செவ்வாய், 17 செப்டம்பர், 2013

வினோபா அடிகள்(1)

வினோபா அடிகள்(1)




அந்த கால மக்களுக்கு
கேள்விப்பட பெயர்போல் இருக்கும்

பூதான  இயக்கத்தின் தந்தை அவர்

இந்த கால மக்களுக்கு
அவரை தெரிய நியாயமில்லை.

ஏனென்றால் அவர்கள்
வளர்ப்பு அப்படி.

எதை செய்தாலும் ஒன்றை எதிர்பார்த்து
கணக்கு போட்டு வாழும் வாழ்க்கைதான்
அவர்களுக்கு கருவறையிலிருந்து
கல்லறை வரை கற்ப்பிக்கப்படும்
வேத வாக்கியம்.

பிறரை வஞ்சித்து அவர் பொருளை எடுப்பதும்,
இலவசமாகடாஸ்மாக்குடன் எது கிடைத்தாலும்
அதை வாங்கி வீட்டில் அடைப்பதும்
அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை.

ஆன்மிகம் என்று
எதை எதையோ நம்புவதும்
அதைக் கூறி வயிறு வளர்க்கும் புரட்டர்கள்
 பின் போவதும்தான் பரவலாக
இன்று மக்கள் வாழும் வாழ்க்கை.

அப்படிப்பட்டவர்களுக்கு வினோபா அடிகளின்
வாழ்க்கையை பற்றி சிந்திக்க கூட
நேரமிருக்காது என்பதில் ஐயமில்லை.

இருந்தாலும் நம் மனதில் உள்ள
கோடிக்கணக்கான அழிக்கமுடியாது
தங்கிவிட்டஎண்ணங்களில்
நம்மை அழித்துக் கொண்டிருக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளிடையே
இது போன்ற மகான்களின் சிந்தனைகளும்
போட்டு வைப்பது நன்மை பயக்கும்.

வினோபா அடிகள் இந்த மண்ணில்
பிறந்து 118 ஆண்டுகள் ஓடிவிட்டது..
ஆம் அவர் 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி
அன்றைய பரோடா சமஸ்தானத்தில்  பிறந்தார்.

வினோபாவின் தந்தை நூல் தொழில்
நுட்பத்தில் வல்லவர்.
தாயார் தெய்வ பக்தி மிக்கவர்

தந்தை மிகவும் கண்டிப்பானவர் .
பின்னாளில் நம் நாட்டின் சுதந்திரத்திற்க்காக
 போராடப் போகும் வினோபா அடிகள்
சிறுவனாக இருந்தபோதே சுதந்திரமாக
ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர் .
தந்தைக்கு இது பிடிக்காது.
வினோபாவை அடிப்பார்.
வினோபா பொறுத்துக்கொள்வார்..
 தந்தையின் கோபத்தைப்
பொருட்படுத்தமாட்டார்.

அப்போதுதான் ஒரு நாள்
அந்த சம்பவம் நடந்தது.

அது என்ன?
(இன்னும் வரும்) 

2 கருத்துகள்: