செவ்வாய், 6 நவம்பர், 2012

செயல்பட்டு கொண்டிருப்பதுதான் வெற்றியே


செயல்பட்டு

கொண்டிருப்பதுதான்

வெற்றியே

மனிதனே தூங்கும் நேரம் தவிர 
எப்போதும் ஓடிகொண்டே இரு 

















கடிகார முட்கள் போல்
சாவி உள்ளவரை அல்லது 
மின்சக்தி உள்ளவரை

உடலில் சக்தி இழந்த போதும் 
இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு 
அனைவரையும் ஓட வைக்கும் 
கடிகாரம் போல் நீ இருப்பாய் 
   
உயிரற்ற சடலம்தான் 
அசையாது கிடக்கும் 

உடல் ஓய்ந்து போனாலும்  மனத்தால் 
சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதே

செயல்பட்டு கொண்டிருப்பதுதான் 
வெற்றியே தவிர பிறர் மீது 
வெற்றி கொள்வது அல்ல என்பதை 
புரிந்துகொள் நண்பா

பிறர் நம் மீது தொடுக்கும் விமரிசனங்கள் 
நாம் அவர்களை விட திறமையாக 
செயல்படுவதை காட்டும் கண்ணாடிகள்
அதை உரமாக கொண்டால் 
நெடிய மரம்போல் உயர்ந்து நிற்கலாம் 

அதை கண்டு பயந்தால் 
நம் திறமை மங்கிவிடும் 
எதிர்காலம் அழிந்துவிடும் 

அலைகள் என்றும் ஓய்வதில்லை 
சிலைகள் எங்கும் தானாக நகர்ந்து
செல்வதில்லை 
அதைபோல் உழைப்பவன்
என்றும் ஓய்வதில்லை
ஓயாது உழைப்பவனுக்கு கிடைப்பது
சக்தி மட்டுமல்ல வெற்றியும்தான் 

சோம்பேறிக்கு கிடைப்பது 
தோல்வியும் அழிவும்தான்

மனம் கலங்காதே 
மதி மயங்காதே 
நடை தளராதே 
பிறர் கேடு நினையாதே 
உள்ளம் பெறும் மலர்ச்சி
வாழ்வு தரும் மகிழ்ச்சி 
  

2 கருத்துகள்: