திங்கள், 19 நவம்பர், 2012

சீன மண்ணில் தமிழ் (Part-2)





சீன மண்ணில் தமிழ் (Part-2)

ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
சீனாவில் தமிழ் பரவிஇருந்தது 
இந்த செய்தி ஒரு கல்வெட்டு 
மூலம் தெரிய வருகிறது 



 கண்டன் நகரை தவிர தமிழர்கள்
அந்நாளில் மற்ற நாடுகளுக்கும் சென்று
குடியேற்றங்களை அமைத்துள்ளனர் .
திசை ஆயிரத்து ஐந் நூருவர் என அழைக்கப்பட்ட
வணிகர் சங்கங்கள் உலகின்
பல பகுதிகளுக்கு சென்று தமிழர்களின்
பெருமையை பரப்பியுள்ளனர்.

 (Chuan chav),குவான் சாவ என்ற இடத்தில்
ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது .
அப்போது அங்கு ஆட்சி செய்த அரசன்
 செகசைகான் 'Sekasai Khan'உத்திரவின்படி
 இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது
              
அந்த அரசனின் உடல் நலத்திற்க்காக
இந்த ஆலயம் அமைக்கப்பட்டது .
 'Sekasai Khan' செகாசாய் கான் என்று
கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது
KublaiKhan குப்லாய் கான்
என்று தெரிய வருகிறது
              
அவன் முழு பெயர்
 Kublai Sekcen Khan.
 Sekcen Khan became Sekasai Khan in Tamil.
அந்த சிவன் கோயில் திருகதலீச்வரம்
என்று அழைக்கப்பட்டது இறைவன் திருநாமம்
திருக்கதலீச்வரம் உடைய நாயனார் என்று அழைக்கப்பட்டது

அரசனின் இந்த உத்திரவை செயல்படுதியவரின்
பெயர் தவ சக்ரவர்த்திகள் சம்பந்த பெருமாள் என்பவர்.
சக ஆண்டு சித்ரா பௌர்ணமி 1203 - 1281 AD.
1260 ஆம் ஆண்டு முதல் 1294 வரை
சீனாவை ஆண்ட குப்லாய் கான்
காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது  


குப்லாய் கான் மற்றும் மங்கோலிய
அரசர்களை பற்றி தொடர்ந்து காண்போம்

(இன்னும் வரும்)
நன்றி: VIDYALANKARA 
DR.S.JAYABARATHI

JayBeeமூல பதிவு.

2 கருத்துகள்: