ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

எங்கெங்கும் காணினும் குப்பையடா

எங்கெங்கும் காணினும் குப்பையடா 

இன்று எங்கு பார்த்தாலும்குப்பைகள்தான்

சாலை ஓரமாகட்டும் பேருந்து நிலையங்கள் சந்தைகள் ரயில் நிலையங்கள் காலி மனைகள் உணவகங்கள்நீர்நிலைகள்கோயில்கள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள்

குப்பைகளை சகட்டு மேனிக்கு கண்டஇடங்களில் விட்டெரியும் மூட மக்கள்
மக்கும் குப்பைகளோடு மக்காத பிளாஸ்டிக் தெர்மோகோல் கண்ணாடி என பலவிதமான இறைச்சி மற்றும்மருத்துவமனை கழிவுகள்என அனைத்தையும் ஒன்றாக கலந்து தெருக்களில் வீசுகின்றனர்

நிர்வாகங்கள் குப்பைகளைஅப்புறப்படுத்தவும் முடியாமல் அப்புறப்படுத்திய குப்பைகளை தரம் பிரித்து அழிக்கமுடியாமலும் திணறுகின்றனர்

இன்று அனைத்து ஆறுகளும் நீர் நிலைகளும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு விளைவிக்கும்
கூடங்களாக ஆகி விட்டன

முன்பெல்லாம் இரவில் மட்டும் வலம்வந்து மக்களை பதம் பார்த்த கொசுக்கள் தற்போது பகல் பொழுதிலேய தேள் கொட்டுவதுபோல் நம்ரத்தத்தை உறிஞ்சி சுவைக்கின்றன அவைகள் எந்த கொசு விரட்டிக்கும் பயப்படுவதில்லை
பிளாஸ்டிக் குப்பைகள் சாக்கடைகளை அடைத்துக்கொண்டு க்கொண்டு தண்ணீர் தேங்கி ஈக்களும்நோய்பரப்பும் கிருமிகளும் உற்பத்தியாகி lமக்களின் வாழ்வை நரகமாக்கி விட்டன

மக்கள் கொசு விரட்டிகளுக்கும்மருத்துவ செலவுகளுக்கும் செலவு செய்ய அஞ்சுவதில்லை

ஆனால் அனைத்திற்கும் மூல காரணமான குப்பைகளை
முறையாகதரம் பிரித்து தம்சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க நிர்வாகத்துடன் ஒத்துழைத்து சுகாதாரமான வாழ்க்கை வாழுவதற்கு முயலாத வரையில் நிலைமைஇன்னும் மோசமாக போவதைதவிரவேறு வழியில்லை 

1 கருத்து:

  1. அவரவர் உணர வேண்டும்...
    கொசுக்கள் மட்டுமா ? மண்ணின் வளம் கெட்டுப்போகிறதே... (பிளாஸ்டிக் பேக்ஸ்)...

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    பதிலளிநீக்கு