திங்கள், 20 ஆகஸ்ட், 2012

IT IS A NEW LIFE EVERYDAY


IT IS A NEW LIFE EVERYDAY

ஜேம்ஸ் ஹாலன் என்ற அறிஞன் சொன்னான்
IT IS A NEW LIFE EVERYDAY என்று

இந்த கருத்தை மஹாகவி பாரதி தன் பாடலில்

சென்றதினி மீளாது மூடரே
நீவிர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய் பிறந்தோம்
என்ற எண்ணமதை சிந்தையில் கொண்டு தின்று
விளையாடி இன்புற்று வாழ்வீர்
தீமைகள் ஒழிந்து போம் திரும்பி வாரா
என்று.

இறைவன் நமக்கு தினமும் 
24 மணி நேரம் அளிக்கின்றான்
அதை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் 
என்பதை பொறுத்துதான்
நம் வாழ்வு அமைகிறது

120கோடி மக்களை ஆளும் ஜனாதிபதிக்கும் 
அதே 24 மணிநேரம் தான்
ஒரு சாதாரண மனிதனுக்கும் 
அதே 24 மணிதான்
கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும்
பல நிறுவனங்களை நிர்வகிக்கும்
அதன் முதலாளிக்கும் 24 மணி நேரம் தான்
ஒன்றும் செய்யாத சோம்பேறிக்கும் அதே 24
மணி நேரம்தான் 

எனவே நேரத்தை தன் அறிவை பயன்படுத்தி
திறமையாக செயல்படுபவனே வெற்றி பெறுகிறான்
அந்த நேரத்தையும் சுயநலமின்றி 
மற்றவர்களின் கண்ணீரை துடைப்பவனே 
மகாத்மாவாகிறான் 

மனிதரின் மனங்களில் 
தெய்வமாக ஆகிவிடுகிறான் 

1 கருத்து:

  1. /// மற்றவர்களின் கண்ணீரை துடைப்பவனே
    மகாத்மாவாகிறான்

    மனிதரின் மனங்களில்
    தெய்வமாக ஆகிவிடுகிறான் ///

    உண்மை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு