சனி, 6 ஜனவரி, 2018

இசையும் நானும் (267) திரைப்படம் -Swami Ayyappan(1975) பாடல்:திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே



இசையும் நானும் (267)  

திரைப்படம் -Swami Ayyappan(1975)


பாடல்:திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே





MOUTHORGAN

 VEDIO-267


Swami Ayyappan


HeroGemini Ganesan& Nambiyar
Music DirectorG.Devarajan
LyricistKannadasan
SingersK.J.Jesudass
Year1975


திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா-அன்று 
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா..ஆஅ.

உலகினை பாய் போல் உண்டவன் நீயே  ஸ்ரீமன் நாராயணா.
அன்று உரலுடன்  நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா 

இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா.
அன்று இந்திரன் வில்லை முறித்தவன் நீயே  ஸ்ரீமன் நாராயணா.

கொடியவள் மகிஷி  கொலை புரிந்தாளே அறியாயோ நீயே 
அவள் கொடுமையை அழிக்க மறந்துவிட்டாயோ  ஸ்ரீமன் நாராயணா.
தேவர்கள் உந்தன்  குழந்தைகளன்றோ மறந்தாயோ நீயே 
உன்  தெய்வ முனிவரை காப்பதற்க்கென்றே வருவாயோ நீயே 

தோளிலந்த சார்ங்கம் எடுத்து வரவேண்டும் நீயே 
கணை தொடுத்திடவேண்டும் அரக்கியின் வாழ்வைஅழித்திடுவாய் நீயே 

அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே 
உன் அன்பரையெல்லாம் துன்பத்திலிருந்து காப்பாய் பெருமாளே 

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள் 
நாராயணனென்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள் 

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் 
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள் 
ஸ்ரீமன் நாராயணா! ஸ்ரீபதி ஜகன்னாதா !வருவாய் திருமாலே!துணை தருவாய் பெருமாளே..!






1 கருத்து:

  1. சிலகாலம் என்னுடைய அலைபேசியின் ரிங்க்டோனாக வைத்துக்கொண்டிருந்தேன். நல்ல பாடல். கேட்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு