சனி, 29 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)


அந்த  நாள்  நினைவிலே வந்ததே (பகுதி -17)

அந்த காலத்தில் மக்கள் இயற்கையான பொருட்களையே 
பயன்படுத்தினார்கள் அது மண்ணோடு மண்ணாகி
மக்கி உரமாகிவிடும். மக்களுக்கு பாரமாக இருக்காது .

இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள்
 உலகம் உள்ளவரை சிரஞ்சீவியாக வாழும் 
என்பது அனைவரும் அறிந்ததே 
ஆனால் அறிந்தும் தவறு செய்வதுதான் 
இந்த கால  பாஷன் 

இன்று எங்கே பார்த்தாலும் குப்பைகள் 
எங்கே திரும்பினாலும் துர்நாற்றம் 
காரணம் அனைவருக்கும் தெரியும்

அதுதான் பார்க்கின்ற இடமெல்லாம் நிற்கின்ற இடமெல்லாம் 
இயற்கையோடு இயந்து இயற்கை உபாதைகளை கழிப்பது
ஒரு இடத்தையும் விடுவதில்லை அவர்கள் 
அதுவும் கோயில்,பள்ளிகள்,மற்றும் சுற்று சுவர்கள் இருந்தால் போதும். 
அதன் அருகில் யாரும் செல்ல முடியாது.
அரசு கட்டி கொடுத்த கழிப்பிடங்கள் உள்ளே நுழைய முடியாத 
அளவிற்கு வழிஎங்கும் அசுத்தம் செய்வது அவர்களின் கேளிக்கை
குளக்கரை, ஏரிக்கரை, நதிக்கரை,ஏன் கடற்கரை, என்று அனைத்து இடங்களிலும் 
ஆடு மாடுகள் போல் கழிவது மக்களுக்கு கை வந்த கலை. 

எப்போது பார்த்தாலும் ஈ கொசுக்கள் தொல்லை 
முன்பெல்லாம் இரவில்தான் கொசுக்கள் கடிக்கும் 
பகலில் இருக்காது. ஆனால் இப்போது 
அதற்க்கு நேரம் காலமே கிடையாது 
அது காலையிலும் கடிக்கும்,பகலிலும் கடிக்கும் ,
இரவிலும் கடிக்கும், தூங்கும்போது கடிக்கும்,
ஏன் நாம் நன்றாக  விழித்து கொண்டிருக்கும்போதே கடிக்கும்.
டெங்கு  கொசு கடித்தால் ஆளையே கொன்றுவிடும்.
அனைவருக்கும் தெரியும்

.இருந்தாலும் கொசு உற்பத்தியில் நம் நாடுதன்னிறைவு 
அடைவதில்  நாம் மும்முரமாக இருக்கிறோமே தவிர 
அதை தோன்றாமல் தடுப்பதில்
அக்கறை காட்டுவதில்லை  
இன்று அது மனிதர்களை விட அதி புத்தி சாலியாகிவிட்டது .
மனிதன் அதை ஒழிக்க,கிரீம்களை பயன்படுத்தினால் 
அவன் தூங்கும்வரை பொறுமையாய் இருந்துவிட்டு 
அவன் தூங்கியவுடன் அவனை கடித்து குதறிவிடுகிறது. 

கொசுவிரட்டிகள் எதற்கும் அது பயப்படுவதே கிடையாது. 
அது சாவதற்கும் அஞ்சுவது கிடையாது. எப்படியாவது 
உயிர் போவதற்கு முன்  ஒரு தீவிரவாதிபோல்  
பல மனிதர்களை கடித்து நோய் கிருமிகளை 
அவன் உடம்பில் செலுத்தி,அவன் ரத்தத்தை உறிஞ்சி  
லட்சக்கணக்கில் முட்டையிட வேண்டும் என்ற 
அதன்குறிக்கோளை அது கட்டாயமாக நிறைவேற்றிவிடும் 
அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது 

இந்த கொசுக்களை வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள்  பல பெயர்களில் 
விஷங்களை காற்றில் பரப்பும் கொசு விரட்டிகளை தயாரித்து கவர்ச்சிகரமாக
விளம்பரம் செய்து காற்றில் பரப்பி நம்மை  நிரந்தர நோயாளிகளாக்கி கொழுத்து வருகின்றன. 

