திங்கள், 27 ஜூலை, 2015

நான் யார் ?

நான் யார் ?

நான் யார் ?

இந்த கேள்விக்கு ஆதி சங்கரர் முதல்
கடைசியாக ரமணர் வரை பதில் சொல்லி விட்டார்கள்.

பகவான் ரமணர் எப்படி என்று வாழ்ந்தும்
காட்டி விட்டார் நமக்காக.






எவ்வளவு பிறவிகள்
இந்த வஸ்துவைப் பற்றி
கதை கேட்பது ?

சாதனையில்
இறங்க வேண்டாமோ ?

தினமும் சாப்பிட்டுவிட்டு
தூங்கி விழித்து முடிவில்
எழமுடியாமல் தூங்கி-மீண்டும்
விழிக்கும்போது வேறு ஒரு உடலில் விழித்து
இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்படி?

தண்ணீரில் குதித்தால்தான்
நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்.

நீந்துபவனை பேட்டி  எடுப்பதினாலேயோ
நீச்சல் பற்றிய புத்தகங்களைப் படிப்பதினாலேயோ
அதைப் பற்றி சிந்தை செய்வதாலோ
நீச்சல் பற்றி பயிற்சியாளரின்
பேச்சைக் கேட்பதினாலேயோ
எந்த பயனும் விளையப் போவதில்லை.

அதைப்போல்தான் ஆன்மாவை அறிவதும்

இன்றே இப்போதே தொடங்குவோம்
முயற்சியை.நான் யார் என்பதை உணர

ஏனென்றால் அடுத்த கணம்
நாம் பிணமாக போய்
ஒன்றும் செய்ய முடியாமல் போய்
அடுத்த பிறவிக்காக விண்ணில்
அலையே வேண்டி நேரலாம். 

1 கருத்து: