வெள்ளி, 29 மார்ச், 2013

இந்த நிலை என்று மாறுமோ?


இந்த நிலை என்று மாறுமோ?


பள்ளி செல்லும் குழந்தைகள் படும் பாடு 
நம் நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்
















இந்தோநேஷியாவிலும் இதே கதிதான் போலும். 



















குழந்தைகள் மீது 
அளவு கடந்த
பாசம் வைத்திருக்கிறார்கள் 
பெற்றவர்கள். 

குழந்தை இல்லாதவர்களை மலடி 
என்று மனம் நோக வாய்க்கு வாய்  
 பேசி இன்பம் காணும் சுற்றமும் உற்றமும். 

குழந்தை பெறுவதற்கு ஊர் ஊராய் 
கோயில் கோயிலாய் சுற்றி 
பல ஆயிரங்களை தொலைக்கும் பெற்றோர்

ஒரு குழந்தை பெறுவதற்கு 
பல லகரங்கள் வரை செலவழிக்கும் 
குழந்தையில்லா தம்பதியினர்.

அதற்கும் வழியில்லாவிட்டால் 
குழந்தைகளை தத்து எடுப்பது 
 வேறு நடக்கும்.  

இப்படி பிறந்து விட்ட 
இந்த குழந்தைகள் 
இந்த உலகில் படும் பாடு 
சொல்ல தரமன்று. 

ஒரு  பானை சோற்றுக்கு 
ஒரு சோறு பதம் போல்தான்
 இவர்களின் பள்ளி செல்லும் பருவம். 


ஆனால் அவர்களை
பள்ளிக்கும் 
அனுப்பும்போதுமட்டும் 
அந்த பாசம் 
எங்கே போய்விடுகிறது 
என்று தெரியவில்லை. 

இவ்வளவு ஆபத்தான 
சூழ்நிலைகளை சந்திக்க
குழந்தைகளை 
விட்டுவிடுகிறார்கள். 

அரசும் இந்த அவலத்தை
கண்டு கொள்வதில்லை. 
என்ன உலகமோ?

பள்ளி நிர்வாகங்களும் 
கண்டுகொள்வதில்லை 

இந்த நிலை என்று மாறுமோ?

1 கருத்து: