வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிப வாலி

வாலிப வாலி 






ரங்கராஜன் என்பவர்
வாலி ஆனார்
இன்று உடலை
காலி செய்துவிட்டு
அந்த அரங்கனிடமே
சென்றுவிட்டார்

இராமாயண வாலியின்
உயிரை கவர்ந்து சென்றான்
காப்பிய ராமன்

இந்த வாலியின் உயிரை
கவர்ந்தவனோ அனைவரின்
உயிரையும் பறிக்கும் காலன்
என்னும் காலதேவன்.

வாழ் நாளெல்லாம்
கவிதை மழை பொழிந்தவர்
இன்று தன் ரசிகர்களை
கண்ணீர் மழை பொழிய
வைத்து விட்டு சென்றுவிட்டார்

தமிழ் உள்ளளவும்
இத்தரணியில்
வாழும் அவர் கவிதைகள்
காற்றில் தவழ்ந்து
கொண்டிருக்கும் தென்றலாய்
புயலாய்,இன்பமாய், சுகமாய்
சோகமாய் மாறி மாறி
இசைத்துக்கொண்டிருக்கும்

கேட்பவர் மனதில் இன்ப அதிர்வுகளை
உண்டாக்கிகொண்டே இருக்கும் 

3 கருத்துகள்:

  1. உண்மை தான் ஐயா... இவரின் வரிகளுக்கு சாவு ஏது...?

    பதிலளிநீக்கு
  2. வாலி
    காப்பியங்களையும்
    காவியங்களையும்
    புதுக் கவிதையின்
    சாறு கொண்டு
    எளியோரும்
    உணரும் வண்ணம்
    படைத்துக் கொடுத்தவன்.

    நான் நிரந்தரமானவன்
    எந்த நிலையிலும்
    எனக்கு
    மரணமில்லை
    என்பான்
    கண்ணதாசன்

    வாலிக்கும்
    எந்நிலையிலம்
    மரணமில்லை

    என்றென்றும்
    வாழ்வார்
    தமிழன்னையின்
    கரங்களில் என்றென்றும்
    தவழ்வார்

    பதிலளிநீக்கு