மழைக் கடவுள் கொட்டி தீர்க்கிறான்
அதை சேமித்து வைக்க பாத்திரம்தாம்
நம்மிடம் இல்லை.

மாறாக நாம் செய்த தவறுக்கு
நிர்வாகம் மீது ஆத்திரத்தை
கொட்டித் தீர்க்கிறோம்

தண்ணீர் செல்லும் வடிகால்களை
அழித்துவிட்டோம்

வடிகால்களை அடைத்துவிட்டு
யானைக்கால் நோயை உற்பத்தி  செய்யும்
கொசு தொழிற்சாலைகளுக்கு அனுமதி
அழித்துவிட்டோம் மதி கெட்டு

ஆறுகள் செல்லும் பாதை எல்லாம்
வானுயரக் கட்டிடங்கள்.

ஆற்றில் செல்ல வேண்டிய மழை நீரெல்லாம்
வீட்டினுள்ளே புகுந்து விளையாடுகின்றன

மழை நின்று ஆதவன் கண்
திறந்தால்தான் இனி விடிவுகாலம்

அதுவரை அல்லல்படுவதை
தவிர வேறு ஏது  வழி. 

புதன், 11 செப்டம்பர், 2013

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள் 

பாரையே  தன்  கவிதைகளால்
அதிரவைத்த அந்த கவிஞனை
ஓரங் கட்டிவிட்டது இன்றைய
தமிழ் சமுதாயம்.





அவன் கருத்துகளுக்கு சமாதி
கட்டிவிட்டது இந்த நன்றி
மறந்த சமூகம்

நெஞ்சு  பொறுக்குதில்லையே
இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்
என்று அடுக்கி கொண்டே போனான். அன்றைய
உண்மை நிலவரத்தை '

அவன் மனதில் எதிர்காலம் விரிந்தது போலும்!
அந்த காட்சிகளைக் காண மனமில்லாது
தான் பயணத்தை பாதியிலே
நிறுத்திக் கொண்டு இவ்வுலகத்தை
விட்டகன்றான் போலும்.

மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்
என்று அவன் பாடினான்

இன்றோ மாமியார்களே
மருமகள்களை கொளுத்துகின்றனர்.
மருமகள்களோ மாமியாரை. வீட்டை விட்டு
விரட்டியடிக்கின்றனர் ஒரு படி மேலே போய்

பெண் விடுதலை வேண்டுமென்றான்
ஆனால் பெண்ணுக்கு ஏது  விடுதலை ?
தறுதலைகளால் அவள் படும் துயரம்
அதிகமாக்க்கொண்டே போகும் அவலத்தை
யார் துடைப்பார்?




வெட்டிக்கதைகள் பேசி பிறருக்கு
துன்பம் இழைத்து, கிழப்பருவம் எய்தி மடியமாட்டேன்
என்று சபதம் செய்தான்
அவன் சபதப்படியே இந்த உலகில் நடைபெறும்
அக்கிரமங்களை காண சகியாது
இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டான் .



அவன் உடல் அழிந்தாலும்
அவன் நெஞ்சில் பூத்த  நெருப்பு அழியாது
இந்த உலக மாந்தர்கள் திருந்தும்வரை.

pic-courtesy-google images

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

தமிழ் மொழியில் எண்களை எழுதுவது எப்படி?

தமிழ் மொழியில்  எண்களை  
எழுதுவது எப்படி?

இதோ எளிதான வழி .
அது சரி
அதை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?

இனி படியுங்கள்..

எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?

""பத்தாம் வகுப்புப் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தமிழ்ப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-இல் இருந்து 0 வரை உள்ள எண்களைத் தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு அது தெரியாது என்பதால் அப்பெண்ணிடமே கேட்டேன்.

உடனே அப்பெண், "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ,0' என்ற எண்ணுக்கு முறையே, "க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள்.

""இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?'' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துகளை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாகக் கூறினாள். அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சி, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றேன்.


இந்த தகவலை எனக்கு மின்னஞ்சல் மூலம் முக நூலிலிருந்து மோப்பம்  பிடித்து அனுப்பியவர். Varagooran NarayananVaragooran Narayanan

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

Beware! GOD is watching

Beware! GOD is watching 





Heart is a temple
Everyone must allow GOD only
to reside in that holy place
and not the ego which
destroys our inner peace


Only lamp of love and wisdom  should be lighted
to radiate to remove the darkness of ignorance
and the evil thoughts of anger and jealousy
should not be allowed to burn our heart
leading to destruction and despair


Fragrant flowers with devotion and love  alone
should be garlanded to the deity at heart and
not any other artificial flowers of lust and pomp and publicity

The fragrance that emanates from the temple
delights the soul and spreads devotion all over



Let the heart overflow with love
love towards God in turn flows towards entire
God's creation and jealousy has no place
in the altar of GOD at heart


Peace should prevail before the shrine of God
which results in never ending happiness
in turn flows outside each person which
bring peace in the people around you
and the world you live


Whether one knows it or,
God resides within the heart of everyone
he takes care of all devotees
and attends to their welfare and also
watches each and every thought
whether good or bad



He who perceives this truth never think ill of others
and harm others by word and deed


But who fails to realize this truth
commits sins often and
land themselves in sufferings and
endless miseries in their life

those who realize this truth
are living in peace and happy in their life
in any situations unaffected by them

Beware all our actions are under
constant watch by GOD
within us and the GOD's forces around us


Those who commits wrong will never
go without being punished as the GOD will always wait
and watch whether the person repents for his wrong doing and correct

courtesy-google images

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா?

ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா 
அல்லது மக்களுக்கா?

The Government is for the people 

of the people 

by the people.


But what is the reality ?

But nowadays the government is 
buying the people by distributing freebies
during election and run the government 
after winning the election 
with the same technique
 .
This is followed by all 
successive governments
in all the states in India 
with increased freebies at the
cost of taxpayers and 
law abiding citizens.

The so called poor who receive the 
maximum benefits are not contributing 
to the society as expected.
and improve their way of life 

Because they receive everything free 
they waste their precious earnings 
on liquor ,and destroys their family and 
they continue to live on poverty
and then starts blaming the government.

Under the influence of liquor
they indulge in all sort of anti-social
activities. and causing nuisance to
the law abiding citizens. 

TV channels ,cinemas, politicians 
always keep the masses under their 
control by brainwashing and changed their character
to blindly follow them for their selfish ends.

This bad practice has spread all over India like a decease
Masses are always emotional in approach and react to
any small incident provoked by the anti social elements 
and politicians and religious fanatics engage
themselves in destroying public properties and creating
social unrest between castes and religious followers.

The riches become richer and the poor becomes poorer 
thus the gap between them is widened day by day 

Haves and havenots gave way to corruption, 
exploitation  ,increase of anti social activities 
which make the  governments cannot go with their 
developments.

Their energy and resources are forcibly wasted 
in controlling useless agitations, arson and looting 
by anti social element triggered by selfish political and religious fanatics.

Due to wrong policies of governments. unemployment, poverty prevailing all over the world causing unrest in the 
minds of people resorting to agitations ,protests,creating unrest.by suppressing the feelings of the people the governments are waging war against their own people and kill the innocents mercilessly in many parts of the world. 

Any  type of government whether it is dictatorship or democratic ,if they fail to serve people to improve their living condition will not survive. 

But it has become a distant dream now. 

.
This situation should be changed 
for the welfare of all 

GOD alone can save this planet and its people 
in this situation. 

சுத்தம் தான் கடவுள்

சுத்தம் தான் கடவுள்


சுத்தம் தான் கடவுள்



















அசுத்தம் அவலத்தில் தான் போய் முடியும் 

இன்று தமிழ் நாட்டில் சுத்தம் இருக்கிறதா? 

பதில் இன்று தமிழ் நாட்டில் மக்கள் அசுத்தம் 
செய்யாத இடம் ஒன்று இருக்கிறதா என்று 
உருபெருக்கி கண்ணாடி கொண்டுதான் பார்க்கவேண்டும்.
அந்த அளவிற்கு மக்கள் அசுத்தம் செய்யாத இடமே இல்லை

அரசுகள் கழிப்பிடம் கட்டி கொடுத்தால் அதன் உள்ளேயும் வெளியேயும் அசுத்தம் செய்து அதை பயன் படுத்த முடியாத நிலைக்கும் கொண்டு வருவதில் நீ நான் என போட்டி போட்டு கொண்டு செயல்படுவதில் இவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படவேண்டும்

அதில் உள்ள குழாய்கள், கதவுகள், மின் மோட்டார்(இருந்தால்) ,விளக்குகளை திருடி அதை காயலான் கடைக்குபோட்டு அதில் வரும் காசை கொண்டு குவார்ட்டர் அடித்து மகிழும் ஈன பிறவிகள். 

சாலை ஓரங்களாகட்டும்,ஏரி மற்றும் குளம், கடற்கரைகளாகட்டும் ஆடுமாடுகளைபோல் கழிந்தும் சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் உலகில் யாரும் இருக்கமுடியாது
.
ஒரு கட்டிடத்தின் சுற்று சுவர் கிடைத்தால் போதும் அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மருத்துவ மனையாக இருந்தாலும் சரி, ஏன் கோயிலாக இருந்தாலும் சரி. அது அவர்களுக்கு கட்டணமில்லா கழிப்பிடம் ,சிறுநீர் கழிக்கவும் எச்சில் துப்பவும் செய்யாமல் இருக்க முடியாது.

பல ஆயிரம்மக்கள் புழங்கும், பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள் திரையரங்குகள், கண்காட்சி திடல்கள் ஆகியவற்றில் நாம் நுழையும்போது நம்மை வரவேற்ப்பது மூக்கை துளைக்கும் துர்நாற்றம்தான்.

