சனி, 6 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும்(3)


புச்சுக் குட்டியும் நானும்(3)

காலையில் எழுந்தவுடன்
சமையலறைக் கதவை  நான் திறக்க
தாழ்ப்பாளை நீக்கும் ஓசை  கேட்டவுடன்
மூன்று  பூனைக் குட்டிகளும்
ஒரே  நேரத்தில் "மியாவ் " என்று   கத்திக்கொண்டு
அழகாக  நிற்பது பார்க்க பரவசமாக இருக்கும்.

ஒரு குச்சியை எடுத்து   விரட்டினால் சற்று  தள்ளிப் போய்
நின்று கொண்டு   ஏக்கமாய் ஒரு பார்வை பார்க்கும்

உடனே ஒரு  தட்டில் பாலை ஊற்றி வைத்தவுடன்
பார்க்கும் . திரும்பவும் விரட்டுவேனோ என்று பயம்.

நான் உள்ளே சென்றவுடன்  பாலைக்  குடித்துவிட்டு
விளையாட  செல்லும்

ஒருநாள் மூன்றும்  மதிய உணவை  
உண்டுவிட்டு நிழலில் இளைப்பாறிகொண்டிருந்தன.

எடுத்தேன் காமிராவை.
உடனே போஸ் கொடுத்தன .

அந்த  படம்   இதோ






1 கருத்து: