ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும்(5)

புச்சுக் குட்டியும் நானும்(5)

இறைவன் படைப்பில் எல்லாமே
அழகோவியங்கள் தான்
நாம்தான் அவைகளை
அழகானவை,அழகற்றவை
என நம் மனதில் தோன்றும்
எண்ண பேதங்களினால்
பிரிவுபடுத்தி . வெறுப்பை விதைத்து
வேதனையை அறுவடை செய்கிறோம்.

பூனைகள் தூங்கும்போது  காண்பதற்கு
அழகாக இருக்கும். அதன்  கள்ளம்
கபடமற்ற முகத்தை நான் வெகுவாக ரசிப்பேன்.
அப்படியே கட்டி முத்தமிட நினைக்கத் தோன்றும்.
ஆனால் அது எப்போதும் நாக்கினால் உடல் முழுவதையும்
நக்கிகொண்டே இருப்பதை கண்டதும் அந்த எண்ணத்தை
அடக்கிக் கொள்வேன் .அவற்றில் சில படங்களை எடுத்தேன்.

ஒவ்வொன்றும் காமிரா கவிதைகள்


இன்னும் தூக்கம் தெளியவில்லை. சூரிய ஒளியின் இதமான சூட்டில் குளிர் காய்கின்றன 



இருட்டில் ஒளிரும் கண்கள் 




தன் இரண்டு தம்பிகளும் உறங்கையிலே அண்ணன் 
காவல் காக்கின்றான். 





2 கருத்துகள்: