புதன், 22 ஆகஸ்ட், 2012

நாம் எங்கே போய்கொண்டிருக்கிறோம் ?;


நாம்  எங்கே  போய்கொண்டிருக்கிறோம் ?;

இந்த  சமுதாயம்  திருந்தாதோ ?
அறியாமையிலிருந்து மீளாதோ ?

தினம்  தினம்  மக்கள்   எந்தவகை  மோசடியில்லாவது  
ஏமாறும்  காட்சி  அரங்கேறுவது  என்றுதான்  
நிற்கும் ?

எங்கு  பார்த்தாலும்  மோசடி  எதிலே  பார்த்தாலும்  மோசடி 

ஊடகங்களில்  ஒவ்வொரு   நாளும்  வகை  வகையான  மோசடி  மன்னர்கள்  தோன்றிக்கொண்டே  இருக்கிறார்கள் . அவர்களிடம்  ஏமாறும்  கூட்டம்  பல  லட்சங்களை  இழந்து  காவல்  துறையிடம்  புலம்பி  திரியும்  கூட்டம்  நாளுக்கு  நாள்  பெருகி  கொண்டே  போகிறது 

உழைக்கின்றவனுக்கு குறைந்த ஊதியம் 
அவன்  குடும்பத்தை  நடத்த  வருவாய்  பற்றாமல்  கடன்  வாங்கி  வட்டி ,மீட்டர்  வட்டி ,ச்பீட்மீட்டர்  வட்டி  என  சமூக  விரோதிகளிடம்  மாட்டிகொண்டு  தானும்  அழிந்து  குடும்பத்தையும்  துன்பத்தில்  வாடும்  நிலை  ஆனால்  பணக்காரர்கள்  அதர்ம  வழியில்  பொருளீட்டி  கொழுத்து  உல்லாச  வாழ்க்கை  வாழுகின்றனர் 

தீய  வழியில்  சேர்த்த  செல்வதை  குறிவைக்கும்  ஆள் கடத்தி  பணம்  பறிக்கும்  கும்பல்கள்  பெருகிவிட்டன 

பணக்காரர்கள் , அரசு  அதிகாரிகள் ,பெண்கள் .அப்பாவிகள்  இவர்களை  ஆன்மிகம்  என்ற  போர்வையில் ஏமாற்றி  கொழுக்கும்  போலி  சாமியார்கள்  ஒரு  பக்கம் 

சமீபத்தில்  வெளிவந்த  செய்திகளின்  படி  ஒரு  போலி  
சாமியாரின்  வங்கி  லாக்கரில்  ஒரு  கோடிக்கு  மேல்  மதிப்புள்ள  தங்கம்  வெள்ளி  வைர  நகைகளை  கைப்பற்றியுள்ளனர்  காவல்  துறையினர் .
எல்லாவற்றையும்  துறந்த  சாமியார்களுக்கு  ஏது  இவ்வளவு  பணம் ?

மக்களை  ஏமாற்றுவதில்  எந்த  மதத்தினரும்  சோடை  போவதில்லை

போதாக்குரைக்கு விட்டில்  பூச்சிகளாய்  விழுந்து  மாயும்  பெண்கள்  கூட்டம் .;. பாலியல்  கொடுமைகளுக்கு  ஆளாகி  வெளியில்  சொள்ளமுடியாமால்  மாயும்  கூட்டம்  சமீப  காலத்தில்  அதிகரித்துள்ளது 

இதுபோன்ற சமுதாய தீமைகளிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள விழிப்புணர்வு தேவை. 
எதையும் ஆராயாமல் கண்மூடித்தனமாய் நம்பு பழக்கம் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்

மக்கள் விழித்து கொண்டால் இது போன்ற மோசடி பேர்வழிகள் வளராமல் தடுக்கலாம் 

1 கருத்து:

  1. /// மக்கள் விழித்து கொண்டால் இது போன்ற மோசடி பேர்வழிகள் வளராமல் தடுக்கலாம் ///

    உண்மை... நன்றி...

    பதிலளிநீக்கு