அந்த காலத்தில் மழைகாலங்களில் ஒருவிதமான கொசுக்கள் வரும்
 மாமரம், புளியமரம் பூக்கும் காலத்தில்சின்னஞ்  சிறிய கொசுக்கள் 
வந்து தொல்லை கொடுக்கும் அவ்வளவுதான்.
அந்த காலத்தில் தண்ணீர் தேங்குவது கிடையாது 
எனவே அவ்வளவாக கொசுக்கள் உற்பத்தியாவதில்லை . 

இன்றோ  நாம் நன்றாக போர்த்திக்கொண்டு படுத்தாலும் 
நம் மூக்கின் மேல் வந்தமர்ந்து கடித்து நம் தூக்கத்தை 
குலைக்கின்றன கொசுக்கள் கூட்டம் 

எல்லாவற்றிற்கும்  காரணம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள
கழிவறைகளிருந்து வெளியேறும் கழிவு நீர் தொட்டிகளிளிருந்து 
உற்பத்தியாகும் கொசுக்கள்தான்.
அதற்க்கு ஒரு வலை கட்டிவிட்டால் கொசுக்கள் உள்ளேயே செத்து  போகும். 

ஆனால் பாவம் நம் மக்கள் ஒரே வேளை கஞ்சிக்கே கஷ்டபடுகிறார்கள். 
அவர்கள் எங்கே காசுக்கு போவார்கள்? 
மருத்துவர்களுக்கு வேண்டுமென்றாலும்  ஆயிரக்கணக்கில் அழுவார்கள்
இந்த சின்ன கொசு தடுக்கும் முறைக்கு ஒத்துழைக்கமாட்டார்கள்.
ஒத்து வேண்டுமானாலும் ஓதுவார்கள்  . 

சாக்கடைகளில் குப்பைகளை கொட்டி அதில் சாக்கடை நீர் தேங்கி
கொசுக்கள் உறபத்தியாவதற்கு  நாம்தான் காரணம். 

ஆனால் எதை பற்றியும் நம் மக்களுக்கு கவலையில்லை.
 மக்காத குப்பைகளையும் வேண்டாத அனைத்து பொருட்களையும் 
வசதியாக கழிவு  நீருடன் சாக்கடையில் சேர்த்து 
கொட்டி மகிழ்வது நம் அடிப்படை உரிமை.

அதை யாராவது கேள்வி கேட்டால் உம் வேலையை பார்த்துகொண்டு போ 
என்று சொல்வதும் அவர்கள் அடிப்படை சுதந்திரம்.
 நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பார்கள்.
யார் இவர்களை திருத்துவது? யாராலேயும் முடியாது. (இன்னும் வரும்)

3 கருத்துகள்:

  1. அதுவும் இந்த பிளாஸ்டிக் (பைகள், பாட்டில்கள், etc.,) பொருட்கள் எல்லாம் மலைப்பகுதியில் தூக்கி எறிவதால், மண்ணிற்கும் விலங்குகளுக்கும் எத்தனை எத்தனை இன்னல்கள்...

    பதிலளிநீக்கு
  2. அரக்கர்களை மனிதர்களால் அழிக்க முடியாது
    அவர்களை அழிக்க அந்த இறைவன்தான்
    அவதாரம் எடுத்து வரவேண்டும்
    அதுபோல்தான் இந்த பிளாஸ்டிக்கும்,
    மின்சாதன கழிவுகள்,அணு உலைக்கழிவுகள்
    போன்றவை.

    பதிலளிநீக்கு