வியாழன், 23 ஜனவரி, 2014

எத்தனை காலம்தாம்தான் ஏமாறுவார்கள் நம் நாட்டு மக்கள்?

எத்தனை காலம்தாம்தான்
ஏமாறுவார்கள் நம் நாட்டு மக்கள்?


மின்பற்றாக் குறையும் நாமும் 

நான் ஒரு பாமரன்

இருந்தாலும் என்னுடைய கருத்தையும் கேளுங்கள்

1.இன்று மிக குறைந்த மின்சக்தியில் இயங்கும் கருவிகள் வந்துவிட்டன
220 வோல்டில் இயங்கும் டேபிள் மின்விசிறிகள் 12 வோல்டில் இயங்குகின்றன .குறைந்த மின் ஓட்டத்தில் led விளக்குகள் வந்துவிட்டன

அவைகளை அதிக அளவில் பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைக்கலாம்

ஆனால் இன்னும் நாம் 220 volt இணைப்பையே நம் நாடெங்கும் பயன்படுத்திக்கொண்டு மின்சக்தியை வீணடிக்கின்றோம் 

(அரசியல்வாதிகள் அவர்கள் கூட்டங்களுக்கு மின் சக்தி திருடுவது, மற்றும் இந்நாட்டு மன்னர்கள் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது, மின் சக்தி அனுப்புவதில் ஏராளமான் இழப்பு, பழுதடைந்த மின் தொகுப்புகள், மின் மாற்றிகள், காற்றாலை மின்சாரம் ஏராளமாக கிடைத்தும் அதை பல காரணங்களுக்காக பயன்படுத்தாமல் வீணடிப்பது ,போன்ற கையாலாகாதனங்கள் இருக்கும் வரை  நம் நாட்டில் எந்த திட்டமும் உருப்படாது) 

கொள்ளைக்கார மட்டைபந்து விளையாட்டுகளுக்கு இரவில் வெளிச்சம் போட வீணடிக்கும் மின்சக்தி எத்தனையோ கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கலாம் 

2.தற்போது 3 volt மின்சக்தியைக்கொண்டு ஒரு circuit மூலம்  அதை பலமடங்கு அதிகரித்து இயங்கும் உபகரணங்கள் உபயோகத்தில் வந்துவிட்டன(காஸ் lighter,muskito bat  and so many).அப்படி உண்டாக்கபடும் மின்சாரத்தை தேக்கி பயன்படுத்த மின்கலங்கள் உள்ளதா என்று தெரியவில்லை. 

இந்த மாறுதல்களை செய்தாலே நமக்கு உபரி மின்சாரம்கிடைக்கும். 

ஆனால் கையாலாகாத, தொழில் நுட்ப அறிவு இல்லாத ,மாற்றத்தை கொண்டு வர விருப்பமற்ற,நிர்வாகம், கண்டு பிடிப்பாளர்களை 
ஊக்குவிக்காமல் நசுக்கும் அரசு இயந்திரங்கள் போன்றவை பெருந்தடைக்கற்களாக உள்ளது 
அகற்றப்படவேண்டும். 

அமெரிக்காவில் ஏராளமாக ஆராய்ச்சி செய்து மாற்று வகையில் மின்சக்தியை உண்டாகும் வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளார்கள். அவைகளையெல்லாம் அவர்கள். ரகசியமாக வைத்துள்ளார்கள்.

அவர்கள் கேடிகள்.

 ஒரு சமயம் குண்டு பல்பினால் தான்  உலகம் சூடாகிவிட்டது அதனால் அதை ஒழிக்கவேண்டுமென்பார்கள்.ஏனென்றால் அதை தயாரிக்கும் நிறுவனங்களை அவர்கள் மூடி விட்டார்கள். 

அவர்கள் ஒவ்வொரு நாட்டின் மீதும் பல ஆண்டுகளாக போட்டு மக்களை சாகடிக்கப் போட்ட பல கோடி டன் குண்டுகளிலிருந்து வெளிப்பட்ட வெப்பமும் நச்சு வாயுக்களும் உலகை சூடேற்ற  வில்லை   சுற்று சூழலை பாழாக்கவில்லை நஞ்சாக்க வில்லை ?அதற்க்கு பதில் கிடைக்காது 

அப்பாவி குண்டு பல்புகல்தான் உலகை சூடாகிவிட்டதாம்

என்ன பேத்தல் ?

பாதரசம் பயன்படுத்தகூடாது  என்று பிரசாரம்.
அது ஆளைக் கொன்றுவிடும். புற்றுநோய் வந்துவிடும் என்று அவர்கள் டிஜிட்டல் தெர்மாமீடெரை விற்பதற்க்காக இந்தியாவில் உள்ள தெர்மாமீட்டர் தயாரிக்கும் கம்பனியை மூட திட்டம்.

மறுபுறம். CFT கையடக்கமான பாதரச விளக்குகளை தயாரித்து  அதிக விலை வைத்து நம் தலையில் கட்டுவதற்கு பழியை குண்டு பல்புகள் தலை மீது போடுகிறார்கள்..

 அந்த பல்புகள் உடைந்தால் அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு மிக ஆபத்தானது. அதை அவர்கள் விளம்பரப் படுத்து வதேயில்லை 

பொதுநலனில் சிறிதும் அக்கறையில்லாத நம்முடைய அரசுகளும் நிர்வாகங்களும் கொடிய  ஆபத்தை உண்டாகும் பழுதாகி எரியாமல் போன   பல்புகளை பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்க யாரிடமும் திட்டம் இல்லை  இல்லை 

இப்போது led பல்புகளை வாங்குமாறு வலியுறுத்துகிறார்கள் அதன் விலையோ 30 குண்டு பல்புகளுக்கு மேல் இருக்கிறது. 

நம் நாட்டு மக்கள் எல்லாவற்றிற்கும்  ஆட்டு  மந்தைகள் போல்  ஆமாம் சாமிகள் போடுவதால் தொடர்ந்து தலையை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

போதாகுறைக்கு ஆம் ஆத்மி கட்சி வேறு. 
 வழிநடத்த சரியான ஆளில்லா கட்சி. 

இருக்கும் அதிகாரத்தை வைத்து என்ன நன்மைகள் மக்களுக்கு செய்யலாம் என்பதை ஆராயாது. கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டுக்கொண்டிருக்கும் கட்சி. 

நம் நாட்டு மக்கள் தொலைகாட்சிகளில்  விளம்பரப்படுத்தும், தரமற்ற,தேவையற்ற, கவைக்குதவாத, பொருட்களை பொய்களையும் புளுகுகளையும் கூறி நம்  மூளையை மழுங்கடித்து நம்முடைய நேரத்தையும் பணத்தையும் கொள்ளை அடிக்கின்றன. 

நம் நாட்டில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண
ஏராளமானவர்கள் தயாராக இருக்கிறார்கள்
 அவர்களை யாரும். ஊக்கப்படுத்துவதில்லை.
அவர்களை வாழவும் விடுவதில்லை.

 அவர்களை தலை தூக்க விடாமல் செய்ய கணக்கற்ற சட்டங்கள், விதிகள், அனுமதிகள், உரிமங்கள், வரிகள், என உருப்படாத கருப்பு சட்டங்கள்.

கழிவறையில் கழுவ உதவும் அமிலத்திலிருந்து சமையல் எண்ணெய் வரை ,   அனைத்திலும் பன்னாட்டு பன்னாடைகளின் ஆதிக்கம்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல். எதிலும் கமிஷன், சுரண்டல்.

என்ன செய்ய?

ஒரே தலை சுற்றுகிறது. யார்தான் இவைகளை சரி செய்ய போகிறார்களோ? இல்லை அப்படியே என்றும் அடிமைகளாகத் சிந்திக்கும் திறனின்றி  இந்திய மக்கள் சாகத்தான் வேண்டுமோ?  

3 கருத்துகள்:

  1. முடிவில் சொன்னது தான் நடக்கும் போல...!

    எங்கும் எதிலும் விழிப்புணர்வு வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றோ ஒருநாள் நம்மை
      தாக்கப்பொகும் எதிரிக்காக
      பல் லட்சம் கோடிகளை
      ஏவு கணைகளுக்காகவும்
      ஆயுத தள வாடங்களுக்காகவும்
      அரசு செலவு செய்கிறது.

      ஆனால் தினம் தினம் வறுமையில் வாடி
      செத்துப் பிழைக்கும் கோடானுகோடி
      மக்களின் நல்வாழ்வுக்கு சில ஆயிரம் கோடிகளை
      செலவு செய்ய யாருக்கும் மனமில்லை.

      ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயகம்
      என்ற போர்வையில் தேர்தல் நடத்தி
      பண நாயகத்தை நம்மை ஆளவிட்டுவிட்டு
      கையேந்து பவனில் வயிற்றை ரொப்பிக் கொண்டு
      நடைபாதையில் காலத்தை கழிக்கிறது பொது ஜனம்.

      உழைத்துப் பிழைக்கும் கூட்டத்தை
      சுரண்டி பிழைக்கும், அரசியல்வாதிகள்,
      சமூக விரோதிகள், நடிகர்கள் நடிகைகள்,
      போலி சாமியார்கள் போலி மருத்துவர்கள்
      போலி மருந்துகள், பொருட்கள் தயாரிக்கும்
      நிறுவனங்கள் ,. ஆசை காட்டி மோசம் செய்யும்
      ஏமாற்றுப்பேர்வழிகள் என பலர்களிடம்
      சிக்கி திண்டாடுகிறது நம் நாட்டு மக்கள் கூட்டம். .

      என்றுதான் நம் நாட்டு மக்கள் எல்லாம்
      பெற்று இன்பமாக வாழப்போகிறார்களோ
      தெரியவில்லை?

      .

      நீக்கு