வியாழன், 27 செப்டம்பர், 2012

தமிழ் பேசும் ஏமாளிகள்

இன்றைய செய்தி 

25 விழுக்காடுகள் வட்டி தருவதாக கூறி 
கேரளாவை சேர்ந்தவர்கள் விரித்த வலையில் 
விழுந்து  லட்சக்கணக்கில் ஏமாந்து தலையில்
கை வைத்து கொண்டு புலம்பும் 
தமிழ் பேசும்  ஏமாளிகள் 
இந்த விஷயத்தில் ஜாதி,இனம், மதம்,படித்தவன்,பாமரன் 
என பேதம் பாராது தமிழ்நாட்டு மக்கள் 
ஒற்றுமையாக  செயல்படுகின்றனர் 

மற்றபடி அவர்களை பாதிக்கும்  எந்த பிரச்சினையை எடுத்தாலும் ஒன்று சேராது  இருந்து  தனி தனியாக தனி ஆவர்த்தனம் வாசிப்பார்கள். 

அவர்களை ஒன்று சேரவும் தமிழக அரசியல் தலைவர்கள் விடமாட்டார்கள். விட்டால் அவர்கள் தொழிலுக்கு பங்கம் வந்துவிடும் 

இந்த வேலையை அவர்கள வெற்றிகரமாக பல ஆண்டுகளாக செய்து வெற்றியும் பெற்றுவிட்டார்கள் இனி தமிழக மக்களை என்றும் ஒரே அணியில் காண்பது குதிரைகொம்புதான்.  

இதுவரை 32000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி 
நிறுவன அதிபர்கள் தலைமறைவு 

ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய் 
ஈமு கோழி மோசடியில் ஏமாந்து 
இன்னும் தலை காய்வதற்குள் 
இன்னும் ஒரு மகா ,மெகா ஹிட் மோசடி. 

இன்னும் தினம் தினம் ஒவ்வொரு மோசடியாக புற்றீசல்கள்போல் 
போல் வெளி வந்து கொண்டிருக்கின்றன
இன்னும் வாராமல் அமுங்கி கிடப்பது எத்தனையோ  யார் அறிவார்?

தமிழர்களே உங்களை கேட்கிறேன்?
உங்களுக்கு நேர்மையாகவே வாழ தெரியாதா?
ஏன் உங்கள் முதலீடுகளை இது போன்ற 
புரட்டர்களின் மாய பேச்சுக்கும்
பொய்யான வாக்குறுதிக்கும்
நம்பி கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறீர்கள்?

நியாயமான வட்டி தரும், அரசு முதலீடுகளிலோ
அல்லது வங்கிகளிலோ ஏன் முதலீடு செய்ய தயங்குகிறீர்கள் 
அல்லது செய்ய மறுக்கிறீர்கள்?

எத்தனை முறை ஏமாந்தாலும் திருந்தவே மாட்டேன் 
என்கிறீர்களே அது ஏன்?

இதற்கெல்லாம் ஒரே பதில்

உங்கள் பேராசை. 
நியாயாமான முதலீட்டை செய்ய  வேண்டுமென்றால் 
நேர்மை வேண்டும் அரசுக்கு செலுத்தவேண்டிய
வருமான வரியை செலுத்த வேண்டும். 
அவர்கள் உங்களிடம் கணக்கு கேட்பார்கள் 
ஏது இவ்வளவு பணம் என்பார்கள்?
அது நேர்மையான வழியில் தேடிய பணம்
என்றால் உங்களால் பதில் சொல்ல முடியும்?
அது வந்த வழி உங்களுத்தான் தெரியுமே?'

அதனால்தான் திருடனுக்கு தேள் கொட்டினால் 
வாயை மூடிக்கொண்டு பொறுத்து கொண்டுதான் ஆகவேண்டும். 
சத்தம் போட்டால் அவன் ஆட்டம் க்ளோஸ்

தமிழ்நாடு மக்களை  மிக சுலபமாக  ஏமாற்றலாம் 
அதற்க்கு பெரிய திறமை தேவையில்லை 
கவர்ச்சியாக இரண்டு நடிகைகளை 
அவர் எதிரில் நிறுத்தினால் போதும் 
உண்டி உடனே நிறைந்துவிடும் 
யார் வேண்டுமானாலும் எதை 
சொல்லி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.

அரசியல்வாதிகள் பொய்யை சொல்லியே 
ஆட்சியை பிடித்து பல தலைமுறைகளுக்கு 
சொத்து சேர்க்கலாம்.
வழக்கு வந்தால் பார்த்துகொள்ளலாம். 
அதற்குள் பலமுறை ஆட்சியை பிடித்து வழக்கை தள்ளி போட்டுகொண்டே  போகலாம்.
மக்கள் மறந்து விடுவார்கள்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவருக்கு வயதாகிவிடும்
இல்லை மாண்டு விடுவார். 

