திங்கள், 19 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (PENCIL SKETCHES )

நானும் ஒரு ஓவியன் தான் (PENCIL SKETCHES )

எந்த செயல் செய்யவேண்டும் என்றாலும் 
மனமும்,உடலும் அறிவும் 
ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும் 

அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
நம்மில் பல பேருக்கும் இந்த மூன்றும்
ஒன்று சேர்வதே கிடையாது. 

சோம்பேறித்தனம், புறங்கூறுதல்,
 பிறர் மீது பழி போடுதல், தன்  தவறுகளை 
ஏற்றுக்கொண்டு அதை சரி செய்யாமல் விட்டுவிடுதல்,
ஆர்வமின்மை,மன உறுதியின்மை
,பொறாமை,நேரத்தை வீணடித்தல் 
,முயற்சியின்மை போன்ற தீய பண்புகள்தான்
 நம்  மனதை ஆக்கிரமித்துக்கொண்டு
 நம்மை பாழ்படுத்தி கொண்டிருக்கின்றன 

பெரும்பாலானோர் வாழ்வில் வெற்றி பெறாமல் போவதும் 
ஒரு சிலர் மட்டும் வெற்றி படிக்கட்டில் ஏறுவதும் 
இந்த உலகில் அன்றாடம் காணும் நிகழ்சிகள் 

ஒரு சிலரே வெற்றியின் ரகசியங்களை கண்டு பிடித்து முன்னேறுகிறார்கள்.

நம்மில் அநேகம் பேர் முயற்சியின்றி ரேடியோ மிர்ச்சி கேட்டுவிட்டு புலம்பிகொண்டிருப்பதோடு  நின்றுவிடுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மன ஒருமைப்பாடு மிக அவசியம். 

அதை பெறுவதற்காக சிலர் யோகாபயில்கிறார்கள் 
சிலர் பல ஆயிரம் ரூபாய்கள் காசு அழுது
பல பயிற்சி வகுப்புகளுக்கு சென்று 
நேரத்தை தொலைக்கிறார்கள். 

அவைகளினால் இவர்களுக்கு.கிடைக்கும்
பலன்  வெகு சொற்பமே. 

மாறாக இந்த பயிற்சியை நடத்துபவர்கள்
பணம் நோகாமல் அள்ளுகிறார்கள். 
என்னை கேட்டால் செலவில்லாமல் மன ஒருமைப்பாட்டை அடைய மிக சுலபமான செலவில்லாத வழி படங்கள் வரைவதுதான். அல்லது ஏதாவது ஒரு கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுதான் 

துவக்கத்தில் போரடிக்கும்.
 உடல் வணங்காது. மனம் ஈடுபடாது. 
ஆனால்  தொடர்ந்து தினம் முயற்சியும் பயிற்சியும் செய்துவந்தால் மனம் ஒருமைப்படும்.
மனதில் இன்பம் பிறக்கும், 
அமைதி உங்கள் உள்ளத்தில் தானே வந்து அமர்ந்து விடும். 

மயில்கள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். 
அது அகவுவது கேட்க மிகவும் இன்பமாக இருக்கும்
47 ஆண்டுகளுக்கு முன் நான்  ஆனைமலை பகுதியில்
பணியாற்றியபோது அங்குள்ள மலைகளில்
மயில்கள் சர்வ சாதரணமாக  
சுற்றி திரிவதை பார்த்திருக்கிறேன்.அது தாழ்வாக தன் தோகையை நீட்டிக்கொண்டு பறப்பதே அழகு. 
அது தோகையை  விரித்து ஆடுவதும் ஒரு அழகு.
 பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

வானம் மேக  மூட்டத்துடன் இருக்கும் போது 
பல மயில்கள் மாற்றி மாற்றி அகவுவது 
கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கும். 
அவைகளின் குரல் மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும். 

நான் 1995 ஆம் ஆண்டு. பென்சிலால் வரைந்த மயிலின் படம் இதோ 



2 கருத்துகள்: