வியாழன், 31 அக்டோபர், 2013

பழமொழியும்-புதுமொழியும்

பழமொழியும்-புதுமொழியும் 

இரும்பு பிடிச்சவன் கையும்
சிரங்கு பிடிச்சவன் கையும்
சும்மா இருக்காது.-பழமொழி 





டிவி  ரிமோட்  பிடிச்சவனின் கை விரல்களும்



கைபேசி பிடிச்சவன் கைவிரல்களும்
சும்மா இருக்காது -புதுமொழி 



கந்தை துணியானாலும்
கசக்கி கட்டு -பழமொழி



அழுக்கு துணியானாலும்
அயன் பண்ணிப் போடு -புதுமொழி 

சூதும் வாதும்
வேதனை செய்யும்-பழமொழி

சூதும் வாதும் அரசியலில்
உயர்வு தரும்-புது மொழி 

பலநாள் திருடன்
ஒருநாள் அகப்படுவான் -பழமொழி 

அகப்பட்டாலும் அடுத்த நாள்  ஜாமீனில்
வெளிவந்துவிடுவான் -புதுமொழி 

கரும்பு தின்னக் கூலியா?(பழமொழி)

கரும்பு தின்னால் கூலி தரவேண்டும்
நீரிழிவு நோய்க்காரர்கள் (புதுமொழி)

வைத்தியனுக்கு கொடுப்பதை
வாணியனுக்கு  கொடு  -பழமொழி.

வாணியனுக்கு  கொடுப்பதை
வைத்தியனுக்கு கொடு (புதுமொழி)

pic-courtesy-google images 

6 கருத்துகள்: