சனி, 11 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(5)

அனுபவ ஞானம்(5)

கடமைகளை செய்ய
தவறியவன் என்றும்
காண முடியாது கடவுளை.

கடமைகளை செய்யும்போது
கடவுளை மறப்பவனும்
தன்னை படைத்து
இவ்வுலகில் நடமாடவிட்ட
கடவுளை மறுப்பவனும்
என்றும்  அமைதியாய்
இருக்க முடியாது.

மனதில் அகந்தை கொண்டு 
இறைவனை வெறுத்தால் 
என்ன கிடைக்கும்?

மாலை வெறுப்பவனுக்கு

மால் புகழ் பாடும் மகன் பிறப்பான்.

ஹிரணியகசிபுக்கு பிரகலாதன்

பிறந்ததுபோல் அகந்தையை

வேரோடு அழிக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக