வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

இசையும் நானும் (42)

இசையும் நானும் (42)

இசையும் நானும் என்னும் தொடரில்

69 வது சுதந்திர தின சிறப்பு  மவுதார்கன் இசை.

42 வது காணொளி 

நாடு சுதந்திரம் அடைவதை முன்பே கண்டு
தன் பாடலில் உரைத்த மகா கவி பாரதியின் பாடல்.



"ஆடுவோமே பள்ளு  பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே- இதை
தரணிக்கெல்லா மெடுத்து ஓதுவோமே  (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் -வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடு)

நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் -இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் -இந்த
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் -
பரிபூரணனுக்கே அடிமைசெய்து வாழ்வோம் (ஆடு)

காணொளி இணைப்பு
https://youtu.be/UqZffX505jg

3 கருத்துகள்:

  1. வரிகளை வாசிக்கும்போது டி கே பட்டம்மாள் குரலில் வாசித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. மவுத் ஆர்கன் இசையையும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பாட்டின் தேவதை பட்டம்மாளுடன்

    இந்த பட்டாபிராமனையும் நினைக்க வைத்த
    பாரதியாரின் கனவுக் கவிதைக்கு நன்றி.

    உங்களுக்கும்தான்

    பதிலளிநீக்கு