சனி, 13 அக்டோபர், 2012

சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்


சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும் 

சிரித்தால் வரும் கண்ணீர் 
உடலிலும் உள்ளத்திலும்

நீரின்றி வாடிய பயிர்களுக்கு 
சக்தியை தரும் மழை போன்றது 
















அழுதால் வெளிவரும் கண்ணீர் 
உள்ளத்தில் தேங்கியுள்ள மாசு
படிந்த நீரை வெளியேற்றுவது போன்றது 
















மாசு நீங்கியவுடன் 
உள்ளம் லேசாகிவிடும் 

இதயம் நலமாய் இயங்கிட  
இரண்டுமே மனிதர்களுக்கு தேவை 


சிரித்து வாழ வேண்டும்
பிறர் நம்மை ஏளனமாய் பார்த்து 
சிரிக்கும் வகையில் வாழக்கூடாது 

பிறர் துன்பப்படுவதை கண்டு 
அவர்களை ஏளனம் செய்து 
அவர்களை மேலும்
துன்பப்படுத்தும் வகையில்  
சிரித்து மகிழ்வது மிருக குணம் 

2 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள்...

    பல பாடல்கள் ஞாபகம் வந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ட பொழுதில்
      அனுபவிக்கும்
      இன்ப துன்பங்களை
      காணாத பொழுதிலும்
      மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து
      அனுபவிக்கும் சக்தி கொண்ட
      ஒரே உயிரினம் மனித இனம்தான்

      அதை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும்
      இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்

      இன்பங்கள் குதிரைக்கு லாடங்கல்போல்
      நமக்கு துன்பம் வராமல் காக்கிறது

      துன்பங்கள் நமக்கு பாடங்களை
      கற்பித்து நம்மை தூய்மைபடுத்துகிறது

      நீக்கு