ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்

வன வளமும் நீர் வளமும் 
அதிகரிக்க சில யோசனைகள்

தமிழ் நாட்டில் ஏராளமான  
மலைகள் உள்ளன 
இரண்டு மலைகளுக்கும் 
இடையே பள்ளத்தாக்குகள் உள்ளன 
மழை காலத்தில் பெய்யும் 
மழை அப்படியே வழிந்து 
ஒன்றுக்கும் பயனில்லாமல் 
வீணாகி போய் கொண்டிருக்கிறது 

அது போன்ற பள்ளதாக்குகளில் இருபக்கங்களிலும் 
அங்கிருக்கும் மண்ணையும் கற்களை கொண்டே
 தடுப்பணைகள் அமைத்தால் அந்த தண்ணீர் வெளியேறாமல் 
அங்கேயே தேங்கி நிற்கும். அரசுக்கு எந்த செலவும் கிடையாது 

அதனால் மரங்களும் செடிகளும் கொடிகளும்
அங்கு அதிக அளவில் .வளரும்.
மண் அரிப்பு தடுக்கப்படும் 
கோடைகாலத்தில் விலங்குகளுக்கு  
தண்ணீர் பஞ்சம் வராது.
பறவைகளும் மற்ற
உயிரினங்களும் பல்கி பெருகும். 

தடுப்பணைகளின் உயரத்தை 
அதிகரிக்க செய்தால் 
குடிநீருக்கு கூட அந்த தண்ணீரை
 உபயோகிக்கலாம் 
ஏன் விவசாயத்திற்கு கூட 
பயன்படுத்தி கொள்ளலாம் 

மூலிகை பண்ணைகள் அமைக்கலாம் 












மக்களை அப்புறப்படுத்தி 
அந்த இடங்களில் 
நீர்த்தேக்கங்களை கட்டுவதை விட 
இது போன்ற மிக குறைந்த செலவில்  
பல தடுப்பணைகளை கட்டுவதால் 
பெரிய அளவில் மழை நீர் சேமிக்கப்படும் 
சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.
மக்களுக்கும் பயன்படும். 

வன துறையினர் இந்த திட்டத்தினை
செயல்படுத்தினால்
 நல்ல பயனைக்  கொடுக்கும் 
 என்பதில் சந்தேகமில்லை 

4 கருத்துகள்: