வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஜே.கே யின் சிந்தனைகள்...

ஜே.கே யின் சிந்தனைகள்...


Image result for j.krishnamurti



1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள்
இல்லையென்று நினைத்து விடாதே”>>

2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான
நேரம் தெரியும். இரு கடிகாரம்
கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம்
தான்.>>

3) எங்கே விழுந்தாயென பார்க்காதே,
எங்கே வழுக்கினாயென பார்.>>

4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட,
முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.>>

5) நீ சொல்வதை வேண்டுமானால்
சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ
செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.>

6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு.
ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால்
யாராவது உதவுவார்கள்..>>

7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.>>

8) ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப்
பூச்சியையோ அதன் தோற்றத்தைக்
கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால்
மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட
இயலாது!”>>

9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ
விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் -
தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் -
வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் -
நடத்தி முடியுங்கள்>

10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில்
அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்
!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில்
முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!>>

11) நாம் ஒருவருக்கொருவர்ஒரு ரூபாய்
கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய்
தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர்
ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம்
இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள்இருக்கும்>>

12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல்
போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..

நன்றி-Courtesy:Sri.GS.Dattatreyan

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்களுக்கு தகுதியானது
      உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..

      நீக்கு
  2. ///நீ சொல்வதை வேண்டுமானால்
    சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ
    செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.>//
    இன்று சொல்கிற பேசுகிற தலைவர்கள்தானே இருக்கிறார்கள்
    செய்து காட்டுகிற தலைவர்கள் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் தான் அவர்களின் தொண்டர்களும் அப்படியே இருக்கிறார்கள் போலும் !

      நீக்கு