சனி, 11 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(8)

அனுபவ ஞானம்(8)

நல்லவர்களுக்கு செவி சாய்க்கா
இவ்வுலக மாந்தர்கள்
தீயவர்களின் கவர்ச்சிக்கு
அடிமையாகி தீராத
துன்பத்தில் மூழ்குவர்.

அளவுக்கதிகமாக உறங்குபவனும்
அளவுக்கதிகமாக உண்பவனும்
அளவுக்கதிகமாக பாசம் வைத்தவனும்
எதற்கும் பயனின்றி மரணத்தை தழுவுவார்கள்
ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனைப் போல

உனக்கு பிறக்கும் குழந்தை
இறைவன் உனக்காக தயாரித்து
அளிக்கும் வடிவம் என்பதை உணர்.

அது எப்படி வளரும்
எவ்வாறு இருக்கும்
என்ன செய்யும்  என்பதை
அவன் ஒருவனே அறிவான்.

எனவே உங்கள் குழந்தைகளை பற்றி
எந்த கவலையும் கொள்ள வேண்டா.

அவர்களின் நல்ல செயல்களுக்கு
ஊக்கம் மட்டும் அளித்தால் போதும்.
அனைத்தும் நன்றாக இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக