திங்கள், 28 அக்டோபர், 2013

இதற்கா நான் பிறந்தேன்?


இதற்கா நான்  பிறந்தேன்?

இலையின் மூலம்

முற்றிய விதை முளைவிட்டு
மண் பிளந்தது-
இலையாம் துளிரின்
இனிய பிறப்பு !



"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லை" என்றதோர் குரல்

துளிர் பெருகி
செடியெனப்பரிணமித்து
தென்றலில் தலையசைக்கும்-



"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லைஇல்லை...
இன்னும் இருக்கிறது .."
என்றது குரல்!

செடியும் வளர்ந்து செழிப்பாகி
தண்ணிழல் மரமாய்
தலை உயர்த்தும்..



"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லை என்றது குரல்
"இன்னும் இருக்கிறது,பொறு "

சலித்து பழுத்த இல்லை
சருகாகி உதிர்கையிலே " ச்சீ ,
"இதற்கா நான்  பிறந்தேன்?
இப்போதாவது சொல் குரலே.."
என்றது ஏக்கமாய்



"ஆமாம் ,ஆமாம்
இதற்க்குதான் பிறந்தாய்
சருகாய் உதிரத்தான்
சகத்திலே நீ உதித்தாய்..

"இல்லை"என்பதன்
குருக்கந்தானே இல்லை?



ஒ,இலையே! நீ இல்லை.
ஆம் நீ -இது இல்லை.."
என்று தொடர்ந்த குரல்
இப்படி முடித்தது .




"சருகாகி உதிர்வதர்க்குச் சற்றும் வருந்தாதே நீ-
இலையும் இல்லை சருகும் இல்லை
இனி  வரும் வளர்ச்சிக்கான உரம்

இந்த அருமையான கவிதைக்கு சொந்தக்காரர் 
கவிஞர் அமுத பாரதி. 1995ஆம் ஆண்டு ஓம் சக்தி இதழில் வெளிவந்தது 

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி
      கவிஞர் அமுதபாரதி அவர்களின்
      கவிதைக்கு உருவம் கொடுத்து ரசித்து பார்த்தேன்

      நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. Kavingar amudhabharathiyin kavithaikku thangalin uruvamum sernthu padipptharku migavum nanraga irunthathu. nandri.

    பதிலளிநீக்கு