அங்குதான் நமக்கு ஆரோகியத்தை தரும் (?) பழக்கடைகளும், காய்கறி கடைகளும் அப்படியே அசுத்தமான தரையில் போட்டு விற்கப்படும் அதை மக்கள் மலிவு விலையில் வாங்கி சென்று வாங்கி சென்று உண்டு நோயுற்று மருத்துவர்களுக்கு தண்டம் அழுது போலி மருந்துகளை வாங்கி விழுங்கி. நோய் தானாகவே போய்விடும், அல்லது அவர்கள் போய்விடுவார்கள் மருந்தினால் அல்ல என்பது கலப்படமற்ற உண்மை.

அரசுகள் கோடிக்கணக்கான் ரூபாய்களை கொட்டி கழிவு நீர் கால்வாய்களை அமைத்து கொடுத்தால் அதில் முதலில் குப்பைகளை கொட்டி அதை மூடுவதையே தங்கள் கொள்கையாக கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் உருப்படுவது எவ்வாறு ?

பிளாஸ்டிக் பைகளையும் நாப்கின் களையும் தெருவில் வீசி எறிவதும் சக்காடையில் வீசி எறிவதும் அவர்களுக்கு கைவந்த கலை.
அதில் அசுத்தநீர் தேங்கி கொசுக்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியாகி அது போடும் ஊசிகளின்  வலியை  தாங்கமுடியாமல் கொசு விரட்டி திரவம்,புகை,என நஞ்சு கலந்த ரசாயநங்களுக்காக மாதாமாதம் நூற்றுக்கணக்கில் தண்டம் அழுது நுரையீரல், ஈரல் கெட்டு நிரந்தர நோயாளிகளாகி மாண்டு போவதுதான் கலாசாரம் .இதுவே அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. 

எல்லாவற்றிற்கும் காரணம் சுத்தம் இல்லாமை தான் காரணம்.
இவர்களுக்கு யார் புரிய வைப்பது.?

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிக்கும் இவர்களை யார் எழுப்புவது?
.
மழைக்காலத்தில் வரும் வெள்ளம்தான் அதன் பங்கிற்கு நாட்டை சுத்தம் செய்கிறது. அவ்வளவுதான். 

சென்றதினி மீளாது மூடரே

சென்றதினி மீளாது மூடரே

என்றான் மகாகவி பாரதி

சென்றதினி மீளாது மூடரே
என்றான் மகாகவி பாரதி



ஆனால் யார் அவன் பேச்சை கேட்கிறார்கள்?


அவன் பேச்சை கேட்டிருந்தால்
இன்று லட்சகணக்கான மன நோயாளிகள்
இந்த உலகில் உருவாகியிருப்பார்களா?
பல ஆயிரம் மனநல காப்பகங்களில்
உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும்
மக்கள் துன்பப்பட்டு கொண்டிருப்பார்களா?

மனநோயாளிகளை பேய் பிடித்தவர்கள் 
என்று பெயரிட்டு பலவிதமான கொடுமைகளுக்கு 
ஆளாக்கி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும்
மாந்திரீக வாதிகளுக்கு 
பிழைப்பு ஏற்பட்டிருக்குமா?

மனநோயாளிகள படும் துன்பமல்லாது 
அவர்களின் பெற்றோர்கள், உறவுகள் 
மற்றும் இந்த சமூகம் படும் பாடுகளுக்கு 
என்றுதான்முடிவு ?

அவர்களுக்கு மற்றவர்கள் கொடுக்கும் துன்பங்களும்
இழிவுபடுதுதலும் அவர்களை மென்மேலும்
 மீள முடியாத புதை குழியில்தள்ளி 
அவர்கள் வாழ்க்கை எதற்கும்
 பயனற்று போய்விடுகிறது
.
தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி,
காதலில் தோல்வி என பலவிதமான 
தோல்விகளில் சிக்கியவர்கள் 
அந்த நிகழ்விலிருந்து மீளாமல்
மன நோயாளிகளாக மாறி போதை, மது 
போன்றவற்றிற்கு அடிமையாகி
தங்களை அழித்துக்கொண்டு 
தங்களை சார்ந்தவர்களையும் 
துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள்

மன நோயாளிகளுக்கு மருத்துவ  உதவிகள் 
செய்வதை விட அவர்கள் உருவாகுவதை தடுக்க
சமூகமும் அரசும் முயற்சி எடுக்க வேண்டும்
குழந்தைகளின் இளமை பருவத்திலேயே 
மன நலம் காக்க ,தோல்விகளை   சமாளிக்க, 
பிரச்சினைகளை எதிர்கொள்ள,
பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக
அணுகாமல் அறிவு  பூர்வமாக அணுகி 
அவைகளை வெற்றி கொள்ளும் வகையில்
பாட திட்டம் வகுக்க பட்டு பள்ளிகளில் 
கட்டாய பாடமாக்கபடவேண்டும் .

அவைகளை அனைத்து பள்ளிகளிலும்
எல்லா நிலைகளிலும் செயல்படுத்த
நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டியது 
காலத்தின் கட்டாயம்.