திங்கள், 7 டிசம்பர், 2015

வாரிக் கொட்டியது வான்மழை !

வாரிக் கொட்டியது வான்மழை !

வாரிக் கொட்டியது  வான் மழை !
ஆம் வாரிக் கொட்டியது வான்மழை !

ஆனால் அதை அணை கட்டி
தேக்கி வைக்க அணைகளும் இல்லை
ஏரிகள் இல்லை ,குளங்கள் இல்லை
குட்டைகள்  இல்லை

மாறாக வீடுகளில் நீர் புகுந்து
அனைத்தையும் இழந்துவிட்டோம்
என்று ஒப்பாரி வைக்குது மக்கள் கூட்டம்.

அண்டை மாநிலங்களுடன் நீர் தகராறு
நீதிமன்றங்களில் ஆண்டாண்டுகாலமாக
தொடரும் வழக்குகள் அற்ப அளவில்
நீர் பெற. போராடும் கையாலாகாத
சுயநல பேய்களாய் ஆளும் வர்கங்கள்.

ஆனால் இன்று அடுத்த தலைமுறைக்கும்
உணவு பஞ்சமின்றி வாழ ,குடிநீருக்கு
பஞ்சமின்றி வாழ இயற்கை அளித்த
கொடையினை வீணே கடலில்
கலக்கவிட்டுவிட்டு தெரு தெருவாக
பிச்சைஎடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட
மக்கள்-திட்டமிடாத ஆளும் வர்க்கம்
இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

வீடும் நாடும் சேற்றினால்  நிறைந்து  கிடக்க
வீதிகள் முழுவதும் வீட்டு  பொருட்கள்
சிதறிக்  கிடக்க அடுத்த வேளைக்கு  சோறின்றி
அலையும் நேரத்திலும் கூட ஒருவர் மீது
ஒருவர் குறை கூறி சேற்றை வாரி
இறைக்கின்றார் .அந்தோ பரிதாபம் !
இவர்களை யார் திருத்துவது. ?

எதற்கெடுத்தாலும் இவர்களை நெறிப்படுத்த
காவல்துறைதான் வரவேண்டும் என்ற
உன்னத நெறியை கடைபிடிக்கும் இவர்களை
யார் மாற்றுவது?

உதவிகள் மலைபோல் குவிகின்றன
உலகெங்கிலுமிருந்து அனுதினமும்

ஆனால் அவைகளை முறையாக
தேவைப்படுவோருக்கு சென்று சேர்க்க
அமைப்பு இல்லை .

ஆர்பாட்டம் செய்து
விளம்பரம் தேடும் மனிதர்களால்
உதவிகள் விழலுக்கு இரைத்த நீர்போல்
வீணாகிவிடுமோ என்ற அச்சம் உதவி
செய்பவர்களுக்கு.

கிடைக்கும் உதவிகளை அமைதியாக
அனைவரும் பகிர்ந்துகொண்டு
பயன்படுத்திக்கொண்டு சிக்கலிலிருந்து
முன்னேற வழி தேடாது அனைவர் மீதும்
குற்றம் சொல்லிக் கொண்டே போனால்
இவர்களுக்கு எந்நாளும் விடிவுகாலம்
என்பது கேள்விக்குறியே.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக