வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மீண்டும் நமது இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்

மீண்டும்  நமது  இந்திய  கலாசாரத்திற்கு  மாறுவோம்

காலையில்  எழுந்ததும்  பல்  துலக்க 
டூத்  ப்ருஷையும் பற்பசையையும் 
பல்லாண்டுகளாக  நாம் 
பயன்படுத்தி  வருகிறோம்

முற்காலத்தில் விரல்களால் ஈறுகளை அழுத்தி 
பல் தேய்த்து வந்ததால் பற்கள் முறையாக 
முளைத்து முத்துப் பற்கள்போல் உறுதியாக இருந்தன 



ப்ரஷ் பயன்பாடு வந்தவுடன் பற்கள் 
கோணல் மாணலாக வளர்ந்து அவைகளை ஒழுங்குபடுத்த 
அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றுவிட்டது இந்நாளில் 

விளைவு  ஒவ்வொரு  ஆண்டும் 
இதற்காக  மட்டும் ஒவ்வொரு குடும்பத்தில்  மக்கள் 
பல  ஆயிரம்  ரூபாய்களை தொலைக்க வேண்டியுள்ளது 

ஒரு ப்ரஷ் 10 ரூபாயிலிருந்து
 பல் நூறு ரூபாய் வரை விற்கிறது.
எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் 
அதன் வாழ்வு 2  மாதங்கள்தான். 

அப்படி அதைக்கொண்டு பல் விளக்கினாலும்.
 பற்கள் சுத்தமாவதில்லை.

பற்களில் சிக்கிக்கொள்ளும் உணவுப் பொருட்களை 
எடுக்க டூத் பிக்ஸ் மாதம் ஒரு டப்பா வாங்க வேண்டும்.

அப்படி  இருந்தும்  
பற்கள்  கெட்டு  போய்விடுகின்றன



காரணம்  பற்பசையில்  
எந்த  மருத்துவ  குணங்களும்  கிடையாது 
சுண்ணாம்பும்  ,நுரை  வரும்  
ஒரு  ரசாயனமும்தான்  உள்ளது 
.
இதைதவிர  சில மாதங்களுக்கு  ஒரு முறை 
டூத் ப்ருஷை   மாற்ற  வேண்டும் 
அதற்க்கு  வேறு  செலவு செய்ய   வேண்டும்

இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை 
சுலபமாக மேனாட்டு நிறுவனகள் 
நமது நாட்டின் வளத்தை 
கொள்ளையடித்து கொழுக்கின்றன

இந்த ப்ரஷ்கலால் பல்லில் 
படியும் காரையை 
நீக்க முடியாது 

அதற்க்கு பல்மருத்துவர்களிடம்தான் 
செல்ல வேண்டும் 
அவர்கள் எந்திரத்தின் உதவிகொண்டு 
சுரண்டி தள்ளுவார்கள் ஏற்கெனவே
 நம்  பல்லின்  மேல் உள்ள எனாமலையும்.  சேர்த்து. 



  
பல்வலி  என்று  பல் வைத்தியர்களிடம்  சென்றால்
பல ஆயிரங்களை  இழக்க  வேண்டியுள்ளது 



ஒரு தடவை நுழைந்தால் போதும் சாகும் வரை அல்லது மொத்த பற்களும் விழுந்து, பல் செட் கட்டும் வரை போய்க்கொண்டேதான் இருக்கவேண்டும். 



ஒரு காலத்தில் பெரு  நகரங்களில் மட்டும் இருந்த பல் வைத்தியர்கள். இன்று தெருவு தெரு மருத்துவ மனைகளை திறந்து வைத்துள்ளனர். 
.
ஆனால்  கடந்த  காலங்களில் 
எங்கும் இலவசமாக கிடைக்கும் 
வெறும்  ஆலம்  குச்சி  அல்லது  
வேப்பம்  குச்சிகளால்  பல் துலக்கினர் 

நூறு  வயது  வரை  பற்கள் நன்றாக  இருந்தது 
பல்  நோய்கள்  கிடையாது 
.
இன்று  பிறக்கும்  குழந்தைகளே  
பல் நோயுடனும்   பிறக்கின்றன 
வாலிப  வயதிற்குள் மொத்த  பற்களும்  
சொத்தை  பிடித்து  விடுகின்றன