நடிகர்கள் பொய்யான தோற்றத்தை காட்டி,
ஒவ்வொரு படத்திலும் வெவேறு நடிகைகளுடன் 
உருண்டு கட்டி முத்தமிட்டு  நடித்து உங்கள் மனதில் 
கிளர்ச்சியை ஊட்டி அதற்க்கு பரிகாரமாக
 உங்களிடம் கோடிகோடியாய் பணத்தை அள்ளலாம்

நடிகைகள் சதையை காட்டி அவர்கள் பங்குக்கு
 உங்களை குஷிப்படுத்தி 
உங்கள் மடியில் உள்ள காசை பறிக்கலாம்.
அவர்கள் ஜாலியாக செய்வது நடிப்பு 
.உண்மையில் காலியாவது உங்கள் பையில்
 உள்ள காசும் இன்னொன்றும் ...

உலகில் உள்ள அத்தனை 
 மோசடிகளுக்கும் தாய்நாடு தமிழ்நாடு.
அனைத்து மோசடி மன்னர்களுக்கும்  தமிழ்நாடு ஒரு சொர்க்கம். 
பொன் முட்டையிடும் வாத்து. ஏன், வெள்ளி, வைரம், கூட

இங்குதான் அனைத்து விதமான மோசடிகளும் சுலபமாக அரங்கேறுகின்றன.

இம்மாநிலத்தவர்களும்  வெளி மாநிலத்தவர்களும் ,ஏன் வெளிநாட்டினரும் இங்கு வந்து எந்த உரிமமின்றி ,
பயமுமின்றி  தொழில் செய்து
கோடிகணக்கில் சுருட்டி  கொண்டு போகலாம்.
 மக்கள் விழித்து கொள்வதற்குள் 
அவர்கள் தங்கள் கூடாரங்களை காலி செய்து
வேறு ஒரு ஊரில் புதிய கணக்கை 
துவங்கி வெற்றிகரமாக் தொழில் நடத்தி கொழிக்கலாம்

ஏனெனில் தமிழனுக்கு மறதி அதிகம்,
சிந்திக்கும் திறன் மழுங்கி போய்விட்டது 
எதையும் ஏன் என்றும் எப்படி என்றும்
 கேள்வி கேட்க மாட்டான்

தெரு குழாயில் தண்ணீர் வராவிடில் 
அந்த பகுதி அரசியல்வாதிகளை சேர்த்துக்கொண்டு 
போராட்டம் நடத்துவான். தெரு குழாய் உடைந்து 
தண்ணீர் வீணாய் போனால் சும்மா பார்த்துகொண்டு நிற்பான்  மாநகராட்சி ஊழியர் வரட்டும் என்ற
 பரோபகார சிந்தனை உள்ள மற தமிழன்.

அவன் காது வழியாகவும் ,கண் வழியாகவும் 
வரும் செய்திகள் என்றும் அவன் மூளைக்கு
என்றுமே போவதேயில்லை 

வழியில் பேராசை ,சுயநலம் என்னும் 
இரண்டு வழிப்பறி  கொள்ளையர்கள் 
அதை தடுத்தி நிறுத்திவிடுவார்கள்.
அப்புறம் என்ன ?

காண வாருங்கள் .
அடுத்த தொலைகாட்சிக்கு
அலைவரிசைக்கு பேட்டி  கொடுக்க
தயாராகும் ஏமாளிகளின் 
சோகம் கப்பிய முகங்கள்தான்  

Everybody commits mistakes 
But fools alone will repeat them 

5 கருத்துகள்:

  1. இதற்கு மேல் விரிவாக சொல்ல முடியாது...

    இப்படி தெரிந்தோ, தெரியாமலோ ஏமாந்தவர்கள் சொல்வது (சில பேர்) : எங்களுக்கு தாராள மனசு...! (சமாளிப்பதிலும் தமிழனே முதல்வன்)

    பதிலளிநீக்கு
  2. தெரு குழாயில் தண்ணீர் வராவிடில்
    அந்த பகுதி அரசியல்வாதிகளை சேர்த்துக்கொண்டு
    போராட்டம் நடத்துவான். தெரு குழாய் உடைந்து
    தண்ணீர் வீணாய் போனால் சும்மா பார்த்துகொண்டு நிற்பான் மாநகராட்சி ஊழியர் வரட்டும் என்ற
    பரோபகார சிந்தனை உள்ள மறத் தமிழன்.//
    ---யதார்த்தம்!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு,DD,RN மற்றும் சேஷாத்ரி அவர்களே

    பதிலளிநீக்கு
  5. உண்மை பேசுபவன் தவறென்று தெரிந்தால்
    அதை ஏற்றுக்கொண்டு தன்னை திருத்திகொள்வான்
    இல்லையேல் தன்னை வருத்திக் கொள்வான்
    ஆனால் ஏமாளிகள் தங்களை மாற்றிகொள்வதும்
    தவறுகளை ஏற்றுக்கொள்வதும் மிக அரிது.
    அதனால்தான் அவர்கள் நிரந்தர ஏமாளிகளாக இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு