செவ்வாய், 29 செப்டம்பர், 2015

எத்தனை கோடி இன்பங்கள்

எத்தனை கோடி இன்பங்கள்

எத்தனை  கோடி இன்பங்கள் 

எத்தனை  கோடி இன்பங்கள்
படைத்தாயடா இறைவா

இவ்வுலக மக்கள்
அனுபவித்து இன்புறவே (எத்தனை)

அத்தனை இன்பங்களையும்
ஒருசேர அனுபவிக்க
துடிக்குதடா என் அற்ப மனம்

நான் இவ்வுலகில் வாழும்
சொற்ப ஆயுளுக்குள்ளே  (எத்தனை)

ஓரிரு இன்பங்கள் அனுபவிக்கவே
ஓராயிரம் நேரம் அலைகின்றோம்

அடைவதற்குள் நம் குறுக்கே
வந்து நிற்குது
ஆயிரமாயிரம் தடைகளடா

அத்தனையும் கடந்து அனுபவிக்க
தொடங்கும் இன்பம் நினைவில்
இருப்பதோ  கண் மூடி
கண் திறக்கும் நேரமடா (எத்தனை)

அனைத்து இன்பங்களும்
காணும் வடிவாய் நீ அமைந்திருக்க

எண்ணி மகிழும் உணர்வாய்
அதனுள்ளேதானிருக்க

அதை விடுத்து பேயாய்
ஓயாதுழலும் என் மனமே

அவனை அன்புடனே
நினைத்து அவனோடு கலப்பதே
உண்மையான ஆனந்தம் என்பதை

அறிந்தோர் கூற கேட்டும் அமைதியின்றி
ஆசைகளின் பின்னால் அலைந்து
திரிந்து அல்லல்படுவதேனோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக