புதன், 24 ஜூலை, 2013

பொடி புராணம்

பொடி புராணம் 


பொடியின் சுவை 
காட்டமாக இருப்பினும் 
அதை பற்றிய தகவல்கள் 
சுவையாக உள்ளது.


நாசிகா சூர்ணம் என்று இந்த மூக்குப்பொடிக்கு 
மருத்துவ உலகில் அதற்க்கு நாமகரணம் 
சூட்டப்பட்டுள்ளது.

அது வைக்கப்படும் பொடி டப்பியில்தான் 
எத்தனை வகைகள் 
பல ஆயிரம் இருக்கும்
சாம்பிளுக்காக ஒன்று 





புகையிலையின் பல்வேறு
அவதாரங்களில் இந்த மூக்குப்பொடியும் ஒன்று.

தேயிலை தோட்டங்களில் பணி புரியும்
தொழிலாளர்களை அட்டைகள்
பிடித்துக்கொண்டால்
அதை இந்த மூக்குபொடியை வைத்துதான்
அகற்றுவார்கள் என்று ஒரு கதையில்
 படித்திருக்கிறேன்

பெரிய சாஸ்த்ரிகள்,கனபாடிகள்.
வேத விற்ப்பன்னர்கள், அந்நாளில் அரசர்கள், மந்திரிகள்,
(இன்றும்) பொடியை இழுக்காதவர்களே கிடையாது.

பொடி போடாதவர்களுக்கு
பொடி போடுபவர்கள் அந்த பொடியை
பொடி போடும் சாக்கில் மற்றவர்களை
கவனியாது காற்றில் பறக்கவிட்டு
அவர்கள் தும்மல் போடுவதை ரசிப்பதும் உண்டு.

சளி பிடித்தால்  அவர்களுக்கு
மூக்குப்பொடி தான் மருந்து.
அதை இழுத்து இரண்டு தும்மல்கள் போட்டால்
அவர்கள் குடலில் உள்ள சளி கூட வெளிவந்துவிடும்.

சிலர் தண்ணீர் கலக்காமல் சாராயத்தை
 ராவாக குடிப்பதுபோல் பொடியை
அப்படியே போடுபவர்கள் உண்டு.
பங்க் கடைகளில் பொடி விற்காத
கடைகளே கிடையாது அந்நாளில்

பீங்கான் ஜாடிகளில் அழகிய மரத்தால்
செய்த மூடி போட்டு வைத்திருப்பார்கள்.
நீண்ட ஆனால் சிறிய
கரண்டியினால் சிறிதாக தட்டி தட்டி எடுத்து
வாழை மட்டை அல்லது
டப்பியில் போட்டு தருவார்கள்.

அந்த பின்னணிஇசைகேட்பதற்கு
நன்றாகவே இருக்கும்.

காலப்போக்கில் அதில் பலவிதமாக
வாசனைத்திரவியங்களை கலந்து
சென்ட் போடி போட ஆரம்பித்தனர்
அதில் அவ்வளவாக  நெடி இருக்காது.

ஒருவர் வரும்போதே அவர்களின்
வரவை அறிவிப்பதுஅவர்கள்
போடும் பொடியின் வாசனையே

மருத்துவர்கள் என்னதான் கரடியாக கத்தினாலும்,
புற்றுநோய் வந்து லட்சக்கணக்கில்
உலகெங்கிலும் மக்கள் மாண்டாலும்
பொடிபோடுபவர்களை யாரும்
அந்த பழக்கத்திலிருந்து மீட்கமுடியாது.






ஒருமுறை பொடியை இழுத்துவிட்டால்
அவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து
வேலை செய்ய உற்சாகம் கிடைத்துவிடும்.

உணவு குடலுக்கு போய் ஜீரணம் ஆகி
ரத்தத்தில் கலந்து மூளைக்கு சக்தி போய்
 செல்வதற்குநேரம் பிடிக்கும்.
ஆனால் இந்த பொடியோ
SMS மாதிரி உடனே மூளைக்கு சென்று
செயல்பட வைக்கும் சக்தியுள்ளது.

48 ஆண்டுகளுக்கு முன் நான்
திருக்கழுக்குன்றத்தில் பணிபுரிந்தபோது
அங்கு ஒரு வீட்டில் புகையிலையை வறுத்து
மூக்குப் பொடி தயார் செய்யும் தொழிற்சாலை இருந்தது.
அப்போது கிளம்பும் நெடி பல மணி நேரத்திற்கு
காற்றில் பரவி வயிற்றை கலக்கும்.
சில மாதங்கள்தான் அங்கு பணி செய்தேன்.
தப்பித்தேன்  பிழைத்தேன் என்று ஓடி வந்து விட்டேன்.

இன்று புகையிலை அதன்கூட
பல நண்பர்களை சேர்த்துக்கொண்டு
பல அவதாரங்களை  எடுத்துக்கொண்டு
கவர்ச்சிகரமான பாக்கிங்குகளில்
வெளிவந்து மனிதர்களைகவர்ந்து
யமனுலகிர்க்கு விசா முடியும் முன்பே
அவர்களை அனுப்புவதில்
போட்டாபோட்டி போட்டுக்கொண்டு
செயல்படுகின்றன என்றால் மிகையாது.

அந்த காலத்தில் இரண்டு
ப்ராண்டுகள்தான் பிரபலம்
ஒன்று TAS மற்றொன்று
அம்பாள் ஆப்பீசர் பட்டணம் பொடி.
மாத இதழ்களில்
முழு பக்க விளம்பரம்
அந்த நாட்களில் 

இந்நாளில் அதற்காக கோடிக்கணக்கான
ரூபாய்கள் செலவில் விளம்பரங்கள்
வேறு செய்யப்படுகின்றன
மக்களை கவர்ந்திழுக்க

pic-courtesy-google images 

4 கருத்துகள்:

  1. பகிர்வின் மூலம் தான் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. பொடி பற்றிய செய்திகள் அருமை அய்யா.
    இன்று பொடி போடுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று நினைக்கின்றேன். பழைய ஆட்களே, வயதில் மூத்தவர்களே பொடி போடுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கின்றது.நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறையவில்லை

      அது கஞ்சா ,ஹெராயின் போன்ற பல உருவத்தில் இன்று இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை நாசமாக்கி கொண்டிருக்கிறது.

      பள்ளிகளிலே
      போதைபோருள்கள் விற்கப்படுகிறது

      இதை ஆசிரியர்கள் முதலிலேயே கண்காணித்து
      மாணவர்களை நல்லவிதமாக அறிவுறுத்தி அவர்கள்
      இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்வது அவர்களை கடமையாக மாறவேண்டும்.

      வெறும் ஏட்டுக்கல்வி போதிப்பது மட்டும் அவர்களின் வேலையன்று.

      ஒழுக்கமுள்ள மாணவர்களையும் ,தன்னம்பிக்கை உள்ளவர்களாக எதிர்கால குடிமக்களை உருவாக்குவதுதான்

      அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சாராயக் கடைகளையே அரசே நடத்துகிறது.

      இன்று பல குடும்பங்களில் போதை பிரச்சினை இளைய தலைமுறைகளை மிருகமாக்கி கொண்டு வன்முறையில் ஈடுபட வைக்கிறது.இந்த செயல் பெற்றோர்களை நிலை குலைய வைத்துக்கொண்டிருக்கிறது.

      அவ்வப்போது போதைபோருள்கள் கடத்தப்படுவதை
      போதை தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்வதே இதற்க்கு சான்று.

      இதன் அபாயத்தை இன்னும்
      யாரும் உணரவில்லை.

      நீக்கு