திங்கள், 8 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-18

நான் கவிஞனுமில்லை
நல்ல ரசிகனுமில்லை(பகுதி-18)

என்னுடைய மேலதிகாரி
பலவிதங்களிலும்
நல்ல அனுபவம் பெற்றவர்

என்னை எந்த காலத்திலும்
கடிந்து பேசியதில்லை

ஏனென்றால் நான் அவர் சொல்லும்படி
எதையும் நிலுவையில் வைப்பதில்லை

அலுவலகத்தில் பலபேர் அவரிடம் என்னைப்பற்றி
பல விஷயங்களில் போட்டு கொடுத்தாலும் அவர் 
நடவடிக்கை எடுக்கிறேன் அல்லது நான்
பார்த்துகொள்கிறேன் என்று
சொல்லி அனுப்பிவிடுவார்

இந்நிலையில் அவருக்கு வேறு ஊருக்கு
மாற்றல் வந்துவிட்டது .வேறு ஒரு புதிய
அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டார்

கொஞ்ச நாள் எந்த பிரச்சினையும் கிளம்பவில்லை
ஆனால் என்னைபற்றி அலுவலகத்தில் உள்ள
சிலர் புதிய அதிகாரியிடம் மெதுவாக
வத்தி வைக்க ஆரம்பித்தனர்.

அவரும் என்னை கூப்பிட்டு என்னை எச்சரித்தார்
நான் அவ்வாறெல்லாம் செய்யவில்லை என்று
சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை

முக்கியமாக அவருடன் அலுவலகத்திற்கு
ட்ரெயினில் கூட வரும்போது
ஒருவன் வத்தி  வைக்க ஆரம்பித்தான்.

அதுவும் நன்றாக பற்றிக் கொண்டது
ஏற்கெனவே நான் பார்க்கும் இடத்தை கைப்பற்ற
மாவட்ட அளவில் சிலர் காய்களை நகர்த்த ஆரம்பித்தனர்.

போதாக்குறைக்கு வேறொரு பிரிவில் தேங்கியுள்ள
மொத்த வேலைகளும் என் தலையில் கட்டப்பட்டது.
அதனால் என்னுடைய வேலைகளை முன் போல் குறித்த
நேரத்தில் செய்ய முடியவில்லை
தாமதங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.

இதுதான் சமயம்  என்று காத்திருந்தவர்கள்
அதிகாரியிடம் அதிகாரிய்டம் வற்புறுத்தி தாமதங்களுக்கு
சுட்டி காட்டி எனக்கு மெமோ கொடுத்து என்னை அங்கிருந்து கிளப்ப முயற்சிகள் நடந்தன

இதனால் மன உளைச்சலில்தவிக்க நேர்ந்தது
என் மன உளைச்சலை சொல்லிக்கொள்ள யாருமில்லை.

இவ்வளவு நாட்கள் என்னோடு துணை நின்ற
சில வரிகளை மீண்டும்மீண்டும்
 நினைத்துக்கொண்டே  என் பணியை
 தொடர்ந்து கொண்டிருந்தேன்
அந்த வரிகள் என்ன தெரியுமா?

DO THE BEST YOU CAN
AT THE SAME TIME
PREPARE FOR THE WORST 

எதை வந்தாலும் ஏற்றுக்கொள்ள
நான் தயராகிவிட்டேன்(இன்னும் வரும்)

1 கருத்து: