திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தப்பு செய்தவன் திருந்தியாகணும்

படித்தால் மட்டும் போதுமா ?

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பல லட்சம் செலவு செய்து 
ஒரு சான்றிதழ் வாங்கி விட்டால் போதுமா?

சான்றிதழை வைத்து ஒரு வேலை வாங்கி 
உழைத்து காசுபார்த்தால் போதுமா?

இவையெல்லாம் எதற்க்காக? 

சுகமாக ,இன்பமாகவாழ .

ஆனால் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? 

புகை உடலுக்கு பகை என்று தெரிந்தும் அதனால் பலவிதமான புற்று நோய்கள் மற்றும் ஆண்மை குறைவு வரும் என்று நன்றாக தெரிந்திருந்தும் ,தான் புகை பிடித்து தன் வாழ்வை நாசமாக்கி தன்னை தானே கொல்வதுடன் தன் மனைவி, குழந்தைகள், தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்வையும் நாசமாக்கும் மூடர்களை  பற்றி என்ன கூறுவது?

அதேபோல்தான் மதுவும், போதை பொருட்களும்,தகாத உறவுகளும்  

பிறகு நோய்வாய்பட்டு வாழ்க்கையில் பல்லாண்டு காலம் உடல்நலத்தை கவனியாது பணம் ஒன்றையே குறியாக கொண்டு சேர்த்த பணத்தை லட்சகணக்கில் மருத்துவ மனைகளில் அழுதுவிட்டு புலம்புவதில் என்ன பயன்? 

வாழ்க்கையை நல்ல நெறியுள்ள வாழ்க்கை யாக வாழும் கல்வி நெறி போதிக்கப்படவில்லை.பணம் சம்பாதிப்பதும்,ஊதாரிதனமாக பயனின்றி செலவழிப்பதும் காண்பதை எல்லாம் வாங்கி வீட்டில் அடுக்குவதும் தேவைக்குமேல் சொத்துக்களை சேர்ப்பதும் தான் இன்றைய கலாசாரம்

தானும் மகிழ்ந்து பிறருடனும்  மகிழ்ச்சியாக வாழும்  வாழ்வு 
இன்று பெரும்பாலோனாரிடம் இல்லை .ஏதாவது ஒரு ஏக்கம் மற்றும் கவலைகள்  மக்கள் மனதில் கோலோச்சி கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது .யார் மனதிலும் திருப்தி  எந்த விஷயத்திலும் இல்லை   

தப்பு செய்தவன் திருந்தியாகணும் 

ஆனால் தவறு செய்தவன்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை. 


1 கருத்து: