செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

இதுதான் இந்தியா

இதுதான் இந்தியா 

இங்கேதான் புனித கங்கையும் ஓடுகிறது
சதையை காட்டி காசுக்காக 
சாக்கடையில் புரளும் நங்கைகளும் 
திரைப்படங்களில் ஆபாச 
நாட்டியம் ஆடுகிறார்கள் 

ஆபாசம் என்று கூக்குரலிட்டால்  போதும் 
ஒரு கூட்டம் தொடுக்கும் கணைகளை 
ஆபாசம் எங்கள் ஆட்டத்தில் இல்லை 
உங்கள் பார்வையில்,எண்ணத்தில் தான் என்று 

புளுகுமூட்டை அரசியல்வாதிகளும்
 எப்பாடுபட்டாகிலும் 
பதவியை தக்க வைக்க 
ஓடுவதும் இங்கேதான் 

எவ்வளவு கோடி ஊழல்கள் செய்தாலும் 
தங்களுக்கு அதற்கும் எந்தவிதமான  
சம்பந்தமும்  இல்லை என்று 
அடித்து சொல்வது ஆளும் 
கட்சியின் தந்திரம் 

அதை காரணம் காட்டி சபை
 நடவடிக்கைகளை முடக்குவது 
எதிர்கட்சிகளின் மந்திரம் 

இந்த நாட்டில்தான் விஞ்ஞானிகள் 
செயற்கை கோள்களை 
வானில் விட்டு நம் நாட்டின் 
மானத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் 

இங்கேதான் நம் அரசியல்வாதிகள்
பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு
ஊழல் செய்து நம் நாட்டின் மானத்தை
காற்றில் பறக்க விடுகிறார்கள் 

பெண்களே தெய்வம் என்று 
போற்றும் நாடு நம் நாடு 

புராண காலம் முதற்கொண்டு
இன்று வரை பெண்களை
நடுத்தெருவில்,அல்லது 
அரசவையில்  ஆடைகளை களைந்து 
பாசமாக ஆபாச காட்சிகளை
நிறைவேற்றி ரசிக்கும் 
மக்களை கொண்ட 
நாடும் இதுதான் 

இங்குதான் உழைக்கும்
 வர்க்கம் சாகும்வரை 
உழைத்துக்கொண்டே இருக்கும் 

அதுபோல் அவர்களை 
ஏமாற்றி பிழைக்கும் வர்க்கம் 
பிழைத்து கொண்டே இருக்கும் 

பேராசை பெரு நஷ்டம் என்று
பள்ளியில் பாடம் படிப்பதும் 
வளர்ந்த பிறகு இலவசங்களுக்கு 
பேராசைப்பட்டு பாடுபட்டு சேர்த்த
காசனைத்தையும் கண்ணை 
மூடிக்கொண்டு ஒரே ஒரு புரட்டனிடம் 
அழுதுவிட்டு ஏமாந்து புலம்புவதும் 
இந்த நாட்டில்தான்

புகை பிடித்தால் புற்றுநோய் வரும்
 என்று தெரிந்திருந்தும் 
புன்னகையுடன் புகை பிடித்து 
நுரையீரல்களில் நச்சு படிந்து 
டிபி நோய்கண்டு இருமி இருமி 
லட்சகணக்கில் மக்கள் 
மாண்டுபோவதும் இங்கேதான் 

மண்ணாசையும் 
மண்ணாசையும் வேண்டாம் என்று
காவி வேட்டி கட்டி வெட்டிபேச்சு பேசி 
மக்களை ஏமாற்றி மடங்கள் கட்டுவதும் 
அதில் படித்த முட்டாள்களை 
மூளை சலவை செய்து ஏமாற்றி 
சீடர்களாய் ஆக்கி அழகிகளுடன் 
கூத்தடிப்பதும்  இங்கே தான் நடக்கும் 

அழுக்கு உடை உடுத்தி 
தாடி வளர்த்துகொண்டு 
கண்டதை தின்று,
கண்ட இடத்தில படுத்து 
புரியாமல் பேசிகொண்டிருந்தாலோ 
அல்லது பேசாமல்
மௌனம் சாதித்தாலோ  போதும்
உம்மை சித்தர் பட்டமும் 
ஆட்டு மந்தை கூட்டமும் 
தானே தேடி வரும்  

ஒரே நாளில் உலகத்தின் 
உச்சியில் கொண்டு சேர்க்கும் 
சாதனம் திரைப்பட துறை .
அதுதான் இன்றைய தமிழக இளைஞர்களின்
மற்றும் யுவதிகளின் கனவு.
குகையின் வாயிலில் மட்டும் வெளிச்சம் 
தோன்றுவதை மட்டும் 
நம்பி குகையின் உள்ளே காரிருள் 
இருப்பதை அறியாது பள்ளத்தில் 
வீழ்ந்து கருகி போகும் 
இளைய சமுதாயம் பல லட்சம்

இன்னும் வரும் 





1 கருத்து:

  1. அனைத்தும் உண்மை வரிகள்...

    மாறும் காலம் வரும்... வர வேண்டும்... வந்தே தீரும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு