செவ்வாய், 10 ஜூன், 2014

இதுதான் இந்தியா?

இதுதான் இந்தியா?

நம் நாட்டில் உள்ள பீகார் மாநிலம் பற்றிய உண்மை நிலையினை
தெளிவாக விளக்கியுள்ளார் அம்மாநிலத்தில் ஆசிரியராக
பணி புரியும் அன்பர்.


நாம் வாழும் தமிழகம் பாரதி அன்றே கூறியுள்ளதுபோல் சொர்க்கம் .


ஆனால் இங்கிருப்பவர்கள் நம் தாய்  மண்ணின் அருமை பெருமைகள் புரியாமல் நரகமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய செய்தி.








அன்பரின் செய்தி கீழே.


from: Principal SMA noreply-comment@blogger.com

கங்கை நதி தீரம் பீகார் மாநிலம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்தது ... மக்கள் மைதிலி மொழியும் போஜ்புரியும் பேசுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து புரட்டிபோடும் அது அடுத்த மாதம் ஆரம்பம் ஆகும் .வாழைபழம் கிடைக்கிறது மிக மெல்லிதாக ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது. லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை. ஆங்கிலம் என்பதே இங்கு இல்லை. ஒரு விசயத்தில் இவர்களை பாராட்டலாம் ..என்னவெனில் ஹண்டி மொழியில் ஆங்கிலம் கலப்பு இல்லை .நம் தமிழர்கள் போல ஆங்கிலத்தை hindiy இல் கலப்பது இல்லை.அந்த விசயத்தில் இவர்களை பாராட்டியே ஆக வேண்டும்..ஆங்கிலம் தெரியாது என்பது வேறு ...அதனால் கலப்பு இல்லை என்பதே உண்மை..மற்றபடி 10 அடியில் இனிப்பான சுவை உள்ள நல்ல நீர் கிடைக்கிறது. எல்லாம் கங்கா மாதாவின் கடாக்ஷம் ....ஹம்கோ அன்கேரேசி நஹி ஆத்தா ஹாய்l மாணவர்கள் அங்கு உள்ளது போலவே இங்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் நல்ல உடற்க்கட்டு இல்லை. காரணம் maalnutrition தான். சத்தான உணவு இல்லை .சப்பாத்தி தான் எங்கும் ...வேறு எதையும் நான் பார்க்கவில்லை .நம் தமிழகம் உணவில் variety அதிகம். இங்கு vairiety இல்லை ...மின்சாரம் 4 மணிநேரம் முழுமையாக வந்தால் ஆச்சரியம்.சுத்தம் என்பதே எங்கும் இல்லை. நகராட்சி தெருகூட்ட பணம் ஒதுக்கவில்லை போல.தமிழகம் சொர்க்கபூமி ..சாலைவசதி ரொம்ப மோசம்.போக்குவத்து அதவிட ரொம்ப மோசம் .ரயில்பயணம் மட்டுமே பேருந்து சொற்பமே.ஆனால் pollution குறைவு ....இணையம் பயன்பாடு மிக மிக குறைவு.அரசு பள்ளிகளின் நிலை மிக மோசம். ஆங்கிலம் என்பதே அறவே இல்லை.நாமெல்லாம் எவளவோ தேவலை ..புண்ணியம் செய்தவர்கள்.இன்னும் எழுதுகிறேன்...நேரம் கிடைக்கும் போது...நான் ஹிந்தி 1978 இல் படித்தேன் அதனால் தப்பித்தேன். இதற்க்கு முன் நான் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வராக பணியாற்றினேன். அங்கு சம்பளம் குறைவு. எனவே இங்கு வந்தேன். மீண்டும் இங்குஇருந்து குஜராத் மாநிலத்தில் பணியாற்ற விருப்பம். பார்ப்போம்.நண்பர் கண்ணன் கூட tnptf கமெண்ட் போட்டு இருக்காப்ல ...பார்த்தேன்.மீண்டும் எழுதுகிறேன் நண்பரே


இயற்கையின் செல்லக் குழந்தைகள்

இயற்கையின் செல்லக் குழந்தைகள் 



ஓவியம்-தி ரா.பட்டாபிராமன் 


ஆம் பறவைகள்
இயற்கையின் செல்லக் குழந்தைகள்.

அதிகாலையில் எழுகின்றன
அழகாய் இனிய ஒலி எழுப்பிக்கொண்டு 

ஆனந்தமாய்  வானில் பறந்து திரிகின்றன
ஆதவன் காட்டும் ஒளி வெள்ளத்தில்

ஒவ்வொரு பறவை இனத்திற்கும்
ஒவ்வொரு விதமான இரையைப்
படைத்திருக்கின்றான் இறைவன்

ஆனந்தமாய் உண்கின்றன
ஜோடி சேர்கின்றன முட்டையிட
கூட்டை அவைகளே கட்டுகின்றன

கொத்தனார் துணை தேவையில்லை
வீடு கட்ட காசு பணம் தேவையில்லை
இயற்கையில் கிடைக்கும்
குச்சிகளும் புல்லும் போதும்
இன்பமாக காதல் வாழ்க்கை வாழ

பந்தம் கிடையாது ஆனால்
முட்டையிட்டு பொரித்த குஞ்சுகள்
பறக்க கற்றுக் கொள்ளும் வரை
பாசம் தொடரும் தடையில்லாது

ஆயிரமாயிரம் பறவைகள் ஒன்றாக இருந்தாலும்
சண்டையில்லை சச்சரவில்லை கூச்சலும்
கும்மாளமும்தான் கூடி இருக்கும் நேரம் .

மரணத்தை  கண்டு அஞ்சுவதில்லை
மனம் போன போக்கில் வாழ்வதில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
பிறரை வஞ்சித்து வாழும் எண்ணம் இல்லை.

பறவைகளே நீங்கள் இயற்கையின் செல்ல குழந்தைகள்
இயற்கையோடு இயைந்து  இன்பமாக வாழ்கிறீர்கள்

மனிதர்களாகிய நாங்களோ செயற்கையாக வாழ்ந்து
அன்பில்லாமல் ஒருவரை ஒருவர் சுரண்டி மடிகின்றோம்.

எல்லோரையும் வாழ வைக்கும் இயற்கையை அழிக்கின்றோம்
அல்லல்பட்டு அமைதியற்று சாகின்றோம்.

மனிதகுலம்  என்று திருந்துமோ?
செய்யும் அடாத செயல்களுக்கு என்று வருந்துமோ?

ஆறறிவு உடையவர்கள் என்ற பெருமை
இனியும் பொருந்துமோ?