திங்கள், 6 ஜனவரி, 2014

மேல்நாட்டு மோகம் ஒழியட்டும்.

மேல்நாட்டு மோகம் ஒழியட்டும். 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்ட 
மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்பட்டு 
நாம் நாட்டில் விற்கப்படும் 
ஆப்பில் பழங்களை உண்ணாதீர். 

அவைகளில் சத்தும் இல்லை 
சாரும் இல்லை 

நம் நாட்டு மக்கள் தேவையில்லாமல் 
அதிக விலை கொடுத்து அதை வாங்கி 
தன் உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

நம் நாட்டில் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ற 
அந்தந்த பகுதிகளில் ஏராளமான் வகையான சுவையான  கனிகள் விளைகின்றன. 
அவைகள் விலை மலிவானவை. சத்து மிக்கவை. 
அவைகளை அந்தாத கால கட்டங்களில் உண்ணுங்கள்.
 நம்முடைய உடல் நலம்நன்றாக இருக்கும். 

நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் 
மருத்துவரை தொலைவில் வைக்கலாம் 
என்பது ஒரு பொய்ப் பிரசாரம்

இன்று ஆப்பிள் கிலோ 160 ரூபாய்க்கு 

குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிளில் 
அதன் தோல் மற்றும் நடுப்பகுதி 
என 250 கிராமுக்கு மேல் வீணாகி விடும்

மக்களுக்கு கிடைக்கும் ஆப்பிள்கள் அனைத்தும் 

குறைந்தது மரத்திலிருந்து பறிக்கப்பட்டு குறைந்தது 
30 நாட்கள் கழித்துதான் கிடைக்கிறது. 
அதில் வெறும் மாவு சத்துதான் இருக்கிறது.

அதுவும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆப்பிள்களில் 

மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்படுகிறது.
அது பறித்து எத்தனை மாதங்கள் ஆகியதோ அந்த 
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 ஒன்றும் அறியாத மக்கள் 
அதை அப்படியே உண்கின்றனர். 



நம் நாட்டில் கிடைக்கும், நெல்லிக்காய், 
கொய்யா, சப்போட்டா, ஆரஞ்ச் பலவிதமான 




வாழைப்பழங்கள்,




 மாங்கனிகள், பலாப்பழம் சீதாப்பழம், 
வெள்ளரிபழம், கிருநிபழம், பப்பாளி பழம், எளிமிச்சை, 
சாத்துக்குடி, என ஏராளமான பல வகையான பழங்கள், 
சத்து மிகுந்தவை, மலிவானவை. 
அவைகளை சாப்பிட்டு 
ஆரோக்கியமாக  வாழுங்கள். 

வெளிநாட்டில் ஆப்பிள்களை கொதிக்கும் மெழுகில் இட்டு 
மெழுகு பூசும் காநோளியைக் காணுங்கள். 
அதைக் கண்ட பிறகாவது மனம் திருந்துங்கள். 

https://www.facebook.com/photo.php?v=578186105592548

திருந்தினால் நம் நம் நாட்டிற்கும் உங்களுக்கும் நல்லது. 

2 கருத்துகள்:

  1. விற்கிற விலைக்கு ஆப்பிள் எங்கே வாங்குவது...? பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ஐயா...

    இணைப்பில் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு