திங்கள், 5 நவம்பர், 2012

என்னை பாதித்த ஓவியர்கள்.


என்னை பாதித்த ஓவியர்கள். 

எத்தனையோ ஓவியர்களை சொல்லலாம்.
சிம்ஹா, பாலு, வினு, மணியம், மணியம் செல்வன்,
ராமமூர்த்தி, அர்ஸ் .மருது ,ஜெயராஜ், வர்ணம்
பத்மவாசன், சில்பி, சித்ரலேகா ,மதன்
செல்லம், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தற்கால ஓவியர்களை பற்றி எனக்கு பரிச்சயம் இல்லை.
தெலுங்கில் பிரஷில் பிரமாதமாக ஓவியம் வரையும்
ஒரு ஓவியரை பிடிக்கும். பெயர் தெரியாது

ஆர். கே.லட்சுமன் ,மரியோ மிராண்டா,
போன்ற ஓவியர்களை மிகவும் பிடிக்கும்.

எனக்கு நேரமின்மை காரணத்தால்.
இந்த துறையில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை.
இருந்தாலும் அவ்வப்போது சில இடைவெளிகளுக்கு பிறகு.
இந்த துறையில் கவனம் செலுத்திவருவதால்
படைப்புக்கள் உருவாகின்றன.

இந்தியன் இங்க்கை பயன்படுத்தி 
கோட்டு சித்திரங்கள் வரையவேண்டும் என்று ஒரு ஆசை.

கருப்பு இங்க் என்று அழைக்காமல்
ஏன் அதற்க்கு இந்தியன் இங்க் என்று பெயர் வைக்கப்பட்டது.
என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.

நம்மை ஆண்ட வெள்ளையர்கள் கருப்பாக உள்ள இந்தியர்களை இழிவு படுத்த கருப்பு நிற மைக்கு இந்தியன் இங்க் என்று பெயர் சூட்டி நம்மை இழிவு படுத்தியதை உணராமல் நாம்பெருமையுடன் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் அந்த பெயரையே அதற்க்கு சூட்டி மகிழ்ந்ததை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.

எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும்?   

என் மனதின் ஆசையை நான்
நிறைவேற்றாமல் யார் நிறைவேற்றுவது?.

இந்த படம் பல ஆண்டுகளுக்கு
முன் கல்கியில் வெளிவந்தது.
ஓவியர் யார் என்று நினைவில்லை.

அந்த படம் இதோ.





2 கருத்துகள்: