சனி, 29 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)

நம்  பண்டைய  மன்னர்கள்  
நீர்  மேலாண்மையில் நிபுணர்கள் 

மழை காலத்தில் பெய்யும்
நீரை சிறிதும் வீணடிக்காமல் 
மிக பெரிய அளவில் புத்திசாலிதனமாக
 பயன்படுத்தியுள்ளனர்.

மிக பெரிய ஏரிகளை கட்டி அதில் தண்ணீரை சேமித்து 
மதகுகள் கட்டி வருடம் முழுவதும் தண்ணீரை சிறந்த முறையில் 
கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு நீர்பாய்ச்சி
வெற்றிகரமாக  விவசாயம் செய்தனர். 
ஏரிக்கரையின் கீழ் இருக்கும் நிலங்களில் இரண்டு போகமும்.
மிக தள்ளி இருக்கும் இடங்களில் ஒரு போகமும் பயிர் செய்தனர். 

அதை தவிர பல இடங்களில் அனேக குளங்களை வெட்டி
தண்ணீர் ஆண்டு முழுவதும் மக்களுக்கு 
பயன்படும்வகையில் அமைத்திருந்தனர்.
நிலங்களின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப மழைக்காலங்களில் 
பெய்யும் நீர் இந்த குளங்களை நிரப்பிவிடும். 

ஏரிக்க்கருகில் குடிநீர் குளங்களை
பெரிய அளவில் அமைத்தனர். 
அதில் நீர் தாவரங்களை வளர்த்து
,நீர் ஆவியாகாமல் பாதுகாத்தனர் 
மீன்களை விட்டு நீரை சுத்தமாக  வைத்தும்.
ஆண்டு முழுவதும் மக்களுக்கு சுவையான
குடிநீர் கிடைக்க வழி வகை செய்தனர். 
குளத்திற்கு. ஒரு காவலரை நியமித்து
அதை நன்றாக பராமரித்தனர் 

கால் நடைகள் குடிக்கவும்
அவைகளை குளிப்பாட்டவும், 
மற்ற காரியங்களுக்கு தனியாக
குளங்களை வெட்டி வைத்தனர்.

ஏரிகளை நன்றாக பராமரிப்பு
செய்தமையால் ஆண்டு 
முழுவதும் ஏரியில் நீர் இருக்கும்.
நீர் குறையும்போது ஏரிகளை
ஆழப்படுத்தும்  வேலைகளை செய்தனர்.  
அந்த வண்டல் மண்ணை பயிர்களுக்கு
உரமாக பயன்படுத்தினர் 

ஏரிகளில் நீர் நிரம்பி இருந்ததால்
ஊரில் உள்ள அனைத்து 
கிணறுகளிலும் நீர் நிரம்பி வழிந்தது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை 
வரை கிணற்றில் நீர் மட்டம் கையால்
 நீர் மொண்டு கொள்ளும் 
அளவிற்கு இருந்ததை
அந்த கால மக்கள் அறிவர். 

இன்று ஏரிகளும் இல்லை.
அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன, 
ஏரிகளில் நீர் வறண்டதால் கிணறுகளும் வறண்டுவிட்டன
குளங்களும் வறண்டுவிட்டன, நிலத்தில் நீர் மட்டம் 
பல நூறு அடிக்கு சென்று விட்டது. இன்னும் சில இடங்களில் 
எவ்வளவு  ஆழம் சென்றாலும் நீர் கிடையாது. 

நதிகளில் நீரை தேக்கி வைக்கும்
 மணலை எடுத்து
விற்று  நதிகளில் வண்டல் மண்
இல்லாமல் செய்துவிட்டனர். 
மழை காலத்தில் பெய்யும் நீர்
செல்ல வழிகள் இல்லாமையால் 
எல்லா இடங்களிலும் மழை நீர் 
தேங்கி வீணடிக்கப்படுகிறது. 
கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி
 மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர் 
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். 
நதிகளில் மழை நீர் அப்படியே ஓடி கடலில் வீணாகிவிடுகிறது.

இந்த அவல நிலையை தடுப்பதற்கு
எந்த  அரசுகளும் முயற்சி  செய்யாமல்
மற்ற மாநிலங்களோடு மோதல் போக்கை கடைபிடித்தும் 
நீதிமன்றம் சென்று காலத்தை கடத்தியும்
அரசு பணத்தை பாழடித்து கொண்டு வருகின்றன

நாம் மீண்டும் மன்னர்கள் காலத்தில்
கடைபிடிக்கப்பட்ட
நீர் மேலாண்மைக்கு திரும்பினால்  
இந்த பிரச்சினையே  நமக்கு இருக்காது 
நாம் பிறர் கையை எதிர்பார்க்க
வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை
ஆனால் அதை யார் செய்வது?

முற்காலத்து மன்னராட்சி
மீண்டும் மலர்ந்தால்தான் 
இதுபோன்ற நல்ல  காரியங்கள் நடக்கும் 
(இன்னும் வரும்)

6 கருத்துகள்:

  1. அருமையான இன்றைய ஆட்சியாளர்களும்
    அதிகாரிகளும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டிய
    விஷயமிது
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பதிவை படித்து
    பின்னூட்டமிட்டு
    வாழ்த்தியமைக்கு
    நன்றி திரு ரமணி அவர்களே

    பதிலளிநீக்கு
  3. ஐந்து ஆண்டுகள் மட்டுமே
    ஆட்சி செய்யமுடியும்
    என்ற நிலையில் ஆளும் அரசுகள்
    தங்கள் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும்
    முயற்சியில்தான் பதவியேற்ற நாள் முதல்
    பதவியிலிருந்து விலகும் வரை மாற்றி மாற்றி
    ஒவ்வொரு கணமும் பிரச்சினைகளையும் வன்முறைகளையும் போராட்டங்களையும் தேவையற்ற விமரிசங்களையும் செய்து
    எந்த பணியையும் செய்ய நினைத்தாலும் அதற்க்கு அரசியல்,மத,ஜாதி,இனம்,மொழி,சாயம் பூசி
    வழக்குகள் தொடர்ந்து நிர்வாகம் செய்ய விடாமல் தடுத்தும்
    மக்களையும் குழப்பிவரும் எதிர் கட்சிகளாக விளங்கும் எதிரி கட்சிகளும்,உதிரிகட்சிகளும்,ஊர் வம்பர்களும் ,மத்தியஅரசுகளின் ஒத்துழையாமை நிலைப்பாடு,அண்டை மாநில அரசுகளுடன் சுமுகமான உறவுகள் இல்லாமை,லஞ்சம்,ஊழல் போன்ற சீர்கேடுகள்
    பொது மக்களிடையே விழிப்புணர்வின்மை, மற்றும் இன்னும் பல காரணங்களினால் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் ஒன்றும் செய்ய இயலாது
    மீண்டும் ஆட்சிக்கு வருவதை பற்றி கவலைப்படாமல் விமரிசனங்களில் நல்லவைகள் மட்டும் இருந்தால் ஏற்றுக்கொண்டு மற்றவைகளை தள்ளி நாட்டு மக்களுக்கு நீண்ட காலம் நலம் பயக்கின்ற திட்டங்களை செயல்படுத்தும் துணிவுள்ள தலைமை நம் நாட்டிற்கு அமைந்தால்தான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கும்

    அதற்க்கு வானிலிருந்து ஒரு நல்ல உள்ளம்
    நாம் படும் துன்பங்களை கண்டு இரக்கம் கொண்டு
    இங்கு பிறவிஎடுத்தால்தான் நல்லது நடைபெறும்

    அதற்க்கு நம்மையெல்லாம் படைத்து காக்கும்
    அந்த இறைவனிடம் அனைவரும்
    மத வேறுபாடுகளை மறந்து வேண்டுவோமாக

    பதிலளிநீக்கு
  4. பணம் பணம் பணம் - இதைத் தவிர ஆட்சியாளர்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை...

    பதிலளிநீக்கு
  5. ஆட்சியாளர்களுக்கு மட்டும்
    தேவை இல்லை பணம்
    அவர்களை ஆட்சியில் அமரவைக்கும்
    வாக்காளர்களும்தான்
    பணப்பேய் பிடித்து ஆடுகிறார்கள்
    பாடுகிறார்கள், ஓடுகிறார்கள்
    முடிவில் அல்லல்படுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    இப்போது கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்வ்து முதலில் அரசு; பிறகு மக்கள்.

    பதிலளிநீக்கு