இனிப்பு  பொருட்களும் , மாவு  பொருட்களும் 
பல்லை  சீரழிக்கின்றன 
இதை  யாரும்  கண்டு  கொள்வது  கிடையாது

ஒவ்வொருவரும் தம்  வாழ்நாளில்  பல்லுக்கு  மட்டும்
பல ஆயிரங்களை  செலவழிக்கிறார்கள்

அதற்காக  அவர்கள்  கூடுதலாக உழைக்க  வேண்டியிருக்கிறது 
பல் கெட்டு விடுவதால்  கிருமிகள்  உற்பத்தியாகி
முழு  உடல்நலமும்  கெட்டு  சம்பாதிப்பது    அனைத்தையும் 
உடலுக்கே  செலவழித்து  மாத்திரைகளை முழுங்கியே
ஆயுளை இக்கால  மக்கள் முடிக்கின்றன 
.
இந்நிலை  மாற  வேண்டுமென்றால் 
மக்கள் வேப்பம் குச்சியை  மெதுவாக 
மென்று பிரஷ்  போல்  ஆக்கி  அதில்  பல்லை துலக்கினால் 
பல்லில்  உள்ள  கிருமிகளும்  சாகும்
பல்லும்  சுத்தமாகும்

வீணான  செலவும்  மிச்சம்  ஆகும் 
உடல்நலமும் காக்கப்படும் 

பற்கள் கெட்டு சிகிச்சைக்காக  பலமணி நேரம் பல் மருத்துவமனைகளில்
காத்திருக்கும் நேரத்தை விட சில நிமிடங்கள் 
தினமும் பொறுமையாக பல் துலக்கவும் நேரம் 
ஒதுக்கினால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்

ஆனால் மேனாட்டு  மோகத்தில்  மூழ்கி  கிடக்கும்  இந்த  சமூகம்   இதை  நிச்சயம்    ஏற்றுகொள்ளாது 

படங்கள் கூகிள்  நன்றி 

4 கருத்துகள்:

  1. எனக்கும் பற்களில் பிரச்னை இருக்கிறதுதான். பல் மருத்துவரிடம் போகாமலேயே கடத்தி வருகிறேன்! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் கடத்தாதீர்கள்.

      சென்று ஒரு தடவை பற்கள் மீது படிந்துள்ள
      காரைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பற்களில் ஓட்டை இருந்தால் சிமெண்ட் போட்டு அடைத்துக்கொண்டு வந்து விடுங்கள்.

      அதற்கு பிறகு தினமும் தவறாமல் காலையில் எழும்போதும் இரவு உறங்கப் போகும் முன்பும் பல்லை துலக்கிவிட்டு படுத்தால் மீதம் இருக்கும் பற்களைக் காப்பாற்றலாம்

      நான் கூறிய ஆலோசனைகள் இதுவரை பற்களில் பிரச்சினை வராத ஆசாமிகளுக்கு மட்டுமே

      இப்போதே சென்றால் சில நூறுகள் சிலவு ஆகும். தள்ளிப் போட்டால் பல் ஆயிரங்களை விழுங்கிவிடும். எதற்கும் ஒரு காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விட்டால் ஆகும் செலவில் . பாதி பணமாவது திரும்ப பெரும் வாய்ப்பு உண்டு

      நீக்கு
  2. இரு தடவை : காலை - இரவு படுக்கப் போகும் முன்...

    என்றும் பளிச்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரஷ்கலால் பல்லில்
      படியும் காரையை
      நீக்க முடியாது

      அதற்க்கு பல்மருத்துவர்களிடம்தான்
      செல்ல வேண்டும்
      பல்லில் படியும் காரைகளில்தான் கிருமிகள் லட்சக் கணக்கில் குடும்பம் நடத்துகின்றன.நாம் உண்ணும் உணவோடு உடலுக்குள்ளும், குடலுக்குள்ளும், சென்று மருத்துவர்களுக்கு தீனி போடுகின்றன

      நீக்கு